பதிவர் வட்டம்

மிகை நாடி மிக்க கொளல்

அன்பின் நர்சிம்,

ஒரு கை நிறைய வேர்க்கடலை அள்ளி சாப்பிடும்போது ஒன்றிரண்டு சொத்தை வருகிறது என்பதால் மொத்தக் கடலையையும் நாம் ஒதுக்கி விடுவதில்லை அல்லவா? அதுபோலத்தான் ஒரு பதிவு இடறி விட்டது என்பதற்காக எழுதாமல் இருப்பது என்பது சரியில்லை.

மேலும் உன்னை ரசித்து வாசித்த/வாசிக்கும் என்னைப் போன்ற சிலருக்காவது நீ மீண்டும் எழுதத்தான் வேண்டும். அந்தந்த நேர உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு முடிவுகள் எடுப்பதும் பின் அதற்காக வருந்துவதும் மனித இயல்பு. இதற்கு ஆட்படாத மனிதனே இல்லை எனலாம்.
ஒரு கொலைக் குற்றவாளிக்குகூட இந்த சமுதாயம் வாய்ப்புக்களை வழங்குகிறது என்றபோது நீ எழுதாமல் இருப்பது என்னவோ போலிருக்கிறது. மேலும் இனி நீ எழுதும்போது முன்னிலும் சிறந்த படைப்புக்களை தருவாய் என நம்புகிறேன்.

செய்த தவறுகளிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களினால் தன்னைச் செதுக்கிக் கொண்டு முன்னேறும் சிறப்பு மனிதனுக்கே உண்டு.

மீண்டு(ம்) வா.

தோழமையுடன்

பி கு : நிச்சயமாக இந்தப் பதிவுக்கு எதிர்ப்புகளும் கண்டனங்களும் வரும். அதிகப்பிரசங்கி நாட்டாமை, உருவத்தில் பெரியவன் அறிவில் சிறியவன், நல்லவன் போல் நடிப்பவன், தகரடப்பா, நசுங்கிய சொம்பு, நாதாரி போன்ற நாகரீக வார்த்தைகளில் தொடங்கி, தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளைத் தாங்கி வரும் என எனக்குத் தெரியும். இருந்தும் இதை இங்கே நான் பதிப்பிக்கக் காரணங்கள் பின் வருவன.

1. தவறு செய்த ஒரு மனிதனுக்குக் கொடுக்கப்படும் அதிகப்பட்சத் தண்டனை அவனைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவதே. நாம் அனைவருமே நர்சிம்மின் அந்தப் பதிவிற்கு உடன்படவில்லை என்பதைச் சொல்லி நர்சிம்மைத் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டோம். அவரும் தனது தவறை உணர்ந்துவிட்டார்.

2. நான் சந்திக்கும், பேசும் அல்லது மின்னரட்டையில் ஈடுபடும் பெரும்பாலோர் நர்சிம் மீண்டும் எழுத வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார்கள். ஆனால் இதைபோல ஒரு பதிவை எழுதத் தயங்குகிறார்கள். காரணம் அவதூறுக்கு பயப்பதே.

3. இந்தப் பிரச்சினைக்கிடையிலும் நர்சிம்மைத் தொடர்வோர்(555) குறையவே இல்லை. அதன் அர்த்தம் நர்சிமின் இந்தப் பதிவைக் கண்டித்து இனித் தரப்போகும் நல்ல பதிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதே.

4. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.

முத்துராமனுக்கு உதவி தேவை

முத்துராமன் – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.

அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே.

அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

நீங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்தால் இந்தச் செய்தியை வெளியிட்டு அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம். அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்.

சென்ற வார உலகம்

The World This Week என்றொரு நிக்ழச்சி 80 களின் இறுதியில் வந்தது. தொகுத்து வழங்கியவர் இன்றைய NDTV உரிமையாளர் திரு.பிரணாய் ராய். மிகச் சிறந்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாக அக்காலகட்டத்தில் வந்து கொண்டிருந்தது. Alpha Plus மற்றும் நஸ்ருதீன் ஷா வழங்கிய TurinignPoint இரண்டும் எனக்குப் பிடித்த மற்ற நிகழ்ச்சிகள்.

TWTW சென்ற வாரம் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஒரு மணி நேரத்தில் சுவைபட வழங்கிய ஒரு நிகழச்சி. மற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் வழக்கம் போலவே இருக்க இந்நிகழ்ச்சி மட்டும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். காலவெள்ளத்தில் அவரும் தனியார் தொலைக்காட்சி உரிமையாளராக ஆகி, மற்ற தொலைக்காட்சிகளுடன் போராடிக் கொண்டிருக்கிறார். சில சமயம் நல்ல நிகழ்ச்சிகளும் வருகிறது.

அதே போலத்தான் பதிவுலகில் அநேகப் பதிவுகள் எழுதப்பட்டாலும் எல்லாப் பதிவுகளும் எல்லாராலும் படிக்கப் படுவதில்லைல்; அந்த நோக்கத்தில் எழுதப் படவில்லை என்றாலும். சில நல்ல பதிவுகள் பெரும் கவனத்தைப் பெறாமல் போவதும் சில சுமாரான பதிவுகள் (அளவு கோல் ஆளாளுக்கு மாறுபடும்) அதிக வோட்டுக்கள் வாங்கி பரிந்துரையில் இருப்பதும் தொழில்நுட்பக் குளறுபடி மற்றும் கூட்டுமுயற்சி போன்ற காரணங்கள்தான்.

குழுமங்களில் இருப்பவர்களுக்கு குழும உறுப்பினர் ஒருவர் ஒரு நல்ல பதிவைப் படித்தால் அதை உடனே சுட்டியுடன் குழுமத்தில் வெளியிடுகிறார். உடனே அனைவரும் அதைப் படிக்க ஏதுவாகிறது. அந்தப் பதிவும் போதிய கவனம் பெறுகிறது.

என்னுடைய கதம்பத்தில் சில கவிதைகளையும், சிறுகதைகளையும் அறிமுகப் படுத்தினேன். அதே போல மேலும் சிலரும் செய்கிறார்கள். என்றாலும் இதை ஒரு தனி வலைப்பூவில் செய்தால் ஒரு பொதுவெளியில் அனைவரும் பார்க்க, படிக்க ஏதுவாகும் என்ற மாதவராஜின் சிந்தனை வரவேற்கப் ப்டவேண்டியது.

பொதுவாக கீழ்கண்ட விஷய்ங்களைச் செய்வதாக முடிவு செய்திருக்கிறோம்.

1. பதிவர்கள் / பதிவரல்லாத வாசிப்பாளர் எவராக இருந்தாலும் மின்ன்ஞ்சல் அனுப்பலாம்.
2. கடந்த வாரத்தில் தாங்கள் படித்ததில் நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தலாம்.
3. அந்தப் பதிவுக்கான சுட்டி இணைத்தல் அவசியம்
4. ஏன் பிடித்தது என்பதற்கான ஒரு குறிப்பும் குறைந்தது 10 வரிகள் இருத்தல் நலம்.
5.பதிவை விமர்சிக்கலாம். பதிவை எழுதியவ்ர் மீதான விமர்சனத்தை வெளியிட இயலாது.
6. ஒருவரே தொடர்ந்தும் எழுதலாம்.
7. அதிகப் பதிவர்கள் இருக்கும் பட்சத்தில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்.
8. இங்கு வெளியிடப் படுவது மட்டுமே அது நல்ல பதிவுகள் மற்றவை அவ்வாறல்ல என்ற கொள்ளக் கூடாது.
9. தங்கள் சொந்தப் படைப்பைப் பற்றி எழுதுதல் கூடாது.
10.இங்கே பதியப்படும் கருத்துகள் பரிந்துரைத்தவரின் கருத்துக்கள். இந்த வலைப்பூவை நடத்துபவர்களின் கருத்துக்கள் உடன்படவோ அல்லது மாறுபட்டோ இருக்கலாம்.

வாடாத பக்கங்களை வாசிக்க இங்கே வாருங்கள்.

உங்கள் பங்களிப்பை jothi.mraj@gmail.com அல்லது vadakaraivelan@gmail.com க்கு மின்னஞ்சல் மூலம் செய்யலாம்.

ஊருக்குப் போயிருந்தேன்

70 களின் பிற்பகுதியில்தான் எங்கள் ஊருக்கு(வடகரை) பேருந்து வசதி கிடைத்தது. அது வரை 5 கி மீ தூரமுள்ள பம்புளி (பைம்பொழில் என்ற அழகான தமிழ்ப்பெயரின் மரூஉ) -இல் இறங்கி நடக்க வேண்டும் அல்லது மாட்டுவண்டிப் பயணம். அப்பொழுதெல்லாம் பழனியில் இருந்து செல்ல 12 மனி நேரம் ஆகும்; இப்பொழுது அதிகப்பட்சம் 7 மணி நேரம்தான் ஆகிறது.

12 மணி நேரப் பயணம் என்பதால் எங்களை வரவேற்க மாட்டுவண்டி கட்டி வந்து காத்திருப்பார்கள் என் மாமன்மார். அப்பா, அம்மா, நான் என மூன்றே பேர்தான் என்றாலும் 3 அல்லது 4 மாட்டு வண்டிகளில் படை திரண்டு வந்திருப்பார்கள்.

“எதுக்கு வீனா அலைச்சல்” என்ற அப்பவின் கேள்விக்கு அத்தானையும் மருமவனையும் பாக்கதவிட வேற என்ன பெரிய சோலி?” என்பதான பதில்தான் வரும். ஒரு கடாப் பெட்டி நிறைய அவித்த சோளம், தட்டைப் பயிறு, அவல் என பசியாற பண்டங்களுமிருக்கும். அதெல்லாம் அன்பில் முக்குளித்த தினங்கள். ஞாபக அடுக்குகளில் தூசு படிந்து போனவை.

40 வருட இடைவெளியில் மீண்டும் அதே அனுபவம் ஞாயிறு காலை.

எதிர்பார்த்த நேரத்திற்கு முன்பாகவே சென்று சேர்ந்தது நீல மலை விரைவுத் தொடர் வண்டி. முதலில் அப்துல்லா வந்தார் பின்னர் கார்க்கி, சங்கர் இருவரும். மூன்று வண்டிக்குத்தான் ஆட்கள் இருந்தோம் என்றாலும் நர்சிம் நானும் வருவேன் காத்திருங்கள் எனச் சொல்லி தன் பிரியத்தைப் பிடிவாதமாகப் பொழிந்தார்.

முதல் நாள் இரவு 2 மணிக்குத்தான் புதுக் கோட்டையிலிருந்து வந்திருக்கிறார் அப்துல்லா. இருந்தாலும் காலை 4 மணிக்கு எங்களை வரவேற்க வந்திருந்தது நெகிழ்ச்சியாக இருந்தது. கார்க்கி, சங்கர் இருவருமே முதல் நாளிரவு சரியாக உறங்கவில்லை என அவர்கள் கண்கள் காட்டிக் கொடுத்தன. ஆனாலும் அவர்கள் முகத்தில் பரவிய மகிழ்ச்சி அளபரியதாக இருந்தது.

நர்சிம் வரும்போதே ஒரு கவிதையுடன் வந்தார். “நீங்கள் எழுதியதிலேயே இதுதான் சிறந்த கவிதை என்றேன்”, வழக்கம் போல வழிந்தார். கால் முளைத்த அந்தக் கவிதையின் தலைப்பு அஸ்வின். அழகான கண்கள். குறும்பு கொஞ்சும் பாவனைகள் என எல்லோரையும் கவர்ந்தான்.

உறவினர் வீட்டு விசேசமொன்றில் முகம் முழுக்கச் சிரிப்புடன் கிடைக்கும் வரவேற்பிற்கும் மேலான ஒன்றாக இருந்தது.

பொருள் வயிற் பிரிவின் நிமித்தம் கைநழுவிய மாமன் மைத்துனர் உறவு இழைகளை மீட்டெடுக்கிறது இந்த வலை.

.

ஆதி பயோடேட்டா


பெயர் : ஆதி
பழைய பெயர் : தாமிரா
வயது : தொப்பை போடும் வயது அல்ல
தொழில் : பதிவு எழுதுவது
உபதொழில் : மற்ற நேரங்களில் அலுவலகம் செல்வது
நண்பர்கள் : பாலோயர்ஸ், பின்னூட்டம் இடுபவர்கள்
எதிரிகள் : பின்னூட்டம் இடாதவர்கள்
பிடித்த வேலை : தங்கமணி பதிவு எழுதுவது

பிடிக்காத வேலை : மேலதிகாரி செய்யச் சொல்லுவது

பிடித்த உணவு : ரமா சமைப்பது (வேறு வழியில்லாததால்)

பிடிக்காத உணவு : இனிமேல்தான் கண்டுபிடிக்கணும் (தொப்பையே சாட்சி)
விரும்புவது : நண்பர்களுடன் அரைட்டை அடிக்க
விரும்பாதது : ரமா கடைக்குப் போகச் சொல்லுவது

புரிந்தது : திருமணத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பது
புரியாதது : எப்படித்தான் மத்தவனெல்லாம் சமாளிக்கிறான் என்பது
சமீபத்திய எரிச்சல் : சுபாவை சமாளிக்க முடியாதது
நீண்டகால எரிச்சல் : ரமாவிடம் பல்பு வாங்குவது(அடிக்கடி)
சமீபத்திய சாதனை : கார்க்கியை வைத்து குறும்படம்
நீண்டகால சாதனை : கேமராவை வைத்துப் படம் காட்டுவது

டிஸ்கி : இதையும், இதையும் படிங்க.

கல்கியில் நர்சிம் மற்றும் முத்துவேல்.

சகபதிவர்கள் மேலும் மேலும் பத்திரிக்கைகளால் அடையாளங் காணப்பட்டு அறிமுகப் படுத்தப் படும்போது மனது மகிழ்கிறது.

இந்த வாரக் கல்கியில் நண்பர் நர்சிம் மற்றும் ச.முத்துவேல் ஆகியோரின் வலைப்பூக்களை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள்.

உடன் அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற பதிவர்களுக்கும் என் வாழ்த்துகளை இங்கே பதிந்து கொள்கிறேன்.

நன்றி : கல்கி வார இதழ்.

.

கல்கியில் நர்சிம் மற்றும் முத்துவேல்.

சகபதிவர்கள் மேலும் மேலும் பத்திரிக்கைகளால் அடையாளங் காணப்பட்டு அறிமுகப் படுத்தப் படும்போது மனது மகிழ்கிறது.

இந்த வாரக் கல்கியில் நண்பர் நர்சிம் மற்றும் ச.முத்துவேல் ஆகியோரின் வலைப்பூக்களை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள்.

உடன் அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற பதிவர்களுக்கும் என் வாழ்த்துகளை இங்கே பதிந்து கொள்கிறேன்.

நன்றி : கல்கி வார இதழ்.

.

வாருங்கள் வாழ்த்துவோம்

பின்னூட்டப் புயல் ராகவன்(நைஜீரியா) அவர்களின் செல்வன் அரவிந்துக்கு இன்று பிறந்த நாள்.

என் மனமார்ந்த வாழ்த்துகள்.

வாருங்கள் வாழ்த்துவோம்.

.

வாருங்கள் வாழ்த்துவோம்

பின்னூட்டப் புயல் ராகவன்(நைஜீரியா) அவர்களின் செல்வன் அரவிந்துக்கு இன்று பிறந்த நாள்.

என் மனமார்ந்த வாழ்த்துகள்.

வாருங்கள் வாழ்த்துவோம்.

.