குசும்பு

நகைச்சுவையுங்க – 3

காட்டுக்குள் இரண்டு நண்ப்ர்கள் நடந்து போய்கொண்டிருந்தார்கள். திடீரென்று புலி உறுமும் சத்தம் கேட்கவும், அவசரமாக் ஓடத் தயாராகின்றனர். தன் ஷீ லேசை சரி செய்து கொண்டு ஓடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தவனைப் பார்த்து மற்றவன் கேட்டான்,

”நண்பா, அந்தப் புலியைவிட வேகமா ஓடிட முடியும்னு நீ நம்புறியா?”

அதற்கு, சிரித்துக் கொண்டே அவன் சொன்னான், “ நான் புலியைவிட வேகமாக ஓட வேண்டியதில்லை, உன்னைவிட வேகமா ஓடினாப் போதும்!”

மனைவி : ஏங்க, என்கிட்ட உங்களுக்குப் ரெம்பப் பிடிச்சது என் அழகா? அன்பான மனமா? பணிவான குணமா?

கணவன் : ” உன்னோட இந்தக் காமெடிதாம்மா.”

தன் கம்பெனியைச் சுத்திப் பார்க்க முதலாளி ரவுண்ட்ஸ் வந்துகிட்டிருந்த நேரம். ஒருத்தன் மட்டும் வேலையே செய்யாமல், சுவர் மேல் சாய்ந்து பராக் பார்த்துக் கொண்டிருந்த்தான்.

மெதுவாக அவனிடம் போய் கனிவாகக் கேட்டார், “தம்பி உனக்கு மாசம் எவ்வளவு சம்பளம்?”

“அவன் ரெம்ப சாதாரணமாகவே பேசினான், “2500 ரூபாய் , ஏன் கேக்குறீங்க”

அதற்குப் பதில் கூடத் தராமல் தன் பர்ஸிலிருந்து 5000 ரூபாயைக் கொடுத்து
” நான் இங்கே வேலை செய்யறதுக்குத்தான் சம்பளம் தர்றேன். இப்படி சும்மா நிக்கறதுக்கு இல்லை. இந்தா இரண்டு மாசச் சம்பளம். எடுத்துகிட்டுப் போயிடு! இனிமே வரவேண்டாம்”னு துரத்தீட்டார்.

அவனும் அதவாங்கீட்டு கூலா வெளிய போயிட்டான்.

அதுக்கப்புறம் அங்கிருந்த மற்ற உழியர்களப் பார்த்து, “ இப்படிப்பட்டவர்களுக்கு இனிமே இதுதான் கதி”னு கடுமையா எச்சரிச்ச முதலாளி, “ அந்த ராஸ்கல் எந்த டிபார்ட்மெண்ட்?”னு கேட்டார்.

கூட்டத்திலிருந்து ஒரு குரல் “அவன் கூரியர் பையன் சார்!”

டிஸ்கி : என் மகளின் activity நோட்டிலிருந்து எடுக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமையா உம்புள்ளய இட்டா

ஒரு தபா, ராம கிருஷ்ணரான்ட அஞசலயும் அவ பையனும் போனாங்க.

அஞ்சல சொல்லிச்சி, “சாமீ எம்புள்ள அஸ்கா தின்னுக்கினேக்கீரான். எம்மாஞ் சொல்லியிம் தின்னுக்கினேக்கீரான். கொடலு வெந்துபூடுமாமே அல்லாரும் சொல்லிக்கினாங்க. கரீக்ட் பண்ணு சாமி” ச்சு

ராமகிருஷ்ணர், அந்தப் பையன ஒரு லுக் விட்டுக்கினாரு. இன்னாவோ ரோசிச்சாரு. அப்பாலிக்கா, “ வெள்ளிக்கிழமையா உம்புள்ளய இட்டா” னாரு.

வெள்ளிகிழமை போச்சொல்ல, “ அஸ்கா தின்னுகினீன்னா கொடலு வெந்துபூடும், கைகால் வெளங்காதுபூடும், வயசாச்சொல்ல பேஜாராப்பூடும்” னாரு.

அஞ்சல கேட்டுச்சி, “ஏஞ்சாமீ, இத்த அன்னிக்கெ சொல்லீருக்லாம்ல, இன்னாத்துக்கு இன்னொரு தபா வரச்சொல்லி எங்கள வீனா அலய வுட்டே?”

அதுக்கு ராமகிருஷ்ணரு, “அஞ்சலை எனிக்கே அஸ்கா திங்கிற பயக்கம் கீரப்ப, நா இன்னான்னு உம்புள்ளையாண்ட சொல்லுவேன். நான் மொதோ ஸ்டாப் பண்ணிக்கினு அப்பால அவனுக்கு அட்வைஸ் வுட்டுகினே” னாரு

டிஸ்கி : இந்தக் கதையச் சொல்ல இப்ப இன்னா அவசரம்?

தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு திறந்த மடல்

அன்புள்ள தமிழ்மண நிர்வாகிகளுக்கு,

வலையுலகில் தற்போதைய நிலவரம் உங்களுக்குத் தெரியுமா?

கொஞ்ச காலம் தசாவதாரம், குசேலன் என்று சூடான பதிவுகளாக வந்து கொண்டிருந்தது. ஆனால் தற்பொழுது இவர் அவருக்கு எழுதிய பகிரங்கக் கடிதம் தான் வலையுலகின் லேட்டஸ்ட்.

அடிக்கடி நேருக்கு நேர் அல்லது தொலைபேசியில் அல்லது சாட்டில் பேசிக்கொள்ளுபவர்களே இந்த வேலையைச் செய்வதுதான் உச்சகட்டக் கொடுமை.

இன்னும் கீழ்க்கண்ட கடிதங்கள் வருமுன் இதற்கு ஒரு தடா போட வேண்டியது உங்கள் தலையாயக் கடமை.

தங்கமணிக்கு ரங்கமணி
வைரமுத்துவுக்குக் கலைஞர்.
ஓட்டுனருக்கு நடத்துனர் .
கம்பெளண்டருக்கு டாக்டர்.
உதவி ஆசிரியருக்குத் தலைமை ஆசிரியர்.
வாகன ஓட்டுனருக்கு உரிமையாளர்
மாணவருக்கு ஆசிரியர்.
சர்வருக்கு சரக்கு மாஸ்டர்.
சித்தாளுக்குக் கொத்தனார்.
சால்னா விறபவருக்கு சரக்கு விறபவர்.
பின்னுட்டமிடுபவருக்கு பதிவர்
குடியிருப்பவருக்கு வீட்டு உரிமையாளர்

ஆகவே தமிழ்மண நிர்வாகிகளே, இந்தப் போக்கைத் தடை செய்யுங்கள். அல்லது குறந்தபட்சம், தமிழ்மண முகப்பில் ஒரு பகுதியை இதற்கென்று ஒதுக்குங்கள். பதிவுகளை வகைப் படு்த்துவதில் திறந்த மடல் என்ற வகையையும் உருவாக்குங்கள். அந்தப் பகுதிக்கே நாங்கள் போகமால் தப்பிக்க இது உதவும். தயவு செய்து சூடனா இடுகையில் இந்தப் பதிவுகள் வராமல் பார்த்துக் கொள்வது தமிழ் பதிவுலகத்திற்கு நீங்கள் செய்யும் சிறந்த சேவையாகப் போற்றப் படும்.

இப்படிக்கு,

11-08-08 மாலை வரை நன்றாக இருந்தவன்.

குறிப்பு : விக்னேஸ்வரன் என்ற பதிவ்ரின் பின்னுட்டங்களத் திரட்ட வேண்டாம்.
அவரிடம் இந்தவகைப் பதிவுகளுக்கான நிரந்தர பின்னுட்ட டெம்ப்லேட்டுகள் அதிகமுள்ளன. அவைகளைக் கொண்டு சரமாரியாக எல்லோருக்கும் பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்மணத்திலிருந்தே அவரைத் தூக்குவது நல்லது.

குறிப்பு 2 : இவவகைப் பதிவுகளிட்டவர்களை குறித்துவைத்துக் கொண்டு எதிர்காலத்தில் அவர்களை நட்சத்திரப் பதிவர்களாக ஆக்காமல் எங்களக் காக்க வேண்டுகிறோம்.

டிஸ்கி : லதானந்த், பரிசல், வால்பையன், நந்து f/o நிலா, ஜெகதீசன், நமக்கல் சிபி, தமிழ்ப் பிரியன் முதலானவர்களை எந்த விதத்திலும் இந்தப் பதிவு நேரடியாகவோ மறைமுகவாகவோ குறிக்கவில்லை.

டிஸ்கி 2: கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டுப் புகைப் படங்களையும் வண்ணங்களையும் தவிர்த்திருக்கிறேன்

நம்ம காதலே ஒரு ஒண்டர்

பரிசலும், வெண்பூ வும் முயன்றதை நான் தொடர்ந்திருக்கிறேன். நல்லா இருந்தா எனக்குப் பின்னூட்டுங்கள். இல்லன்னு பீல் பண்ணுனா அவங்கள பின்னிப் பெடலெடுங்க.

பாட்டு எழுத ஆரம்பிச்ச தொடர் அதத் தவிர எல்லாம் நடந்துட்டிருக்கு. எனவே பாட்டு எழுதியே தீருவேன்.

எதுக்கும் அவங்க எழுதுனதயும் பாத்துட்டு வந்திடுங்க.

பகுதி-1
பகுதி-2
பகுதி-3

எல்லாம் சென்றவுடன் “அப்பாடா!! எனக்கு நேரம் நல்லா இருக்கு!! வேற எவனுக்கோதான் சரியில்லன்னு நெனக்கிறேன்.. போன் பண்ணி தனக்கு தானே சூனியம் வெச்சிகிட்டான்” என்றாவாறு உட்கார, ‘டொக்..டொக்..’ சென்று கதவைத் திறக்கிறவர் அதிர்ச்சியின் எல்லைக்கே போகிறார். அங்கே..

“வணக்கம் என் பேரு வடகரை வேலன்”

”அதுக்கென்ன இப்போ?”

”உங்க மீஜுக்ல பாட்டு எழுத வந்திருக்கேன்”

“என் நிலமை, யாராரோ என் மீஜிக்ல பாட்டெழுதுனது போக இப்ப உனக்காக ட்யூன் போடனும்”

மீஜிக் (மனசுக்குள்) இவனத் தனியா சமாளிக்க முடியாது தயாரிப்பாளரையும் கூப்பிடுவோம். “சார் இங்க வடகரை வேலன்னு ஒரு கவிஞர் உங்களப் பாக்க வந்திருக்காரு”

“அவங்க 3 பேரும் இருக்காங்களா?”

“ போய்ட்டாங்க சார்”

“அப்பச் சரி வாரேன்”

தயாரிப்பாளார் வந்ததும்

“நல்லா எழுதுவேங்க சார்”

”எப்படி நம்புறது?”

சிச்சுவேசன் சொல்லுங்க”

“அது ஒன்னுதான் பாக்கி. அதா எல்லாப் படத்துலயும் லவ் டூயட் வருதே”

“சார் நாட்டுபுறமா, சிட்டியா”

“யோவ் எவன் இப்ப சிட்டிலயோ, நாட்டுப்புறத்துலயோ எடுக்குறான். எல்லாம் வெளிநாடுதான். இங்கிலீஸ் வார்த்த நெறயாப் போட்டு நடுவுல கொஞ்சம் தமிழ் வார்த்தகளப் போடு. அதுதான் இப்ப ட்ரெண்டு”

“சரி சார் சந்தம் சொல்லுங்க”

“இது வேறயா ம்ம்ம்ம் தானனா தன தன்ன தானனா”

”சார் சொல்லட்டுமா?”

“சொல்லுய்யா, இதுக்கு மீன மேஷமெல்லாம் பாக்கனுமா?”

மார்னிங் மை டியர் மாலா – என்
ஹார்ட்டினில் நுழைந்தவள் நீதான்
ஹேவ் எ கொக்கோ கோலா – அதுல
கிக் இருக்கு வெகு ஜோரா

தயாரிப்பாளரும் மீஜிக் டைரக்டரும் நிமிர்ந்து உட்காருகிறார்கள்.

”பல்லவி ஒக்கே மதிரிதான் இருக்கு. ஆனா சரணத்துல மெஸேக் இருக்கனும்”

”இது சரியா பாருங்க”

நமக்குப் பிறக்கும் கிட்ஸ்
அதுக்குப் போடனும் லக்ஸ்
காலுக்குப் போடறது ஷாக்ஸ்
அரசுக்குக் கட்டுறது டாக்ஸ்

“யோவ் டூயட்ல கூட டாக்ஸ் பத்தி எழுதுறயே நீ சிதம்பரத்தோட ஆளா? மாத்துயா”

”இருக்கட்டுங்க இதக் காட்டி அரசாங்கத்துக்கிட்ட சலுக வாங்கப் பாக்கலாம்”

”அடுத்த சரணம் சொல்லுய்யா”

”இது சரியா பாருங்க”

சித்திரையில வருவது சம்மர்
மார்கழியில் வருவது
வின்ட்டர்
ழைக்கு முன் வருவது தண்டர்

நம்ம காதலே ஒரு ஒண்டர்.

”சூப்பருய்யா. இந்தா அட்வான்ஸ், இனிமே நீதான் நம்ம ஆஸ்தான கவிஞன்”

மக்களே விரைவில் இந்தப் படம் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் ஒடி வெற்றி பெற வாழ்த்துங்கள். ஒரு வளரும் கவிஞன் மற்றும் பாடலாசிரியனை ஆதரியுங்கள்.

என்ன வேனும், படம் பேரா?

“நீ கேர்ள், நான் பாய்”

டிஸ்கி : இந்தப் பதிவை நமது திடீர்க் கவிதாயினி ராப் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

நம்ம காதலே ஒரு ஒண்டர்

பரிசலும், வெண்பூ வும் முயன்றதை நான் தொடர்ந்திருக்கிறேன். நல்லா இருந்தா எனக்குப் பின்னூட்டுங்கள். இல்லன்னு பீல் பண்ணுனா அவங்கள பின்னிப் பெடலெடுங்க.

பாட்டு எழுத ஆரம்பிச்ச தொடர் அதத் தவிர எல்லாம் நடந்துட்டிருக்கு. எனவே பாட்டு எழுதியே தீருவேன்.

எதுக்கும் அவங்க எழுதுனதயும் பாத்துட்டு வந்திடுங்க.

பகுதி-1
பகுதி-2
பகுதி-3

எல்லாம் சென்றவுடன் “அப்பாடா!! எனக்கு நேரம் நல்லா இருக்கு!! வேற எவனுக்கோதான் சரியில்லன்னு நெனக்கிறேன்.. போன் பண்ணி தனக்கு தானே சூனியம் வெச்சிகிட்டான்” என்றாவாறு உட்கார, ‘டொக்..டொக்..’ சென்று கதவைத் திறக்கிறவர் அதிர்ச்சியின் எல்லைக்கே போகிறார். அங்கே..

“வணக்கம் என் பேரு வடகரை வேலன்”

”அதுக்கென்ன இப்போ?”

”உங்க மீஜுக்ல பாட்டு எழுத வந்திருக்கேன்”

“என் நிலமை, யாராரோ என் மீஜிக்ல பாட்டெழுதுனது போக இப்ப உனக்காக ட்யூன் போடனும்”

மீஜிக் (மனசுக்குள்) இவனத் தனியா சமாளிக்க முடியாது தயாரிப்பாளரையும் கூப்பிடுவோம். “சார் இங்க வடகரை வேலன்னு ஒரு கவிஞர் உங்களப் பாக்க வந்திருக்காரு”

“அவங்க 3 பேரும் இருக்காங்களா?”

“ போய்ட்டாங்க சார்”

“அப்பச் சரி வாரேன்”

தயாரிப்பாளார் வந்ததும்

“நல்லா எழுதுவேங்க சார்”

”எப்படி நம்புறது?”

சிச்சுவேசன் சொல்லுங்க”

“அது ஒன்னுதான் பாக்கி. அதா எல்லாப் படத்துலயும் லவ் டூயட் வருதே”

“சார் நாட்டுபுறமா, சிட்டியா”

“யோவ் எவன் இப்ப சிட்டிலயோ, நாட்டுப்புறத்துலயோ எடுக்குறான். எல்லாம் வெளிநாடுதான். இங்கிலீஸ் வார்த்த நெறயாப் போட்டு நடுவுல கொஞ்சம் தமிழ் வார்த்தகளப் போடு. அதுதான் இப்ப ட்ரெண்டு”

“சரி சார் சந்தம் சொல்லுங்க”

“இது வேறயா ம்ம்ம்ம் தானனா தன தன்ன தானனா”

”சார் சொல்லட்டுமா?”

“சொல்லுய்யா, இதுக்கு மீன மேஷமெல்லாம் பாக்கனுமா?”

மார்னிங் மை டியர் மாலா – என்
ஹார்ட்டினில் நுழைந்தவள் நீதான்
ஹேவ் எ கொக்கோ கோலா – அதுல
கிக் இருக்கு வெகு ஜோரா

தயாரிப்பாளரும் மீஜிக் டைரக்டரும் நிமிர்ந்து உட்காருகிறார்கள்.

”பல்லவி ஒக்கே மதிரிதான் இருக்கு. ஆனா சரணத்துல மெஸேக் இருக்கனும்”

”இது சரியா பாருங்க”

நமக்குப் பிறக்கும் கிட்ஸ்
அதுக்குப் போடனும் லக்ஸ்
காலுக்குப் போடறது ஷாக்ஸ்
அரசுக்குக் கட்டுறது டாக்ஸ்

“யோவ் டூயட்ல கூட டாக்ஸ் பத்தி எழுதுறயே நீ சிதம்பரத்தோட ஆளா? மாத்துயா”

”இருக்கட்டுங்க இதக் காட்டி அரசாங்கத்துக்கிட்ட சலுக வாங்கப் பாக்கலாம்”

”அடுத்த சரணம் சொல்லுய்யா”

”இது சரியா பாருங்க”

சித்திரையில வருவது சம்மர்
மார்கழியில் வருவது
வின்ட்டர்
ழைக்கு முன் வருவது தண்டர்

நம்ம காதலே ஒரு ஒண்டர்.

”சூப்பருய்யா. இந்தா அட்வான்ஸ், இனிமே நீதான் நம்ம ஆஸ்தான கவிஞன்”

மக்களே விரைவில் இந்தப் படம் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் ஒடி வெற்றி பெற வாழ்த்துங்கள். ஒரு வளரும் கவிஞன் மற்றும் பாடலாசிரியனை ஆதரியுங்கள்.

என்ன வேனும், படம் பேரா?

“நீ கேர்ள், நான் பாய்”

டிஸ்கி : இந்தப் பதிவை நமது திடீர்க் கவிதாயினி ராப் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

பத்த வைச்சுட்டியே பரட்ட (அல்லது) ஊக்கமுள்ளோருக்கு பரம திருப்தி


பரிசல் தொடங்கி வச்ச இந்தத் தொடர் கோவி மூலமா எனக்கு வந்திருக்கு. இருவருக்கும் நன்றி.

பரிசல் புகைபடத்தப் பத்தி எழுதிக் கலக்கிட்டார். லக்கியும் கோவியும் முதல் காதல்னு பிரிச்சு மேஞ்சுட்டாங்க. நாம எழுத என்ன இருக்குன்னு யோசிச்சப்ப ஏன் நம்ம முதல் முதலா புகை பிடிச்ச வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த( அடக்கி வாசி) சம்பவத்த எழுதக்கூடாதுன்னு தோனுச்சு.

அப்ப எனக்கு 12 வயசு இருக்கும், 7 வது வகுப்பு. V K மில்ஸ் குவார்டர்ஸ்ல குடியிருந்தோம்.

நானு, இளங்கோ, ராஜ சேகர், ஜெயபால், பொன்னுச்சாமி எல்லாம் ஒரு செட்டு. சனி ஞாயிறு விடுமுறையில அடிக்கிற கொட்டம் தாங்க முடியாது. நைட் ஷிப்ட் பாத்தவங்களோட பகல் தூக்கத்தக் கெடுக்காம இருக்க, வீட்ட விட்டு எங்களத் துரத்துரதுல பெரியவங்க குறியா இருப்பாங்க.

குவார்ட்டர்ஸ் கம்பி வேலியத் தாண்டிப் போனா விவசாய நிலம். அதில் நிறையக் கிணறுகள் இருக்கும். சிலதில் தான் குளிக்க முடியும். பாறைக்கிணறு அவற்றுள் ஒன்று. வீட்டிலிருந்து சற்று தள்ளியிருந்தாலும், நீச்சல் தெரி்யாதவர்கள் நின்று குளிக்கவும் வசதியாக இருக்கும்.

ஒரு சனிக்கிழமை எங்க செட்டுப் பசங்க எல்லாம் குளிக்கப் போறதுன்னு முடிவாச்சு. அதில இளங்கோ கொஞ்சம் விவ(கா)ரமான பையன். அவங்க அப்பா (போலிஸ் ராமசாமி) குடிக்கும் கத்திரி சிகரெட் (scissors) இரண்டை எப்படியோ எடுத்து வந்துவிட்டன்; கூடவே தீப்பெட்டியும்.

கம்பிவேலி தாண்டி வயக்காடு வழியாகச் செல்ல வேண்டும். ஒரு வரப்பு சற்று உயரமாக இருக்கும். அதன் மறைவில் அமர்ந்து பற்ற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். காற்று, அனுபவமின்மை, முதல் முறை பதட்டம், யாரும் பார்த்துருவாங்களோன்ற பயம் எல்லாம் சேர்ந்து ஒரே தடுமாற்றம்.

ஆறேழு குச்சிகளுக்குப் பிறகு, இரு முறை கை சுட்டுக் கொண்டு, ஒருத்தன் முடியை லேசாத் தீய வச்சு, ஒரு வழியாப் பற்ற வைத்து இழுத்தால் ஒரே காட்டம். ஏன்னா, பில்டர் இல்லாத சிகரெட்தான் அப்போ வரும்

கடைசியாக் குடிச்ச(?) ஜெயபாலன், “இந்தக் கருமத்த எப்படிடா உங்க அப்பா குடிக்கிறாரு?” ன்னு கேட்டுக் கடுப்பாகி தூக்கி வீசீட்டான்.

வாங்கடா போலாம்னு கிணத்துக்கு நடையக் கட்டுனோம்.

கிணத்துல ஒரே அலப்பர, டைவ் அடிக்கிறது, பேக் டைவ் அடிக்கிறது, குட்டிக் கரணம் அடிக்கிறதுன்னு. பம்புசெட்டு ரூம் மேல இருந்து டைவ் அடிக்கலாம்னு மேல ஏறிப் பாத்தா, நாங்க உக்காந்து சிகரெட் குடிச்சதுக்குப் பக்கத்துல ஒரு வைக்கோல் போர் கபகபன்னு எரிஞ்சிட்ருக்கு. பகீர்னுச்சு.

அப்ப வந்த ஒருத்தரக் கேட்டோம், “என்னங்க அங்க தீ எரியுது?”

”எவன் வச்சதுன்னு தெரியல, செட்டியாரு கைல சிக்கினா இன்னக்கிச் சட்னிதான்” னாரு.

சத்தம் போடாம 5 பேரும் அக்ரஹாரத்துக்கு நடந்து, அங்கிருந்து பஸ் ஏறி வீட்டுக்குப் போனோம்.

அப்புறம் டிப்ளமோ முடிச்சுட்டு பனாமா சிகரெட் கம்பெனியிலயே சுப்பர்வைசர் வேலை பாத்தது தனிக் கதை.

டிஸ்கி 1 : மெஸேஜ் இல்லன்னு யாரும் சொல்லப்படாது. வேணும்னா ”அடிக்காம விட்ட பாம்பும் அணைக்காம விட்ட சிகரெட்டும் டேஞ்ஜர்” -னு வச்சுக்குங்க.

டிஸ்கி 2 : படத்துல இருக்க வாசகம் தெரிஞ்சுக்க ஆசைன்னா படத்து மேல ‘கிலி’க்குங்க.

டிஸ்கி 3 : ஊக்கமுள்ளோருக்குப் பரம திருப்தி – சிசர்ஸ் சிகரெட் விளம்பரம் (For men of action, satisfaction – SCISSORS). சுப்பிரமணியபுரம் படத்துலகூட இந்த விளம்பரம் வந்துச்சு.

மேலும் தொடர டெல்லியிலிருந்து முத்துலெட்சுமி-கயல்விழி அவர்களை வேண்டுகிறேன்.

பத்த வைச்சுட்டியே பரட்ட (அல்லது) ஊக்கமுள்ளோருக்கு பரம திருப்தி


பரிசல் தொடங்கி வச்ச இந்தத் தொடர் கோவி மூலமா எனக்கு வந்திருக்கு. இருவருக்கும் நன்றி.

பரிசல் புகைபடத்தப் பத்தி எழுதிக் கலக்கிட்டார். லக்கியும் கோவியும் முதல் காதல்னு பிரிச்சு மேஞ்சுட்டாங்க. நாம எழுத என்ன இருக்குன்னு யோசிச்சப்ப ஏன் நம்ம முதல் முதலா புகை பிடிச்ச வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த( அடக்கி வாசி) சம்பவத்த எழுதக்கூடாதுன்னு தோனுச்சு.

அப்ப எனக்கு 12 வயசு இருக்கும், 7 வது வகுப்பு. V K மில்ஸ் குவார்டர்ஸ்ல குடியிருந்தோம்.

நானு, இளங்கோ, ராஜ சேகர், ஜெயபால், பொன்னுச்சாமி எல்லாம் ஒரு செட்டு. சனி ஞாயிறு விடுமுறையில அடிக்கிற கொட்டம் தாங்க முடியாது. நைட் ஷிப்ட் பாத்தவங்களோட பகல் தூக்கத்தக் கெடுக்காம இருக்க, வீட்ட விட்டு எங்களத் துரத்துரதுல பெரியவங்க குறியா இருப்பாங்க.

குவார்ட்டர்ஸ் கம்பி வேலியத் தாண்டிப் போனா விவசாய நிலம். அதில் நிறையக் கிணறுகள் இருக்கும். சிலதில் தான் குளிக்க முடியும். பாறைக்கிணறு அவற்றுள் ஒன்று. வீட்டிலிருந்து சற்று தள்ளியிருந்தாலும், நீச்சல் தெரி்யாதவர்கள் நின்று குளிக்கவும் வசதியாக இருக்கும்.

ஒரு சனிக்கிழமை எங்க செட்டுப் பசங்க எல்லாம் குளிக்கப் போறதுன்னு முடிவாச்சு. அதில இளங்கோ கொஞ்சம் விவ(கா)ரமான பையன். அவங்க அப்பா (போலிஸ் ராமசாமி) குடிக்கும் கத்திரி சிகரெட் (scissors) இரண்டை எப்படியோ எடுத்து வந்துவிட்டன்; கூடவே தீப்பெட்டியும்.

கம்பிவேலி தாண்டி வயக்காடு வழியாகச் செல்ல வேண்டும். ஒரு வரப்பு சற்று உயரமாக இருக்கும். அதன் மறைவில் அமர்ந்து பற்ற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். காற்று, அனுபவமின்மை, முதல் முறை பதட்டம், யாரும் பார்த்துருவாங்களோன்ற பயம் எல்லாம் சேர்ந்து ஒரே தடுமாற்றம்.

ஆறேழு குச்சிகளுக்குப் பிறகு, இரு முறை கை சுட்டுக் கொண்டு, ஒருத்தன் முடியை லேசாத் தீய வச்சு, ஒரு வழியாப் பற்ற வைத்து இழுத்தால் ஒரே காட்டம். ஏன்னா, பில்டர் இல்லாத சிகரெட்தான் அப்போ வரும்

கடைசியாக் குடிச்ச(?) ஜெயபாலன், “இந்தக் கருமத்த எப்படிடா உங்க அப்பா குடிக்கிறாரு?” ன்னு கேட்டுக் கடுப்பாகி தூக்கி வீசீட்டான்.

வாங்கடா போலாம்னு கிணத்துக்கு நடையக் கட்டுனோம்.

கிணத்துல ஒரே அலப்பர, டைவ் அடிக்கிறது, பேக் டைவ் அடிக்கிறது, குட்டிக் கரணம் அடிக்கிறதுன்னு. பம்புசெட்டு ரூம் மேல இருந்து டைவ் அடிக்கலாம்னு மேல ஏறிப் பாத்தா, நாங்க உக்காந்து சிகரெட் குடிச்சதுக்குப் பக்கத்துல ஒரு வைக்கோல் போர் கபகபன்னு எரிஞ்சிட்ருக்கு. பகீர்னுச்சு.

அப்ப வந்த ஒருத்தரக் கேட்டோம், “என்னங்க அங்க தீ எரியுது?”

”எவன் வச்சதுன்னு தெரியல, செட்டியாரு கைல சிக்கினா இன்னக்கிச் சட்னிதான்” னாரு.

சத்தம் போடாம 5 பேரும் அக்ரஹாரத்துக்கு நடந்து, அங்கிருந்து பஸ் ஏறி வீட்டுக்குப் போனோம்.

அப்புறம் டிப்ளமோ முடிச்சுட்டு பனாமா சிகரெட் கம்பெனியிலயே சுப்பர்வைசர் வேலை பாத்தது தனிக் கதை.

டிஸ்கி 1 : மெஸேஜ் இல்லன்னு யாரும் சொல்லப்படாது. வேணும்னா ”அடிக்காம விட்ட பாம்பும் அணைக்காம விட்ட சிகரெட்டும் டேஞ்ஜர்” -னு வச்சுக்குங்க.

டிஸ்கி 2 : படத்துல இருக்க வாசகம் தெரிஞ்சுக்க ஆசைன்னா படத்து மேல ‘கிலி’க்குங்க.

டிஸ்கி 3 : ஊக்கமுள்ளோருக்குப் பரம திருப்தி – சிசர்ஸ் சிகரெட் விளம்பரம் (For men of action, satisfaction – SCISSORS). சுப்பிரமணியபுரம் படத்துலகூட இந்த விளம்பரம் வந்துச்சு.

மேலும் தொடர டெல்லியிலிருந்து முத்துலெட்சுமி-கயல்விழி அவர்களை வேண்டுகிறேன்.

பத்த வைச்சுட்டியே பரட்ட (அல்லது) ஊக்கமுள்ளோருக்கு பரம திருப்தி


பரிசல் தொடங்கி வச்ச இந்தத் தொடர் கோவி மூலமா எனக்கு வந்திருக்கு. இருவருக்கும் நன்றி.

பரிசல் புகைபடத்தப் பத்தி எழுதிக் கலக்கிட்டார். லக்கியும் கோவியும் முதல் காதல்னு பிரிச்சு மேஞ்சுட்டாங்க. நாம எழுத என்ன இருக்குன்னு யோசிச்சப்ப ஏன் நம்ம முதல் முதலா புகை பிடிச்ச வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த( அடக்கி வாசி) சம்பவத்த எழுதக்கூடாதுன்னு தோனுச்சு.

அப்ப எனக்கு 12 வயசு இருக்கும், 7 வது வகுப்பு. V K மில்ஸ் குவார்டர்ஸ்ல குடியிருந்தோம்.

நானு, இளங்கோ, ராஜ சேகர், ஜெயபால், பொன்னுச்சாமி எல்லாம் ஒரு செட்டு. சனி ஞாயிறு விடுமுறையில அடிக்கிற கொட்டம் தாங்க முடியாது. நைட் ஷிப்ட் பாத்தவங்களோட பகல் தூக்கத்தக் கெடுக்காம இருக்க, வீட்ட விட்டு எங்களத் துரத்துரதுல பெரியவங்க குறியா இருப்பாங்க.

குவார்ட்டர்ஸ் கம்பி வேலியத் தாண்டிப் போனா விவசாய நிலம். அதில் நிறையக் கிணறுகள் இருக்கும். சிலதில் தான் குளிக்க முடியும். பாறைக்கிணறு அவற்றுள் ஒன்று. வீட்டிலிருந்து சற்று தள்ளியிருந்தாலும், நீச்சல் தெரி்யாதவர்கள் நின்று குளிக்கவும் வசதியாக இருக்கும்.

ஒரு சனிக்கிழமை எங்க செட்டுப் பசங்க எல்லாம் குளிக்கப் போறதுன்னு முடிவாச்சு. அதில இளங்கோ கொஞ்சம் விவ(கா)ரமான பையன். அவங்க அப்பா (போலிஸ் ராமசாமி) குடிக்கும் கத்திரி சிகரெட் (scissors) இரண்டை எப்படியோ எடுத்து வந்துவிட்டன்; கூடவே தீப்பெட்டியும்.

கம்பிவேலி தாண்டி வயக்காடு வழியாகச் செல்ல வேண்டும். ஒரு வரப்பு சற்று உயரமாக இருக்கும். அதன் மறைவில் அமர்ந்து பற்ற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். காற்று, அனுபவமின்மை, முதல் முறை பதட்டம், யாரும் பார்த்துருவாங்களோன்ற பயம் எல்லாம் சேர்ந்து ஒரே தடுமாற்றம்.

ஆறேழு குச்சிகளுக்குப் பிறகு, இரு முறை கை சுட்டுக் கொண்டு, ஒருத்தன் முடியை லேசாத் தீய வச்சு, ஒரு வழியாப் பற்ற வைத்து இழுத்தால் ஒரே காட்டம். ஏன்னா, பில்டர் இல்லாத சிகரெட்தான் அப்போ வரும்

கடைசியாக் குடிச்ச(?) ஜெயபாலன், “இந்தக் கருமத்த எப்படிடா உங்க அப்பா குடிக்கிறாரு?” ன்னு கேட்டுக் கடுப்பாகி தூக்கி வீசீட்டான்.

வாங்கடா போலாம்னு கிணத்துக்கு நடையக் கட்டுனோம்.

கிணத்துல ஒரே அலப்பர, டைவ் அடிக்கிறது, பேக் டைவ் அடிக்கிறது, குட்டிக் கரணம் அடிக்கிறதுன்னு. பம்புசெட்டு ரூம் மேல இருந்து டைவ் அடிக்கலாம்னு மேல ஏறிப் பாத்தா, நாங்க உக்காந்து சிகரெட் குடிச்சதுக்குப் பக்கத்துல ஒரு வைக்கோல் போர் கபகபன்னு எரிஞ்சிட்ருக்கு. பகீர்னுச்சு.

அப்ப வந்த ஒருத்தரக் கேட்டோம், “என்னங்க அங்க தீ எரியுது?”

”எவன் வச்சதுன்னு தெரியல, செட்டியாரு கைல சிக்கினா இன்னக்கிச் சட்னிதான்” னாரு.

சத்தம் போடாம 5 பேரும் அக்ரஹாரத்துக்கு நடந்து, அங்கிருந்து பஸ் ஏறி வீட்டுக்குப் போனோம்.

அப்புறம் டிப்ளமோ முடிச்சுட்டு பனாமா சிகரெட் கம்பெனியிலயே சுப்பர்வைசர் வேலை பாத்தது தனிக் கதை.

டிஸ்கி 1 : மெஸேஜ் இல்லன்னு யாரும் சொல்லப்படாது. வேணும்னா ”அடிக்காம விட்ட பாம்பும் அணைக்காம விட்ட சிகரெட்டும் டேஞ்ஜர்” -னு வச்சுக்குங்க.

டிஸ்கி 2 : படத்துல இருக்க வாசகம் தெரிஞ்சுக்க ஆசைன்னா படத்து மேல ‘கிலி’க்குங்க.

டிஸ்கி 3 : ஊக்கமுள்ளோருக்குப் பரம திருப்தி – சிசர்ஸ் சிகரெட் விளம்பரம் (For men of action, satisfaction – SCISSORS). சுப்பிரமணியபுரம் படத்துலகூட இந்த விளம்பரம் வந்துச்சு.

மேலும் தொடர டெல்லியிலிருந்து முத்துலெட்சுமி-கயல்விழி அவர்களை வேண்டுகிறேன்.

சாரிடா தூங்கிட்டிருந்தியா?

PSG -ல் படிக்கும் போது இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா முடிந்து திரும்பும் போது, குறிப்பிட்ட சில (பர்ஸ்ட் டெஸ்க் படிப்ஸ்) அறைக் கதவுகளை மட்டும் டமடமவெனத் தட்டுவோம்.

”யார்ரா?”

”நாந்தான்டா”

”என்னடா வேனும்?”

”கதவைத் திறடா”

அறைக்காரன் கதவைத்திறந்தபடியே “என்னடா வேனும்”

“தூங்கிட்டிருந்தியா? சாரிடா, ரியலி சாரி, தூங்கு, குட் நைட்”

அதுக்கப்புறம் அவனுக்கு தூக்கமாவது வர்ரதாவது. ஆனா நாங்க நல்லா தூங்குவோம்.

சாரிடா தூங்கிட்டிருந்தியா?

PSG -ல் படிக்கும் போது இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா முடிந்து திரும்பும் போது, குறிப்பிட்ட சில (பர்ஸ்ட் டெஸ்க் படிப்ஸ்) அறைக் கதவுகளை மட்டும் டமடமவெனத் தட்டுவோம்.

”யார்ரா?”

”நாந்தான்டா”

”என்னடா வேனும்?”

”கதவைத் திறடா”

அறைக்காரன் கதவைத்திறந்தபடியே “என்னடா வேனும்”

“தூங்கிட்டிருந்தியா? சாரிடா, ரியலி சாரி, தூங்கு, குட் நைட்”

அதுக்கப்புறம் அவனுக்கு தூக்கமாவது வர்ரதாவது. ஆனா நாங்க நல்லா தூங்குவோம்.