கதம்பம்

கதம்பம் – 25-12-09

.

நண்பர்களுக்கு இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

பைபிளில் எத்தனையோ வசனங்கள் இருந்தாலும் இந்த வசனம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

”நான் உன்னைக் கைவிடுவதுமில்லை உன்னை விட்டு விலகுவதுமில்லை”

கடவுள் உங்கள் கூடவே இருந்து உங்களை ஆசிர்வதிக்கட்டும்.

வேட்டைக் காரனை எல்லோரும் துவைத்துத் தொங்க விட்டிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்தது நர்சிம்மின் பதிவு. பதிவைப் பார்த்ததும் அவரை அழைத்துப் பேசினால் மனிதர் பொங்கி விட்டார். ”அண்ணாச்சி இன்னும் எழுதனும்னு நெனைச்சிருந்தேன். எவனாவது விஜய் ரசிகன் (கார்க்கி அல்ல) போட்டுத்தள்ளிடுவானோன்னு பயம் அதான் கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கேன்” என்றார். ஹும் அடக்கி வாசிச்சதே இவ்வளவுன்னா?

ஃப்ரெண்ட்ஸ் படத்தில் விஜய் ஸ்டார், சூர்யா அப்பொழுதுதான் நடிகராகி இருக்கிறார். அந்தப் படத்திலிருந்து துவங்கி எவ்வளவு உயரம் வந்து விட்டார் சூர்யா. விஜய் தேங்கி விட்டார். சூர்யாவிற்குச் சொல்லிக்கொள்ளும்படி காக்க காக்க, கஜினி பொன்ற படங்கள் இருக்கையில் விஜய்க்கு அப்படி ஏதும் இல்லை என்பது கொடுமை.

எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதின் நஷ்டம் இதுதான்.

நாலு நாள் ஊருக்குப் போகிறேன் என்னை யாரும் தேடாதீர்கள் என ஒரு மின்ன்ஞ்சல் அனுப்பினார் ஆதி. இவரை யாரும் தேடமாட்டார்கள் என்ற புரிதல் கூட இல்லாத அப்பாவி பாவம். அதற்கு வந்த பதில் மின்னஞ்சல் அதைவிட சிரிப்பு.

“நாலு நாள்தானா???? அவ்வ்வ்வ்வ்வ்”

“இந்த நாலு நாள் இனிய நாலு நாள்”

கேபிளின் பதில் உச்சம். “ என்னாது ஊருக்கு போறீங்களா. அப்ப திரும்ப வரும் போது குறும்படத்தோட இல்ல வருவீங்கா.. மக்கா.. எல்ல்லாரும் அலர்ட்டா இருங்கா….. ஓடுங்க.. பின்னாடி ஒரு படம் வருது.. (இங்கிலீஷ் த்மிழ் டப்பிங் பட வசனத்தில் படிக்கவும்)”

ஆனாலும் ரெம்பத்தான் ஓட்டுறாங்கப்பா.

மக்களின் பேராசை டுபாக்கூர் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறுவதில் வெளிப்படுகிறது. ஆறே மாதத்தில் பணம் இரண்டு மடங்கு என்பதை எப்படி ந்ம்புகிறார்கள் எனத் தெரியவில்லை. எந்தத் தொழிலும் இது சாத்தியமில்லை.

சமீபத்தில் பணம் இழந்தவர் கொடுத்த வாக்குமூலம், “ ஆல்ட்டோ கார் வாங்கலாம்னு 2.5 லட்சம் வச்சிருந்தேன். இரண்டு மடங்கா கிடைச்சா ஹோண்டா சிட்டி கார் வாங்கலாமேன்னு அதுல போட்டேன். இப்ப உள்ளதும் போச்சு” அடப் பாவிகளா ஆசைக்கு அளவில்லையா?

ரூ 5000 கட்டி மெம்பர் ஆன பின் விளம்பரங்களை க்ளிக் செய்தால் பணம் கிடைக்கும் எனச் சொல்லி ஒருவர் சுருட்டியிருக்கிறார். ஆளுக்கு 5000 என்பதற்கு பதிலாக குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை X 5000 எனக் கட்டியிருக்கிறார்கள். இவர்கள் கிளிக்கிய விளம்பர நிறுவனங்களிடமும் நல்ல பணம் பெற்றிருக்கிறான் சுருட்டியவன். சுருட்டிய பணம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? 200 கோடி.

இந்த மாத மணல்வீடு (ஆசிரியர் ஹரி கிருஷ்ணன், ஏர்வாடி, குட்டப்படி அஞ்சல் மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம். செல் : 9894605371) இதழிலிருந்து கார்த்திகேயனின் கவிதை

மொன்னை மனசு

முற்றத்தில்
மழைநீர் கொஞ்சம்
மிச்சமிருக்கிறது

கத்திக் கப்பல்
செய்துதாவென்றது
குழந்தை

கத்தி எதெற்கென்றேன்

முட்டும் மீனை
வெட்டுவதற்கு என்றது
விழிகள் விரிய

முனை கொஞ்சம்
மழுங்கலாகச்
செய்து கொடுத்தி விட்டேன்

தெலுங்கானா பிரச்சினை நாள்தோறும் புதிய ரூபம் எடுக்கிறது. தேன்கூட்டைக் கலைத்தவனின் நிலைதான் மத்திய அரசுக்கு. இருந்தாலும் கார்க்கி ஹைதையிலிருந்து கிளம்பிய உடனே இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததில் ஏதும் கனெக்சன் இருக்குமோ?

நட்சத்திரக் கதம்பம்.- 4/7/09

சென்ற வாரம் செமஸ்டர் முடிவுகளை வெளியிட்டார்கள். பாரதியார் பல்கலைக் கழகத்தின் வெப் செர்வர் (தமிழ்ல என்னப்பா?) தவங்கி விட்டது. பாவம் மாணவ மாணவிகள் தவியாய்த் தவித்து விட்டார்கள்.

தேர்வு முடிவுகளை அந்தந்த கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிடலாமே? ஏறக்குறைய அனைத்து மாணவர்களும் மின்னஞ்சல் முகவரி வைத்திருக்கிறார்கள். நேரடியாக அவர்களுக்கே கூட அனுப்பலாம். மென் பொருளில் இதெல்லாம் சாத்தியமே. பல்கலைக் கழகம் முயலுமா?

*******************************************************************************

கோவையில் அதிகப் பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் கோவையின் சாபக்கேடான மேம்பாலங்களை மேம்படுத்தும் வழியொன்றும் தென்படவில்லை. இருப்பதே இரண்டு மேம்பாலங்கள்தான். இரண்டிலுமே தொழில்நுட்பக் கோளாறு. லேசாகத் தூறல் போட்டால்கூட பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கி விடுகிறது. உபயோகிக்க இயலாதாகிவிடுகிறது. சமயங்களில் நல்ல மழை பெய்யும்போது பாலத்தின் ஒரு புறமிருந்து மறுபுறம் செல்ல 45 நிமிடங்களாகி விடுகிறது. ரயில் ஏறச் செல்பவர்கள் படும் பதைபதைப்பு மனதை வாட்டக்கூடியதாக இருக்கிறது.

ஏதாவது ஒரு கல்லூரிப் பேராசிரியர் இதை ஒரு சவாலாக எடுத்துச் சரி செய்யலாம். இறுதியாண்டு மாணவர்களுக்கு இதை பிராஜக்டாகக் கொடுக்கலாம்.
வேலை முடிந்த மாதிரியும் இருக்கும் மாணவர்களுக்கு நேரடி அனுபவம் கிடைத்த மாதிரியும் இருக்கும்.

*******************************************************************************

அவினாசி சாலை மேம்பாலத்தில் செல்லும் வாகனங்களுக்குப் புதிதாக ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்திருக்கிறார்கள். இரு சக்கர வாகனங்கள் பாலத்திற்கு கீழேயும் நான்கு சக்கர வாகனங்கள் பாலத்தின் மேலேயும் என்று. இதைச் சரியாகக் கடைபிடிக்கிறார்களா எனச் சரிபார்க்க நான்கு புறங்களிலும் நான்கு காவலர்கள் வேகாத வெயிலில் நின்று சிரமப் படுகிறார்கள். சமயங்களில் பெண் காவலரும்கூட. அவர்களைச் சில சமயம் ஏமாற்றிவிட்டு இரு சக்கர வாகனங்கள் பாலத்தின் மேலே பயணிக்கின்றன. தனிமனித ஒழுக்கம் முக்கியம்.

*******************************************************************************

பின்னூட்ட வள்ளல் நைஜீரியா ராகவன் வந்திருந்தார் கோவைக்கு குடும்பத்துடன். நான், செல்வா, சஞ்சய் மற்றும் வெட்டிப்பீடியா சுரேஷ் எல்லோரும் போய் சந்தித்தோம்.

இரண்டு மணி நேர உரையாடல்களுக்குப் பிறகு உணவருந்தச் சென்றோம் விடுதியறையுடன் இணைக்கப்பட்ட உணவகத்தில். அநியாயத்திற்குக் காலதாமதம் செய்ததுடன், குறைந்த பட்ச சேவைகளைக்கூட ஒன்றுக்கு இரு முறை கேட்டுப் பெற வேண்டி இருந்தது.

ஒரு கட்டத்தில் உணவக மேலாளரை அழைத்து சேவைக் குறைபாடுகள் என்னென்ன என்பதைக் கோபப்படாமல் அதே நேரம் அழுத்தமாகச் சொன்னார். அவரது அணுகுமுறையின் விளைவை உடனடியாகக் கண்டுணர முடிந்தது.

இறுதிவரை எங்களுக்கு நல்ல உபசரிப்பும் தரமான சேவையும் கிடைத்தது.

*******************************************************************************

கோவை சூலூரைச் சேர்ந்த மதன் தற்சமயம் வேலை நிமித்தம் வசிப்பது பெங்களூருவில்.

“தாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்” என்று தன்னைப்பற்றிச் சொல்லும் மதனின் எழுத்துக்களில் தென்படும் நல்ல மொழியாளுமையும் வார்த்தைகளில் வீச்சும் என்னைப் பிரமிக்க வைக்கிறது.

பாடம்

சொட்டிச் சொட்டி
வீணாகாமல் இருக்க
நீர்க்குழாயின் கைப்பிடியை
இறுக்கி, இறுக்கி
மூடி வைத்ததிலோ என்னவோ
திடீரென ஓர் நாள்
மறை தளர்ந்து விட்டது.
பின்வந்த நாட்களில்
குழாயை மூடுகையில்தான்
புரிகிறது
எந்தப் புள்ளியில்
இறுக்குதல்
நிறுத்தப்பட்டிருந்தால்
நீரும் ஒழுகாது
மறையும் மழுங்காது
என்பது.

மதன்

*******************************************************************************

”சிங்கப்பூருக்கு ஒரு டூர் அடிக்கலாம்னு நினைக்கிறேன். எவ்வளவு செலவாகும்னு தெரியலை” ன்னு நண்பன் கிட்டச் சொன்னா, “நினைக்கிறதுக்கெல்லாம் ஒண்ணும் செலவாகாது” ன்னு சொல்லுறான்.

.

கதம்பம் – 03/04/09

நெடுநாள் பாக்கி ஒன்றை வசூல் செய்ய நேற்று திருப்பூர் சென்றிருந்தேன். இரவு வெயிலான், பரிசல் மற்றும் சாமினாதனுடன்(ஈரவெங்காயம்) சாப்பாடு மற்றும் நள்ளிரவுக்குப்பின்னும் நீண்ட அரட்டை.

நெடுநாட்களுக்குப் பிறகு மனது லேசானதாக உணர்ந்தேன். அலையிலடித்துச் செல்லப்படும் வாழ்வில் இதுபோல சில ஆசுவாசங்கள் அவ்வப்போது தேவைப்படுகிறது.

********************************************************************************

காலை உணவை ஆரியபவனில் வெயிலானோடு சாப்பிட்டேன்.

“ஆரியபவன் என இந்தியா முழுவதும் இருக்கிறதே, எங்காவது திராவிட பவன் உண்டா?”

வெயிலான் இல்லையென்றார். யாராவது பார்த்திருக்கிறீர்களா?

********************************************************************************

திருப்பூர் கம்பெனிகள் தூங்கி வழிகின்றன. ரிசெசன் பாதிப்பை உணர முடிகிறது. நான் சென்ற கார்ப்பரேட் ஒன்றில் 30 பேர் அமர்ந்து வேலை செய்யும் ஹாலில் பாதி லைட்தான் எரிந்ததை மின்சார சிக்கனம் என தவறாக நினைத்து பெருமைப்பட்டேன். உள்ளே சென்றதும்தான் தெரிந்தது பெரும்பாலோரை நிறுத்திவிட்டார்களாம்.

விளம்பரபிரிவு நபருடன் பேசிக்கொண்டிருக்கையில் பக்கத்துக் கேபின் பெண்மணி ஒரு உதவி கேட்டார்.

“சார் ஒரு 60 பேருக்கு லெட்டர் அடிக்க வேண்டி இருக்கு. மெயில் மெர்ஜ் சொல்லித்தர முடியுமா?”

என்ன செய்யவேண்டும் எனப் பேப்பரில் எழுதிக் கொடுத்தேன். இருப்பினும் என்னை ஒரு முறை பார்த்து சரியாக இருக்கா எனச் சொல்லச் சொன்னார்.

சரி என அவரது மானிட்டரில் பார்த்தால் அது எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர்.

மொத்தம் 60 பேர். 31-03-2009 அன்று நீக்கப்பட்டவர்களுக்கானது.

********************************************************************************

என் பழைய கவிதை

நேற்று என் பழைய கவிதைப் புத்தகத்திலிருந்து
இரண்டு வரிகளை தூசிதட்டி எடுத்து,
இடம் மாற்றி வைத்தேன்

உவமைகளில் சிக்கி, தவித்துக் கொண்டிருந்த
ஒரு கிளியை பறக்கவிட்டேன்
ஏரியை திறந்துவிட்டேன்

மேலும் ஒரு வார்த்தைக்கு வண்ணமடித்து
பொலிவு பெறச்செய்தேன்

இன்னும் ஒரே ஒரு வார்த்தைதான்
தேவை இருக்கிறது

உங்கள் இதயத்தை துளைக்கப்போகும்
அந்த ஒரு வார்த்தையை நன்றாக
கூர்தீட்டிக் கொண்டிருக்கிறேன்.

மண்குதிரை எழுதிய கவிதை இது.

இவரைப் பற்றிய மேல் விபரங்கள் ஏதும் அவரது வலையில் கிடைக்கவில்லை.
நல்ல கவிதைகள் எழுதுகிறார். நல்ல உயரங்கள் செல்வார்.

நவீன விருட்சம், படித்துறை, திண்ணை போன்றவைகளில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளியாகின்றன.

********************************************************************************

நண்பர்கள் சாப்பிடச் செல்கிறார்கள். அதில் ஒருவன் அவர்கள் டேபிளுக்கு சர்வ் செய்யும் சர்வருக்கு டிப்ஸ் கொடுக்கிறான்.

அவனைப் பார்த்து நண்பன் கேட்டான், “சாப்டுட்டுத்தானே டிப்ஸ்கொடுக்கனும் நீ ஏண்டா முன்னாடியே கொடுக்கிறே?”

“கடைசியிலே சொல்றேன்”

சாப்பிட்டு முடிந்து வெளியே வந்ததும் சொன்னான், “ சர்வர் பில்லைக் எங்கிட்டக் கொடுக்கக் கூடாதுங்கிறதுக்குத்தான் முன்னாடியே கவனிச்சுட்டேன்”

“அடப்பாவி நல்லா விவரமாத்தாண்டா இருக்கீங்க”

********************************************************************************

கதம்பம் – 29/10/08

தோழர் ஜீவா குடியிருந்த வீட்டிற்கருகே உள்ள பள்ளியின் ஆண்டு விழாவிற்கு முதல்வர் காமராஜார் வருகை தந்தார்; உடன் அன்றைய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் திரவியம். இருவரும் பள்ளிக்கு வரும் வழியில் ஜீவாவையும் அழைத்துச் செல்ல எண்ணி அவரது குடிசை வீட்டிற்கு சென்றனர்.

”ஜீவா, பள்ளி ஆண்டு விழாவிற்கு வருகிறீர்களா?” என்றபடியே உள்ளே நுழைந்தார் காமராஜர்.

”நான் வர வேண்டுமென்றால் ஒரு 15 நிமிடம் நீங்கள் காத்திருக்க வேண்டும் ” என்று குரல் கொடுத்தார் ஜீவா, உள்ளே ஈர வேட்டியை உலர்த்தியபடி நின்று கொண்டு.

மாற்று வேட்டி கூட இல்லாமல், துவைத்த கதர் ஆடை காயும் வரை இடுப்பில் துண்டு கட்டிய நிலையில் நின்ற ஜீவாவைப் பார்த்து காமராஜர் திகைத்துப் போனார்.

”ஜீவா, எவ்வளவு நாளைக்கு இதே குடிசையில் இருப்பது?” என்று கேட்டார்.

”மக்களெல்லாம் மாடி வீட்டில் வாழ்கிற போது, நானும் மாடி வீட்டில் வாழ்வேன்” என்று பதில் கூறினார் ஜீவா.

கோடிக்கணக்கில் தன் பெயரிலும், குடும்பத்தாரின் பெயரிலும் போதாதற்கு பினாமிகள் பெயர்களிலும் சொத்து சேர்க்கும் இன்றைய அரசியல்வாதிகளின் தீராப் பேராசையை எண்ணிப் பார்த்தேன்.

**********************************************************

சமீபத்துல படிச்ச செய்தி ஒன்னு.

இரு பெண்குழந்தைகளுடன் இருக்கும் ஒரு விதவையை ஒருவர் திருமணம் செய்து கொள்கிறார். அந்த இரு பெண்களையும் நல்ல முறையில் படிக்க வைக்கிறார். பெரிய பெண் MBA சின்னப் பெண் BBA. எல்லாப் பருவப் பெண்கள் போலவும் இவர்களும் காதல் வயப் படுகிறார்கள். காதலர்களில் ஒருவர் மாணவர்; மற்றவர் கல்லூரி ஆசிரியர்.

காதலர்களுடன் ஆலோசனை செய்து அப்பாவிடமிருந்து பணம் பறிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். அதன்படி நால்வரும் சென்னை சென்று அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்து தங்குகிறார்கள். பெண்கள் இருவரையும் கை, கால்களைக் கட்டி வாயில் பிளாஸ்திரி ஒட்டி போட்டோ எடுத்து அப்பாவுக்கு அனுப்புகிறார்கள். போட்டோ அவர் கைக்குக் கிடைத்ததும் மொபைலில் அழைத்து மகள்கள் உயிருடன் வேண்டும் என்றால் ஒரு கோடி ரூபாய் பணம் வேண்டும் என்று சொல்கிறார்கள்.அப்பா அதைப் போலீ்சுக்குத் தெரிவிக்க போலீஸ் மொபைல் எண்ணை வைத்து காதலர்களப் பிடித்துப் பெண்களை விடுவிக்கிறார்கள்.

பெண்கள் இருவரும் தந்தைக்கெதிராக இம்மாதிரி நடவடிக்கையில் ஈடுபடக் காரணம் அவர் வளர்ப்புத் தந்தைதான் என்பது சமீபத்தில் தெரியவந்ததுதானாம்.

சினிமாவில் வருவது போல நடந்த இந்தச் சம்பவத்தில் அடிப்படையாகச் சில கேள்விகள்.

1. அந்தப் பெண்ணுக்கு வாழ்வு கொடுத்தது அவர் செய்த தவறா?
2. இரு மகள்களையும் படிக்க வைத்தது தவறா?
3. என்னதான் வளர்ப்புத்தந்தை என்றாலும் இத்தனை வருடங்கள் தங்களை ஆளாக்கிப் படிக்க வைத்தவர் என்ற நன்றிக் கடன் கூட இல்லையா?
4. இரு பெண்களைக் காதலித்தவர்களுக்கு கூடவா அடிப்படை மனிதாபிமானம் இல்லமல் போய் விட்டது.
5. இது காதலா? இல்லைக் காமமா?
6. திரும்பி வந்தபின் அந்தத் தாயின் மனநிலை எவ்வாறு இருக்கும்.
7. இனிமேல் அந்தத் தந்தையின் மனநிலை சீக்கிரமா வந்த வரனுக்குத் தள்ளிவிடுவதாகத்தானே இருக்கும்.
8. அதன்பிறகு இந்தத் தம்பதிகள் இருவரும் தனியே இருக்கும் வாழ்க்கையில் இந்தக் கரும்புள்ளி ஒரு மாறா வடுவாக இருந்து கொண்டேயிருக்குமல்லவா?

இவ்வாறு வாழ்வின் மீதான நம்பிக்கைகள் அற்றுப்போய் வெறுப்பு வழியும் தருணங்களில், மங்கை அவர்களின் பதிவில் வரும் இந்தச் சிறுமி போன்றவர்கள்தான் ஒரு பிடிப்பையும் முன்னெடுத்துச் செல்லும் தைரியத்தையும் வழங்கிக்கொண்டேயிருக்கிறார்கள்.

*************************************************************

என் சின்ன மகள்(7 ஆம் வகுப்பு) சைக்கிளில்தான் பள்ளிசெல்கிறாள். மழை பெய்யும் சமயங்களில் காரில் அழைத்துச் செல்லும்படி வாய்க்கும். அவ்வாறான ஒரு மழைநாளில் இவ்வாறு தோன்றியது.

கையசைத்துச் செல்பவளின்
பின்முதுகுப் பள்ளிப் பை
கிளர்ந்தெடுக்கிறது
மஞ்சள் பையில் பொதிந்த
என் பால்யத்தையும்
துருவேறிய சைக்கிளின்
மீதமர்ந்து ஒற்றைக் காலூன்றிக்
கை அசைத்துச் சென்ற
அப்பாவின் ஞாபகத்தையும்.

****************************************************************

ஒரு முறை தர்மர் எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொண்டிருந்தபோது ஒருவன் யாசகம் கேட்டு வந்தான். சட்டென இடது கையில் இருந்த தங்கக் கிண்ணத்தை அந்தக் கையாலே வழங்கினார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுணன் இது தவறில்லையா என்று கேட்டான். அதற்குத் தர்மர் சொன்னார்,” இடது கையிலிருப்பதை வலது கைக்கு மாற்றுவதறகுள் மனசு மாறிவிடக் கூடாதில்லையா அதற்காகத்தான்” என்றார்.

இதைக் கருவாக வைத்து ஜோதிர்லதா கிரிஜா ஒருகதை எழுதிருக்கிறர்கள்.

காலை தினசரியில் இருதய அறுவை சிகிச்சைக்காக வந்த விளம்பரம் ஒன்றைப் பார்க்கும் தம்பதிகள் தங்களுக்குஎதிர்பாரமல் கிடைத்த 1000 ரூபாயைக் கொடுத்து விடலாம் என முடிவு செய்வார்கள். பின்னர் தினவாழ்வின் தேவைகளின் பாதிப்பில் படிப்படியாகக் குறைந்து அது எப்படி 50 ரூபாயாக ஆகிறது என்பதாக இருக்கும்.

நீங்களும் இது போல உணர்ந்திருகிறீர்களா?

*****************************************************************

”தமிழகத்தை ஆளத் தேவையான திறமையும் தகுதியும் என்னிடம் உள்ளது. மக்களின் விருப்பம் அதுவானா அதை நான் ஏத்துக்கத் தயாரா இருக்கேன்”

சொன்னது யார்?

1. விஜயகாந்த்
2. சரத் குமார்
3. ராஜேந்தர்
4. கார்த்திக்

.

கதம்பம் – 18/10/08

ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றார் கி வா ஜ. நடு வழியில் ஏதோ கோளாறு காரணமாக கார் நின்று விட்டது. கி வா ஜ வை காரிலேயே அமரும்படிக் கூறி விட்டு மற்றவர்கள் இறங்கித்தள்ளி ஸ்டர்ட் செய்து அரங்கத்தை அடைந்தார்கள்.

நிகழ்ச்சி முடிந்ததும் மாலை, சால்வை, நினைவுப் பரிசு எல்லாவற்றையும் ஒரு அழகிய கைப்பையில் வைத்து அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்ட கி வா ஜ அவர்கள் சொன்னார்,” வரும் போது தள்ளாதவனாக வந்தேன். போகும்போது பையனாகச் செல்கிறேன்”.

***********************************************************

அடிக்கடி ரயில் பயனம் செய்வதில் ஒன்றைக் கவனித்தேன். நடுப் படுக்கையை (middle berth) தயார் செய்ய நினைப்பவர்கள் முதலில் படுக்கையை கையில் எடுத்து வைத்துக் கொண்டு அதன் பின் மேலிருக்கும் கொக்கியை விடுவிக்கிறார்கள். சில சமயம் கொக்கி சுலபமாக வருவதில்லை. கையிலிருக்கும் படுக்கையின் சுமை வேறு அதிக எரிச்சலைத் தூண்டுகிறது. அதற்குப் பதிலாக முதலில் மேலிருக்கும் கொக்கியை விடுவித்த பின் படுக்கையை எடுத்து மாட்டுவது சுலபமாக இருக்கும் அல்லவா?. முக்கியமாக உயரம் குறைவாக இருப்பவர்களாவது இதை கடை பிடிப்பார்களா?

வாழ்க்கையிலும் இதுபோலத்தான் எது முதலில் எது பிறகு என்று பகுத்தாயாமல் சிக்கல் உண்டாக்குகிறோம். சுலபமாக முடிவதைக் கூட தேவையில்லாத சுமைகளால் கடினமானதாக்கிக் கொள்கிறோம். சரிதானே?

*******************************************************************

இந்த முறை ரெஜொவாசன் கவிதைகள் கொஞ்சம்.

நட்பைப் பற்றிய இந்த நெடுங்கவிதையில் சில துண்டுகளைமட்டும் எடுத்து இங்கே தந்திருக்கிறேன். அருமையாக எழுதியிருக்கிறார். சிறப்பாக வருவார்.

உலகத்தின் நிழல் மறையும்
முற்றிலும் இருள் கவியும் பின்னிரவுகளில்
விண்மீன்களும் தூங்கச் சென்ற பின்னே
மெதுவாக விழித்துப் பார்க்கின்றன
நட்பின் நினைவுகளும்
அதன் அழகான கவிதைகளும் …

பறவை அறியாமல் உதிரும்
அதன் இறகு போல
நம்மை அறியாமல்
கனவிற்குள் உதிர்கின்றன
நட்பின் நினைவுகள் ..

வைத்த புள்ளியையே சுற்றி
கிறுக்கப் பட்டுக் கொண்டிருக்கும்
குழந்தையின் கோட்டோவியத்தைப் போல
நட்புக் காலத்தையே நீள் வட்டப் பாதையில்
சுற்றிக் கொண்டிருக்கும் மனமும் …

நம்மைச் சுற்றிலும்
ரகசியமாய் மௌனிக்கின்ற எல்லாமும்
உரக்கப் பேசித் திரியும்
நம் நட்புக்காலக் கதைகளை

இவருடைய சமீபத்திய ‘அனிச்சை‘ கவிதையை மிகவும் ரசித்தேன்.

இவரைப் பற்றி அதிகம் அறிய முடியவில்லை. ஆனால் இவரது சுய அறிமுகம் சுவராஸ்யமாக இருக்கிறது.


பயணங்களில் பாதைகளில் உதிர்ந்து கிடக்கும் பறவைகளின் சிறகுகளில் கொஞ்சம் பால்யமும் உறைந்து கிடக்கலாம் .வீதிகளெங்கும் இரண்டாம் சாமங்களின் கனவுகள் உயிர்பெற்று அலைந்து உலவலாம் . நீங்கள் சற்றும் எதிர்பாராத திருப்பங்களில் தேவதைகள் மோதிச் செல்லலாம் . தெருமுனை தேநீர்க் கடைகளில் கடவுளர்கள் கதைக்கக் கிடைக்கலாம் .காதலின் பெயர் சொல்லிச் சகலமும் தொழக் காணலாம்.


************************************************************************

கர்ணனுக்கு கிடைக்கும் புகழ் குறித்து அர்ஜுனனுக்கு எரிச்சல். அதை கண்ணனிடம் தெரியப் படுத்தினான். அவனைத் தெளிய வைக்க எண்ணிய கண்ணன், ஒரு நாள் ஒரு தங்க குன்று ஒன்றை உருவாக்கி, அர்ஜுனனை அழைத்து ஒரு மண் வெட்டி ஒன்றைக் கையில் கொடுத்து, “ இந்த குன்றை இன்று மாலைக்குள் காலி செய். யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் தானம் செய்து கொள்” என்றான்.

அர்ஜுனனும் காலையிலிருந்து போவோர் வருவோருக்கெல்லாம் வெட்டி வெட்டி கொடுத்துக் கொண்டே இருந்தான். தீருவதாகத் தெரியவில்லை. மாலையும் ஆகி விட்டது. இன்னும் அரைமணி நேரத்திற்குள் முடிவதாகவும் தெரியவில்லை. கண்ணனை அழைத்துச் சொன்னான் அர்ஜுனன்.

இதற்காகவே காத்திருந்த கண்ணன் கர்ணனை அழைத்து விபரம் சொன்னான். சரி என்று தலையாட்டிய கர்ணன் அவ்வழியே சென்ற இருவரை அழைத்து,” இதை பாதிப் பாதியாக்கி நீங்கள் இருவரும் வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினான். அப்பொழுத்தான் அர்ஜுனனுக்கு புரிந்தது அவனவன் தகுதிக்கான புகழ்தான் கிடைக்கும், அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப் படுவதில் அர்த்தமில்லையென்பது.

*************************************************************************

சீரியலைப் பார்த்து பெண்கள்தானே அழுவார்கள். அவர் ஏங்க அழுகிறார்?
அவர் பார்த்துக் கொண்டிருப்பது அவரது கல்யாண சிடி-ங்க.

கதம்பம் – 18/10/08

ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றார் கி வா ஜ. நடு வழியில் ஏதோ கோளாறு காரணமாக கார் நின்று விட்டது. கி வா ஜ வை காரிலேயே அமரும்படிக் கூறி விட்டு மற்றவர்கள் இறங்கித்தள்ளி ஸ்டர்ட் செய்து அரங்கத்தை அடைந்தார்கள்.

நிகழ்ச்சி முடிந்ததும் மாலை, சால்வை, நினைவுப் பரிசு எல்லாவற்றையும் ஒரு அழகிய கைப்பையில் வைத்து அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்ட கி வா ஜ அவர்கள் சொன்னார்,” வரும் போது தள்ளாதவனாக வந்தேன். போகும்போது பையனாகச் செல்கிறேன்”.

***********************************************************

அடிக்கடி ரயில் பயனம் செய்வதில் ஒன்றைக் கவனித்தேன். நடுப் படுக்கையை (middle berth) தயார் செய்ய நினைப்பவர்கள் முதலில் படுக்கையை கையில் எடுத்து வைத்துக் கொண்டு அதன் பின் மேலிருக்கும் கொக்கியை விடுவிக்கிறார்கள். சில சமயம் கொக்கி சுலபமாக வருவதில்லை. கையிலிருக்கும் படுக்கையின் சுமை வேறு அதிக எரிச்சலைத் தூண்டுகிறது. அதற்குப் பதிலாக முதலில் மேலிருக்கும் கொக்கியை விடுவித்த பின் படுக்கையை எடுத்து மாட்டுவது சுலபமாக இருக்கும் அல்லவா?. முக்கியமாக உயரம் குறைவாக இருப்பவர்களாவது இதை கடை பிடிப்பார்களா?

வாழ்க்கையிலும் இதுபோலத்தான் எது முதலில் எது பிறகு என்று பகுத்தாயாமல் சிக்கல் உண்டாக்குகிறோம். சுலபமாக முடிவதைக் கூட தேவையில்லாத சுமைகளால் கடினமானதாக்கிக் கொள்கிறோம். சரிதானே?

*******************************************************************

இந்த முறை ரெஜொவாசன் கவிதைகள் கொஞ்சம்.

நட்பைப் பற்றிய இந்த நெடுங்கவிதையில் சில துண்டுகளைமட்டும் எடுத்து இங்கே தந்திருக்கிறேன். அருமையாக எழுதியிருக்கிறார். சிறப்பாக வருவார்.

உலகத்தின் நிழல் மறையும்
முற்றிலும் இருள் கவியும் பின்னிரவுகளில்
விண்மீன்களும் தூங்கச் சென்ற பின்னே
மெதுவாக விழித்துப் பார்க்கின்றன
நட்பின் நினைவுகளும்
அதன் அழகான கவிதைகளும் …

பறவை அறியாமல் உதிரும்
அதன் இறகு போல
நம்மை அறியாமல்
கனவிற்குள் உதிர்கின்றன
நட்பின் நினைவுகள் ..

வைத்த புள்ளியையே சுற்றி
கிறுக்கப் பட்டுக் கொண்டிருக்கும்
குழந்தையின் கோட்டோவியத்தைப் போல
நட்புக் காலத்தையே நீள் வட்டப் பாதையில்
சுற்றிக் கொண்டிருக்கும் மனமும் …

நம்மைச் சுற்றிலும்
ரகசியமாய் மௌனிக்கின்ற எல்லாமும்
உரக்கப் பேசித் திரியும்
நம் நட்புக்காலக் கதைகளை

இவருடைய சமீபத்திய ‘அனிச்சை‘ கவிதையை மிகவும் ரசித்தேன்.

இவரைப் பற்றி அதிகம் அறிய முடியவில்லை. ஆனால் இவரது சுய அறிமுகம் சுவராஸ்யமாக இருக்கிறது.


பயணங்களில் பாதைகளில் உதிர்ந்து கிடக்கும் பறவைகளின் சிறகுகளில் கொஞ்சம் பால்யமும் உறைந்து கிடக்கலாம் .வீதிகளெங்கும் இரண்டாம் சாமங்களின் கனவுகள் உயிர்பெற்று அலைந்து உலவலாம் . நீங்கள் சற்றும் எதிர்பாராத திருப்பங்களில் தேவதைகள் மோதிச் செல்லலாம் . தெருமுனை தேநீர்க் கடைகளில் கடவுளர்கள் கதைக்கக் கிடைக்கலாம் .காதலின் பெயர் சொல்லிச் சகலமும் தொழக் காணலாம்.


************************************************************************

கர்ணனுக்கு கிடைக்கும் புகழ் குறித்து அர்ஜுனனுக்கு எரிச்சல். அதை கண்ணனிடம் தெரியப் படுத்தினான். அவனைத் தெளிய வைக்க எண்ணிய கண்ணன், ஒரு நாள் ஒரு தங்க குன்று ஒன்றை உருவாக்கி, அர்ஜுனனை அழைத்து ஒரு மண் வெட்டி ஒன்றைக் கையில் கொடுத்து, “ இந்த குன்றை இன்று மாலைக்குள் காலி செய். யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் தானம் செய்து கொள்” என்றான்.

அர்ஜுனனும் காலையிலிருந்து போவோர் வருவோருக்கெல்லாம் வெட்டி வெட்டி கொடுத்துக் கொண்டே இருந்தான். தீருவதாகத் தெரியவில்லை. மாலையும் ஆகி விட்டது. இன்னும் அரைமணி நேரத்திற்குள் முடிவதாகவும் தெரியவில்லை. கண்ணனை அழைத்துச் சொன்னான் அர்ஜுனன்.

இதற்காகவே காத்திருந்த கண்ணன் கர்ணனை அழைத்து விபரம் சொன்னான். சரி என்று தலையாட்டிய கர்ணன் அவ்வழியே சென்ற இருவரை அழைத்து,” இதை பாதிப் பாதியாக்கி நீங்கள் இருவரும் வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினான். அப்பொழுத்தான் அர்ஜுனனுக்கு புரிந்தது அவனவன் தகுதிக்கான புகழ்தான் கிடைக்கும், அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப் படுவதில் அர்த்தமில்லையென்பது.

*************************************************************************

சீரியலைப் பார்த்து பெண்கள்தானே அழுவார்கள். அவர் ஏங்க அழுகிறார்?
அவர் பார்த்துக் கொண்டிருப்பது அவரது கல்யாண சிடி-ங்க.

கதம்பம் – 6-10-08

”அவன்தான் மனிதன்” திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் சிங்கப்பூர் மலர்க் கண்காட்சியில் படமாக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் கவியரசு கண்ணதாசன் அதற்கான பாடலை எழுத தாமதம் செய்து கொண்டிருந்தார். எம் எஸ் வி யும் அடிக்கடி கண்ணதாசனை போனில் அழைத்து, “அண்ணே மே மாதம் சூட்டிங் இன்னும் பாட்டு எழுதல” ன்னு சொல்லீட்டே இருந்திருக்காரு.

ஒரு முறை அவ்வாறு அழைக்கும் போது கண்ணதாசன், “என்ன விஸ்வநாதா மே மே ன்னு கத்துற, இந்தா பிடி ” ன்னு ஒரு பாட்டு சொன்னாரு.

அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே

அந்தப் பாட்டு முழுவதும் இப்படி மே – யில்தான் முடியும்.

நீங்களும் கேட்டுப் பாருங்க – இங்கே

*****************************************************************

இந்த முறை சென்னை சென்று, திட்டமிட்டபடி திரும்ப முடியாததால் பதிவு செய்திருந்த டிக்கட்டைக் கேன்சல் செய்துவிட்டு, அடுத்த நாள் ஓப்பன் டிக்கட்டில் திரும்ப வரும்படி ஆயிற்று.

இம்மதிரி சமயங்களில் ஓப்பன் டிக்கட் எடுத்து 3 a/c – ல் பர்த் வாங்கி வந்துவிடுவேன். இம்முறை கூட இருவர் வந்ததால் முடியவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தவாறே பிளாட்பார்மில் அமர்ந்திருந்தேன்.

வெஸ்ட் கோஸ்ட் வண்டியில் சார்ட் ஒட்டுபவர், இரண்டு பெட்டிகளில் கோச் எண் மட்டும் ஒட்டி விட்டு சார்ட் ஒட்டாமல் சென்றார். கேட்டதற்கு, “ இந்த ரெண்டு கோச்சும் ஈரோடு கோட்டா, அது வரைக்கும் காலியாகத்தான் போகும். நீங்க இதுல ஏறிக்குங்க TTE யிடம் சொல்லி பர்த் வாங்கிகுங்க” அப்படின்னார். அது போலவே வசதியாக 3 பேரும் வந்து சேர்ந்தோம்.

என் கேள்வி என்னனா; ஏன் ஈரோடு வரை அதைக் காலியா ஓட்டனும்? ஜெனெரல் கோச்சுல அவ்வளவு அடிதடி நடக்க இங்க கோச்சே காலியா வருவது சரியா? ரயில்வே நிர்வாகம் இந்தத் தகவலை பயனிகளுக்குச் சொல்லாமல் இருப்பது சரியா? இது போல் வசதி வேறு எந்த வண்டிகளில் எல்லாம் இருக்கு?

***************************************************************

டிப்ளொமோ படிக்கும் போது நண்பர்கள் மூலமாக எம் எஸ் உதயமூர்த்தி புத்தகங்கள் அறிமுகமானது. அவரின் சிந்தனை தொழில் செல்வம் புத்தகம் என்னை மிகவும் பாதித்த ஒன்று. அதன் தாக்கத்தில்தான் சொந்தத் தொழில் செய்வது என்று உறுதி பூண்டேன்.

வெவ்வேறு நிறுவனங்களில், பலதரப்பட்ட பதவிகளில் அனுபவங்களைச் சேகரித்துக் கொண்டு 2001ல் தொழில் தொடங்கினேன். ஆரம்ப சிரமங்களைக் கடந்து நல்ல விதமாக நடந்து வருகிறது.

காசு பணம் கொஞ்சமாகச் சேர்த்தாலும், பத்திருபது பேருக்கு வேலை தரமுடிகிற சந்தோஷம் இருக்கிறது.

இதெல்லாம் இரு மாதங்கள் முன்பு வரை. இப்பொழுது மின் தடை என்னைப் போன்ற முதல் தலைமுறை தொழில் தொடங்கியவர்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது. அதிலும் இன்றிலிருந்து தினம் 8 மணி நேர மின் தடை என்பது குரல்வளையை நெரிப்பது போல்தான்.

ஒரு வாரத்திற்கு 6 வேலை நாட்கள். 6×24 = 144 மணி நேரம்.

தினம் 8 மணி நேரம் மின்தடை. 5X8 = 40 மணி நேரம்

சனிக்கிழமை காலை 6 மணியிலிருந்து ஞாயிறு காலை 6 மணிவரை தொழிலகங்கள் வேலை செய்யக் கூடாது ( பவர் ஹாலிடே) = 24 மணி நேரம்

மொத்தம் = 40 + 24 = 64 மணி நேரம்

சத வீதத்தில் 64/144 = 44 %

ஆக வெறும் 56% சதவீதம் மின்சாரத்தைக் கொண்டு உற்பத்தி செய்ய வேண்டும்.

இதில் கொடுமையான விஷயம் என்னன்னா, மதியம் 12 மணியிலிருந்து 3 மணிவரை மிந்தடை என்று அறிவிக்கப் பட்டிருந்தாலும் அதற்கு முன்போ அல்லது பின்போ அறிவிக்கப்படாத மின் வெட்டு இருந்து கொண்டேதான் இருக்கிறது.

பகலில் ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை மின்சாரம் இல்லாததால் சம்பளத்துடன் ஓய்வும் அளித்து, அதே வேலையை இரவில் முடிக்க இரு மடங்கு சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கிறது. எப்படிச் சமாளிப்பது?

என் தொழிலுக்கு ஜெனெரேட்டர் உதவாது. அப்படியே உபயோகித்தாலும் 5.40 காசுக்குக் கிடைக்கும் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 11 முதல் 12 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இதை யாரிடம் சொல்லி முறையிடுவது. இதில் கொடுமை இந்த மாதம் அக்-2 காந்தி ஜெயந்தி, அக்-8,9 பூஜா விடுமுறை, அக் 25,26,27,28 வரை தீபாவளி விடுமுறை. 29 ஆம் தேதியும் பாதிபேர்தான் வேலைக்கு வருவார்கள்.

*********************************************************

ச.முத்துவேல் வலை முகவரி அனுப்பியிருந்தார் வெயிலான். நன்றாக எழுதும் இவருக்கு அதிகப் பின்னூட்டங்கள் இல்லை, எனினும் தொடர்ந்து எழுதுகிறார்.

அவரின் ஒரு கவிதையை இங்கே தருகிறேன் மீதியை அவர் வலைப்பூவில் படித்துப் பாருங்கள்.

தனியறையில்
பின்னிரவில்
பேய்க்கதைப் படித்துவிட்டு
எதற்கெடுத்தாலும்
மிரண்டுவிட்டுப் பின்
பகுத்தறிவோடு
சிரித்துக்கொள்கிறான்
‘நாளை படித்திருந்தால்
பேயும்
நாளை வந்திருக்குமோ!’

*************************************************************

டாக்டர் இந்த ஆபரேஷன் முடிஞ்சதுக்கு அப்புறம் பேஷண்ட் கிட்ட நாங்க பேசலாமா?

நீங்க தாராளமாப் பேசலாம்…!

கதம்பம் – 28-09-08

வலையில் தற்பொழுது நடக்கும் பிரச்சினை ஒன்றின் என் தனிப்பட்ட கருத்து இது.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதனிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

பிரச்சினையோட மூலகாரணம் என்ன? என்ன செஞ்சாச் சரியாகும்னு கண்டுபிடிச்சு அதச் செய்யனுங்கிறதுதான் இந்தக் குறளோட கருத்து.

சிலர் பிறர் மாதிரி எழுத முயற்சி செய்வது தவறு. அதுக்குத்தான் அவரு இருக்காரே. நமக்குன்னு ஒரு தனித்தன்மை இருக்கு அத செம்மைப் படுததுவதுதான் சரி.

அவருக்கு அதிக ஹிட் வருது நமக்கு வரலையேங்குற ஏக்கமும் சிலருக்கு இருக்கு. இதுவும் தவறானதுதான். வலையில பதிவு எழுதறதே, நமக்குத் தோனுனத எழுத ஒரு வசதிங்குறதுனாலதான். அத எழுத மத்தவங்க மாதிரி பிரபலமா இருக்க அவசியமில்ல.

இவ்வளவு ஹிட் வாங்குன ஒரு ஆள நான் எப்படி கேள்வி கேட்டு மடக்குறேன் பாருன்னு ஒரு நோக்கத்தோட கேள்வி கேட்பதும் தவறு.

அதேபோல இன்னாரு இன்னாருக்கு ஜால்ரா, அல்லக்கை என்பதெல்லாம் வெட்டிப் பேச்சு. இருந்தா என்ன தப்பு?. அது உங்கள நேரடியாப் பாதிக்குதா? ஒருவருக்கு நண்பர்கள் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களில் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருப்பது இயல்புதானே.

நம்ம பின்னூட்டத்த அவரு வெளியிடல, பின்னூட்டத்துக்குப் பதிலே தரலன்னும் சொல்றது தப்பு. வலையில இருக்க சுதந்திரமே அதுதானே. பிடிச்சாப் போடு, இல்ல போய்கிட்டே இரு.

ஒரு பொது விவாதத்துக்கு நீங்க ஒரு கேள்வி வச்சு அதுக்குப் பதில் வரல்லன்ன அத ஒரு பதிவா உங்க வலையில போடலாம். இது அவர் சொன்ன கருத்து, இது நான் கேட்ட கேள்வி உங்க கருத்து என்னன்னு, அத மேலும் பொதுவாக வைக்கலாம்.

உணர்ச்சி வசப்பட்டு பின்னூட்டமிடுவது குறித்து அசிங்கமா பேசியிருக்கவும்கூடாது; இத ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு மனவருத்தப்படவும் அவசியமில்ல. இதுல ரெண்டு சைடுலயும் கொம்பு சீவ ஆள் இருப்பது கண்கூடு.

இரண்டு தரப்பிற்கும் நான் சொல்வது இதுதான். வெற்றிகளை உங்க தலைக்கும் தோல்விகளை உங்கள் இதயத்திற்கும் எடுத்துச் செல்லாதீர்கள்.

******************************************

புதுகை அப்துல்லாவப் பாராட்டி பரிசல் போட்ட பின்னூட்டத்துல சுட்டு(ம்) விரலால் தீராப் பசியடங்கியவன் கதை தெரியுமான்னு கேட்டிருந்தேன். அதச் சொல்லச் சொல்லி நேரிலும், செல்லிலும், மெயிலிலும் கோரிக்கை வைத்த உங்களுக்காக இதோ.

ஒரு ஊர்ல ஒரு பண்ணையார். மகாக் கஞ்சன். அதுகூடப் பரவாயில்லை, அவருக்கு ஒரு வினோதப் பழக்கம். அவரு சாப்பிடும்போது வேலையாட்கள் எல்லாம் சுத்தி நின்னு அத வேடிக்கை பாக்கனும்.

எல்லாரும் சாவதைப் போல அவரும் ஒரு நாள் இறந்துவிடுகிறார். நம்மாளுக்கு நரகம்தானே கிடைக்கும். கூடவே ஒரு வித்தியாசமான தண்டனை கிடச்சது. எண்ணைக் கொப்பரையில போட்டு எடுக்க இடத்துல வரிசையில காத்திருக்க வேண்டியதாப் போச்சு. இவர் முறை வர கொஞ்சம் தாமதமாகும்.

இவருக்குக் கிடைச்ச வித்தியாசமான தண்டனை தீராப் பசி எடுப்பதுதான். தவியாத் தவிச்சார். என்ன பண்ணன்னு தெரியல. அப்ப அந்தப் பக்கமா வந்த சித்திர குப்தன்கிட்ட கேக்குறார். எதையாவது பண்ணி இதக் கொஞ்ச நேரம் நிறுத்துங்க தாங்க முடியலன்னு. சி.கு உடனே அவன் ஏட்டப் புரட்டிப் பாத்துட்டு உன் சுட்டு விரல எடுத்து வாயில் வைன்னுட்டுப் போயிட்டாரு. இவர் வச்ச ஒடனே பசி அடங்கிருச்சு.

என்ன காரணம்னு தெரிஞ்சுக்க ஆர்வமாகி சி.கு கிட்ட கேட்டா, அவரு சொன்னாரு ஒரு தடவை அண்ணதானம் எங்க நடக்குதுன்னு கேட்ட ஒருவனுக்கு இதோ இந்தப் பக்கம்னு உன் சுட்டு விரலாலச் சுட்டிக் காட்டிச் சொன்னாய் அதனால அந்தச் சுட்டு விரலுக்கு புண்ணியம் இருக்கு.

ஒரு பக்கமாச் சுட்டுனதுக்கே அப்படி, நம்ம பரிசல் உலகம் பூரா சுட்டியிருக்காரு, அப்ப எவ்வளவு புண்ணியம் சேத்துருக்காரு பாருங்க.

******************************************************

வாலி புத்தகத்தைப் படிச்சு முடிச்சாச்சு. மனுசன் ரெம்ப ரோஷக்காரர்தான். அவரு சண்டை போடாத ஆளே இல்ல போல. இருக்கட்டும் கர்வப் படுபவன்தானே கலைஞன். வித்யா கர்வம் பெருமைதான். வெறும் கர்வம்தான் சிறுமை.

இன்னொரு சுவராசியமான சம்பவம் அந்தப் புத்தகத்திலிருந்து.

எம்ஜியார் உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுத்துக் கொண்டிருந்த நேரம்.

வாலி எம்ஜியார்கிட்ட கேட்டாரு ”பாட்டு ரெக்கர்டிங் எப்பண்ணே”

எம்ஜியார் பொய்க் கோபத்துடன், ”இந்தப் படத்துக்கு உங்க பாட்டு இல்ல, பட டைட்டில்ல உங்க பேரு வராது”

“எம்பேரு இல்லாம நீங்க படத்துக்கு டைட்டில் கார்டே போட முடியாதுண்ணே” அப்படின்னு வாலி சவால் விட்டாரு.

“ஏன்”

“எம்பேரு இல்லாமப் போட்டா ‘உலகம் சுற்றும் பன்’ அப்படீன்னுதான் போடனும்”

**************************************************

இவரு எழுதுன பல கவிதைகளை அந்தப் புத்தகத்தில் கொடுத்திருக்கார். எனக்குப் பிடிச்ச கவிதை.

மனிதர்களை எங்களால்
மந்திரிகளாக்க முடிகிறது
மந்திரிகளைத்தான் மீண்டும்
மனிதர்களாக்க முடியவில்லை.

******************************************

நமது வலை நண்பர் ராஜ நடராஜன் photocbe.com என்ற வலைச் சேவைத்தளத்தை தொடங்கியுள்ளார். நமது தயாரிப்புகளையும் சேவைகளயும் அதன் மூலம் விளம்பரப்படுத்தலாம். கட்டணம் இன்னும் தீர்மாணிக்க வில்லை. என் நிறுவனம் குறித்த தகவல்களை இணைப்பது குறித்து தேவையான விபரங்களைத் தருமாறு சொல்லியிருக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற உங்கள் வாழ்த்துக்களை rajanatcbe@gmail.com அனுப்புங்கள்.

***************************************************

இரண்டு நாட்கள் வெளியூர் செல்வதால் ஆசிப் அண்ணாச்சி, தமிழ்ப் பிரியன், புதுகை அப்துல்லா போன்றவர்களுக்கும் மற்ற வலை அன்பர்களுக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துக்கள்

கதம்பம் – 28-09-08

வலையில் தற்பொழுது நடக்கும் பிரச்சினை ஒன்றின் என் தனிப்பட்ட கருத்து இது.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதனிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

பிரச்சினையோட மூலகாரணம் என்ன? என்ன செஞ்சாச் சரியாகும்னு கண்டுபிடிச்சு அதச் செய்யனுங்கிறதுதான் இந்தக் குறளோட கருத்து.

சிலர் பிறர் மாதிரி எழுத முயற்சி செய்வது தவறு. அதுக்குத்தான் அவரு இருக்காரே. நமக்குன்னு ஒரு தனித்தன்மை இருக்கு அத செம்மைப் படுததுவதுதான் சரி.

அவருக்கு அதிக ஹிட் வருது நமக்கு வரலையேங்குற ஏக்கமும் சிலருக்கு இருக்கு. இதுவும் தவறானதுதான். வலையில பதிவு எழுதறதே, நமக்குத் தோனுனத எழுத ஒரு வசதிங்குறதுனாலதான். அத எழுத மத்தவங்க மாதிரி பிரபலமா இருக்க அவசியமில்ல.

இவ்வளவு ஹிட் வாங்குன ஒரு ஆள நான் எப்படி கேள்வி கேட்டு மடக்குறேன் பாருன்னு ஒரு நோக்கத்தோட கேள்வி கேட்பதும் தவறு.

அதேபோல இன்னாரு இன்னாருக்கு ஜால்ரா, அல்லக்கை என்பதெல்லாம் வெட்டிப் பேச்சு. இருந்தா என்ன தப்பு?. அது உங்கள நேரடியாப் பாதிக்குதா? ஒருவருக்கு நண்பர்கள் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களில் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருப்பது இயல்புதானே.

நம்ம பின்னூட்டத்த அவரு வெளியிடல, பின்னூட்டத்துக்குப் பதிலே தரலன்னும் சொல்றது தப்பு. வலையில இருக்க சுதந்திரமே அதுதானே. பிடிச்சாப் போடு, இல்ல போய்கிட்டே இரு.

ஒரு பொது விவாதத்துக்கு நீங்க ஒரு கேள்வி வச்சு அதுக்குப் பதில் வரல்லன்ன அத ஒரு பதிவா உங்க வலையில போடலாம். இது அவர் சொன்ன கருத்து, இது நான் கேட்ட கேள்வி உங்க கருத்து என்னன்னு, அத மேலும் பொதுவாக வைக்கலாம்.

உணர்ச்சி வசப்பட்டு பின்னூட்டமிடுவது குறித்து அசிங்கமா பேசியிருக்கவும்கூடாது; இத ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு மனவருத்தப்படவும் அவசியமில்ல. இதுல ரெண்டு சைடுலயும் கொம்பு சீவ ஆள் இருப்பது கண்கூடு.

இரண்டு தரப்பிற்கும் நான் சொல்வது இதுதான். வெற்றிகளை உங்க தலைக்கும் தோல்விகளை உங்கள் இதயத்திற்கும் எடுத்துச் செல்லாதீர்கள்.

******************************************

புதுகை அப்துல்லாவப் பாராட்டி பரிசல் போட்ட பின்னூட்டத்துல சுட்டு(ம்) விரலால் தீராப் பசியடங்கியவன் கதை தெரியுமான்னு கேட்டிருந்தேன். அதச் சொல்லச் சொல்லி நேரிலும், செல்லிலும், மெயிலிலும் கோரிக்கை வைத்த உங்களுக்காக இதோ.

ஒரு ஊர்ல ஒரு பண்ணையார். மகாக் கஞ்சன். அதுகூடப் பரவாயில்லை, அவருக்கு ஒரு வினோதப் பழக்கம். அவரு சாப்பிடும்போது வேலையாட்கள் எல்லாம் சுத்தி நின்னு அத வேடிக்கை பாக்கனும்.

எல்லாரும் சாவதைப் போல அவரும் ஒரு நாள் இறந்துவிடுகிறார். நம்மாளுக்கு நரகம்தானே கிடைக்கும். கூடவே ஒரு வித்தியாசமான தண்டனை கிடச்சது. எண்ணைக் கொப்பரையில போட்டு எடுக்க இடத்துல வரிசையில காத்திருக்க வேண்டியதாப் போச்சு. இவர் முறை வர கொஞ்சம் தாமதமாகும்.

இவருக்குக் கிடைச்ச வித்தியாசமான தண்டனை தீராப் பசி எடுப்பதுதான். தவியாத் தவிச்சார். என்ன பண்ணன்னு தெரியல. அப்ப அந்தப் பக்கமா வந்த சித்திர குப்தன்கிட்ட கேக்குறார். எதையாவது பண்ணி இதக் கொஞ்ச நேரம் நிறுத்துங்க தாங்க முடியலன்னு. சி.கு உடனே அவன் ஏட்டப் புரட்டிப் பாத்துட்டு உன் சுட்டு விரல எடுத்து வாயில் வைன்னுட்டுப் போயிட்டாரு. இவர் வச்ச ஒடனே பசி அடங்கிருச்சு.

என்ன காரணம்னு தெரிஞ்சுக்க ஆர்வமாகி சி.கு கிட்ட கேட்டா, அவரு சொன்னாரு ஒரு தடவை அண்ணதானம் எங்க நடக்குதுன்னு கேட்ட ஒருவனுக்கு இதோ இந்தப் பக்கம்னு உன் சுட்டு விரலாலச் சுட்டிக் காட்டிச் சொன்னாய் அதனால அந்தச் சுட்டு விரலுக்கு புண்ணியம் இருக்கு.

ஒரு பக்கமாச் சுட்டுனதுக்கே அப்படி, நம்ம பரிசல் உலகம் பூரா சுட்டியிருக்காரு, அப்ப எவ்வளவு புண்ணியம் சேத்துருக்காரு பாருங்க.

******************************************************

வாலி புத்தகத்தைப் படிச்சு முடிச்சாச்சு. மனுசன் ரெம்ப ரோஷக்காரர்தான். அவரு சண்டை போடாத ஆளே இல்ல போல. இருக்கட்டும் கர்வப் படுபவன்தானே கலைஞன். வித்யா கர்வம் பெருமைதான். வெறும் கர்வம்தான் சிறுமை.

இன்னொரு சுவராசியமான சம்பவம் அந்தப் புத்தகத்திலிருந்து.

எம்ஜியார் உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுத்துக் கொண்டிருந்த நேரம்.

வாலி எம்ஜியார்கிட்ட கேட்டாரு ”பாட்டு ரெக்கர்டிங் எப்பண்ணே”

எம்ஜியார் பொய்க் கோபத்துடன், ”இந்தப் படத்துக்கு உங்க பாட்டு இல்ல, பட டைட்டில்ல உங்க பேரு வராது”

“எம்பேரு இல்லாம நீங்க படத்துக்கு டைட்டில் கார்டே போட முடியாதுண்ணே” அப்படின்னு வாலி சவால் விட்டாரு.

“ஏன்”

“எம்பேரு இல்லாமப் போட்டா ‘உலகம் சுற்றும் பன்’ அப்படீன்னுதான் போடனும்”

**************************************************

இவரு எழுதுன பல கவிதைகளை அந்தப் புத்தகத்தில் கொடுத்திருக்கார். எனக்குப் பிடிச்ச கவிதை.

மனிதர்களை எங்களால்
மந்திரிகளாக்க முடிகிறது
மந்திரிகளைத்தான் மீண்டும்
மனிதர்களாக்க முடியவில்லை.

******************************************

நமது வலை நண்பர் ராஜ நடராஜன் photocbe.com என்ற வலைச் சேவைத்தளத்தை தொடங்கியுள்ளார். நமது தயாரிப்புகளையும் சேவைகளயும் அதன் மூலம் விளம்பரப்படுத்தலாம். கட்டணம் இன்னும் தீர்மாணிக்க வில்லை. என் நிறுவனம் குறித்த தகவல்களை இணைப்பது குறித்து தேவையான விபரங்களைத் தருமாறு சொல்லியிருக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற உங்கள் வாழ்த்துக்களை rajanatcbe@gmail.com அனுப்புங்கள்.

***************************************************

இரண்டு நாட்கள் வெளியூர் செல்வதால் ஆசிப் அண்ணாச்சி, தமிழ்ப் பிரியன், புதுகை அப்துல்லா போன்றவர்களுக்கும் மற்ற வலை அன்பர்களுக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துக்கள்

கதம்பம் – 22/09/08

கோர்ட்ல வசூல் பண்ணும் அபராதப் பணத்துல கள்ள நோட்டாம். அதனால அந்தப் பணத்த வங்கிகள்ல செலுத்தும் போது, கள்ள நோட்டுகளக் கிழிச்செறிஞ்சுட்டு அத அந்த கோர்ட் ஊழியர் கணக்குல பிடித்தம் செய்யுறாங்களாம்.

இந்தப் பணம் எங்க இருந்து வருதுன்னு பார்த்தா ATM மூலமாவாம். ATM ல பணம் செலுத்துறது நானும் நீங்களும் இல்ல. அந்தந்த வங்கிகள்தானே. அதுவும் நேரடியா இல்ல. இதுக்குன்னு தனி ஏஜென்சி இருக்கு அவங்கதான் ATM நிலவரத்த மானிட்டர் பண்ணித் தேவையான பணத்த செலுத்துறாங்க. அப்ப அங்க செக் பாயிண்ட் வச்சு அதத் தடுக்க வேண்ட்டியதுதானே. அத விட்டுட்டு அப்பாவி ஊழியர்கள பலியாக்குறது என்ன ஞாயம்?

வங்கிப் பணியில் இருக்கும் பதிவர்கள் யாராவது தெளிவு படுத்துங்கப்பா.

*************************************************

வாலி எழுதிய ’நானும் இந்த நூற்றாண்டும்’ புத்தகம் படிக்கிறேன். பரிந்துரைத்த பரிசலுக்கு நன்றி.

ஒரு பெரிய எழுத்தாளர் வாலிய மட்டம் தட்ட நெனைச்சு, ”நீங்க ஏன், வாலின்னு பேர் வச்சுருக்கீங்க” ன்னு கேட்டாரு.

அதுக்கு வாலி, “ எதிராளி ஒருவன் வாலிக்கு முன் வந்து நின்றால், அவனது பலத்தில் பாதி வாலியை வந்தடையும் என்பது ராமாயண வழக்கு. அது மாதிரி எந்த அறிவாளி என் முன்னால் வந்து நின்றாலும் அவரது அறிவில் பாதி என்னை வந்து சேர வேண்டும் என்பதற்காகத்தான்.”

உடனே எழுத்தாளர் கிண்டலா, “ உம்மைப் பார்த்தால் பெரிய அறிவாளி மாதிரித் தெரியலையே?” ன்னாரு.

அதுக்கு வாலி , “என்ன செய்ய இன்னும் நான் அறிவாளி யாரையும் பார்க்கலயே”ன்னாரு.

**************************************************

ஒரு அப்பாவும் பையனும் அவங்க கழுதைய விக்க சந்தைக்குப் போனாங்க.

எதுக்கால ஒருத்தர் வந்து, “என்ன அண்ணாச்சி தூரமோ?” ன்னாரு.

“இந்தக் கழுதைய வித்துட்டு கொஞ்சம் மளிகைச் சாமான் வாங்கலாம்னு” அப்படீன்னாரு அப்பா.

“போறதுதான் போறிய இந்தச் சின்னப் பயல கழுத மேல உக்கார வையுங்க” ன்னாரு.

சரீன்னு பையன கழுதமேல உக்கார வச்சு, கொஞ்ச தூரம் போயிருப்பாங்க, இன்னொருத்தர் சொன்னாரு, “ஏம்பா வயசாளி நடந்துவாராரு, நீ சின்னப் பையன் ஓடுற பாம்ப மிதிக்க வயசுல உக்காந்து வாறீயே?”

அதூம் சரிதான்னு, பையன இறக்கி விட்டுட்டு அப்பா ஏறி உக்காந்துட்டாரு. கொஞ்ச தூரம்தான் போயிருப்பாங்க இன்னொருத்தர் வந்து, “ஒன்னையெவே தாங்குற இந்தக் கழுத கேவலம் இந்தச் சின்னவனையா தாங்காது?” ன்னு ஒரு கொக்கிய போட்டாரு.

பையனும் ஏறிக் கழுதமேல உக்காந்து ஒரு பத்தடி தூரம் போயிருப்பாங்க, பேப்பய கழுத பப்பரப்பான்னு நாலு காலையும் விரிச்சுப் படுத்துருச்சு.

கெட்டுது கதைன்னு ஒரு மூங்கில் கம்பெ எடுத்து கழுதையக் காலைக் கட்டித் தூக்கீட்டுப் போனாங்க.

இது ஒரு கிராமியக் கதை. இதன் பல்வேறு வடிவங்களை வெவ்வேறு சமயத்தில் கேட்டிருக்கிறேன்.

இந்தக் கதையச் சொல்லுங்கன்னு மெயிலனுப்பிக் கேட்ட புதுகை அப்துல்லாவுக்கும், திருப்பூர் சிம்பாவுக்கும் இந்தப் பதிவ டெடிக்கேட் செய்யுறேன் (காசா? பணமா?)

********************************************************

வாழ்க்கையின் பெரிய சுவராசியமே அத வாழ்ந்துதான் தீரனும்கிறது. சில விசயங்கள முன்கூட்டித் தீர்மாணிக்க முடியாம, போற போக்குல அட்ஜஸ்ட் செஞ்சுதான் ஆகனும். புகாரியின் இந்தக் கவிதையப் பாருங்க.

ஓரணி உதைக்கும்
பந்து எதிராளியின்
வலைக்குள் விழுந்தால்
ஒரு புள்ளி
என ஆரம்பமானது
அந்த ஆட்டம்!

ஒருவன் பக்கவாட்டில்
தூரமாய்ச் செல்ல
துரத்தமுடியாமல் திணறினார்கள்
எதிர்முகாம் ஆட்கள்!

கோடுகள் குறிக்கப்பட்டு
எல்லைகள் வரையறுக்கப்பட்டன!

அடுத்ததாய் கால்தடுக்கி
விழவைத்து முட்டியிலும்
நெற்றியிலும் ரத்தப்பொட்டு
வைத்து வெற்றி
தட்டினார்கள்! – நடுவர்கள்
நடுவில் வந்தார்கள்!

கொஞ்சமாய் தவறு
செய்தவன் எச்சரிக்கப்பட்டான்
திரும்பத் திரும்ப
செய்பவன் வெளியேற்றப்பட்டான்!

ஒவ்வொரு தவறிலும்
தப்பிலும் ஆட்டம்
கற்றுக் கொண்டது
புது விதி!

அவ்வாறே வாழ்க்கையும்!

– புகாரியின் ‘ஆடுகளக்கோடுகள்

********************************************************

மிஸ்டர் எக்ஸ் கிட்ட டாக்டர் சொன்னாரு,’”உங்க உடம்பு கண்டிசனுக்கு வரனும்னா தினமும் 5 கிலோ மீட்டர் நடக்கனும். இத ஒரு மாசம் பாலோ பண்ணுங்க”.

ஒரு மாசம் கழிச்சு எக்ஸ் போன்ல டாக்டரக் கேட்டாரு, “ டாக்டர் நா இப்ப வீட்டுக்குத் திரும்ப வரலாமா?”.