நாவல்

கொற்கை – ஜோ டி குருஸ்


நல்ல இலக்கியப்படைப்பு ஒரு கால கட்டத்தை அல்லது ஒரு சாரரின் வாழ்க்கையைப் படம் பிடித்துப் பிரதிபலிக்க வேண்டும்.

மனல் கடிகை – எம் கோபால கிருஷ்ணன்
கோரை – கண்மணி குனசேகரன்
அளம், கீதாரி – சு தமிழ்ச் செல்வி
சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெள்தமன்
ஏறு வெயில் – பெருமாள் முருகன்
போக்கிடம் – விட்டல்ராவ்
ஆழி சூழ் உலகு – ஜோ டி குருஸ்
ரத்த உறவு – யூமா வாசுகி
ஆகிய நாவல்கள் அவ்வகையே எனினும் ஜோ டி குருஸின் இரண்டாவது நாவலான கொற்கை இப்பட்டியலில் முதலிடத்தில் வைக்கத் தக்கது.

எதைப்பற்றிய நாவல் இது?

”கால காலமா இங்க முத்தெடுத்த கத, பாண்டியபதி கொற்கய ஆண்ட கத, நாங்க இங்க பிழைக்க வந்த கத, பாய்மரக் கப்பலோடுன கத, கப்ப வந்த கத, வெள்ளக்காரம் வந்த கத, போன கத, இன்னும் என்னென்னமோ கதய…” பக் – 1113

1914 ஆம் ஆண்டில் துவங்கும் இந்நாவல் 1100 பக்கங்களைத் தாண்டி 2000ஆவது ஆண்டில் நிறைவடைகிறது தற்காலிகமாக. சொல்லப்பட்டவைகளினூடாக சொல்லப்பட வேண்டியவை ஏராளம் என்பதை நிறுவுகிறது இந்நாவல்.

எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி மேற்செல்கையில் வீசி எறியப்படுபவர்களின் வாழ்க்கை, யானை வந்து மாலை போட்டு அதிர்ஷ்டம் அடித்த வாழ்க்கை. எது எப்படி என்றாலும் தனக்கென ஒரு கொள்கை வைத்து வாழ்பவர்களின் வாழ்க்கை. எந்தத் தொழிலும் நிரந்தரமல்ல என்பதைப் புரிந்து கொள்ள மறுத்தவர்களின் வாழ்க்கை. கிடைத்தைப் பற்றிக் கொண்டு மேலேறியவர்களின் வாழ்க்கை என இது வரையும் சித்திரம் எண்ணற்றது.

இந்த ஒற்றை நாவல் பல நாவல்களாக விரிகிறது. பாண்டியபதியின் வாழ்க்கை, பிலிப் தண்டல் வாழ்க்கை, சன்முகவேலின் வாழ்க்கை, பவுல் தண்டல் வாழ்க்கை, அல்வாரிஸ் வாழ்க்கை, ரிபேராக்கள் வாழ்க்கை, பல்டோனாக்கள் வாழ்க்கை, பர்னாந்துமார்கள் வாழ்க்கை, நாடார்கள் வாழ்க்கை, பரதவர்கள் வாழ்க்கை, கிருத்துவர்கள் வாழ்க்கை என ஒவ்வொன்றும் தன்னளவில் தனித்தனி நாவலாகவே தோன்றுகிறது.

நாவலின் ஊடாக ஒரு நூற்றாண்டுகாலமாக ஏற்பட்ட சமுதாய மாற்றத்தையும், வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களையும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கால ஓட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளையும் பதிவு செய்திருப்பது நாவலின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. காமராசர் மறைவு, தி மு க ஆட்சி பிடித்தல் சந்திரபாபு திருமண நிகழ்வு என அந்தந்த வருடத்தில் ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாகச் சொல்லி இருப்பது சுவாரசியமாக இருக்கிறது.

காலச்சுவடு பதிப்பக வெளியீடு
விலை : ரூ 800

”நாவலில் சொல்லவந்ததை ஒரு கட்டுரையிலேயே கூட சொல்லி முடித்திருக்கலாம். ஆனால் அதை அப்படி சொல்ல விரும்பவில்லை. வாழ்வாக சொல்ல விரும்பினேன். ஆழி சூழ் உலகு எழுதி முடித்த உடனே கொற்கையை எழுத உட்கார்ந்தேன். 2005 தொடங்கி 2009 ஆண்டு முடிய நாவலுக்காக உழைத்திருக்கிறேன்.” ஜோ டி குருஸின் பேட்டி

உங்கள் திசை நோக்கி என வணக்கத்தைச் சொல்கிறேன் தோழர் குருஸ்.

கலைடாஸ்கோப் – 5/4/10

அங்காடித் தெருவைப் பற்றி பதிவர்கள் பாராட்டி எழுதியது மகிழ்வாக இருந்தது. சிலருக்குப் பிடிக்கவில்லை. எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஒரு படைப்பு இதுவரை வந்ததில்லை.

ஆனாலும் சுரேஷ் கண்ணன் பதிவில் வந்த பின்னூட்டங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளில் இந்த இரண்டு கேள்விகள் சமுதாயத்தின் மீதான அக்கறையை முன்வைக்கின்றன. இக்கேள்விகளுக்கு இயக்குனர் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்; அடுத்த படத்திலாவது.

1. டிவிஎஸ் க்ரூப்பும், அம்பானிங்களும் சுரண்டுறதை தெகிரியமா படமெடுக்குற தில்லு இந்த இயக்குனருக்கு இல்லையே?

2. இந்த படம் சமூகத்தில் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறதா?. உண்மையில் ரசிகர்களை பாதித்து இருந்தால், அந்த அங்காடிகளுக்கு வரும் வாடிக்கையாளர் கூட்டம் பத்து சதவீதம் குறைந்து இருக்க வேண்டும், அல்லது அங்கு வேலை பார்க்கும் இரண்டு சதவீதம் ஊழியர்களாவது ராஜினாமா செய்து வேற வேலை, வியாபரத்திற்கு சென்று இருக்க வேண்டும்

இவ்விரண்டு கேள்விகளும் விரிவாகப் பதிவாக இங்கே

**********************************************************

இந்தமுறை கோவை இந்து மக்கள் கட்சி ஒரு வித்தியாசமான பிரச்சினையை முன் வைத்துப் போராடுகிறது.

சானியாவுக்கு இந்திய அரசு வழங்கிய பட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.

எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்க? இ ம க சம்பத்தை வளர்த்து விட்ட பத்திரிக்கைக்காரரகளைச் சொல்ல வேண்டும்.

**********************************************************

கலைஞர் தொலைக் காட்சியில் வியாழன் இரவு 10.30 க்கு ஒளிபரப்பாகும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது. இயக்குனர் கனவுகளோடிருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. அவர்கள் இயக்கைய குறும்படமொன்றைத் திரையிட்டு விளக்க வாய்ப்பளிக்கிறார்கள். நடுவர்களாக மதனும், பிரதாப் போத்தனும்.

பிரபல இயக்குனர் ஒருவர் சிறப்பு விருந்தினராக வருகிறார். அலசல் பயனுள்ளதாகவும் குறும்படத்தை எடுத்தவர் தன்னைச் செதுக்கிக் கொள்ளவும் உதவுகிறது.

சிலருக்கு வாய்ப்பும் கிட்டுகிறது. சென்றவாரக் குறும்படத்தில் நடித்தவருக்கு வசந்தபாலனின் அடுத்தபடத்தில் நடிக்க வாய்ப்புக் கிட்டியது.

**********************************************************

வாழ்க்கையை அதன் இயல்பான குரூரத்துடனும், கொப்பளிக்கும் கோபத்துடனும், வாட்டி எடுக்கும் வெறுப்புடனும் இன்னும் இயாலமை, பொறாமை என அதன் கறைபடிந்த பக்கங்களை நாவலாக்கி எழுதுவதில், பெண் எழுத்தாளர்களில் சு.தமிழ்ச்செல்வி, எனக்குப் பிடித்தவர்.

அவர் எழுதிய கற்றாழை, அளம், கீதாரி மூன்று நாவல்களையும் பரிந்துரைக்கிறேன். மூன்றுமே வேறு வேறு களங்களைக் கொண்டது என்றாலும் வாழ்வை அதன் போக்கிலேயே எழுதி இருப்பது சிறப்பாக இருக்கிறது. எந்த இடத்திலும் எழுத்தாளர் முன் வந்து தன் மொழி ஆளுமையையோ அல்லது தன்னுடைய தத்துவ விசாரத்தையோ வெளிப்படுத்தவில்லை.

சில சமயம் இயல்பாக இருப்பதே சிறப்பான அழகல்லவா?

புத்தகங்கள் மருதா பதிப்பக வெளியீடு.
முகவரி :
மருதா பதிப்பகம்,
10 ரயில் நிலையச் சாலை,
இடமலைப் புதூர்,
திருச்சி – 620012.
தொ பே : 0431-2473184.
மின்னஞ்சல் : marutha1999.rediffmail.com

நினைவூட்டியதற்கு நன்றி அப்துல்லா.

**********************************************************

இசை என்றழைக்கப்படும் சத்யமூர்த்தியின் கவிதை இந்தமுறை. ஞாயிற்றுக் கிழமைகளின் மதியப் பொழுதுகள் ஏகாந்தமானவை. விவரிக்க இயலாத ஆச்சர்யங்களையும் ஆசுவாசங்களையும் அளிப்பவை. அந்த அனுபவத்திலொரு கவிதை.

தென்றல் என்றழைக்கப்படும் ஞாயிற்றுகிழமையின் காற்று

பிஸ்கட்டைப் பிட்டு
தேநீரில் நனைத்து சுவைப்பது போல
இந்த ஞாயிற்றுகிழமையைப் பிட்டு
ஒரு கோப்பை மதுவில் நனைத்து சுவைக்கிறேன்.
மூளைக்குள் கத்திக்கொண்டிருந்த
அலுவலகத்தின் நா
அறுக்கப்பட்டு விட்டது.
மைதானங்களில் மகிழ்ச்சி
ஒரு ரப்பர் பந்தென
துள்ளிக்கொண்டிருப்பதை பார்க்கிறேன்.
இக் கொதி நிலம் திடீரெனக் குளிர்ந்து
பெய்கிறது ஒரு ரம்யமான மழை.
ஞாயிற்றுகிழமையின் காற்றுக்குதானா தென்றல் என்று பெயர்
என்றொரு வரி தோன்றியது.
இதையடுத்து உருகிவழிந்த
கண்ணீரின் துளியொன்று
கோப்பைக்குள் சிந்த
எடுத்து அருந்தினேன்.
தாளாத தித்திப்பு அது!
தாளாத தித்திப்பு அது!

**********************************************************

குறிப்பு : இந்த வாரச் சிரிப்பு பதிவிலேயே இருக்கிறது.

கதம்பம் – 15/03/10

கதம்பம் என்ற தலைப்பில் நான்தான் முதலில் எழுதிவந்தேன் என நமது மரியாதைக்குரிய மூத்த பதிவர் திரு.லதானந்த் அவர்கள் தனது வலையில் எழுதியிருப்பதாக நண்பர் சுட்டி தந்தார். முதலில் எழுதிய தேதி முதற்கொண்டு ஆதாரப்பூர்வமாக எழுதியிருக்கிறார்.

இப்படித்தான் நமது சக பதிவர் ஜாக்கி சேகர் முதலில் காக்டெயில் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்தார். நான் பின்னூட்டத்தில், “ இதே தலைப்பில் கார்க்கி எழுதிக் கொண்டிருக்கிறார். நீங்கள் வேறு தலைப்பில் எழுதினால் நலம்” என்றேன். அவரும் உடனே நன்றி சொல்லி சேண்ட்விச் என்ற பெயரில் எழுதுகிறார். இதே போல் திரு.லதானந்த் அவர்களும் சுட்டியிருந்தால் உடனே சரி செய்திருக்கலாம்.

அது சரி பெயரில் என்ன இருக்கிறது? உள்ளடக்கம்தானே ராஜா.

அவரது வயது மற்றும் அனுபவம் இரண்டுக்கும் மரியாதை செய்யும் விதமாக இந்தப் பத்தியை இனி வேறு பெயரில் எழுத உத்தேசம். நல்ல பெயரைப் பரிந்துரையுங்களேன்.

இது வரை வந்த பரிந்துரைகள்
வானவில் / கலைடாஸ்கோப் / தோரணம்

************************************************************

இந்தப் பெயர் வைக்கும் விவகாரத்தில் வைரமுத்து கில்லாடி. அவர் எழுதிய இரண்டு நாவல்களில் ஒன்று இதிகாசம் மற்றொன்று காவியம்.

படைப்புகள் காலத்தால் அழியாமல் காவியம் என்றும் இதிகாசம் என்றும் நிலைத்திருக்கையில் அன்னார் தலைப்பு வசீகரம். புத்தகம் தலைப்புக்கு நேர்மை செய்யவில்லை என்பது வேறு விஷயம்.

அவர் நல்ல திரைப்பாடலாசிரியர் என்பது உண்மை. நல்ல நாவலாசிரியரா?

************************************************************

அனல்காற்று – ஜெயமோஹன் எழுதி தமிழினி வெளியிட்ட நாவல்.

பொருந்தாக் காமம் மற்றும் பருவக் காதல் இரண்டிற்கும் இடையில் அல்லாடும் ஒருவனின் கதை.

சீன் பை சீன் ஆக ஒரு திரைக்கதை மாதிரியே எழுதி இருக்கிறார். படித்து முடித்து பின் முன்னுரையைப் படிக்கும்போதுதான் தெரிகிறது பாலு மகேந்திரா கேட்டதற்காக எழுதிய கதையாம் அது. படமாக எடுக்கப்படாமல் நின்று விட்டது.

ஒரே மூச்சில் படிக்க வைத்தது ஜெ மோ வின் எழுத்து. காமத்தையும் காதலையும் அதனதன் இயல்புடன் வெகு நேர்த்தியாகச் சொல்லி இருக்கிறார். கதாசிரியர் எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்காமல் விஷயத்தை அதன் போக்கில் சொல்லி இருப்பது சிறப்பு.

நல்ல நாவல்.

************************************************************

இந்த முறை மண்குதிரையின் கவிதை.

எங்கள் ஊருக்கு கடவுள் வந்திருந்தார்

எதிர் வீட்டு கருப்பசாமி அண்ணன்
தன் குடும்ப அட்டையை
30 ருபாய்க்கு வாடகைக்கு விடுவதை
பார்த்துவிடுகிறார்

எங்கள் வீதியின் முடிவில் இருக்கும்
ஒரு நியாயவிலை அங்காடியில்
தராசு முள் சரிவதை
தன் நுட்பமான பார்வையால்
கண்டுபிடித்து விடுகிறார்

வட்டாச்சியர் அலுவலகம் அமைந்திருக்கிற
நகரின் முக்கியமான சந்திப்பில்
தேநீர் அருந்த நுழையுமவர்
பின்பக்கம் சில ஆயிரம் ரூபாய்க்கு
ஒரு அரசு அதிகாரி தன் கையெழுத்தை
விற்றுக்கொண்டிருப்பதைக் கண்டு கோபமடைகிறார்

புகார் கொடுக்க காவல் நிலையத்திற்குச் சென்றபோது
அங்கொரு ஏழைப் பெண்ணின் கற்புக்கு
நெடிய பேரம் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து
அதிர்ச்சியடைகிறார்

நிதானமின்றித் துடிக்கும் தன் மனதை
ஆசுவாசப்படுத்திக் கொள்ள
சன்னதி தெருவிலிருக்கும் பெரிய கட்டிடத்திற்கு வருகிறார்
அங்கே எங்கள் மீனாட்சி சுந்தரேஸ்வர் காட்சியளித்துக் கொண்டிருப்பதே
அந்த அதிகாரியின் கையெழுத்தை விற்ற காசில்தான்

விரக்தியடைந்து
தேர்ந்த மொழியால் எங்களைச் சபித்தவாறு
விரைந்து வெளியேறிக் கொண்டிருந்தவர்
முக்கியமான சாலையைக் கடக்கும் போது
நாங்கள் தேர்ந்தெடுத்த எம் எல் ஏ கட்டிய பாலம் இடிந்து
சிகிச்சை பலனின்றி
எங்கள் அரசு பொது மருத்துவமனையில் மரணமடைகிறார்

ஒரே கவிதையில் இப்படி சமூகச் சீரழிவுகள் அனைத்தையும் சாடமுடியுமா? சாடியிருக்கிறார். நன்றாக இருக்கிறது. உண்மை சுடுகிறது.

************************************************************

சின்னவளின் சைக்கிள் பஞ்சர் ஆகி விட்டதால் அதை ஒட்ட சைக்கிள் கடை தேடினோம். ஒரு கடையைக் கண்டதும் நான் நின்றேன். அவள் இங்கே வேண்டாமென்றாள்.

“ஏண்டா?” என்றதற்கு பெயர்ப்பலகையைச் சுட்டிக் காட்டினாள்.

“இங்கு பஞ்சர் போடப்படும்”

நல்லா இருக்க டியுபைப் பஞ்சர் செய்வார்களோ?

அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்

12 சிறுகதைகள். ஒவ்வொன்றிலும் கதாசிரியன் ஏதோ ஒரு பாத்திரத்தில். சிலதில் முக்கியமானவராக சிலதில் சாதாரணமானவராக, சிலதில் வந்து போகிறவராக. தொடர்ச்சியாக வாசிக்கையில் ஒரு நாவலாக விரியும் இப்படைப்பின் பிற்பகுதியில் இன்னொரு நுட்பம் இருக்கிறது.

சிறுகதைகளின் முடிவு குறித்து வாசகனுக்கு வேறு விதமான கருத்து இருப்பது உண்மை. இந்தச் சிறுகதைகளுக்கு ஒன்றிற்கு மேல் சாத்தியப்பட்ட முடிவுகளையும் கொடுக்கிறார். சில முடிவுகளை நம்மைக் கற்பனை செய்துகொள்ளச் செய்கிறார்.

நாவலாகப் பார்த்தால் நாவல். சிறுகதைகளாகப் பார்த்தால் சிறுகதைகள். என்றாலும் இதில் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் ஆச்சர்யமானவை. உங்களுக்குத் தேவையான சாத்தியக்கூறுகளை எடுத்துக் கொண்டு நீங்களே ஒரு நாவலைக் கட்டமைக்க முடியும்.

க்யூபிஸம் என்ற முறையில் சொல்லப்பட்ட இந்த நாவலில் வெளிப்படும் அங்கதத்தை நான் மிகவும் ரசித்தேன்.

நாவலின் தலைப்பு “அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்” ஆசிரியர் எம் ஜி சுரேஷ்.

எம்.ஜி சுரேஷ் பற்றி மேலும் அறிந்து கொள்ள.

ஆசிரியரின் மற்றொரு நாவல் சிலந்தி. பொதுவாக எழுத்தாளர் தன்மை ஒருமையில் எழுதுவார்கள் அல்லது அவன் அவள் என ஒருமையில் அழைத்து எழுதுவார்கள். இவர் ஒரு வித்தியாசமாக நீங்கள் என நம்மை அழைத்து எழுதியிருக்கும் நாவல் இது.

ஒரு வித்தியாசமான கண்ணாமுச்சி விளையாட்டு இந்நாவலைப் படிப்பது. ஆசிரியர்தான் கொலைக் குற்றம் செய்தவர். நாம் அதைக் கண்டுபிடிக்கும் துப்பறிவாளர். வழக்கமான அங்கதம் இக்கதையிலும் விரவியிருக்கிறது.

அதிலும் ஆசிரியர் சொல்லும் நீங்கள் ஒரு ஆணாக இருந்தால் அல்லது பெண்ணாக இருந்தால் என இரு சாத்தியப்பாட்டிலும் கதை பயனிக்கிறது. இந்நாவல் விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற அடிப்படையில் எழுதப்பட்ட நாவல். வாசிக்கும் நாமே வாசிக்கும் கதையில் ஒரு கதாபாத்திரமாக மாறும் விந்தை.

இவ்விரு நாவல்களையும் தேடி வாசிக்கத் தூண்டியது சாருவின் கீழ்கண்ட ஒரு பத்தி ( தாந்தேயின் சிறுகதை என்ற பதிவில் )

// எழுத்தாளர்களல்லாத எழுத்தாளர்களைக்கூட(தமிழவன், பெருமாள் முருகன், யுவன் சந்திர சேகர்) என்னால் சகித்துக் கொள்ள முடியும், ஆனால் எம் ஜி சுரேஷ் போன்ற விபத்துக்கள் தமிழ்சூழலில் மட்டுமே சாத்தியம்//

சுரேசும், யுவனும் சம்பிரதாயக் கதைசொல்லலிருந்து விலகி மொழியின் பல்வேறு பட்ட சாத்தியங்களை முயற்சித்திருக்கிறார்கள். நவீன இலக்கியத்திற்கு தன்னை விட்டால் வேறெவரும் அத்தரிட்டி இல்லை என முழங்கிவரும் சாரு இவர்களை வெறுப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் ஏன் பெருமாள் முருகன்?

ஏறு வெயில் மற்றும் கங்கணம் மாதிரியான நாவல்கள் மூலம் திருச்செங்கோட்டு வாழ்க்கை முறைகளையும் அந்த மக்களை அவர்கள் வேர்வை வீச்சத்துடனும் உழைப்பின் உவர்ப்புடனும் கண்முன்னே நடமாடவிட்டவர் பெருமாள் முருகன்.

ஒரு எழுத்தாளரை இப்படி மொத்தமாகப் புறக்கனிக்க என்ன காரணம்?

எப்படி இருந்தாலும் தேடி வாசிக்கத் தூண்டிய சாருவிற்கு நன்றி.

.

கதம்பம் – 27/05/09

சமீபத்தில் நண்பரின் இரு வயது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். குழந்தையின் எடையைக் குறித்துவரச் சொன்னார் மருத்துவர். பெற்றோர், தாதியர் அனைவரும் போராடினர் அக் குழந்தையை எடை பார்க்கும் எந்திரத்தில் நிற்கவோ, உட்காரவோ குறைந்த பட்சம் படுக்கவோ வைக்க. குழந்தையின் எதிர்ப்பின் தீவிரம் ஏறுமுகமாகவே இருந்தது.

எல்லோரையும் விலகச் சொல்லி விட்டு, முதலில் குழந்தையின் அம்மாவின் எடையைப் பார்க்கச் சொன்னேன். பின்பு, குழந்தையுடன் அவரது எடையைப் பார்க்கச் சொன்னேன். கழித்து பார்த்து குழந்தையின் எடையைத் தாதியிடம் சொன்னேன்.

நண்பன், தாதியர் உட்பட அனைவரும் நான் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டேன் என்பது போல கூச்சப்படுமளவுக்குப் புகழ்ந்து தள்ளிவிட்டனர். இதை 5 ஆம் வகுப்பிலேயே படித்திருக்கிறோம்; கணக்குப் பாடத்தில். அதெல்லாம் வாழக்கைக் கல்வி அல்ல என்பதாக ஆகிவிட்டது.

*****************************************************************************

”மூன்றாம் பாலின் முகம்” என்றொரு புத்தகம். மூன்றாம் பாலினர் உள்ளாக்கப்படும் நிராரி்த்தல், பகடி, ஏளனம், எள்ளல், வன்முறை அதனால் அவர்களடையும் வேதனை, மன உளைச்சல், தன்னம்பிக்கை இழத்தல் எல்லாவற்றையும் பேசுகிறது.

இந்தப் புத்தகத்தின் சிறப்பு, எழுதியவரே ஒரு மூன்றாம் பாலினர் – ப்ரியா பாபு.

மூன்றாம் பாலினர் உங்களிடம் வேண்டுவது காசு பணமல்ல, அவர்களின் இயலாமையைப் புரிந்து கொண்டு அவர்கள் தங்களை இயல்பாக வெளிப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு. அவர்களை அறுவெறுப்புடன் நோக்காமல், அவர்கலின் குறைபாட்டை உள்ளுணர்தல். இதை அழுத்தமாக முன் வைக்கிறது இந்த நாவல்.

பதிப்பகம் : சந்தியா பதிப்பகம், கதவு எண் 57, 53 ஆம் வீதி, அசோக் ந்கர், சென்னை – 600083. தொலை பேசி : 24896979, 65855704

விலை : ரூ. 50.00

*****************************************************************************

சிலரது வீ்டு சுத்தமாக, தூசு தும்பு ஏதுமின்றி, பளிசென்று இருக்கும். அந்த வீடுகளில் நான் மிகவும லஜ்ஜையாக உணர்வேன். ஆரம்ப காலங்களிலிருந்தே எனக்கு மிலிட்டரி டைப் சுத்தம், கட்டுப்பாடு ஏதும் ஒத்துவருவதில்லை.

சமீபத்தில் செல்வேந்திரன் அறைக்குச் சென்றிருந்தேன். ஓரிரவு தங்கவும் செய்தேன். அறை நேர்த்தியாக இல்லையே என்ற குற்றவுணர்ச்சியுடனே பேசிக் கொண்டிருந்தார் செல்வேந்திரன். பிரம்மச்சாரியின் அறை வேறெவ்வாறாக இருக்க முடியும்? என்ன சொல்லியும் சமாதானப் படுத்த முடியவில்லை. நினைவுகளின் அடியாழத்தில் புதைந்திருந்த என் ஹாஸ்டல் தினங்களைத் திருப்பித் தந்ததற்கு நன்றி சொன்னேன்.

*****************************************************************************

கவிதைகள் என்பது ஒரு வெளிப்பாடு. நீங்கள் பார்த்த, ரசித்த, உணர்ந்த ஒன்றின் ஒரு பின்னத் துணுக்கு.

சமீபத்தில் பதிவர் ஒருவருடன் மின்னரட்டையில் இருந்த போது கவிதையாக ஒரு ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டிருந்தார். அவரைக் கூப்பிட்டுப் பாராட்டினால் ”நான் எழுதுவதெல்லாம் கவிதையா? சும்மா கேலி பேசாதீர்கள்” என்றார் ஒருவேளை பகடி செய்கிறேனோ என்ற சம்சயத்துடன்.

”எனக்குப் பிடித்திருக்கிறது” என்றேன்.

உங்களுக்கும் பிடித்திருந்தால் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் blogsking@gmail.com என்ற முகவரிக்கு.

ரயில் பயணம்

எப்போதும் சுவாரஸ்யம் தான்
எதிர் திசை ஓடும் ஜல்லிக்கற்கள்
கூடவே பயணிக்கும்
பக்கத்துத் தண்டவாளம்
பச்சைக்கே தானம் தர தயாராய்
தென்னந்தோப்புகள்
கவனம் சிதறாத
சோளக்காட்டு பொம்மை
கோடையிலும்
தண்ணீர் சுமக்கும் குட்டைகள்
வானம் பார்த்த பூமிகளில்
வரிசையாய்க் கோரைப்புற்கள்
ஆங்கிலேயரை மறக்கவிடாத
கிராமத்து ரயில் நிலையங்கள்
சுவாரஸ்யமாய்
புது உலகத்தில் நான்..
“அண்ணா..”
கவனம் கலைக்கிறான்
கையேந்தி நிற்கும் சிறுவன்..

– சஞசய் காந்தி.

******************************************************************

மின்னரட்டையில் பதிவர் ஒருவர் என்னைக் குண்டன் என்றார் நான் கோபப்படுவேன் என்று. மாறாக நான் மகிழ்ந்தேன்.

குண்டர்கள் கேபினெட் மந்திரியாகப் பதவியேற்கும் போது, அதென்ன இழிச் சொல்லா? உண்மையில் அவரென்னை ஒரு மந்திரி உயரத்திற்குப் புகழ்ந்திருக்கிறார்.

******************************************************************

.

சீனி முட்டாயும், சாத்தூர் சேவும்

தொழில் தொழில்நிமித்தம் முன்கூட்டியே தீர்மானிக்கமுடியாத வாழ்க்கையில், திட்டமிடாத பயணங்களைத் தவிர்க்கவியலாதென்பது சலிப்பூட்டக்கூடியது. புதன் இரவு 8.00 மனிக்கு முடிவு செய்து 9.00 மனிக்கு பேருந்தில் ஏறும்படி ஆயிற்று. அடுத்த நாளே திரும்பவேண்டும் என்பது அசதி தரக்கூடியதென்றாலும் மாதவராஜைக் கண்டுவரலாம் என்றொரு ஆறுதலுமிருந்தது.

சென்ற வேலை நினைத்ததைவிட சீக்கிரமே முடிந்துவிட்டதால், மாதவராஜ் பணிபுரியும் வங்கிக்குச் சென்று,

“மாதவராஜ் இருக்காருங்களா”, என்றேன் புருவத்திலேயே கேள்வி கேட்ட அவரது சக ஊழியரை நோக்கி.

“அவரு இன்னைக்கு லீவு ஆச்சுங்களே”, ஏமாற்றம் என் முகத்தில் படருவதைக் கண்ட அவர் மீண்டும் கேட்டார், “ அவரு மொபைல் நம்பர் தரட்டுங்களா?”

மொபைலில் அழைத்துப் பேசியதில் அடுத்த முனையிலிருந்து வந்த மாதவராஜின் உற்சாகம் கொப்பளிக்கும் குரல், மகிழ்ச்சி தருவதாகவிருந்தது. அவர் விடுப்பு எடுத்த காரணம் அவர்மீதான மரியாதையைக் கூட்டிச் சென்றது.

ஜனவரி 30 மகாத்மா நினைவு நாளை முன்னிட்டு சாத்தூர் ரயிலடியிலிருந்து ஒரு ஊர்வலம் ஏற்பாடு செய்து மதநல்லிணக்கத்திற்கான ஒரு முயற்சியை முன்வைத்திருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கவே விடுப்பு.

வீட்டுக்கு அழைத்த அவரது அன்பைத் தட்டமுடியாமல், விடுதியைக் காலி செய்து விட்டு அவர் வீடு நோக்கி நகர்ந்தேன். “சாத்தூர் பஸ்டாண்டில் இறங்கி என்னை அழையுங்கள் 5 நிமிடத்தில் வந்து விடுவேன்” என்று சொல்லியதுபோலவே வந்தார்.

வலைப்பதிவர்களைச் சந்திக்கும்போது பரஸ்பர அறிமுகம் ஏதுமின்றி உடனடியாகப் பேசலாம்; நெருங்கிய நண்பர்கள் இருவர் முதல் நாள் விட்ட இடத்திலிருந்து அடுத்த நாளுக்கான பேச்சை ஆரம்பிப்பது போல. அவரது வீட்டிற்கு சென்று பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் காமராஜும் எங்களுடன் இணைந்து கொண்டார். எங்கள் சந்திப்பை சுருக்கமாக இப்படிக் கூறலாம்.

5.00 மணி – பஸ்டாண்டில் பேசினோம்
6.00 மணி – மாதவராஜ் வீட்டில் பேசினோம்
7.00 மணி – காமராஜ் வீட்டில் பேசினோம்
8.00 மணி – மீண்டும் மாதவராஜ் வீட்டில் பேசினோம்
9.00 மணி – போட்டோ ஸ்டுடியோவில் பேசினோம்
10.00 மணி – உணவகத்தில் பேசினோம்
10.35 மணி – பஸ்ஸில் ஏறும்வரைப் பேசினோம்.

பேசியவற்றுள் சமகால இலக்கியம், சமகால அரசியல், பதிவர்கள் பின்புலம் மற்றும் திறமைகள் போன்றவை அடங்கும்.

சந்திப்பில் கலந்துகொண்ட இன்னுமொரு சுவராஸ்யமான நண்பர் ப்ரியா கார்திக். போட்டொ ஸ்டுடியோ ஒன்று வைத்து வீடியோ எடிட்டிங்கும் செய்யும் நணபர் இவர். இவருக்கு PIT வலைப்பூ அறிமுகம் செய்து இந்தமாதம் வெற்றிபெற்ற நிலாவின் புகைப்படத்தைக் காட்டினேன். சரியான தேர்வு முதல் பரிசுக்கு என்று அவரது கருத்தைச் சொன்னார். மாலை 5 மணிக்குப் பார்த்தபோது இருந்த அதே உற்சாகத்துடன் இரவு என்னைப் பேருந்தில் ஏற்றி விடும்வரை இருந்தார்.

காமராஜும், மாதவராஜும் மௌஸும் கீ போர்டும் போல ஒத்த சிந்தனையு்ம் தனிப்பட்ட ரசனைகளயும் உடைய இணை. வெகுகாலம் நண்பர்களாக அதுவும் எழுத்தாளர்களாக இருப்பது இன்னும் விசேசம். இவரது சிறுகதைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரையும் அவரது தொகுப்பிற்கு இவர் முன்னுரையும் எழுதியிருக்கிறார்கள். இருவரும் அருகருகே அடுத்தடுத்த வீடுகளில் வாசம்.

ஒரு பை நிறைய சாத்தூர் சேவும், ஒரு பெட்டி நிறைய இனிப்பு மிட்டாயும் (முட்டாசு) குடும்பத்திற்கும், எனக்கு மாதவராஜ் எழுதிய போதி நிலா – சிறுகதைத் தொகுப்பும், காமராஜ் எழுதிய ஒரு வனதேவதையும் ரெண்டு பொன்வண்டுகளும் – சிறுகதைத் தொகுப்பும் தணுஷ்கோடி ராமசாமி எழுதிய தோழர் நாவலும் மற்றும் மாதவராஜும், காமராஜும், ப்ரியா கார்த்திக்கும் இணைந்த உருவாக்கதில் தயாரான சிறகுகள் உடையும், இது வேறு இதிகாசம் ஆகிய இரு குறும்படத் தகடுகளையும் அடைத்து என்னை வழியனுப்பி வைத்தார்கள்.

என் மீது காட்டிய இந்த அன்பிற்கு கைமாறாக கொடுக்க என்னிடம் வேறெதுவுமில்லை அன்பைத்தவிர; உங்களளவுக்கு இல்லையெனினும் ஓரளவுக்கேனும்.

கதம்பம் – 5-01-09

காமராஜர் அமைச்சரவையில், கக்கன் போலீஸ் அமைச்சராக இருந்தார். அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் தமிழகத்திற்கு வருகிறார். அவ்விழாவில் கலந்து கொள்ள கக்கனும் அங்கு வருகிறார். ரயில் நிலையத்தில் நேருவை வரவேற்பதற்காக வந்த கக்கனின் காரை ஒரு போலீஸ்காரர் நிறுத்தி விடுகிறார். ஏனென்றால் அந்தக் காரில் வழக்கமான சிவப்பு விளக்கு இல்லை. வருபவர் அமைச்சர், அதுவும் போலீஸ் அமைச்சர் என்பதந்தப் போலீஸ்காரருக்குத் தெரியாது.

“பிரதமர் வருகிறார், அதனால் காரை இதற்கு மேல் உள்ளே விட முடியாது’ என்கிறார் போலீஸ்காரர்.

உடனே,கக்கன் காரிலிருந்து இறங்கி, “அந்தப் போலீஸ்காரர் அவருடைய கடமையைத் தானே செய்கிறார்? சிவப்புச் சுழல் விளக்கு இல்லாமல் வந்தது நம்முடைய தவறு தானே?’ என்றவாறே, இரண்டு பர்லாங் தூரமுள்ள ரயில் நிலையம் நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றிருக்கிறார்.

தற்காலமாக இருந்தால்?

************************************************************

விருத்தாசலம் அரசுப் போக்குவரத்துப் பனிமனைத் தொழிலாளியான கண்மணி குனசேகரன், 1993 லிருந்து எழுதி வருகிறார்.

தலைமுறைக் கோபம் – கவிதைத் தொகுப்பு
உயிர்த்தண்ணீர் – சிறுகதைகள்
அஞ்சலை – நாவல்
ஆதண்டார் கோயில் குதிரை – சிறுகதைகள்
காற்றின் பாடல் – கவிதைகள்
வெள்ளெருக்கு – சிறுகதைகள்
கோரை – நாவல்

இவற்றில் அஞ்சலை நாவலும், கோரை நாவலும் படித்திருக்கிறேன். தற்பொழுது வெள்ளெருக்கு படித்துக் கொண்டிருக்கிறேன்.

புதிய புத்தகங்கள் வாங்கினால் அதைப் பிரித்து முகர்ந்து பார்ப்பது ஒரு பழக்கம். அந்தத் தாளின் மணம் வீசுமே அதற்காகத்தான். ஆனால் குணசேகரனின் புத்தகங்களில் அவர் வசிக்கும் பகுதியில் நடமாடும் மனிதர்களின் வியர்வை வாடையும் அந்த மண்ணிலிருந்தெழும் கார நெடியும்தான் வீசுகிறது. இவ்வளவு இயல்பான எழுத்தில் மனிதர்களை நம்முன் உலவ விட முடியுமா என வியக்கவைக்குமெழுத்து அவருடையது.

காற்று கொஞ்சம் வேகமாக அடித்தது. ஊரில் அவனைப் பார்க்கிறேன், இவனைப் பார்க்கிறேன் என மார் தட்டிக் கொண்டவர்கள், வெட்டியவர்கள், குத்தியவர்கள், மண்ணைக் கவ்வியவர்கள், மண்ணை வாரி வீசியவர்கள், வேடப்பர் கோவிலில் சீட்டு எழுதிக் கட்டியவர்கள், அடுத்தவன் மனைவிக்கு ஆப்பு வைத்தவர்கள், கிண்டல் கீநூட்டு பேசியவர்கள், நல்லவர்கள், வல்லவர்கள் என ஓயாமல் ஓடித் திரிந்தவர்கள் எரிந்தும் புதைந்தும் எதுவுமற்றுப் போன இடம் இருட்டில் ஊமையாய்க் கிடந்தது.

என்ன ஒரு வீச்சு பாருங்கள். இவரது அஞ்சலை நாவலைப் படித்தவர்கள் சொல்லுங்கள் கருவாச்சி காவியத்திற்கு எந்த விதத்தில் குறைந்தது என்று. பிரபல வெளிச்சம் பாயத வெகு சில நல்ல எழுத்தாளர்களுள் இவருமொருவர்.

*************************************************************

பத்திரமாக இருக்கிறர் எனது கடவுள்
பக்தர்களின் தொந்தரவு ஏதுமின்றி
எந்தக் கருவறைக்குள்ளும்
அவரைச் சிறைவைக்கவில்லை நான்
இங்கே என்னோடுதான் வசிக்கிறார்
தற்சமயம் திண்ணையில்உட்கார்ந்துகொண்டு
காப்பி குடித்துக் கொண்டிருக்கிறார்
மாடு மயில் வாகனங்கள் ஏதுமின்றி
நிராயுதபாணியாக
என்னைப்போல சட்டை போட்டுக் கொண்டு
என்னோடு இருக்கிறார்
தூப தீபங்களால்
மூச்சுத் திணறவைப்பதில்லை நான்
அவர் பாட்டுக்கு வருகிறார் , போகிறார்
குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார்
கொடுத்ததைச் சாப்பிடுகிறார்
அதிசயமோ அற்புதமோ நிகழ்த்தாமல்
சமர்த்தாக இருக்கிறார்
என் கடவுள்

– தஞ்சாவூர்க் கவிராயர் – எழுத்துக்காரத் தெரு கவிதைத் தொகுப்பிலிருந்து.

*****************************************************************

ஏங்க.. என்னுடைய சமையல் நல்லா இருக்கா? தினம் இதேமாதிரி சமைச்சா எனக்கு என்ன கிடைக்கும்?

என்னோட இன்சூரன்ஸ் பணம்.

******************************************************************

இந்த வாரம் வலைச்சரத்துல ஆசிரியரா இருக்கேன். முடிஞ்சா அங்கேயும் வந்து உங்க கருத்துக்களச் சொல்லுங்க மக்கா.

கதம்பம் 15/12/08

ஒரு முறை ராஜாஜியின் மாளிகையில் தங்கினார் காந்தி. அவர் தங்கியிருந்த அறையில் சத்தியமூர்த்தி, ராஜாஜி ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று உள்ளே நுழைந்தார் பாரதியார். காந்தியை வணங்கி விட்டு அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.

“மிஸ்டர் காந்தி! இன்று மாலை 5.30 மணிக்குத் திருவல்லிக் கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் நான் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?’ என்று காந்தியைக் கேட்டார் பாரதியார். அந்த நேரத்தில் மற்றோர் இடத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலையால், “கூட்டத்தை மறுநாளைக்கு ஒத்தி வைக்க முடியுமா?’ என்று திருப்பிக் கேட்டார் காந்தி.

“ஒத்தி வைக்க முடியாது; நான் போய் வருகிறேன்! தாங்கள் துவங்கப் போகும் இயக்கத்தை நான் வாழ்த்துகிறேன்!’ என்று போய்விட்டார் பாரதியார்.

பாரதி வெளியேறியதும், “யார் இவர்?’ என்று கேட்டார் காந்தி. அவர், “எங்கள் தமிழ் நாட்டுக் கவி!’ என்று சொன்னார் ராஜாஜி. “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும், இதற்குத் தமிழகத்தில் ஒருவரும் இல்லையா?’ என்றார் காந்தி.
(நன்றி : தினமலர்)

பாதுகாக்க ஆளில்லாவிட்டாலும் நினைத்துப்பார்க்கக்கூட ஆளில்லதவராக ஆகிவிட்டார். டிசம்பர் 11 ஐக் கண்டுகொள்ளாத மீடியாக்கள் டிசம்பர் 12 ஐக் கோலாகலமாகக் கொண்டாடினர். இலக்கியத்தைத் தன் தோள்களில் தாங்கி வளரும் சமுதாயமே முன்னேறும்.

***************************************************

பூமணியின் வெக்கை நாவல், அண்ணனைக் கொன்றவனைப் பழிவாங்கும் சாதாரணக் கதைதான். ஆனால் எழுதப்பட்ட விதத்தில் சிறந்த படைப்பாக ஆகியிருக்கிறது.

15 வயதே ஆன செலம்பரம்(சிதம்பரம்) அண்ணனைக் கொன்றவனின் கையெடுக்கும் முயற்சியில் தோற்று ஆளையே கொன்று விடுகிறான். அவனறியாமல் அவனுக்கு உதவி செய்ய வரும் அப்பாவும் அவனும் அதன்பின் காட்டுக்குள் மறைந்து வாழ்வதும், அந்தச் சம்பவத்தை செய்யத் தூண்டிய காரணமும் அதனிடையே அவர்களது வாழ்க்கையுமென நாவல் பரந்து விரிகிறது.

ஒரு குடும்பமும் அதன் உறவின்முறைகளும் மட்டுமல்லாது அந்தக் கிராமமே அவர்களுக்கு உதவுவதும் அரசாங்க நிறுவனம் பணம்படைத்தவர்களின் கைக்கூலியாகச் செயல்படுவதும் மிகச் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

ஏதோ பழிக்குபழி வாங்கினான் என்று மலினமாகியிருக்கக்கூடிய ஒரு சம்பவதைப் பிரியத்துகுரியதாக நாவல் ஆக்க முனைந்துள்ளது. வன்முறையை உள்ளடக்கிய வாழ்க்கையில் வர்க்க நலன்கள் மோதுகிற சூழலில் உழைக்கும் வர்க்கத்தின் குடும்ப உறவுகள் மிக இனிமையான மனிதச் சூழல்கள் ஆகிய ஒரு உலகிற்குள் சஞ்சரிக்கிறார் பூமணி” ராஜ் கெளதமன் (சிலுவை ராஜ் சரித்திரம் – நாவலாசிரியர்)

இது போன்ற யதார்த்த நாவல்கள் அதிகக் கவனம் பெறாமல்போவதும், பிற நாவல்கள் விளம்பரப்படுத்தல் மூலமும் , சந்தைப்படுத்தல் மூலமும் உலக உயரத்தில் என புகழப்படுவது தமிழிலக்கிய உலகின் ஒரு நகைமுரண்.

****************************************************************

”இரட்டைக் குழந்தைகளோட அச்சன் “ என்றொரு மலையாளப் படம் பார்த்தேன். 90 களின் ஆரம்பத்தில் வந்த படம். சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் ஸ்ரீனிவாசன் கதை திரைக்கதை எழுதியது.

நான்காவது பிரசவத்திலும் இறந்து பிறந்த குழந்தையுடன் போராடும் தந்தைக்கு ஆறுதலளிக்க தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளிலொன்றைக் கொடுக்கிறார் ஜெயராம்; மனைவிக்குத் தெரியாமல்,அரைமனதுடன்.

பிறிதொரு நாளில் தாங்க முடியாத மன அழுத்தத்தில் அதைச் சொல்லிவிட நேர்கிறது மனைவியிடம். அதன் பின்னெழும் உக்கிரகரமான சம்பவங்களும் மனநிலைகளில் ஏற்படும் மாற்றமுமாக நகர்கிறது படம். கொஞ்சம் அதிகமாகி இருந்தாலும் தற்கால மெகாத்தொடர் போல ஆகியிருக்கும் அபாயமுள்ள கதையை தேர்ந்த திரைக்கதை முலம் சுவராஸ்யமாக்கியிருக்கிறார் ஸ்ரீனிவாசன்.

தமிழில் இதுபோல ஒரு பிரச்சினையை மையமாக வைத்து படங்கள் எடுக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ தெரியவில்லை.

மலையாளக் திரையுலகிற்கும் தமிழ்த் திரையுலகிற்கும் இருக்கும் ஒரு வித்தியாசமே அதற்குத் தடைக்கல். அங்கே கதை நடிகர்களைத் தீர்மானிக்கிறது. ஆனால் இங்கே நடிகர்கள்தான் கதையைத் தீர்மானிக்கிறார்கள். இந்த வரையறைக்கு வெளியே தயாரிக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற்றது கண்கூடு.

*************************************************************

தெயவம் மனிதனாய் ஜனித்தால்
ஜீவிதம் அனுபவிச்சறிஞ்சால்
திருச்சி போகுமுன்னே
தெய்வம் பறயும்
மனிதா நீதான்
எண்ட தெய்வம்.

(திருச்சி – திரும்பி)

இது சமீபத்தில் இரு மலையாளிகள் பேசிக்கொண்டிருந்தபோது கேட்ட கவிதை வரிகள். மூலத்தில் எழுதியவர் யார்? தமிழ்ப் படுத்தப் பட்டிருக்கிறதா? எனில் என்ன அப்புத்தகத்தின் பெயர்? யாராவது உதவமுடியுமா?

இனி இந்தவாரக் கவிதை.

பயனிகள் கவனிக்கவும்

ஒரு ரயில் நிறுத்தம்
கண்டிப்பாக ஐந்து நிமிடம்
நின்று கிளம்பி விடும்
நூறு ரூபாய் கொடுத்து
நான்கு சமோசாவும் இரண்டு டீயும்
ஒரு கை கேட்கிறது

கேட்டதை கொடுத்து மீதி சில்லறையும்
கொடுக்கிறார் மறக்காமல்

இட்லி பொட்டலமும் சாம்பார் பாக்கெட்டும்
கொஞ்சம் கெட்டி சட்னியும் கூட
கேட்ட இன்னொருக் கைக்கு கொடுக்கிறார்

அடுத்த ஸ்டேஷனில் நிற்காது
தீர விசாரித்து ஒரு கை
பத்து ரூபாயும் அறுபது காசுகளும்
எண்ணிப்பார்த்து கொடுத்து
வாங்கி கொள்கிறது

சில கைகள் ஏதோ வாங்கிக்
கொண்டு பதிலுக்கு கிழிந்த நோட்டுக்கள்
உடைந்த நாணயங்கள்

தயிர் சாதத்திற்கு பதிலாக லெமன் ரைஸ்
மாற்றிக்கொள்கிறது ஒரு கை
அந்த கைக்கு கூட்டி கழித்து
கூட குறைய இல்லாமல்
கொடுக்கிறார் துல்லியமான சில்லறை

இதை அந்த குப்பை தொட்டியில் போடு
என்று சொன்ன – ஒரு
சிறுமி கைக்கு பணிகிறார்

ஊசிப்போச்சு என்று பாதி
சாப்பிட்டுவிட்டு மீதியை நீட்டுகிறது
முகத்தில் பருக்கைகளுடன் ஒரு கை

வண்டியின் கூடவே ஒடி
உள்ளே போய் அந்த கையைப் பார்த்து
கொடுத்து விட்டு பிளாட்பாரத்தின்
கடைசி சிமெண்ட் சதுர நுனியில்
உயிர்பிடித்து இறங்கும் அவர்
சட்டக் கல்லூரி வாசலில்
ஆயுதம் தாங்கிய கைகள்
ஏதோவொன்றின் அப்பாவாக
இருக்கலாம்

ரவிஷங்கர் உயிரோசையில் வெளியான கவிதை

***********************************************************

ஓரு மலையாளியிடம் கடன் வாங்கியவர் பட்ட அனுபவம் இது.

கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார் மலையாள அன்பர். நாளை காலையில் தருகிறேன் என்பார். காலையில் வந்தால் மாலையில் தருகிறேன் என்பார். இப்படியாகக் காலை மாலை என மாற்றி மாற்றி அவரை அலைகழித்திருக்கிறார் இவர்.

வெறுத்துப் போன மலையாள அன்பர் சொன்னார், “ சாரே இது சரியில்ல கேட்டோ? ராவிலே ஒரு சம்சாரம், ராத்திரிக்கு ஒரு சம்சாரம்.”

திட்டிவிடு அவர் போன பின் இவர் அவர் தங்கமணியிடம் நாய் பட்டபாடு பட்டார்.

மலையாளத்தில் சம்சாரம் என்றால் பேச்சு என்றும் ராவிலே என்றால் காலையில் என்றும் அர்த்தம் சொல்லி அவர் தங்கமணிக்கு விளங்க வைத்தார்கள்.

சம்சாரம்னாலே பேசீட்டே இருப்பாங்கன்னுதான் மலையாளத்துல அப்படி வச்சுட்டாங்களோ?

கதம்பம் 15/12/08

ஒரு முறை ராஜாஜியின் மாளிகையில் தங்கினார் காந்தி. அவர் தங்கியிருந்த அறையில் சத்தியமூர்த்தி, ராஜாஜி ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று உள்ளே நுழைந்தார் பாரதியார். காந்தியை வணங்கி விட்டு அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.

“மிஸ்டர் காந்தி! இன்று மாலை 5.30 மணிக்குத் திருவல்லிக் கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் நான் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?’ என்று காந்தியைக் கேட்டார் பாரதியார். அந்த நேரத்தில் மற்றோர் இடத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலையால், “கூட்டத்தை மறுநாளைக்கு ஒத்தி வைக்க முடியுமா?’ என்று திருப்பிக் கேட்டார் காந்தி.

“ஒத்தி வைக்க முடியாது; நான் போய் வருகிறேன்! தாங்கள் துவங்கப் போகும் இயக்கத்தை நான் வாழ்த்துகிறேன்!’ என்று போய்விட்டார் பாரதியார்.

பாரதி வெளியேறியதும், “யார் இவர்?’ என்று கேட்டார் காந்தி. அவர், “எங்கள் தமிழ் நாட்டுக் கவி!’ என்று சொன்னார் ராஜாஜி. “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும், இதற்குத் தமிழகத்தில் ஒருவரும் இல்லையா?’ என்றார் காந்தி.
(நன்றி : தினமலர்)

பாதுகாக்க ஆளில்லாவிட்டாலும் நினைத்துப்பார்க்கக்கூட ஆளில்லதவராக ஆகிவிட்டார். டிசம்பர் 11 ஐக் கண்டுகொள்ளாத மீடியாக்கள் டிசம்பர் 12 ஐக் கோலாகலமாகக் கொண்டாடினர். இலக்கியத்தைத் தன் தோள்களில் தாங்கி வளரும் சமுதாயமே முன்னேறும்.

***************************************************

பூமணியின் வெக்கை நாவல், அண்ணனைக் கொன்றவனைப் பழிவாங்கும் சாதாரணக் கதைதான். ஆனால் எழுதப்பட்ட விதத்தில் சிறந்த படைப்பாக ஆகியிருக்கிறது.

15 வயதே ஆன செலம்பரம்(சிதம்பரம்) அண்ணனைக் கொன்றவனின் கையெடுக்கும் முயற்சியில் தோற்று ஆளையே கொன்று விடுகிறான். அவனறியாமல் அவனுக்கு உதவி செய்ய வரும் அப்பாவும் அவனும் அதன்பின் காட்டுக்குள் மறைந்து வாழ்வதும், அந்தச் சம்பவத்தை செய்யத் தூண்டிய காரணமும் அதனிடையே அவர்களது வாழ்க்கையுமென நாவல் பரந்து விரிகிறது.

ஒரு குடும்பமும் அதன் உறவின்முறைகளும் மட்டுமல்லாது அந்தக் கிராமமே அவர்களுக்கு உதவுவதும் அரசாங்க நிறுவனம் பணம்படைத்தவர்களின் கைக்கூலியாகச் செயல்படுவதும் மிகச் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

ஏதோ பழிக்குபழி வாங்கினான் என்று மலினமாகியிருக்கக்கூடிய ஒரு சம்பவதைப் பிரியத்துகுரியதாக நாவல் ஆக்க முனைந்துள்ளது. வன்முறையை உள்ளடக்கிய வாழ்க்கையில் வர்க்க நலன்கள் மோதுகிற சூழலில் உழைக்கும் வர்க்கத்தின் குடும்ப உறவுகள் மிக இனிமையான மனிதச் சூழல்கள் ஆகிய ஒரு உலகிற்குள் சஞ்சரிக்கிறார் பூமணி” ராஜ் கெளதமன் (சிலுவை ராஜ் சரித்திரம் – நாவலாசிரியர்)

இது போன்ற யதார்த்த நாவல்கள் அதிகக் கவனம் பெறாமல்போவதும், பிற நாவல்கள் விளம்பரப்படுத்தல் மூலமும் , சந்தைப்படுத்தல் மூலமும் உலக உயரத்தில் என புகழப்படுவது தமிழிலக்கிய உலகின் ஒரு நகைமுரண்.

****************************************************************

”இரட்டைக் குழந்தைகளோட அச்சன் “ என்றொரு மலையாளப் படம் பார்த்தேன். 90 களின் ஆரம்பத்தில் வந்த படம். சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் ஸ்ரீனிவாசன் கதை திரைக்கதை எழுதியது.

நான்காவது பிரசவத்திலும் இறந்து பிறந்த குழந்தையுடன் போராடும் தந்தைக்கு ஆறுதலளிக்க தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளிலொன்றைக் கொடுக்கிறார் ஜெயராம்; மனைவிக்குத் தெரியாமல்,அரைமனதுடன்.

பிறிதொரு நாளில் தாங்க முடியாத மன அழுத்தத்தில் அதைச் சொல்லிவிட நேர்கிறது மனைவியிடம். அதன் பின்னெழும் உக்கிரகரமான சம்பவங்களும் மனநிலைகளில் ஏற்படும் மாற்றமுமாக நகர்கிறது படம். கொஞ்சம் அதிகமாகி இருந்தாலும் தற்கால மெகாத்தொடர் போல ஆகியிருக்கும் அபாயமுள்ள கதையை தேர்ந்த திரைக்கதை முலம் சுவராஸ்யமாக்கியிருக்கிறார் ஸ்ரீனிவாசன்.

தமிழில் இதுபோல ஒரு பிரச்சினையை மையமாக வைத்து படங்கள் எடுக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ தெரியவில்லை.

மலையாளக் திரையுலகிற்கும் தமிழ்த் திரையுலகிற்கும் இருக்கும் ஒரு வித்தியாசமே அதற்குத் தடைக்கல். அங்கே கதை நடிகர்களைத் தீர்மானிக்கிறது. ஆனால் இங்கே நடிகர்கள்தான் கதையைத் தீர்மானிக்கிறார்கள். இந்த வரையறைக்கு வெளியே தயாரிக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற்றது கண்கூடு.

*************************************************************

தெயவம் மனிதனாய் ஜனித்தால்
ஜீவிதம் அனுபவிச்சறிஞ்சால்
திருச்சி போகுமுன்னே
தெய்வம் பறயும்
மனிதா நீதான்
எண்ட தெய்வம்.

(திருச்சி – திரும்பி)

இது சமீபத்தில் இரு மலையாளிகள் பேசிக்கொண்டிருந்தபோது கேட்ட கவிதை வரிகள். மூலத்தில் எழுதியவர் யார்? தமிழ்ப் படுத்தப் பட்டிருக்கிறதா? எனில் என்ன அப்புத்தகத்தின் பெயர்? யாராவது உதவமுடியுமா?

இனி இந்தவாரக் கவிதை.

பயனிகள் கவனிக்கவும்

ஒரு ரயில் நிறுத்தம்
கண்டிப்பாக ஐந்து நிமிடம்
நின்று கிளம்பி விடும்
நூறு ரூபாய் கொடுத்து
நான்கு சமோசாவும் இரண்டு டீயும்
ஒரு கை கேட்கிறது

கேட்டதை கொடுத்து மீதி சில்லறையும்
கொடுக்கிறார் மறக்காமல்

இட்லி பொட்டலமும் சாம்பார் பாக்கெட்டும்
கொஞ்சம் கெட்டி சட்னியும் கூட
கேட்ட இன்னொருக் கைக்கு கொடுக்கிறார்

அடுத்த ஸ்டேஷனில் நிற்காது
தீர விசாரித்து ஒரு கை
பத்து ரூபாயும் அறுபது காசுகளும்
எண்ணிப்பார்த்து கொடுத்து
வாங்கி கொள்கிறது

சில கைகள் ஏதோ வாங்கிக்
கொண்டு பதிலுக்கு கிழிந்த நோட்டுக்கள்
உடைந்த நாணயங்கள்

தயிர் சாதத்திற்கு பதிலாக லெமன் ரைஸ்
மாற்றிக்கொள்கிறது ஒரு கை
அந்த கைக்கு கூட்டி கழித்து
கூட குறைய இல்லாமல்
கொடுக்கிறார் துல்லியமான சில்லறை

இதை அந்த குப்பை தொட்டியில் போடு
என்று சொன்ன – ஒரு
சிறுமி கைக்கு பணிகிறார்

ஊசிப்போச்சு என்று பாதி
சாப்பிட்டுவிட்டு மீதியை நீட்டுகிறது
முகத்தில் பருக்கைகளுடன் ஒரு கை

வண்டியின் கூடவே ஒடி
உள்ளே போய் அந்த கையைப் பார்த்து
கொடுத்து விட்டு பிளாட்பாரத்தின்
கடைசி சிமெண்ட் சதுர நுனியில்
உயிர்பிடித்து இறங்கும் அவர்
சட்டக் கல்லூரி வாசலில்
ஆயுதம் தாங்கிய கைகள்
ஏதோவொன்றின் அப்பாவாக
இருக்கலாம்

ரவிஷங்கர் உயிரோசையில் வெளியான கவிதை

***********************************************************

ஓரு மலையாளியிடம் கடன் வாங்கியவர் பட்ட அனுபவம் இது.

கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார் மலையாள அன்பர். நாளை காலையில் தருகிறேன் என்பார். காலையில் வந்தால் மாலையில் தருகிறேன் என்பார். இப்படியாகக் காலை மாலை என மாற்றி மாற்றி அவரை அலைகழித்திருக்கிறார் இவர்.

வெறுத்துப் போன மலையாள அன்பர் சொன்னார், “ சாரே இது சரியில்ல கேட்டோ? ராவிலே ஒரு சம்சாரம், ராத்திரிக்கு ஒரு சம்சாரம்.”

திட்டிவிடு அவர் போன பின் இவர் அவர் தங்கமணியிடம் நாய் பட்டபாடு பட்டார்.

மலையாளத்தில் சம்சாரம் என்றால் பேச்சு என்றும் ராவிலே என்றால் காலையில் என்றும் அர்த்தம் சொல்லி அவர் தங்கமணிக்கு விளங்க வைத்தார்கள்.

சம்சாரம்னாலே பேசீட்டே இருப்பாங்கன்னுதான் மலையாளத்துல அப்படி வச்சுட்டாங்களோ?

கதம்பம் – 1-12-08

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் ஒரு முறை ரயிலில் பயனம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் எதிரில் அமர்ந்து இருந்த பெண், அவரிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் அவரை மயக்க முயற்சித்தாள். சிறி்தும் லட்சியம் செய்யாமால் படித்துக் கொண்டிருந்தார் தாஸ்.

பொறுமையிழந்த அப்பெண், “இந்தக் கூபேல் நாம ரெண்டு பேர்தான் இருக்கோம். நான் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தப் போறேன். கார்டு வந்தா நீ என்னிடம் தவறாக நடக்கப் பாத்தேன்னு சொல்லுவேன். இதெல்லாம் செய்யாம சும்மா இருக்கனும்னா எனக்குப் பணம் கொடு ” என்று மிரட்டினாள்.

தாஸ் அவளை நிமிர்ந்து பார்த்து தனக்கு காது கேட்காது, வாயும் பேசவராது எனவே அவள் சொல்வதை எழுதித் தரவேண்டுமென சைகையில் கேட்டார். அவளும் உடனே அவரிடமிருந்தே பேப்பரும் பேனாவும் வாங்கி சொன்னதை அப்படியே எழுதிக் கொடுத்தாள்.

எழுதியதை வாங்கிக் கொண்ட தாஸ் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தார். கார்டு வந்ததும் அவரிடம் விபரம் சொல்லி அப்பெண்மணியை ஒப்படைத்தார்.

பாவம் அந்தப் பெண்ணுக்கு தாஸ் ஒரு வழக்கறிஞர் என்பது தெரியாது.

****************************************************************

நேற்று வாரணம் ஆயிரம் படம் பார்த்தேன். எனக்குப் பிடிச்சது. கௌதம் மேனோன் படங்களில் காட்சிப்படுத்துதல் ஒரு அழகியல் சார்ந்து இருக்கும். இப்படமும் அவ்வாறே.

அப்பாவுக்கு அஞ்சலிப் படமா, காதல் படமா அல்லது ஆக்சன் படமான்னு ஒரு தெளிவில்லாம இருப்பதுதான் குறை. டெல்லி எபிசோட் இல்லாமலே படம் நன்றாகத்தான் இருந்திருக்கும்.

சமீரா ரெட்டி தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். சூர்யா தன் காதலை சொல்லும் சமயங்களில் (ரயில், வீடு) அதை மறுதலிக்கும் போது இயல்பாகச் செய்திருக்கிறார்.

படத்தின் மிகப் பெரிய குறை ஹாரிஸின் ரீ ரிக்கர்டிங். கடைசி 15 நிமிடங்கள் மிக அபத்தம். சூர்யாவும் அப்பா சூர்யாவும் பேசும் வசனங்களைக் கேட்கவிடாமல் செய்ததோடு ஒரு சங்கு ஊதுகிறார். கொடுமை. பாடலுக்கு ஹாரிஸ் ரீ ரிக்கு வேறு ஒருவர் என்றால் சரியாக இருக்குமோ என்னவோ. சில படங்களில் இளைய ராஜாவின் பின்னனி இசையே படத்திற்கு பலமாக இருக்கும்.

சிலர் இந்தப் படத்தையும் தவமாய்த் தவமிருந்து படத்தையும் ஒப்பிட்டிருந்தனர். இரண்டும் வேறு வேறு தளங்கள். சேரனோடது இடியாப்பம், தேங்காய் பால். மேனனோடது நூடுல்ஸ் சாஸ்.

****************************************************************

வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவல் உங்களுக்குப் பிடித்திருந்தால் ஜே டி க்ரூஸ் எழுதிய “ஆழி சூழ் உலகு” படித்துப் பாருங்கள்.

கடல்புரத்தில் ஒரு குடும்பதில் ஒரு தலைமுறயில் நிகழும் சம்பவங்களைக் கோர்த்தது. ஆழி சூழ் உலகு மூன்று தலை முறைக் கதை. இரு குழுக்களுக்கிடயே இருக்கும் தொழில் போட்டி, விரோதம், குரோதம், கோபம், தவறாகப் புரிந்து கொள்ளுதல், பொய்ப்பஞ்சாயத்து என அது வேறு விதமானது.

நுணுக்கமான பல சித்தரிப்புகளையும், விஸ்தாரமான விவரனைகளும் கொண்டது. ஒரு முழுமையான வாசிப்பனுபவத்துக்கு உத்திரவாதம் இந்நாவல்.

****************************************************************

பொதுவா ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு தனி எழுத்து நடைஇருக்கும், எழுத்தாளர்களுக்கு இருப்பது போல. அதே போல நம்ம கூடப் பழகுறவங்க, நம்மைச் சுற்றி உள்ளவங்க சிலர் ஒரே வார்த்தையைத் திரும்ப திரும்பச் சொல்லுவாங்க. அது அவங்களுக்கே உரியதாகவும் அவங்களுக்கு ஒரு அடையாளத்தைத் தருவதாகவும் இருக்கும்.

இந்த அடையாளத்தை கூர்மையாக் கவனிச்சு அதையும் ஒரு கவிதையாக்கியிருக்காரு பாருங்க கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன் என்கிற சி.கல்யாணசுந்தரம்.

”ஒரே சிக்கலாப் போச்சு”
என்பார் அய்யனார்
ஆறுமுகத்துடன் பேசும்போது
அடிக்கடி “நெருக்கடி” வந்தது
குமாரசாமி தன்பேச்சை
எப்போதும் “என்ன” என்று முடிப்பார்
“சரியா” என்று ஒப்புதல் கேட்பது
சங்கரியம்மா
சா.கந்தசாமியின் கதாபாத்திரங்கள்
“இது நன்றாக இருக்கிறது”
என்று சொல்கின்றன வெவேறு இடங்களில்
அவரவர் உலகம்
அவரவர் சொற்களில்
என் உலகம் எது என
நீங்கள் சொன்னால்
ரெம்பவும் “நல்லது”

– அந்நியமற்ற நதி தொகுப்பிலிருந்து

***************************************************

ரெண்டு பேரு டீ சாபிடலாம்னு ஒரு கடைக்குச் போறாங்க. டீ வழக்கமான நிறத்தில் இல்லாமல் கறுப்பாக இருக்குது.

நண்பர்களில் ஒருவன் கேட்டன் “ஏங்க பாலே ஊத்தலியா?”
மற்றவன் சொன்னான், ”கடை போர்ட பாக்கலியா நீ?”

வெளியே வந்து போர்டப் பார்த்தா “பாலக்காட்டார் கடை” .