அன்புள்ள தமிழ்மண நிர்வாகிகளுக்கு,
வலையுலகில் தற்போதைய நிலவரம் உங்களுக்குத் தெரியுமா?
கொஞ்ச காலம் தசாவதாரம், குசேலன் என்று சூடான பதிவுகளாக வந்து கொண்டிருந்தது. ஆனால் தற்பொழுது இவர் அவருக்கு எழுதிய பகிரங்கக் கடிதம் தான் வலையுலகின் லேட்டஸ்ட்.
அடிக்கடி நேருக்கு நேர் அல்லது தொலைபேசியில் அல்லது சாட்டில் பேசிக்கொள்ளுபவர்களே இந்த வேலையைச் செய்வதுதான் உச்சகட்டக் கொடுமை.
இன்னும் கீழ்க்கண்ட கடிதங்கள் வருமுன் இதற்கு ஒரு தடா போட வேண்டியது உங்கள் தலையாயக் கடமை.
தங்கமணிக்கு ரங்கமணி
வைரமுத்துவுக்குக் கலைஞர்.
ஓட்டுனருக்கு நடத்துனர் .
கம்பெளண்டருக்கு டாக்டர்.
உதவி ஆசிரியருக்குத் தலைமை ஆசிரியர்.
வாகன ஓட்டுனருக்கு உரிமையாளர்
மாணவருக்கு ஆசிரியர்.
சர்வருக்கு சரக்கு மாஸ்டர்.
சித்தாளுக்குக் கொத்தனார்.
சால்னா விறபவருக்கு சரக்கு விறபவர்.
பின்னுட்டமிடுபவருக்கு பதிவர்
குடியிருப்பவருக்கு வீட்டு உரிமையாளர்
ஆகவே தமிழ்மண நிர்வாகிகளே, இந்தப் போக்கைத் தடை செய்யுங்கள். அல்லது குறந்தபட்சம், தமிழ்மண முகப்பில் ஒரு பகுதியை இதற்கென்று ஒதுக்குங்கள். பதிவுகளை வகைப் படு்த்துவதில் திறந்த மடல் என்ற வகையையும் உருவாக்குங்கள். அந்தப் பகுதிக்கே நாங்கள் போகமால் தப்பிக்க இது உதவும். தயவு செய்து சூடனா இடுகையில் இந்தப் பதிவுகள் வராமல் பார்த்துக் கொள்வது தமிழ் பதிவுலகத்திற்கு நீங்கள் செய்யும் சிறந்த சேவையாகப் போற்றப் படும்.
இப்படிக்கு,
11-08-08 மாலை வரை நன்றாக இருந்தவன்.
குறிப்பு : விக்னேஸ்வரன் என்ற பதிவ்ரின் பின்னுட்டங்களத் திரட்ட வேண்டாம்.
அவரிடம் இந்தவகைப் பதிவுகளுக்கான நிரந்தர பின்னுட்ட டெம்ப்லேட்டுகள் அதிகமுள்ளன. அவைகளைக் கொண்டு சரமாரியாக எல்லோருக்கும் பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்மணத்திலிருந்தே அவரைத் தூக்குவது நல்லது.
குறிப்பு 2 : இவவகைப் பதிவுகளிட்டவர்களை குறித்துவைத்துக் கொண்டு எதிர்காலத்தில் அவர்களை நட்சத்திரப் பதிவர்களாக ஆக்காமல் எங்களக் காக்க வேண்டுகிறோம்.
டிஸ்கி : லதானந்த், பரிசல், வால்பையன், நந்து f/o நிலா, ஜெகதீசன், நமக்கல் சிபி, தமிழ்ப் பிரியன் முதலானவர்களை எந்த விதத்திலும் இந்தப் பதிவு நேரடியாகவோ மறைமுகவாகவோ குறிக்கவில்லை.
டிஸ்கி 2: கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டுப் புகைப் படங்களையும் வண்ணங்களையும் தவிர்த்திருக்கிறேன்
You must be logged in to post a comment.