காட்டுக்குள் இரண்டு நண்ப்ர்கள் நடந்து போய்கொண்டிருந்தார்கள். திடீரென்று புலி உறுமும் சத்தம் கேட்கவும், அவசரமாக் ஓடத் தயாராகின்றனர். தன் ஷீ லேசை சரி செய்து கொண்டு ஓடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தவனைப் பார்த்து மற்றவன் கேட்டான்,
”நண்பா, அந்தப் புலியைவிட வேகமா ஓடிட முடியும்னு நீ நம்புறியா?”
அதற்கு, சிரித்துக் கொண்டே அவன் சொன்னான், “ நான் புலியைவிட வேகமாக ஓட வேண்டியதில்லை, உன்னைவிட வேகமா ஓடினாப் போதும்!”
மனைவி : ஏங்க, என்கிட்ட உங்களுக்குப் ரெம்பப் பிடிச்சது என் அழகா? அன்பான மனமா? பணிவான குணமா?
கணவன் : ” உன்னோட இந்தக் காமெடிதாம்மா.”
தன் கம்பெனியைச் சுத்திப் பார்க்க முதலாளி ரவுண்ட்ஸ் வந்துகிட்டிருந்த நேரம். ஒருத்தன் மட்டும் வேலையே செய்யாமல், சுவர் மேல் சாய்ந்து பராக் பார்த்துக் கொண்டிருந்த்தான்.
மெதுவாக அவனிடம் போய் கனிவாகக் கேட்டார், “தம்பி உனக்கு மாசம் எவ்வளவு சம்பளம்?”
“அவன் ரெம்ப சாதாரணமாகவே பேசினான், “2500 ரூபாய் , ஏன் கேக்குறீங்க”
அதற்குப் பதில் கூடத் தராமல் தன் பர்ஸிலிருந்து 5000 ரூபாயைக் கொடுத்து
” நான் இங்கே வேலை செய்யறதுக்குத்தான் சம்பளம் தர்றேன். இப்படி சும்மா நிக்கறதுக்கு இல்லை. இந்தா இரண்டு மாசச் சம்பளம். எடுத்துகிட்டுப் போயிடு! இனிமே வரவேண்டாம்”னு துரத்தீட்டார்.
அவனும் அதவாங்கீட்டு கூலா வெளிய போயிட்டான்.
அதுக்கப்புறம் அங்கிருந்த மற்ற உழியர்களப் பார்த்து, “ இப்படிப்பட்டவர்களுக்கு இனிமே இதுதான் கதி”னு கடுமையா எச்சரிச்ச முதலாளி, “ அந்த ராஸ்கல் எந்த டிபார்ட்மெண்ட்?”னு கேட்டார்.
கூட்டத்திலிருந்து ஒரு குரல் “அவன் கூரியர் பையன் சார்!”
டிஸ்கி : என் மகளின் activity நோட்டிலிருந்து எடுக்கப்பட்டது.