Month: November 2008

கடல்புரத்தில் – வண்ணநிலவன்

சென்னை போன்ற பெருநகரங்களில், மூச்சு முட்டும் நெருக்கடியான வாழ்க்கையைப் பாவிப்பவர்கள், ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் தூத்துக்குடியருகில் இடம்பெயர்ந்து வாழ்ந்தால் கிட்டும் அனுபவங்கள் இந்தநாவல் முழுவதும் வாக்கியங்களால் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.

வாசித்து முடித்ததும், “நல்லாத்தாம்ல இருக்கு” என்று அந்த பாஷை அனிச்சையாக வந்து விழுவதைத் தவிர்க்கவியலாது.

க்ரூஸ் மிக்கேல், மரியம்மை, பிலோமினா, செபஸ்தியன், அமலோற்பவம், சாமிதாஸ், ரஞ்சி, ஐசக், ரொசாரியோ, சிலுவை, வாத்தி, பவுலுப் பாட்டா, மாமியாக் கிழவி ஆகிய கதை மாந்தர்களைப் புள்ளிகளாக்கி வரையப்பட்டக் கோலம். புள்ளிகளைச் சுற்றியும், வெட்டியும், ஒட்டியும், குறுக்கும் நெடுக்குமாக ஒழுங்கற்றும், தன்னளவில் ஏதோ ஒரு ஒழுங்கின்பாற்படுவதாகவும் இருக்கிறது.

வாத்தியார் வேலை பார்க்கும் மகன் செபஸ்தி, மேலும் காசு பார்க்கும் ஆசையில், சாயபுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப்பில் கடைவைக்க விழைகிறான்.

//வல்லம் எப்படியும் இன்றைய கிரையத்துக்கு அறுநூறு வரை போகும். வீடு ஆயிரத்துக்கு மேல் போகும். எல்லாம் அப்பச்சியின் மனசு இறங்க வேண்டும். (அப்பச்சி – அப்பா. கதை நடப்பது 1970 களில்.)//

இத்தனை நாள் கைகொண்ட தொழிலை விட மனசில்லாதவராகவும், சோற்றுக்கு வழிகாட்டிய வல்லத்தை விற்கவும் மறுப்பவராகவும் அப்பா க்ரூஸ் மிக்கேல்.

//”இன்னும் காலுங் கையும் தெடமாட்டு இருக்கு . வல்லத்தை ஒத்தை ஆளா நின்னு கடல்ல தள்ளிவுடத் தைரியமிருக்கு… எல்லாத்துக்கும் மேல மாதா இருக்கா. இந்தக் குருஸுக்கு அம்மையும் மச்சங்களும்தான் விசுவாசத்துடனிருக்கு”//

மனைவியின் மீதிருக்கும் அன்பு நீறு பூத்த நெருப்பாக வெளிப்படுகிறது. மனைவி மரியம்மைக்கும் வாத்திக்கும் இருக்கும் உறவு தெரிந்திருந்தும் அவளை வெறுத்து ஒதுக்க முடிந்ததில்லை.

//”அவளை வெறுத்தான். ஆனாலும், அவளிடம் அளவு கடந்த ஆசை கொண்டிருந்தான் அவளுக்கென்று ஒரு அழகு இருந்தது. அது அவளுடைய உடம்புதான். அவளுடைய மடியில் தலை சாய்த்துக் கிடந்தால் போதும், மனசில் வீரமும் விவேகமும் விளையும்”//

வல்லத்தையும் வீட்டையும் விற்க நேர்கையில் தன்வயமிழந்தலைகிறார்.

//குருஸ் வல்லத்தினருகே போய் தன்னுடைய பிரியமான ஒரு குழைந்தையை நீண்ட காலம் பிரிந்திருந்த ஏக்கத்துடன் அதைத் தடவிக் கொடுத்தான். அது அவனுடைய மரியம்மையைப் போல கடலில் அவனுடனே அவனுடைய கஷ்டங்களையும் சந்தோஷங்களைம்கூடஇருந்து அனுபவித்ததல்லவா? அவனுக்குத் துக்கம் தாங்க முடியவில்லை. மார்பு ஏறி இறங்கியது. அப்படியே அதனருகே பொட்டலத்தை மணலில் வீசிவிட்டு கடலைப் பார்த்தபடியே விழுந்து கிடந்தான்.//

மகனுடன் சென்றால் சீவிச் சிங்காரிக்கவும், உடன்குடித் தேட்டரில் அடிக்கடிப் படம் பார்க்கவும் ஆசைப்படும் அம்மா. தன் இயலாமை, இல்லாமை இரண்டுக்கும் வாய் கொப்பளிக்க வந்து விழும் வார்த்தைகளும் வாத்தியாரும்தான் வடிகால்.

//”ஆமாண்டி… ஆசைதான். நீ இங்க கெடக்கப் போறீயோ? கெட.. கெட. ஒன் அப்பச்சியோட கெட… நீ ஏன் இங்க இருக்க ஆசப்படுதன்னு எனக்குல்லா தெரியும் . ஒன் சங்கதியெல்லாம் தெரியாதுன்னிட்டு நெனைச்சிருக்கியோசிறுக்கி. இரி… இரி… ஒன் அப்பச்சி வரட்டு்”//

//அவளால் வாத்தியைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. முதலில் அடிக்கடிதினந்தோறும் பார்த்துக் கொண்டிருந்தாள். வயசாக வயசாக அதைக் குறைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஒருபோதும் அவள் வாத்தியைப் பார்க்காமல் இருந்தது கிடையாது. அவளுக்கும் வாத்திக்கும் உள்ள ஸ்னேகம் அவ்வளவு நெருக்கமானது.//

ஆயினும் மற்றெல்லாக் கதாபாத்திரங்களைவிட முன்நிற்பது பிலோமினாதான்.

அப்பாவிடம் பாசம். அம்மாவிடம் அன்பு. அண்ணன் செபஸ்திடம் பிரியம். சாமிதாசுடன் காதல். ரஞ்சியிடம் தோழமை. வாத்தியிடம் வாத்சல்யம். என எல்லாம் கலந்த ஒரு படைப்பு.

தனிமையில் இருக்கும் ஒரு நாளில் சாமிதாசிடம் தன்னை இழக்கிறாள் பிலோமி. மிக நசூக்காகவும் அழுத்தமாகவும் எழுதப்பட்டிருக்கும் இச்சம்பவம் கதையின் சிக்கல்களுல் ஒன்று.

//“ பிலோமி திமிறவும் இல்லை, திமிறாமலும் இல்லை. அவளுக்கு வேண்டும் போலவும் வேண்டாம் போலவும் இருந்தது. ஒரு கணத்துக்கு அம்மையின் சிடுசிடு முகம் கண் முன்னால் வந்தது. பிறகு, அதுவும் மறைந்து போனது. அதற்குள் சாமி அவளைத் தன்வசப் படுத்தியிருந்தான். அவளுக்குச் சொல்வதற்கு ஒன்றும் இல்லமல் ஆகிவிட்டிருந்தது.”//

//ரஞ்சி பிலோமியுடைய கையைப் பிடித்துக் கொண்டபோது, ரஞ்சிக்கு நெஞ்சே கீழே விழுந்துவிட்டது போல் இருந்தது. அந்தக் கை எவ்வளவு நேசத்தை வாரிக் கொடுக்கிற கை. இந்த ஸ்னேகமெல்லாம் என்ன விலை பெறும்? வீட்டுக்கு வெளியெ ஆர்ப்பரிக்கிற கடலையே கை நீட்டிக் கொடுத்தால்கூடத் தகுதியானதுதானா? இதெல்லாம் எப்படித் தானே விளைகின்றன? மனுஷர்களுக்குள்ளே மிகவும் கொடியவர்களென்று சொல்கிறோமே அவர்களுக்கும் இது போல ஒரு ஸ்நேகிதம், இது போல ஒரு நேயமான கையை அறிமுகமில்லாமலா இருக்கும்? இதெல்லாம் பரந்தது, ஆழமானது; அந்தக் கடலையே போல இவைகளெலெல்லாம் தான் வாழ்வின் பிடிப்புகள் பிரித்துப் போட இய்லாதபடி மாயமாய் பிணைந்து கிடக்கின்றன. எவ்வளவு கொடுமையானதாக வாழ்க்கை வருத்தினாலும் இங்கே யாரும் சாகப் பிரியப்படவில்லை. அதற்கு இந்த ஸ்நேகங்களும் பிரியங்களும்தான் காரணம்.//

ஒரே குடும்பமெனினும் அவரவர் ஆசைகளும் அபிலாசைகளும் அவரவருக்கு.

எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி மேற்செல்லும் எனபதான வாழக்கை, புரட்டிப் போடுகிறது இவர்களையும். மரியம்மை மறைவு, சாமிதாசின் துரோகம், க்ரூஸின் மனநிலை பிறழ்தல், சிலுவையின் நம்பிக்கைத் துரோகம் எல்லாம் ஒன்றுகூடியோ அல்லது தனித்தனியாகவோ பிலோமியை ஆதரவு தேடி வாத்தி பக்கம் செலுத்துகிறது.

//வாத்தி அங்கே வந்து போய் இருக்கிறது பற்றி ஊரில் பேச்சும் வந்துவிட்டது. அந்தப் பேச்சு சாமிதாஸ் காதிலும் விழுந்தது. அவனுக்கு வேறு ஊரில் கல்யாணம் நிச்சயமாகி இருந்தாலும் அவனால் வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை. ரஞ்சிக்கு எல்லாந் தெரியும். அதனால் அவள் ஒன்றும் சொல்லவில்லை.

ஒரு நாள் பிலோமி வாத்தியிடம் இப்படிச் சொன்னாள், “ நீங்க மட்டும் இல்லையின்னா இந்த பிலோமி கடல்ல வுழுந்து மரிச்சிப் போயிருப்பா…”//

இரண்டு விஷயங்களை இந்நாவலின் சிறப்புக்கான காரணங்களாக என்னால் முன் வைக்க முடிகிறது.
1. ஒரு முறைதான் கூடினாலும், பிலோமிக்கு அனுதாபம் சேர்க்கிறேனென்று அவளைக் கர்ப்பமாக்கமல் விட்டது.
2. காதலித்தவளைக் கைவிட்ட சாமிதாசைத் தண்டிக்கமல் இயல்பாக நாவலை முடித்தது.

//”சும்மா உள்ளே வாங்க இது அசல் மனுஷர் வீடு இல்லை. உங்களுக்க பிலோமி வூடுதா இது…”

அவனுக்கு வார்த்தைகள் இல்லை. ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றன. பிலோமி அவனுடைய தவ்விப்பைப் பார்த்திருந்தாள். நார்ப் பெட்டிகள்கிடந்த மூலையைப் பார்த்தாள். அதன் மேலே அவள் சேலை சுருட்டிக் கிடந்தது,அதனுடன் கிடைக்கையில் அடிக்கடி நினைத்துக்கொண்ட அம்மை பற்றின பயம், வல்லத்துப் பாய்களைப் போலே குடை பிடித்துக் கொண்டு உப்பிப் பறந்த அந்தச் சுகம் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தது.

மீண்டும் அவனே பேசினான். அவள் மௌனித்திருந்தாள்.

“நீ என்னய மன்னிக்கனும்… எனக்கு மாப்புத் தரணும்.”

“இப்படியெல்லாம் நீங்க பேசக்கூடாது.”

“நாளைச் செண்டு கல்யாணம். ஒன்னயப் பார்க்கணும் பேசணும் போல இருந்திச்சி;அதான் வந்தேன். நீயும் கண்டிச்ஷனாட்டு வரணும். நா ஒன்னயத்தா ரெம்ப நெனைச்சுகிட்டிருப்பேன். சரின்னு சொல்லு…”

ம்…”

பிலோமி சொல்லவில்லை சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவளுக்கு அபூர்வமான சோபையைத் தந்தது.//

சமுதாயத்தைப் பிரதிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பது ஒரு நல்ல இலக்கியப் படைப்பின் இலக்கணம். பரதவர்களின் வாழ்க்கையை அதன் ஒழுங்குகளுடனும், ஒழுங்கீனங்களுடனும் அதன் போக்கிலேயே பதியப்பட்டிருக்கிறது. இதை வேறெப்படியும் எழுதியிருக்க முடியாது. ஏனெனில் இன்னுமொரு பிலோமினாவும், சாமிதாசும், செபஸ்தியும் இதன் நீட்சியாக வேறு பெயர்கள் தாங்கியும் வேறு ஊர்களில் தங்கியும் இதை வாழ்ந்து கொண்டுதானிருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் ஆசைகளும் அபிலாஷைகளும் வேறு விதத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்கும்.

ஆசைகளற்று வாழ வேண்டுமென்பதே ஆகப்பெரிய ஆசையில்லையா?

இந் நாவலைப் அனுப்பிய கிழக்குப் பதிப்பகத்துக்கு நன்றி.

கடல்புரத்தில் – வண்ணநிலவன்

சென்னை போன்ற பெருநகரங்களில், மூச்சு முட்டும் நெருக்கடியான வாழ்க்கையைப் பாவிப்பவர்கள், ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் தூத்துக்குடியருகில் இடம்பெயர்ந்து வாழ்ந்தால் கிட்டும் அனுபவங்கள் இந்தநாவல் முழுவதும் வாக்கியங்களால் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.

வாசித்து முடித்ததும், “நல்லாத்தாம்ல இருக்கு” என்று அந்த பாஷை அனிச்சையாக வந்து விழுவதைத் தவிர்க்கவியலாது.

க்ரூஸ் மிக்கேல், மரியம்மை, பிலோமினா, செபஸ்தியன், அமலோற்பவம், சாமிதாஸ், ரஞ்சி, ஐசக், ரொசாரியோ, சிலுவை, வாத்தி, பவுலுப் பாட்டா, மாமியாக் கிழவி ஆகிய கதை மாந்தர்களைப் புள்ளிகளாக்கி வரையப்பட்டக் கோலம். புள்ளிகளைச் சுற்றியும், வெட்டியும், ஒட்டியும், குறுக்கும் நெடுக்குமாக ஒழுங்கற்றும், தன்னளவில் ஏதோ ஒரு ஒழுங்கின்பாற்படுவதாகவும் இருக்கிறது.

வாத்தியார் வேலை பார்க்கும் மகன் செபஸ்தி, மேலும் காசு பார்க்கும் ஆசையில், சாயபுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப்பில் கடைவைக்க விழைகிறான்.

//வல்லம் எப்படியும் இன்றைய கிரையத்துக்கு அறுநூறு வரை போகும். வீடு ஆயிரத்துக்கு மேல் போகும். எல்லாம் அப்பச்சியின் மனசு இறங்க வேண்டும். (அப்பச்சி – அப்பா. கதை நடப்பது 1970 களில்.)//

இத்தனை நாள் கைகொண்ட தொழிலை விட மனசில்லாதவராகவும், சோற்றுக்கு வழிகாட்டிய வல்லத்தை விற்கவும் மறுப்பவராகவும் அப்பா க்ரூஸ் மிக்கேல்.

//”இன்னும் காலுங் கையும் தெடமாட்டு இருக்கு . வல்லத்தை ஒத்தை ஆளா நின்னு கடல்ல தள்ளிவுடத் தைரியமிருக்கு… எல்லாத்துக்கும் மேல மாதா இருக்கா. இந்தக் குருஸுக்கு அம்மையும் மச்சங்களும்தான் விசுவாசத்துடனிருக்கு”//

மனைவியின் மீதிருக்கும் அன்பு நீறு பூத்த நெருப்பாக வெளிப்படுகிறது. மனைவி மரியம்மைக்கும் வாத்திக்கும் இருக்கும் உறவு தெரிந்திருந்தும் அவளை வெறுத்து ஒதுக்க முடிந்ததில்லை.

//”அவளை வெறுத்தான். ஆனாலும், அவளிடம் அளவு கடந்த ஆசை கொண்டிருந்தான் அவளுக்கென்று ஒரு அழகு இருந்தது. அது அவளுடைய உடம்புதான். அவளுடைய மடியில் தலை சாய்த்துக் கிடந்தால் போதும், மனசில் வீரமும் விவேகமும் விளையும்”//

வல்லத்தையும் வீட்டையும் விற்க நேர்கையில் தன்வயமிழந்தலைகிறார்.

//குருஸ் வல்லத்தினருகே போய் தன்னுடைய பிரியமான ஒரு குழைந்தையை நீண்ட காலம் பிரிந்திருந்த ஏக்கத்துடன் அதைத் தடவிக் கொடுத்தான். அது அவனுடைய மரியம்மையைப் போல கடலில் அவனுடனே அவனுடைய கஷ்டங்களையும் சந்தோஷங்களைம்கூடஇருந்து அனுபவித்ததல்லவா? அவனுக்குத் துக்கம் தாங்க முடியவில்லை. மார்பு ஏறி இறங்கியது. அப்படியே அதனருகே பொட்டலத்தை மணலில் வீசிவிட்டு கடலைப் பார்த்தபடியே விழுந்து கிடந்தான்.//

மகனுடன் சென்றால் சீவிச் சிங்காரிக்கவும், உடன்குடித் தேட்டரில் அடிக்கடிப் படம் பார்க்கவும் ஆசைப்படும் அம்மா. தன் இயலாமை, இல்லாமை இரண்டுக்கும் வாய் கொப்பளிக்க வந்து விழும் வார்த்தைகளும் வாத்தியாரும்தான் வடிகால்.

//”ஆமாண்டி… ஆசைதான். நீ இங்க கெடக்கப் போறீயோ? கெட.. கெட. ஒன் அப்பச்சியோட கெட… நீ ஏன் இங்க இருக்க ஆசப்படுதன்னு எனக்குல்லா தெரியும் . ஒன் சங்கதியெல்லாம் தெரியாதுன்னிட்டு நெனைச்சிருக்கியோசிறுக்கி. இரி… இரி… ஒன் அப்பச்சி வரட்டு்”//

//அவளால் வாத்தியைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. முதலில் அடிக்கடிதினந்தோறும் பார்த்துக் கொண்டிருந்தாள். வயசாக வயசாக அதைக் குறைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஒருபோதும் அவள் வாத்தியைப் பார்க்காமல் இருந்தது கிடையாது. அவளுக்கும் வாத்திக்கும் உள்ள ஸ்னேகம் அவ்வளவு நெருக்கமானது.//

ஆயினும் மற்றெல்லாக் கதாபாத்திரங்களைவிட முன்நிற்பது பிலோமினாதான்.

அப்பாவிடம் பாசம். அம்மாவிடம் அன்பு. அண்ணன் செபஸ்திடம் பிரியம். சாமிதாசுடன் காதல். ரஞ்சியிடம் தோழமை. வாத்தியிடம் வாத்சல்யம். என எல்லாம் கலந்த ஒரு படைப்பு.

தனிமையில் இருக்கும் ஒரு நாளில் சாமிதாசிடம் தன்னை இழக்கிறாள் பிலோமி. மிக நசூக்காகவும் அழுத்தமாகவும் எழுதப்பட்டிருக்கும் இச்சம்பவம் கதையின் சிக்கல்களுல் ஒன்று.

//“ பிலோமி திமிறவும் இல்லை, திமிறாமலும் இல்லை. அவளுக்கு வேண்டும் போலவும் வேண்டாம் போலவும் இருந்தது. ஒரு கணத்துக்கு அம்மையின் சிடுசிடு முகம் கண் முன்னால் வந்தது. பிறகு, அதுவும் மறைந்து போனது. அதற்குள் சாமி அவளைத் தன்வசப் படுத்தியிருந்தான். அவளுக்குச் சொல்வதற்கு ஒன்றும் இல்லமல் ஆகிவிட்டிருந்தது.”//

//ரஞ்சி பிலோமியுடைய கையைப் பிடித்துக் கொண்டபோது, ரஞ்சிக்கு நெஞ்சே கீழே விழுந்துவிட்டது போல் இருந்தது. அந்தக் கை எவ்வளவு நேசத்தை வாரிக் கொடுக்கிற கை. இந்த ஸ்னேகமெல்லாம் என்ன விலை பெறும்? வீட்டுக்கு வெளியெ ஆர்ப்பரிக்கிற கடலையே கை நீட்டிக் கொடுத்தால்கூடத் தகுதியானதுதானா? இதெல்லாம் எப்படித் தானே விளைகின்றன? மனுஷர்களுக்குள்ளே மிகவும் கொடியவர்களென்று சொல்கிறோமே அவர்களுக்கும் இது போல ஒரு ஸ்நேகிதம், இது போல ஒரு நேயமான கையை அறிமுகமில்லாமலா இருக்கும்? இதெல்லாம் பரந்தது, ஆழமானது; அந்தக் கடலையே போல இவைகளெலெல்லாம் தான் வாழ்வின் பிடிப்புகள் பிரித்துப் போட இய்லாதபடி மாயமாய் பிணைந்து கிடக்கின்றன. எவ்வளவு கொடுமையானதாக வாழ்க்கை வருத்தினாலும் இங்கே யாரும் சாகப் பிரியப்படவில்லை. அதற்கு இந்த ஸ்நேகங்களும் பிரியங்களும்தான் காரணம்.//

ஒரே குடும்பமெனினும் அவரவர் ஆசைகளும் அபிலாசைகளும் அவரவருக்கு.

எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி மேற்செல்லும் எனபதான வாழக்கை, புரட்டிப் போடுகிறது இவர்களையும். மரியம்மை மறைவு, சாமிதாசின் துரோகம், க்ரூஸின் மனநிலை பிறழ்தல், சிலுவையின் நம்பிக்கைத் துரோகம் எல்லாம் ஒன்றுகூடியோ அல்லது தனித்தனியாகவோ பிலோமியை ஆதரவு தேடி வாத்தி பக்கம் செலுத்துகிறது.

//வாத்தி அங்கே வந்து போய் இருக்கிறது பற்றி ஊரில் பேச்சும் வந்துவிட்டது. அந்தப் பேச்சு சாமிதாஸ் காதிலும் விழுந்தது. அவனுக்கு வேறு ஊரில் கல்யாணம் நிச்சயமாகி இருந்தாலும் அவனால் வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை. ரஞ்சிக்கு எல்லாந் தெரியும். அதனால் அவள் ஒன்றும் சொல்லவில்லை.

ஒரு நாள் பிலோமி வாத்தியிடம் இப்படிச் சொன்னாள், “ நீங்க மட்டும் இல்லையின்னா இந்த பிலோமி கடல்ல வுழுந்து மரிச்சிப் போயிருப்பா…”//

இரண்டு விஷயங்களை இந்நாவலின் சிறப்புக்கான காரணங்களாக என்னால் முன் வைக்க முடிகிறது.
1. ஒரு முறைதான் கூடினாலும், பிலோமிக்கு அனுதாபம் சேர்க்கிறேனென்று அவளைக் கர்ப்பமாக்கமல் விட்டது.
2. காதலித்தவளைக் கைவிட்ட சாமிதாசைத் தண்டிக்கமல் இயல்பாக நாவலை முடித்தது.

//”சும்மா உள்ளே வாங்க இது அசல் மனுஷர் வீடு இல்லை. உங்களுக்க பிலோமி வூடுதா இது…”

அவனுக்கு வார்த்தைகள் இல்லை. ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றன. பிலோமி அவனுடைய தவ்விப்பைப் பார்த்திருந்தாள். நார்ப் பெட்டிகள்கிடந்த மூலையைப் பார்த்தாள். அதன் மேலே அவள் சேலை சுருட்டிக் கிடந்தது,அதனுடன் கிடைக்கையில் அடிக்கடி நினைத்துக்கொண்ட அம்மை பற்றின பயம், வல்லத்துப் பாய்களைப் போலே குடை பிடித்துக் கொண்டு உப்பிப் பறந்த அந்தச் சுகம் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தது.

மீண்டும் அவனே பேசினான். அவள் மௌனித்திருந்தாள்.

“நீ என்னய மன்னிக்கனும்… எனக்கு மாப்புத் தரணும்.”

“இப்படியெல்லாம் நீங்க பேசக்கூடாது.”

“நாளைச் செண்டு கல்யாணம். ஒன்னயப் பார்க்கணும் பேசணும் போல இருந்திச்சி;அதான் வந்தேன். நீயும் கண்டிச்ஷனாட்டு வரணும். நா ஒன்னயத்தா ரெம்ப நெனைச்சுகிட்டிருப்பேன். சரின்னு சொல்லு…”

ம்…”

பிலோமி சொல்லவில்லை சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவளுக்கு அபூர்வமான சோபையைத் தந்தது.//

சமுதாயத்தைப் பிரதிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பது ஒரு நல்ல இலக்கியப் படைப்பின் இலக்கணம். பரதவர்களின் வாழ்க்கையை அதன் ஒழுங்குகளுடனும், ஒழுங்கீனங்களுடனும் அதன் போக்கிலேயே பதியப்பட்டிருக்கிறது. இதை வேறெப்படியும் எழுதியிருக்க முடியாது. ஏனெனில் இன்னுமொரு பிலோமினாவும், சாமிதாசும், செபஸ்தியும் இதன் நீட்சியாக வேறு பெயர்கள் தாங்கியும் வேறு ஊர்களில் தங்கியும் இதை வாழ்ந்து கொண்டுதானிருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் ஆசைகளும் அபிலாஷைகளும் வேறு விதத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்கும்.

ஆசைகளற்று வாழ வேண்டுமென்பதே ஆகப்பெரிய ஆசையில்லையா?

இந் நாவலைப் அனுப்பிய கிழக்குப் பதிப்பகத்துக்கு நன்றி.

கதம்பம் – 22-11-08

இந்தித்திரைப்பட உலகை தன் இசையால் மயங்கச் செயதவர் நௌஷத். 1919ல் பிறந்த நௌஷத், 1930ம் ஆண்டில் பம்பாய் நகருக்குப் பிழைப்பைத் தேடி வந்தார். யாரும் அவருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுக்கவில்லை. பம்பாய் பராமுகமாய் இருந்தது.

எந்த ஸ்டூடியோவிலும் வேலை கிடைக்காமல், ஆரம்ப காலத்தில் கொடிய வறுமையில் உழன்ற போதிலும், மன உறுதியை இழக்கவில்லை. பம்பாய் நகரின் அசுத்தமான சாலைகளின் பிளாட்பாரங்களில் செய்தித்தாள்களை விரித்துக் களைப்புடன் படுத்து உறங்கியுள்ளார்.

அவர் இசையமைத்த படத்தின் முதல் நாள் காட்சி. அந்தத் திரையரங்கின் எதிர்புறமுள்ள பிளாட்பாரத்தில்தான் அவரது பெரும்பாலானா நாட்களைக் கழித்திருக்கிறார்.

படத்தயாரிப்பாளர் கேட்டார்” இப்பொழுது எவ்வாறு உணர்கிறீர்கள் நௌஷத்?”

நௌஷத் சொன்னார் “அந்தப் பிளாட்பாரத்திலிருந்து சாலையைக் கடந்து இந்தத் திரையரங்கத்திற்குள் வர எனக்குப் பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டன”

ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் வலி மிகுந்ததும், நம்பிக்கை நிறைந்ததுமான உழைப்பு இருந்தே தீரும்.

******************************************************************************
சட்டக் கல்லூரி வன்முறை பற்றி ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது. ஆனால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த என் போன்றோருக்கு இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. இதைவிடக் கொடூரமானவைகளை நேரில் பார்த்ததால் கூட இருக்கலாம்.

மேலும் இது மற்ற கல்லூரி மாணவர்கள் என்றால் கூட ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்ககூடும். ஆனால் சட்டக் கல்லூரி என்பதால் ஒரு எதிர் மறை விளைவை ஏற்படுத்தியது உண்மை. இதுக்காக அவங்க அடிச்சுகிட்டது சரின்னு சொல்லல. அவங்க வேறமாதிரி இருப்பாங்கன்னு எதிர்பார்த்தது;எதிர்பார்ப்பது நமது தவறுன்னு சொல்லுகிறேன்.

சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் நடந்த சம்பவத்திற்கு, கோவை சட்டக் கல்லூரி மணவர்கள் நடத்திய கலாட்டா எந்த விதத்தில் ஞாயமானது என்று எவரும் பேசக் கானோம். கல்லூரிக் கண்ணாடிகளை, மேசை,நாற்காலிகளை உடைத்தது எந்த விததிலும் சரியல்ல.

சாதியை விட்டுத்தள்ளுங்கள். முதலாம் வருட இரண்டாம் வருட மாணவர்களுக்கிடையே அல்லது ஒரு பெண்ணைக் குறித்து இரு குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதல்களால் மருதமலைக்குச் செல்லும் பக்தர்கள் அவதியுற்ற கதைகள் ஏராளம். மற்ற இடங்களில் எப்படியோ வடவள்ளியில் பெரும்பாலானவர்கள் இவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் எனபதான மனநிலையில் இருப்பது கண்கூடு; இவ்வெண்ணம் தவறென்ற போதிலும்.

எத்தனை முறை, எதைத்தேய்த்துக் குளித்தாலும் அழியாத மச்சத்தைப் போல இவர்கள் மீது படிந்த இந்த அழுக்கு எளிதில் கரைந்துவிடாது; கரைக்கவும் முடியாதது.

********************************************************************

வண்ணதாசன் என்று அறியப்படுகிற கல்யாணசுந்தரம், கல்யாண்ஜி என்ற பெயரில் சிறந்த கவிதைகள் படைத்துள்ளார். அவரது கவிதைகளில் நமது தோளைத்தட்டிப் பாராட்டும் ஒரு தோழமை ஊடாடும்.

நேர்த்தியாக வெட்டப்பட்டு
ஒரு பீங்கான்தட்டின் பள்ளத்தில்
குவிந்திருக்கும் மாம்பழத் துண்டுகளின்
வடிவமும் நிறமும் வாசனையும்
மாறிக்கொண்டேயிருக்கிறது
விருந்தினர் வருகையின் தாமதம் சார்ந்து.
நறுக்கிய கத்தியின்
கைப்பிடியில் பதிந்திருக்கும்
ரேகைகளில் ஊஞ்சலாடுகிறது
கண்காணாத ஒரு மாமரம்.
என் கைகளை நுகர்கையில்
அசைகிறது ஒரு தூரத்து மாந்தோப்பு.
கரிய துகளை உதிர்த்தபடி
மாங்கொட்டை உள்ளிருந்து
வெளியேறும் வண்டின்
நகர்தலைப் பார்த்த பரவசத்தில்
வீடெங்கும் உதிர்கிறது
உயிர் உயிராக
ஓராயிரம் பூ என்னிடமிருந்து.
உற்றுக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
என் கிளைகளை நோக்கி
சிறகடித்து வந்து கொண்டிருக்கும்
ஒரு பறவையின் கூவலுக்காக.

‘கடிதம்’ குறித்த இவரது கவிதையும் எனக்குப் பிடித்த ஒன்று. வண்ணதாசன் கதைகள் அனைத்தும் ஒரே தொகுதியாக வந்திருக்கிறது. ஒரு நாள் ஒரு கதை என்று படித்தால் ஒரு தனி வாசிபபனுபவம் கிட்டும்.

வலைப் பதிவாளர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் இவருடன் வங்கியில் வேலை செய்தவர் என்பதொரு கூடுதல் தகவலிங்கு.

***********************************************************************

வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ நாவலைக் கிழக்குப் பதிப்பகத்தார் இலவசமாக அனுப்பியுள்ளனர். படித்து முடித்ததும் எனது வலைத்தளத்தில் ஒரு விமர்சனப் பதிவு எழுதவேண்டும் என்ற ஏற்பாட்டின்படி. இந்தாளும் ஏதோ எழுதுறான்னு நெனைச்சிட்டாங்களோ?

**********************************************************************

மனைவி : ஏங்க இவ்வளவு சோகமா இருக்கீங்க?

கணவர் : எங்க மேனேஜர் என்னை அரை லூசுன்னு திட்டீட்டார்.

மனைவி : சரி விடுங்க உங்களைப் பத்தி அவருக்கு முழுசாத் தெரியல.

கதம்பம் – 9/11/08

ஒரு முறை கலைவாணர் அமர்ந்து கணக்கு எழுதிக் கொண்டிருந்த போது ஒருவர் வந்தார். வந்தவரை எதிரில் இருக்கும் இருக்கையில் அமரும்படிச் சொன்னார் கலைவாணர்.

அதற்கு வந்தவர், “ நான் யார் தெரியுமா?” என்றார்.

கலைவாணர், “தெரியாதுங்களே“ என்றார்.

“நாந்தான் சிங்கம்பட்டி ஜமீந்தார்” என்றபடியே மீசையை முறுக்கினார் வந்தவர்.

அதற்கு கலைவாணர்,”அப்படியா! நல்லது, அப்ப இந்த ரெண்டு சேர்லயும் உக்காருங்க” அப்படின்னு எதிரே இருந்த இரண்டு நாற்காலிகளையும் காட்டினார்.

****************************************************************


இவ்வாண்டு, புக்கர் பரிசு ஓர் இந்தியர் எழுதிய முதல் நாவலுக்கே கிடைத்திருக்கிறது என்பது பற்றி இந்தியர்களாகிய நாம் மகிழ்ச்சிக்கு அடையலாம்.
ஆனால், பெருமை கொள்ளமுடியுமா என்பது சந்தேகந்தான். – இந்திரா பார்த்தசாரதி.

புக்கர் பரிசு பெற்ற இந்நாவலை என் வட்டத்தில் எல்லோரும் படித்து முடித்து இறுதியாகத்தான் நான் படித்தேன்.

கிராமத்துல ஏழை ரிக்‌ஷாக்காரருக்கு மகனாகப் பிறந்த பல்ராம் கார் டிரைவராகி, ஒரு குற்றம் செய்தபின் தலை மறைவாகி, தொழிலதிபராகும் கதைதான். நேர்கோட்டில் சொல்லப்பட்டிருந்தால் சாதாரணக் கதையாகியிருக்கும். சீன அதிபருக்குக் கடிதம், கொஞ்சம் பிளாஷ் பேக் என ஜிகினாத்தனம் செய்து ஒப்பேத்தியிருக்கார்.

கிரைம் நாவலாகவும் இல்லாம சமுதாய நாவலாகவும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக இருக்கிறது. இதற்கு புக்கர் பரிசு என்பது, பரிசுக்கான தகுதிகளின் மீதான கேள்வியையும் தேர்வுக் குழுவின் மீதான நேர்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

ஆனால் சுகேது மேத்தா எழுதிய ’மேக்சிமம் சிட்டி’ இதை விட எல்லா வகையிலும் ஆகச்சிறந்த ஒரு படைப்பு. மும்பையின் பல்வேறு முகங்களை அதன் தோலுரித்துக் காட்டுகிறார். ரசிக்கத் தகுந்த நடையும், எழுதுமுன் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியும் பாராட்டத்தகுந்த ஒன்று.

தமிழில் நாஞ்சில் நாடன் எழுதிய “எட்டுத் திக்கும் மதயானை’ என்ற படைப்பை வாசித்தவர்களுக்கு ’வெள்ளைப் புலி’ மிகுந்த ஏமாற்றமே.

”ஒரு தேர்ந்த திரைக்கதை போன்ற எழுத்து நாஞ்சில் நாடனுடையது.மனக்கண் முன் காட்சிகளாக விரியும் வார்த்தையாடல்கள்.மிகத் தெளிவான,ஆர்வமான எழுத்து என வாசிப்பின்பத்திற்கு நாஞ்சில் நாடன் முழு உத்திரவாதம்.” அய்யனார்.

*************************************************************

மரணம் பழகியவள்

கிழக்குப்பார்த்துக் கிடக்கிறது பிணம்.
நீள்சம்பங்கி வாசத்தில்
மணமேடை ஆரவாரம் தேடும் குழந்தைக்கு
சொல்லாமல் திரும்பிச் செல்ல
கற்றுக்கொடுக்கப்படும் மரபு

ஒற்றைகுரல் ஒப்பாரி ஆகாதென‌
சேர்ந்தழும் புடவைக்கூட்டம் அடுபேற்றாமல்
அடுத்தவீட்டு தேனீர் சுவைக்கிறது

விறைப்பிளகி குளிப்பாட்ட அணைக்கப்பட்ட‌
குளிர்ப்பெட்டி கணக்கிலேறும் மற்றுமொரு சவம்

நெஞ்சு பிடித்து விழி பிதுங்கி
எச்சில் வ‌ழிய க‌ண் கசிந்த‌
கடைசி உயிர்வலி ஸ்பரிசித்து
துப்பட்டாவில் துடைத்தெடுத்த‌
சின்ன மகள்

எல்லா பிணங்களையும் இழுத்துச் செல்வாள்
கண்ணீரின்றி வலியுமின்றி.

அனிதா, மென்பொருள் பொறியாளர், பெங்களூரு, கர்நாடகா,இந்தியா.

இவரது கவிதைகள் பலவும் பத்திரிக்கைகளில் வந்திருக்கின்றன. வாழ்க்கை பற்றிய வேறொரு பரிமாணத்தை முன் வைக்கும் இவர் கவிதைகள் , வாழ்வின் ஆதாரமான நம்பிக்கைகள் மீதான கேள்விகளை முன் வைத்துச் செல்கின்றன. வெளிச்சம் பாயும் போது நீழும் நிழல் பி்ற சமயங்களில் காலுக்குக் கீழே பதுங்கிக் கிடப்பதைப் போல பெண்கள் தங்களுக்குள் எழும் கேள்விகளை மறைத்தவாறும், தோன்றும் சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்துவதுமாவே கழிகிறது வாழ்க்கை. கற்பு மற்றும் ஆண் பெண் உறவுகளின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் மேல் வீசபபடும் இவரது கேள்விகள் அவ்வகையானவை; விவாதத்துகுரியவை.

***********************************************************

ரயில் பயணம் ஒவ்வொரு முறையும் வெவ்வேறான அனுபவத்தை அளித்தபடியேதானிருக்கிறது. ஆனால் காலம்தோறும் மாறத ஒன்று,
ஆரம்பத்தில் விரோதிகள் போல இறுக்கமாக இருப்பவர்கள், பயண இறுதியில் பரஸ்பரம் முகவரி வாங்கும் அளவுக்கான நெருக்கத்தை அடைந்து விடு்வதுதான்.

தண்ணீரோ, சில்லறைக் காசுகளோ, உணவுப் பதார்த்தங்களோ, புத்தகங்களோ, சீட்டுக் கட்டொ ஏதோ ஒன்று காரணியாக அமைகிறது. மாறத சிலரும் உண்டு அவர்களுக்கான மெல்ட்டிங் பாயிண்ட் வேறொன்றாக இருக்கக் கூடும்.

*****************************************************

”என்னடா உங்கப்பா தலையெல்லாம் இப்படி வீங்கியிருக்கு?”

“ஆமாடா அவரு நேத்து கொட்டுற பனியில வாக்கிங் போனாரு”

கதம்பம் – 9/11/08

ஒரு முறை கலைவாணர் அமர்ந்து கணக்கு எழுதிக் கொண்டிருந்த போது ஒருவர் வந்தார். வந்தவரை எதிரில் இருக்கும் இருக்கையில் அமரும்படிச் சொன்னார் கலைவாணர்.

அதற்கு வந்தவர், “ நான் யார் தெரியுமா?” என்றார்.

கலைவாணர், “தெரியாதுங்களே“ என்றார்.

“நாந்தான் சிங்கம்பட்டி ஜமீந்தார்” என்றபடியே மீசையை முறுக்கினார் வந்தவர்.

அதற்கு கலைவாணர்,”அப்படியா! நல்லது, அப்ப இந்த ரெண்டு சேர்லயும் உக்காருங்க” அப்படின்னு எதிரே இருந்த இரண்டு நாற்காலிகளையும் காட்டினார்.

****************************************************************


இவ்வாண்டு, புக்கர் பரிசு ஓர் இந்தியர் எழுதிய முதல் நாவலுக்கே கிடைத்திருக்கிறது என்பது பற்றி இந்தியர்களாகிய நாம் மகிழ்ச்சிக்கு அடையலாம்.
ஆனால், பெருமை கொள்ளமுடியுமா என்பது சந்தேகந்தான். – இந்திரா பார்த்தசாரதி.

புக்கர் பரிசு பெற்ற இந்நாவலை என் வட்டத்தில் எல்லோரும் படித்து முடித்து இறுதியாகத்தான் நான் படித்தேன்.

கிராமத்துல ஏழை ரிக்‌ஷாக்காரருக்கு மகனாகப் பிறந்த பல்ராம் கார் டிரைவராகி, ஒரு குற்றம் செய்தபின் தலை மறைவாகி, தொழிலதிபராகும் கதைதான். நேர்கோட்டில் சொல்லப்பட்டிருந்தால் சாதாரணக் கதையாகியிருக்கும். சீன அதிபருக்குக் கடிதம், கொஞ்சம் பிளாஷ் பேக் என ஜிகினாத்தனம் செய்து ஒப்பேத்தியிருக்கார்.

கிரைம் நாவலாகவும் இல்லாம சமுதாய நாவலாகவும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக இருக்கிறது. இதற்கு புக்கர் பரிசு என்பது, பரிசுக்கான தகுதிகளின் மீதான கேள்வியையும் தேர்வுக் குழுவின் மீதான நேர்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

ஆனால் சுகேது மேத்தா எழுதிய ’மேக்சிமம் சிட்டி’ இதை விட எல்லா வகையிலும் ஆகச்சிறந்த ஒரு படைப்பு. மும்பையின் பல்வேறு முகங்களை அதன் தோலுரித்துக் காட்டுகிறார். ரசிக்கத் தகுந்த நடையும், எழுதுமுன் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியும் பாராட்டத்தகுந்த ஒன்று.

தமிழில் நாஞ்சில் நாடன் எழுதிய “எட்டுத் திக்கும் மதயானை’ என்ற படைப்பை வாசித்தவர்களுக்கு ’வெள்ளைப் புலி’ மிகுந்த ஏமாற்றமே.

”ஒரு தேர்ந்த திரைக்கதை போன்ற எழுத்து நாஞ்சில் நாடனுடையது.மனக்கண் முன் காட்சிகளாக விரியும் வார்த்தையாடல்கள்.மிகத் தெளிவான,ஆர்வமான எழுத்து என வாசிப்பின்பத்திற்கு நாஞ்சில் நாடன் முழு உத்திரவாதம்.” அய்யனார்.

*************************************************************

மரணம் பழகியவள்

கிழக்குப்பார்த்துக் கிடக்கிறது பிணம்.
நீள்சம்பங்கி வாசத்தில்
மணமேடை ஆரவாரம் தேடும் குழந்தைக்கு
சொல்லாமல் திரும்பிச் செல்ல
கற்றுக்கொடுக்கப்படும் மரபு

ஒற்றைகுரல் ஒப்பாரி ஆகாதென‌
சேர்ந்தழும் புடவைக்கூட்டம் அடுபேற்றாமல்
அடுத்தவீட்டு தேனீர் சுவைக்கிறது

விறைப்பிளகி குளிப்பாட்ட அணைக்கப்பட்ட‌
குளிர்ப்பெட்டி கணக்கிலேறும் மற்றுமொரு சவம்

நெஞ்சு பிடித்து விழி பிதுங்கி
எச்சில் வ‌ழிய க‌ண் கசிந்த‌
கடைசி உயிர்வலி ஸ்பரிசித்து
துப்பட்டாவில் துடைத்தெடுத்த‌
சின்ன மகள்

எல்லா பிணங்களையும் இழுத்துச் செல்வாள்
கண்ணீரின்றி வலியுமின்றி.

அனிதா, மென்பொருள் பொறியாளர், பெங்களூரு, கர்நாடகா,இந்தியா.

இவரது கவிதைகள் பலவும் பத்திரிக்கைகளில் வந்திருக்கின்றன. வாழ்க்கை பற்றிய வேறொரு பரிமாணத்தை முன் வைக்கும் இவர் கவிதைகள் , வாழ்வின் ஆதாரமான நம்பிக்கைகள் மீதான கேள்விகளை முன் வைத்துச் செல்கின்றன. வெளிச்சம் பாயும் போது நீழும் நிழல் பி்ற சமயங்களில் காலுக்குக் கீழே பதுங்கிக் கிடப்பதைப் போல பெண்கள் தங்களுக்குள் எழும் கேள்விகளை மறைத்தவாறும், தோன்றும் சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்துவதுமாவே கழிகிறது வாழ்க்கை. கற்பு மற்றும் ஆண் பெண் உறவுகளின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் மேல் வீசபபடும் இவரது கேள்விகள் அவ்வகையானவை; விவாதத்துகுரியவை.

***********************************************************

ரயில் பயணம் ஒவ்வொரு முறையும் வெவ்வேறான அனுபவத்தை அளித்தபடியேதானிருக்கிறது. ஆனால் காலம்தோறும் மாறத ஒன்று,
ஆரம்பத்தில் விரோதிகள் போல இறுக்கமாக இருப்பவர்கள், பயண இறுதியில் பரஸ்பரம் முகவரி வாங்கும் அளவுக்கான நெருக்கத்தை அடைந்து விடு்வதுதான்.

தண்ணீரோ, சில்லறைக் காசுகளோ, உணவுப் பதார்த்தங்களோ, புத்தகங்களோ, சீட்டுக் கட்டொ ஏதோ ஒன்று காரணியாக அமைகிறது. மாறத சிலரும் உண்டு அவர்களுக்கான மெல்ட்டிங் பாயிண்ட் வேறொன்றாக இருக்கக் கூடும்.

*****************************************************

”என்னடா உங்கப்பா தலையெல்லாம் இப்படி வீங்கியிருக்கு?”

“ஆமாடா அவரு நேத்து கொட்டுற பனியில வாக்கிங் போனாரு”