Month: October 2008

கதம்பம் – 29/10/08

தோழர் ஜீவா குடியிருந்த வீட்டிற்கருகே உள்ள பள்ளியின் ஆண்டு விழாவிற்கு முதல்வர் காமராஜார் வருகை தந்தார்; உடன் அன்றைய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் திரவியம். இருவரும் பள்ளிக்கு வரும் வழியில் ஜீவாவையும் அழைத்துச் செல்ல எண்ணி அவரது குடிசை வீட்டிற்கு சென்றனர்.

”ஜீவா, பள்ளி ஆண்டு விழாவிற்கு வருகிறீர்களா?” என்றபடியே உள்ளே நுழைந்தார் காமராஜர்.

”நான் வர வேண்டுமென்றால் ஒரு 15 நிமிடம் நீங்கள் காத்திருக்க வேண்டும் ” என்று குரல் கொடுத்தார் ஜீவா, உள்ளே ஈர வேட்டியை உலர்த்தியபடி நின்று கொண்டு.

மாற்று வேட்டி கூட இல்லாமல், துவைத்த கதர் ஆடை காயும் வரை இடுப்பில் துண்டு கட்டிய நிலையில் நின்ற ஜீவாவைப் பார்த்து காமராஜர் திகைத்துப் போனார்.

”ஜீவா, எவ்வளவு நாளைக்கு இதே குடிசையில் இருப்பது?” என்று கேட்டார்.

”மக்களெல்லாம் மாடி வீட்டில் வாழ்கிற போது, நானும் மாடி வீட்டில் வாழ்வேன்” என்று பதில் கூறினார் ஜீவா.

கோடிக்கணக்கில் தன் பெயரிலும், குடும்பத்தாரின் பெயரிலும் போதாதற்கு பினாமிகள் பெயர்களிலும் சொத்து சேர்க்கும் இன்றைய அரசியல்வாதிகளின் தீராப் பேராசையை எண்ணிப் பார்த்தேன்.

**********************************************************

சமீபத்துல படிச்ச செய்தி ஒன்னு.

இரு பெண்குழந்தைகளுடன் இருக்கும் ஒரு விதவையை ஒருவர் திருமணம் செய்து கொள்கிறார். அந்த இரு பெண்களையும் நல்ல முறையில் படிக்க வைக்கிறார். பெரிய பெண் MBA சின்னப் பெண் BBA. எல்லாப் பருவப் பெண்கள் போலவும் இவர்களும் காதல் வயப் படுகிறார்கள். காதலர்களில் ஒருவர் மாணவர்; மற்றவர் கல்லூரி ஆசிரியர்.

காதலர்களுடன் ஆலோசனை செய்து அப்பாவிடமிருந்து பணம் பறிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். அதன்படி நால்வரும் சென்னை சென்று அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்து தங்குகிறார்கள். பெண்கள் இருவரையும் கை, கால்களைக் கட்டி வாயில் பிளாஸ்திரி ஒட்டி போட்டோ எடுத்து அப்பாவுக்கு அனுப்புகிறார்கள். போட்டோ அவர் கைக்குக் கிடைத்ததும் மொபைலில் அழைத்து மகள்கள் உயிருடன் வேண்டும் என்றால் ஒரு கோடி ரூபாய் பணம் வேண்டும் என்று சொல்கிறார்கள்.அப்பா அதைப் போலீ்சுக்குத் தெரிவிக்க போலீஸ் மொபைல் எண்ணை வைத்து காதலர்களப் பிடித்துப் பெண்களை விடுவிக்கிறார்கள்.

பெண்கள் இருவரும் தந்தைக்கெதிராக இம்மாதிரி நடவடிக்கையில் ஈடுபடக் காரணம் அவர் வளர்ப்புத் தந்தைதான் என்பது சமீபத்தில் தெரியவந்ததுதானாம்.

சினிமாவில் வருவது போல நடந்த இந்தச் சம்பவத்தில் அடிப்படையாகச் சில கேள்விகள்.

1. அந்தப் பெண்ணுக்கு வாழ்வு கொடுத்தது அவர் செய்த தவறா?
2. இரு மகள்களையும் படிக்க வைத்தது தவறா?
3. என்னதான் வளர்ப்புத்தந்தை என்றாலும் இத்தனை வருடங்கள் தங்களை ஆளாக்கிப் படிக்க வைத்தவர் என்ற நன்றிக் கடன் கூட இல்லையா?
4. இரு பெண்களைக் காதலித்தவர்களுக்கு கூடவா அடிப்படை மனிதாபிமானம் இல்லமல் போய் விட்டது.
5. இது காதலா? இல்லைக் காமமா?
6. திரும்பி வந்தபின் அந்தத் தாயின் மனநிலை எவ்வாறு இருக்கும்.
7. இனிமேல் அந்தத் தந்தையின் மனநிலை சீக்கிரமா வந்த வரனுக்குத் தள்ளிவிடுவதாகத்தானே இருக்கும்.
8. அதன்பிறகு இந்தத் தம்பதிகள் இருவரும் தனியே இருக்கும் வாழ்க்கையில் இந்தக் கரும்புள்ளி ஒரு மாறா வடுவாக இருந்து கொண்டேயிருக்குமல்லவா?

இவ்வாறு வாழ்வின் மீதான நம்பிக்கைகள் அற்றுப்போய் வெறுப்பு வழியும் தருணங்களில், மங்கை அவர்களின் பதிவில் வரும் இந்தச் சிறுமி போன்றவர்கள்தான் ஒரு பிடிப்பையும் முன்னெடுத்துச் செல்லும் தைரியத்தையும் வழங்கிக்கொண்டேயிருக்கிறார்கள்.

*************************************************************

என் சின்ன மகள்(7 ஆம் வகுப்பு) சைக்கிளில்தான் பள்ளிசெல்கிறாள். மழை பெய்யும் சமயங்களில் காரில் அழைத்துச் செல்லும்படி வாய்க்கும். அவ்வாறான ஒரு மழைநாளில் இவ்வாறு தோன்றியது.

கையசைத்துச் செல்பவளின்
பின்முதுகுப் பள்ளிப் பை
கிளர்ந்தெடுக்கிறது
மஞ்சள் பையில் பொதிந்த
என் பால்யத்தையும்
துருவேறிய சைக்கிளின்
மீதமர்ந்து ஒற்றைக் காலூன்றிக்
கை அசைத்துச் சென்ற
அப்பாவின் ஞாபகத்தையும்.

****************************************************************

ஒரு முறை தர்மர் எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொண்டிருந்தபோது ஒருவன் யாசகம் கேட்டு வந்தான். சட்டென இடது கையில் இருந்த தங்கக் கிண்ணத்தை அந்தக் கையாலே வழங்கினார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுணன் இது தவறில்லையா என்று கேட்டான். அதற்குத் தர்மர் சொன்னார்,” இடது கையிலிருப்பதை வலது கைக்கு மாற்றுவதறகுள் மனசு மாறிவிடக் கூடாதில்லையா அதற்காகத்தான்” என்றார்.

இதைக் கருவாக வைத்து ஜோதிர்லதா கிரிஜா ஒருகதை எழுதிருக்கிறர்கள்.

காலை தினசரியில் இருதய அறுவை சிகிச்சைக்காக வந்த விளம்பரம் ஒன்றைப் பார்க்கும் தம்பதிகள் தங்களுக்குஎதிர்பாரமல் கிடைத்த 1000 ரூபாயைக் கொடுத்து விடலாம் என முடிவு செய்வார்கள். பின்னர் தினவாழ்வின் தேவைகளின் பாதிப்பில் படிப்படியாகக் குறைந்து அது எப்படி 50 ரூபாயாக ஆகிறது என்பதாக இருக்கும்.

நீங்களும் இது போல உணர்ந்திருகிறீர்களா?

*****************************************************************

”தமிழகத்தை ஆளத் தேவையான திறமையும் தகுதியும் என்னிடம் உள்ளது. மக்களின் விருப்பம் அதுவானா அதை நான் ஏத்துக்கத் தயாரா இருக்கேன்”

சொன்னது யார்?

1. விஜயகாந்த்
2. சரத் குமார்
3. ராஜேந்தர்
4. கார்த்திக்

.

கொஞ்சம் கவிதை

கவிதைகள் எனக்கு அறிமுகமானது +2 படிக்கும் போதுதான். அதுவரை நாவல் சிறுகதை என்று வாசித்துக் கொண்டிருந்தவன் கவிதைகள் பக்கம் திரும்பியது நண்பன் நாகராஜன் மூலம்தான்.

அப்பாவுடன் இலக்கிய மன்றக் கூட்டங்களுக்குப் போவதுண்டு என்றாலும் அது என் போன்ற சாதாரண ஆட்களுக்கில்லை என்ற எண்ணம் உண்டு. வைரமுத்துவின் திருத்தி எழுதிய தீர்ப்பு-தான் முதலில் படித்தக் கவிதைத் தொகுதி.

மு.மேத்தா, மீரா, அப்துல் ரஹ்மான், ஈரோடு தமிழன்பன், கல்யாண்ஜி, கலாப்பிரியா, பழமலை போன்ற கவிஞர்களைத் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். மேலும் நல்ல கவிதைகள் திரு.சுஜாதா அவர்கள் மூலம்(க.க.பக்கங்கள்) அறிமுகம்.

காதல் கவிதைகள் என்றால் கொஞ்சம் அலர்ஜி. நண்பர்கள் எழுதி வாசிக்கும் போது வயிற்றைப் பிசையும். கொஞ்சம் மையமா நல்லா இருக்குன்னும் சொல்லாம இல்லைன்னும் சொல்லாம சமாளிச்சுடுவேன். எப்படிச் சொன்னாலும் வம்பு. எல்லோரும் சுலபமாக எழுதத்துடிப்பதும் அவ்வளவு சுலபமாக எழுத முடியாததும் காதலின் சிறப்பு. நல்ல காதல் கவிதைகள் வெகு சிலவே. மற்றவைக் காதலியை வருணனை செய்து காக்கா பிடிக்கவே. ’வாடி வாடி கைபடாத சி டி’ வகை.

சமீபத்தில் படித்ததில் எனக்குப் பிடித்த சில கவிதைகள் இங்கு தருகிறேன்.

நடன ஒத்திகை

37, 38 எனக்
கடந்து கொண்டிருந்தது வயது
முந்தைய நாள்
பள்ளி ஆண்டு விழாவிற்கென
நடன ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த
பதினொன்றாவது படிக்கும் மகள்
காலையில் பள்ளிக்குப் போனதும்
வீட்டில் யாரும் இல்லை
அப்பாடலை ஒலிக்க விடுகிறாள்
தன் மகளைப் போலவே
உடலை அசைத்து அசைத்துச் சுழலுகிறாள்
அழைப்பு மணியை யாரோ அடிக்கும்
ஓசை கேட்டதும்
வெளியேறினாள் தன் 15 வயதிலிருந்து.
– நரன்
– உயிர் எழுத்து அக்டோபர் 2008 இதழில்.

வண்ணத்துப் பூச்சி

17 வருடம் கழித்துப் பார்த்தேன்
எதிர்த்திசையில்
அவள் மகளோடு போய்க் கொண்டிருந்தாள்
பார்த்துவிட்டு எதுவுமே பேசவில்லை
அந்தக் கணம்
அவள் முகத்திலிருந்து
வயதான வண்ணத்துப் பூச்சியொன்று
வெளியேறிப் பறந்து செல்கிறது
வேகவேகமாய் இறக்கைகளை அசைத்தபடி
சற்றே பதட்டமாய்.

– நரன்
– உயிர் எழுத்து அக்டோபர் 2008 இதழில்.

காத்துக் கிடந்த பக்கங்கள்

உன் மேஜை மேல்
புத்தகமொன்று விரிந்து கிடக்கிறது
காற்றின் கரங்கள்
புதுப் புதுப் பக்கங்களாய் என்னைக்
காட்டிக் கொண்டிருக்கிறது உனக்கு.
முழுதுமாய் நீ
வாசித்து விடுவாயென்ற வேட்கையில்
வேகவேகமாய்ப் புரண்டு படுக்கையில்
முடிவதற்கு முன்பாகவே
சட்டென்று மூடி விடுகிறாய் என்னை.
மீண்டும் உன் மேஜை மேல்
அந்தப் புத்தகம் காத்துக் கிடக்கிறது
மின் விசிறியைப் பார்த்தபடி
மிச்ச அதன் பக்கங்களோடு.

-எஸ்.நடராஜன்
– தீராநதி அக்டோபர் 2008 இதழில்.

அவள் விகடனில் சில சமயம் அத்தி பூத்தாற்போல நல்ல கவி்தை கிடக்கும்.

தூரத்து அப்பா

குல்பி ஐஸ்காரனைக் கண்டு
கையாட்டிச் சிரிக்கிறது
வேலைக்காரியுடன்
ஒளிந்து விளையாடுகிறது
பக்கத்து வீட்டு அங்கிள் தோள் மீது
இரு கை போட்டேறி
உரிமையோடு
கண்ணாடியை இழுக்கிறது.
வீதியில் செல்வோரெல்லாம்
அந்நியோன்யமாய்..
வருட விடுமுறையில் வரும்
பாவப்பட்ட
அப்பா மட்டும்
அந்நியமாய்.

-எம்.சுதா முத்துலட்சுமி
– அவள் விகடன் – 24 அக்டோபர் 2008

சினிமா எக்ஸ்பிரஸ்


வெறும் சினிமா குறித்த தகவல்களாகத் தராமல் அதனூடாடும் ஞாபகங்களை பகிர்ந்து கொள்ளவே விருப்பம். எனவே பதிவு கொஞ்சம் நீளமாக இருக்கும்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எங்களூருக்குத் தெற்கே 5 மைல் நடந்தால் நெய்க்காரபட்டி சண்முகாத் தேட்டர். கிழக்கே 3 மைல் நடந்தால் சரவணாத் தேட்டர். இரு இடங்களிலும் 3 இடைவேளை விடுவார்கள். குண்டு விளக்கு எரிஞ்சா ரீல் மாத்துறாங்க. குழல் விளக்கு எரிஞ்சா இண்டர்வெல் விட்ருக்காங்க.

சிறுவயதில இந்த டூரிங்க் டாக்கீஸில் பர்த்த படங்கள் அங்கங்கே ஞாபங்களில் இருந்தாலும். 10 வயதில் என் பிறந்த ஊர் அருகே உள்ள செங்கோட்டையில் பார்த்த அலிபாபாவும் 40 திருடர்களும்தான் எனக்கு பசுமையாக நினைவிருக்கிறது.(தமிழில் வெளியான முதல் கேவா கலர் படம்; முதல் ஈஸ்ட்மென் கலர்ப்படம்-காதலிக்க நேரமில்லை)

அப்போதெல்லாம் நாங்கள் பழனியிலிருந்து வடகரை போவதென்றால்(300 கி மீ) இரு வாரங்களுக்கு முன்பே மாமாவுக்கு கடிதம் எழுதி விடுவோம். ஏன்னா செங்கோட்டையில் இருந்து வடகரைக்கு பேருந்து வசதி குறைவு. எனவே மாமா மாட்டுவண்டி கட்டி வந்து காத்திருப்பார்.

அவ்வாறு ஒரு முறை போகையில் இரவு 9:00 மணிக்குத்தான் செங்கோட்டை போய்ச் சேர்ந்தோம். என் அப்பா மெதுவா என் மாமாவிடம்,”அத்தான் எம் ஜி யார் படம் போட்ட்ருக்காம்லா. ரெண்டாமாட்டம் பாப்பமா?” என்றார். நான் என் அம்மா, அப்பா மற்றும் மாமா நால்வரும் படம் பார்த்தோம்.

மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே என்ற பாடலும், உல்லாச உலகம் உனக்கே சொந்தம் பாடலும் நீண்ட நாட்களாக நான் திரும்பத் திரும்பப் பாடிய பாடல்.

படத்தை விட, அதன் பின் மேற்கொண்ட மாட்டு வண்டிப் பயணம் நினைவை விட்டு அகலாத ஒன்று. நல்ல நிலா வெளிச்சம். ரோட்டின் இரு பக்கமும் அடர்ந்த மரங்கள். வயல்களினூடான பயனமும். மாமாவும் அப்பாவும் மாறி மாறிப் பாடிய பாடலுமாக.

விவரம் தெரிந்த பின் நானாகத் தேடிச் சென்று பார்த்த படம், முள்ளும் மலரும்.

ரஜினி, ஷோபா, சரத் போன்றோர் அல்லாமல், எங்க லைன் வீடுகள்ல குடியிருந்த சேகர் அண்ணன், தேவராஜ் அண்ணன், சுசீலா அக்கா முதலானோர் நடித்த படம் பர்த்தது போல இருந்தது.

இப்படியும் கூடப் படம் எடுக்கலாமா என்று ஆச்சரியப்பட்டேன். அதுவரை ஹீரோ, வில்லன், சண்டை, டூயட் இவைகள்தான் சினிமா என்ற ஒரு மாயையைத் தகர்த்த படம். அது முதல்தான் இயக்குனர் யார், ஒளிப்பதிவாளர் யார், இசையமைபாளர் யார் என்று தேடிப் பார்க்க ஆரம்பித்தேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தாம் தூம் இந்தப் ப்டம பற்றிய என் பதிவு.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்.

நினைத்தாலே இனிக்கும், வீட்டில் வி சி டியில் (30 ரூபாய்க்கு கூவிக் கூவி விக்குறாங்க)

ஒரு காலத்துல பிடிச்ச படம் எல்லாக் காலத்துலயும் பிடிக்கனும்னு அவசியமில்லை. அப்ப ரசிச்ச சில காட்சிகள் இப்ப ரெம்பச் செயற்கையாத் தெரியுது.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
ஒரு பெரிய பட்டியலே இருக்கு இருந்தாலும் ஒன்னுதான் சொல்லனும்ங்கிறதால; சுப்பிரமணியபுரம்.

படம் பார்த்ததும் வெயிலானிடம் சொன்னேன். 35 வயது மேற்பட்டோருக்கு மிகவும் பிடிக்குமென்று. மதுரை அதைச் சுற்றி 200 கி மி தூரத்திலுள்ள அணைவருக்கும் பிடித்திருக்குமென்று நினைக்கிறேன். அதிலுள்ள வன்முறை அதிகமென்பது ஒரு சாரார் கருத்து. இல்லை என்பதுதான் உண்மை. படத்தில் மிகவும் நாசூக்காகக் காட்டியிருக்கிறார்கள். இயல்பு நிலை அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று.

படம் பிடித்ததற்கான காரணம் பலவெனினும் குறிப்பிட்டுச் சொல்ல சில; அதன் பெர்பெக்சன், பாத்திரத்தேர்வு; இசை; நடித்தவர்களின் உடல் மொழி, வசனம்.

(அந்தப் பட்டியல் – ராஜ பார்வை, பேசும் படம், நம்மவர், அன்பே சிவம், குருதிபுனல், அபூர்வ சகோதரர்கள், விருமாண்டி, ஆளவந்தான், சேது, பருத்தி வீரன் )

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

பாபா படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்ததுதான் பெரிய காமெடி. அதன் மூலம் அந்தப் படத்துக்கு விளம்பரம் கிடைத்தும் ஓடவில்லை என்பது இன்னும் காமெடி. இதற்குப் பதிலடியாக பா ம க நிற்கும் தொகுதிகளில் மட்டும் வேலை செய்து பா ம க வைத் தோற்கடியுங்கள் என்று ஆணையிட்டு மூக்குடைபட்டது சூப்பர் காமெடி. இதற்குப் பதில் சந்திரமுகியையோ அல்லது குசேலனையோ தடை செய்திருக்கலாம். விரசக் காமெடியும் பெண்ணுடலை மூலதனமாக வைத்து எடுக்கப் பட்ட காட்சிகளும். அபத்தத்தின் உச்ச கட்டம்.

முக்கியமா சண்டியர் படத்தை விருமாண்டியாக்கியது ஆல் டைம் காமெடி

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ப்ரியா படத்திற்கு ஸ்டீரியோ முறையில் இசை ஒலிப்பதிவு செய்தது. அந்தச் சமயத்தில் அது பெரிய டெக்னாலஜிக்கல் முன்னேற்றம். அது வரையில் மோனோ முறையில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த நாங்கள் ஸ்டீரியோவில் கேட்ட பரவச அனுபவம் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்று. இன்று 15 சேனல், 32 சேனல் ஸ்டீரியோ எல்லாம் வந்த பிறகு இது சாதாரனமாகத் தோன்றலாம்.

ஸ்டிரியோவில் என்னுடைய ஆல் டைம் பேவரைட் பாடல்கள்.
1. வா வா மஞ்சள் மலரே – ராஜாதி ராஜா
2. சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே – தனிக்காட்டு ராஜா

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சிறுவயதில் பேசும்படம், சினிமா எக்பிரஸ் படித்ததுண்டு. தற்பொழுது குமுதம் விகடன் போன்றவற்றில் வரும் சினி செய்திகளைப் படிப்பதோடு சரி.

7.தமிழ்ச்சினிமா இசை?

பல ஜாம்பவான்கள் இசை அமைப்பளர்களாக இருந்தாலும், இளையராஜாதான் சாதாரன மனிதனின் ஆத்ம ராகத்தைத் திரையில் ஒலிக்கச் செய்தவர்.
ஏரியில இலந்த மரம் தங்கச்சி வச்சமரம் பாட்டாகட்டும், பூவே செம்பூவே பாட்டாகட்டும், சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷக் காற்றே பாட்டாகட்டும், நின்னுக்கோரி வர்ணமாகட்டும், குருவாயூரப்பா குருவாயூரப்பாவாகட்டும், ராக்கம்மா கையத்தட்டுவாகட்டும், என்னைத் தாலாட்ட வருவாளாவாகட்டும் ராஜாவின் வீச்சு எல்லையில்லாதது. கடல் தண்ணீரை ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டிலில் அடக்குவது போல்தான் அவரைப் பற்றி எழுதப் புகுவது.

ஒரு நாளைக்கு 6 முதல் 8 பாட்டுக்கள் கம்போஸ் செய்தாலும் அத்தனையும் தனித்தன்மையுடனிருந்தது. 48 மணி நேர ரீ ரிக்கர்டிங்க்தான் ஒரு படத்திற்கு. அவ்வளவு குறுகிய கால அவகாசத்தில் தரமான இசை அவரிடமிருந்து கிடைத்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைத்த உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது பாட்டும் அதை விடச் சிறப்பான மாட விளக்க யாரு இப்போ தெருவோரம் பாட்டும் சொல்லும் அவரைப்போல் இன்னும் ஒருவர் வந்துதான் அவர் இடத்தை நிரப்ப வேண்டும் எனபதை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

பிற மொழிகளில் நான் அதிகம் பார்ப்பது மலையாளப் படங்கள்தான். வரவேழ்ப்பு, கானாமறயத்து, யாத்ரா,தசரதம், சித்ரம், பரதம், வடக்கன் வீர கதா, நெ 20 மெட்ராஸ் மெயில், ஹிஸ் ஹைனெஸ் அப்துலா, காற்றத்தே கிளிக்கூடு, திலக்கம், கல்யாணராமன். சாந்துப் பொட்டு, சதாவிண்டே சமயம், பெருமழைக் காலம், வெட்டோம், வினோத யாத்ரா, ஏய் ஆட்டோ, கொச்சி ராஜாவு இன்னும் பிற.

ஆங்கிலப் படங்களில் பை சைக்கிள் தீவ்ஸ், ஹோட்டல் ருவாண்டா, ரன் லோலா ரன், வெர்டிகோ, தி டே ஆஃப்டர், தி சைக்கிளிஸ்ட், சில்ட்ரென் ஆஃப் ஹெவென போன்றவை. கோவையில் உள்ள கோனங்கள் திரைப்பட அமைப்பு மூலம் நல்ல சினிமாக்களைப் பார்க்கும் வாய்ப்பு அவ்வப்போது கிடைக்கிறது.

அதிகம் தாக்கிய படம் ஹோட்டல் ருவாண்டாதான். ஒரு வாரம் போல மனசு பாதித்துக் கிடந்தேன்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடித் தொடர்பு இல்லை. எனவே மற்ற கேள்விகள் பொருந்தா.

இளையராஜா, மலேசியா வாசுதேவன், RC சக்தி, பாரதிராஜா போன்றோரைச் சந்தித்திருக்கிறேன் அதிகப் பரிச்சயமில்லை.

ரானுவவீரன் படத்தில் வரும் போஸ்ட் ஆபீஸ் எங்கள் ஆசிரியர் வீடுதான். அந்தப் படப்பிடிப்பின் போது ரஜினியுடன் போட்டோ எடுத்திருக்கிறேன்.

பொள்ளாச்சியில் தேவர் மகன் படப்பிடிப்பு. ஸ்கிரிப்ட் எழுத பிரகாஷக் என்ற தமிழ் சாப்ட்வேரை நிறுவச் செல்லும்போது கமல ஹாசனைச் சந்தித்திருக்கிறேன். தேவர் மகன் பட ஸ்கிரிப்ட் ஒன்றிரண்டு பக்கங்களைப் தயார் செய்யும் வாய்ப்புக் கிட்டியது.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பாலா, அமீர், சசிக்குமார், வெங்கட் பிரபு போன்றவர்கள் நல்ல நம்பிக்கையையும். பேரரசு, சீமான் போன்றவர்கள் அதீத அவநம்பிக்கையையும் விதைக்கிறார்கள்.

தமிழ் சினிமா உருப்பட யாரும் சிலுவை சுமக்க வேண்டியது இல்லை. ரசிகர்கள் தரமான படத்தைத் தேர்வு செய்து ஒட வைப்பதும், பிறவற்றைப் பெட்டிக்குள் முடங்கச் செய்வதுமான நடவடிக்கையே போதுமானது.

ஆனால் தமிழ் சினிமாவில் நிலவும் பார்முலாதான் அதை முன்னேற விடாமல் தடுக்கும் தடைக்கல். 90 நிமிடம் ஓடக்க்கூடிய படத்தில் 4 பாட்டு எனில் 4 X 5 = 20 நிமிடங்கள். 3 பைட்டு எனில் 3 X 7 = 21 நிமிடங்கள். நகைச் சுவைக் காட்சி 4 முறை எனில் 4 X 5 = 20 நிமிடங்கள். மொத்தம் 61 நிமிடங்கள்; மீதமிருக்கும் 30 நிமிடங்களில் கதை சொல்ல வேண்டும். மிகப் பெரிய சவால்தான். நல்ல திரைக்கதை 3 பகுதிகளாக இருக்க வேண்டும் என்று சுஜாதா சொல்லுவார்; கதா பாத்திரங்கள் அறிமுகம், அவர்களுக்குள் இருக்கும் சிக்கல், அது தீரும் விதம் என.

இந்த அமைப்பிலிருந்து வெளியே வர வேண்டும். காமெடிப் படம் தனியே, சண்டைப்படம் தனியே, காதல்படம் தனியே எனத் தனித் தனியாக இருந்தால்தான் எதிர்பார்க்கும் விதமாகக் கதை சொல்ல முடியும்.

சமீபத்தில் வந்த சரோஜாவும், பொய் சொல்லப் போறோமும் நல்ல முயற்சி. கதானாயகன், நாயகி, வில்லன் போன்ற பாத்திரங்கள் இல்லாமல் நல்ல முயற்சி.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு அதிகம் பாதிக்காது. படிக்கக் கூடுதல் நேரம் கிடைக்கும்.

தமிழர்களுக்கு ஒன்றும் குடி முழுகிப் போகாது. தமிழ்த் திரையுலகில் திறமை வாய்ந்தவர்கள் எல்லாம் வேற்று மொழிப் படங்களில் வேலை செய்ய சென்றுவிடுவர். காமா சோமா ஆட்கள் எல்லாம் பீல்டிலிருந்து விலகி விடுவர். ஆரோக்யமாக இருக்கும். கிளாஸ் ரசிகர்கள் பிறமொழியில் வந்த நல்ல படங்களப் பார்த்து இன்புறுவர். மாஸ் ரசிகர்கள் எல்லாம், பாயும் புலி பதுங்கும் கரடி போன்ற படங்களில் தஞ்சம் புகுவர்.

இந்தத் தொடர் விளையாட்டுக்கு என்னை அழைத்த அதிஷாவுக்கு நன்றி.

அனேகமாக எல்லோரும் எழுதி விட்டனர். இருப்பினும், இன்னும் எழுதாமல் இருந்தால், நான் அழைக்க விரும்புவது

1. T.V. ராதாகிருஷ்ணன்
2. கொத்ஸ்.
3. அனுஜன்யா

சினிமா எக்ஸ்பிரஸ்


வெறும் சினிமா குறித்த தகவல்களாகத் தராமல் அதனூடாடும் ஞாபகங்களை பகிர்ந்து கொள்ளவே விருப்பம். எனவே பதிவு கொஞ்சம் நீளமாக இருக்கும்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எங்களூருக்குத் தெற்கே 5 மைல் நடந்தால் நெய்க்காரபட்டி சண்முகாத் தேட்டர். கிழக்கே 3 மைல் நடந்தால் சரவணாத் தேட்டர். இரு இடங்களிலும் 3 இடைவேளை விடுவார்கள். குண்டு விளக்கு எரிஞ்சா ரீல் மாத்துறாங்க. குழல் விளக்கு எரிஞ்சா இண்டர்வெல் விட்ருக்காங்க.

சிறுவயதில இந்த டூரிங்க் டாக்கீஸில் பர்த்த படங்கள் அங்கங்கே ஞாபங்களில் இருந்தாலும். 10 வயதில் என் பிறந்த ஊர் அருகே உள்ள செங்கோட்டையில் பார்த்த அலிபாபாவும் 40 திருடர்களும்தான் எனக்கு பசுமையாக நினைவிருக்கிறது.(தமிழில் வெளியான முதல் கேவா கலர் படம்; முதல் ஈஸ்ட்மென் கலர்ப்படம்-காதலிக்க நேரமில்லை)

அப்போதெல்லாம் நாங்கள் பழனியிலிருந்து வடகரை போவதென்றால்(300 கி மீ) இரு வாரங்களுக்கு முன்பே மாமாவுக்கு கடிதம் எழுதி விடுவோம். ஏன்னா செங்கோட்டையில் இருந்து வடகரைக்கு பேருந்து வசதி குறைவு. எனவே மாமா மாட்டுவண்டி கட்டி வந்து காத்திருப்பார்.

அவ்வாறு ஒரு முறை போகையில் இரவு 9:00 மணிக்குத்தான் செங்கோட்டை போய்ச் சேர்ந்தோம். என் அப்பா மெதுவா என் மாமாவிடம்,”அத்தான் எம் ஜி யார் படம் போட்ட்ருக்காம்லா. ரெண்டாமாட்டம் பாப்பமா?” என்றார். நான் என் அம்மா, அப்பா மற்றும் மாமா நால்வரும் படம் பார்த்தோம்.

மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே என்ற பாடலும், உல்லாச உலகம் உனக்கே சொந்தம் பாடலும் நீண்ட நாட்களாக நான் திரும்பத் திரும்பப் பாடிய பாடல்.

படத்தை விட, அதன் பின் மேற்கொண்ட மாட்டு வண்டிப் பயணம் நினைவை விட்டு அகலாத ஒன்று. நல்ல நிலா வெளிச்சம். ரோட்டின் இரு பக்கமும் அடர்ந்த மரங்கள். வயல்களினூடான பயனமும். மாமாவும் அப்பாவும் மாறி மாறிப் பாடிய பாடலுமாக.

விவரம் தெரிந்த பின் நானாகத் தேடிச் சென்று பார்த்த படம், முள்ளும் மலரும்.

ரஜினி, ஷோபா, சரத் போன்றோர் அல்லாமல், எங்க லைன் வீடுகள்ல குடியிருந்த சேகர் அண்ணன், தேவராஜ் அண்ணன், சுசீலா அக்கா முதலானோர் நடித்த படம் பர்த்தது போல இருந்தது.

இப்படியும் கூடப் படம் எடுக்கலாமா என்று ஆச்சரியப்பட்டேன். அதுவரை ஹீரோ, வில்லன், சண்டை, டூயட் இவைகள்தான் சினிமா என்ற ஒரு மாயையைத் தகர்த்த படம். அது முதல்தான் இயக்குனர் யார், ஒளிப்பதிவாளர் யார், இசையமைபாளர் யார் என்று தேடிப் பார்க்க ஆரம்பித்தேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தாம் தூம் இந்தப் ப்டம பற்றிய என் பதிவு.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்.

நினைத்தாலே இனிக்கும், வீட்டில் வி சி டியில் (30 ரூபாய்க்கு கூவிக் கூவி விக்குறாங்க)

ஒரு காலத்துல பிடிச்ச படம் எல்லாக் காலத்துலயும் பிடிக்கனும்னு அவசியமில்லை. அப்ப ரசிச்ச சில காட்சிகள் இப்ப ரெம்பச் செயற்கையாத் தெரியுது.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
ஒரு பெரிய பட்டியலே இருக்கு இருந்தாலும் ஒன்னுதான் சொல்லனும்ங்கிறதால; சுப்பிரமணியபுரம்.

படம் பார்த்ததும் வெயிலானிடம் சொன்னேன். 35 வயது மேற்பட்டோருக்கு மிகவும் பிடிக்குமென்று. மதுரை அதைச் சுற்றி 200 கி மி தூரத்திலுள்ள அணைவருக்கும் பிடித்திருக்குமென்று நினைக்கிறேன். அதிலுள்ள வன்முறை அதிகமென்பது ஒரு சாரார் கருத்து. இல்லை என்பதுதான் உண்மை. படத்தில் மிகவும் நாசூக்காகக் காட்டியிருக்கிறார்கள். இயல்பு நிலை அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று.

படம் பிடித்ததற்கான காரணம் பலவெனினும் குறிப்பிட்டுச் சொல்ல சில; அதன் பெர்பெக்சன், பாத்திரத்தேர்வு; இசை; நடித்தவர்களின் உடல் மொழி, வசனம்.

(அந்தப் பட்டியல் – ராஜ பார்வை, பேசும் படம், நம்மவர், அன்பே சிவம், குருதிபுனல், அபூர்வ சகோதரர்கள், விருமாண்டி, ஆளவந்தான், சேது, பருத்தி வீரன் )

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

பாபா படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்ததுதான் பெரிய காமெடி. அதன் மூலம் அந்தப் படத்துக்கு விளம்பரம் கிடைத்தும் ஓடவில்லை என்பது இன்னும் காமெடி. இதற்குப் பதிலடியாக பா ம க நிற்கும் தொகுதிகளில் மட்டும் வேலை செய்து பா ம க வைத் தோற்கடியுங்கள் என்று ஆணையிட்டு மூக்குடைபட்டது சூப்பர் காமெடி. இதற்குப் பதில் சந்திரமுகியையோ அல்லது குசேலனையோ தடை செய்திருக்கலாம். விரசக் காமெடியும் பெண்ணுடலை மூலதனமாக வைத்து எடுக்கப் பட்ட காட்சிகளும். அபத்தத்தின் உச்ச கட்டம்.

முக்கியமா சண்டியர் படத்தை விருமாண்டியாக்கியது ஆல் டைம் காமெடி

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ப்ரியா படத்திற்கு ஸ்டீரியோ முறையில் இசை ஒலிப்பதிவு செய்தது. அந்தச் சமயத்தில் அது பெரிய டெக்னாலஜிக்கல் முன்னேற்றம். அது வரையில் மோனோ முறையில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த நாங்கள் ஸ்டீரியோவில் கேட்ட பரவச அனுபவம் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்று. இன்று 15 சேனல், 32 சேனல் ஸ்டீரியோ எல்லாம் வந்த பிறகு இது சாதாரனமாகத் தோன்றலாம்.

ஸ்டிரியோவில் என்னுடைய ஆல் டைம் பேவரைட் பாடல்கள்.
1. வா வா மஞ்சள் மலரே – ராஜாதி ராஜா
2. சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே – தனிக்காட்டு ராஜா

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சிறுவயதில் பேசும்படம், சினிமா எக்பிரஸ் படித்ததுண்டு. தற்பொழுது குமுதம் விகடன் போன்றவற்றில் வரும் சினி செய்திகளைப் படிப்பதோடு சரி.

7.தமிழ்ச்சினிமா இசை?

பல ஜாம்பவான்கள் இசை அமைப்பளர்களாக இருந்தாலும், இளையராஜாதான் சாதாரன மனிதனின் ஆத்ம ராகத்தைத் திரையில் ஒலிக்கச் செய்தவர்.
ஏரியில இலந்த மரம் தங்கச்சி வச்சமரம் பாட்டாகட்டும், பூவே செம்பூவே பாட்டாகட்டும், சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷக் காற்றே பாட்டாகட்டும், நின்னுக்கோரி வர்ணமாகட்டும், குருவாயூரப்பா குருவாயூரப்பாவாகட்டும், ராக்கம்மா கையத்தட்டுவாகட்டும், என்னைத் தாலாட்ட வருவாளாவாகட்டும் ராஜாவின் வீச்சு எல்லையில்லாதது. கடல் தண்ணீரை ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டிலில் அடக்குவது போல்தான் அவரைப் பற்றி எழுதப் புகுவது.

ஒரு நாளைக்கு 6 முதல் 8 பாட்டுக்கள் கம்போஸ் செய்தாலும் அத்தனையும் தனித்தன்மையுடனிருந்தது. 48 மணி நேர ரீ ரிக்கர்டிங்க்தான் ஒரு படத்திற்கு. அவ்வளவு குறுகிய கால அவகாசத்தில் தரமான இசை அவரிடமிருந்து கிடைத்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைத்த உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது பாட்டும் அதை விடச் சிறப்பான மாட விளக்க யாரு இப்போ தெருவோரம் பாட்டும் சொல்லும் அவரைப்போல் இன்னும் ஒருவர் வந்துதான் அவர் இடத்தை நிரப்ப வேண்டும் எனபதை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

பிற மொழிகளில் நான் அதிகம் பார்ப்பது மலையாளப் படங்கள்தான். வரவேழ்ப்பு, கானாமறயத்து, யாத்ரா,தசரதம், சித்ரம், பரதம், வடக்கன் வீர கதா, நெ 20 மெட்ராஸ் மெயில், ஹிஸ் ஹைனெஸ் அப்துலா, காற்றத்தே கிளிக்கூடு, திலக்கம், கல்யாணராமன். சாந்துப் பொட்டு, சதாவிண்டே சமயம், பெருமழைக் காலம், வெட்டோம், வினோத யாத்ரா, ஏய் ஆட்டோ, கொச்சி ராஜாவு இன்னும் பிற.

ஆங்கிலப் படங்களில் பை சைக்கிள் தீவ்ஸ், ஹோட்டல் ருவாண்டா, ரன் லோலா ரன், வெர்டிகோ, தி டே ஆஃப்டர், தி சைக்கிளிஸ்ட், சில்ட்ரென் ஆஃப் ஹெவென போன்றவை. கோவையில் உள்ள கோனங்கள் திரைப்பட அமைப்பு மூலம் நல்ல சினிமாக்களைப் பார்க்கும் வாய்ப்பு அவ்வப்போது கிடைக்கிறது.

அதிகம் தாக்கிய படம் ஹோட்டல் ருவாண்டாதான். ஒரு வாரம் போல மனசு பாதித்துக் கிடந்தேன்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடித் தொடர்பு இல்லை. எனவே மற்ற கேள்விகள் பொருந்தா.

இளையராஜா, மலேசியா வாசுதேவன், RC சக்தி, பாரதிராஜா போன்றோரைச் சந்தித்திருக்கிறேன் அதிகப் பரிச்சயமில்லை.

ரானுவவீரன் படத்தில் வரும் போஸ்ட் ஆபீஸ் எங்கள் ஆசிரியர் வீடுதான். அந்தப் படப்பிடிப்பின் போது ரஜினியுடன் போட்டோ எடுத்திருக்கிறேன்.

பொள்ளாச்சியில் தேவர் மகன் படப்பிடிப்பு. ஸ்கிரிப்ட் எழுத பிரகாஷக் என்ற தமிழ் சாப்ட்வேரை நிறுவச் செல்லும்போது கமல ஹாசனைச் சந்தித்திருக்கிறேன். தேவர் மகன் பட ஸ்கிரிப்ட் ஒன்றிரண்டு பக்கங்களைப் தயார் செய்யும் வாய்ப்புக் கிட்டியது.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பாலா, அமீர், சசிக்குமார், வெங்கட் பிரபு போன்றவர்கள் நல்ல நம்பிக்கையையும். பேரரசு, சீமான் போன்றவர்கள் அதீத அவநம்பிக்கையையும் விதைக்கிறார்கள்.

தமிழ் சினிமா உருப்பட யாரும் சிலுவை சுமக்க வேண்டியது இல்லை. ரசிகர்கள் தரமான படத்தைத் தேர்வு செய்து ஒட வைப்பதும், பிறவற்றைப் பெட்டிக்குள் முடங்கச் செய்வதுமான நடவடிக்கையே போதுமானது.

ஆனால் தமிழ் சினிமாவில் நிலவும் பார்முலாதான் அதை முன்னேற விடாமல் தடுக்கும் தடைக்கல். 90 நிமிடம் ஓடக்க்கூடிய படத்தில் 4 பாட்டு எனில் 4 X 5 = 20 நிமிடங்கள். 3 பைட்டு எனில் 3 X 7 = 21 நிமிடங்கள். நகைச் சுவைக் காட்சி 4 முறை எனில் 4 X 5 = 20 நிமிடங்கள். மொத்தம் 61 நிமிடங்கள்; மீதமிருக்கும் 30 நிமிடங்களில் கதை சொல்ல வேண்டும். மிகப் பெரிய சவால்தான். நல்ல திரைக்கதை 3 பகுதிகளாக இருக்க வேண்டும் என்று சுஜாதா சொல்லுவார்; கதா பாத்திரங்கள் அறிமுகம், அவர்களுக்குள் இருக்கும் சிக்கல், அது தீரும் விதம் என.

இந்த அமைப்பிலிருந்து வெளியே வர வேண்டும். காமெடிப் படம் தனியே, சண்டைப்படம் தனியே, காதல்படம் தனியே எனத் தனித் தனியாக இருந்தால்தான் எதிர்பார்க்கும் விதமாகக் கதை சொல்ல முடியும்.

சமீபத்தில் வந்த சரோஜாவும், பொய் சொல்லப் போறோமும் நல்ல முயற்சி. கதானாயகன், நாயகி, வில்லன் போன்ற பாத்திரங்கள் இல்லாமல் நல்ல முயற்சி.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு அதிகம் பாதிக்காது. படிக்கக் கூடுதல் நேரம் கிடைக்கும்.

தமிழர்களுக்கு ஒன்றும் குடி முழுகிப் போகாது. தமிழ்த் திரையுலகில் திறமை வாய்ந்தவர்கள் எல்லாம் வேற்று மொழிப் படங்களில் வேலை செய்ய சென்றுவிடுவர். காமா சோமா ஆட்கள் எல்லாம் பீல்டிலிருந்து விலகி விடுவர். ஆரோக்யமாக இருக்கும். கிளாஸ் ரசிகர்கள் பிறமொழியில் வந்த நல்ல படங்களப் பார்த்து இன்புறுவர். மாஸ் ரசிகர்கள் எல்லாம், பாயும் புலி பதுங்கும் கரடி போன்ற படங்களில் தஞ்சம் புகுவர்.

இந்தத் தொடர் விளையாட்டுக்கு என்னை அழைத்த அதிஷாவுக்கு நன்றி.

அனேகமாக எல்லோரும் எழுதி விட்டனர். இருப்பினும், இன்னும் எழுதாமல் இருந்தால், நான் அழைக்க விரும்புவது

1. T.V. ராதாகிருஷ்ணன்
2. கொத்ஸ்.
3. அனுஜன்யா

கதம்பம் – 18/10/08

ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றார் கி வா ஜ. நடு வழியில் ஏதோ கோளாறு காரணமாக கார் நின்று விட்டது. கி வா ஜ வை காரிலேயே அமரும்படிக் கூறி விட்டு மற்றவர்கள் இறங்கித்தள்ளி ஸ்டர்ட் செய்து அரங்கத்தை அடைந்தார்கள்.

நிகழ்ச்சி முடிந்ததும் மாலை, சால்வை, நினைவுப் பரிசு எல்லாவற்றையும் ஒரு அழகிய கைப்பையில் வைத்து அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்ட கி வா ஜ அவர்கள் சொன்னார்,” வரும் போது தள்ளாதவனாக வந்தேன். போகும்போது பையனாகச் செல்கிறேன்”.

***********************************************************

அடிக்கடி ரயில் பயனம் செய்வதில் ஒன்றைக் கவனித்தேன். நடுப் படுக்கையை (middle berth) தயார் செய்ய நினைப்பவர்கள் முதலில் படுக்கையை கையில் எடுத்து வைத்துக் கொண்டு அதன் பின் மேலிருக்கும் கொக்கியை விடுவிக்கிறார்கள். சில சமயம் கொக்கி சுலபமாக வருவதில்லை. கையிலிருக்கும் படுக்கையின் சுமை வேறு அதிக எரிச்சலைத் தூண்டுகிறது. அதற்குப் பதிலாக முதலில் மேலிருக்கும் கொக்கியை விடுவித்த பின் படுக்கையை எடுத்து மாட்டுவது சுலபமாக இருக்கும் அல்லவா?. முக்கியமாக உயரம் குறைவாக இருப்பவர்களாவது இதை கடை பிடிப்பார்களா?

வாழ்க்கையிலும் இதுபோலத்தான் எது முதலில் எது பிறகு என்று பகுத்தாயாமல் சிக்கல் உண்டாக்குகிறோம். சுலபமாக முடிவதைக் கூட தேவையில்லாத சுமைகளால் கடினமானதாக்கிக் கொள்கிறோம். சரிதானே?

*******************************************************************

இந்த முறை ரெஜொவாசன் கவிதைகள் கொஞ்சம்.

நட்பைப் பற்றிய இந்த நெடுங்கவிதையில் சில துண்டுகளைமட்டும் எடுத்து இங்கே தந்திருக்கிறேன். அருமையாக எழுதியிருக்கிறார். சிறப்பாக வருவார்.

உலகத்தின் நிழல் மறையும்
முற்றிலும் இருள் கவியும் பின்னிரவுகளில்
விண்மீன்களும் தூங்கச் சென்ற பின்னே
மெதுவாக விழித்துப் பார்க்கின்றன
நட்பின் நினைவுகளும்
அதன் அழகான கவிதைகளும் …

பறவை அறியாமல் உதிரும்
அதன் இறகு போல
நம்மை அறியாமல்
கனவிற்குள் உதிர்கின்றன
நட்பின் நினைவுகள் ..

வைத்த புள்ளியையே சுற்றி
கிறுக்கப் பட்டுக் கொண்டிருக்கும்
குழந்தையின் கோட்டோவியத்தைப் போல
நட்புக் காலத்தையே நீள் வட்டப் பாதையில்
சுற்றிக் கொண்டிருக்கும் மனமும் …

நம்மைச் சுற்றிலும்
ரகசியமாய் மௌனிக்கின்ற எல்லாமும்
உரக்கப் பேசித் திரியும்
நம் நட்புக்காலக் கதைகளை

இவருடைய சமீபத்திய ‘அனிச்சை‘ கவிதையை மிகவும் ரசித்தேன்.

இவரைப் பற்றி அதிகம் அறிய முடியவில்லை. ஆனால் இவரது சுய அறிமுகம் சுவராஸ்யமாக இருக்கிறது.


பயணங்களில் பாதைகளில் உதிர்ந்து கிடக்கும் பறவைகளின் சிறகுகளில் கொஞ்சம் பால்யமும் உறைந்து கிடக்கலாம் .வீதிகளெங்கும் இரண்டாம் சாமங்களின் கனவுகள் உயிர்பெற்று அலைந்து உலவலாம் . நீங்கள் சற்றும் எதிர்பாராத திருப்பங்களில் தேவதைகள் மோதிச் செல்லலாம் . தெருமுனை தேநீர்க் கடைகளில் கடவுளர்கள் கதைக்கக் கிடைக்கலாம் .காதலின் பெயர் சொல்லிச் சகலமும் தொழக் காணலாம்.


************************************************************************

கர்ணனுக்கு கிடைக்கும் புகழ் குறித்து அர்ஜுனனுக்கு எரிச்சல். அதை கண்ணனிடம் தெரியப் படுத்தினான். அவனைத் தெளிய வைக்க எண்ணிய கண்ணன், ஒரு நாள் ஒரு தங்க குன்று ஒன்றை உருவாக்கி, அர்ஜுனனை அழைத்து ஒரு மண் வெட்டி ஒன்றைக் கையில் கொடுத்து, “ இந்த குன்றை இன்று மாலைக்குள் காலி செய். யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் தானம் செய்து கொள்” என்றான்.

அர்ஜுனனும் காலையிலிருந்து போவோர் வருவோருக்கெல்லாம் வெட்டி வெட்டி கொடுத்துக் கொண்டே இருந்தான். தீருவதாகத் தெரியவில்லை. மாலையும் ஆகி விட்டது. இன்னும் அரைமணி நேரத்திற்குள் முடிவதாகவும் தெரியவில்லை. கண்ணனை அழைத்துச் சொன்னான் அர்ஜுனன்.

இதற்காகவே காத்திருந்த கண்ணன் கர்ணனை அழைத்து விபரம் சொன்னான். சரி என்று தலையாட்டிய கர்ணன் அவ்வழியே சென்ற இருவரை அழைத்து,” இதை பாதிப் பாதியாக்கி நீங்கள் இருவரும் வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினான். அப்பொழுத்தான் அர்ஜுனனுக்கு புரிந்தது அவனவன் தகுதிக்கான புகழ்தான் கிடைக்கும், அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப் படுவதில் அர்த்தமில்லையென்பது.

*************************************************************************

சீரியலைப் பார்த்து பெண்கள்தானே அழுவார்கள். அவர் ஏங்க அழுகிறார்?
அவர் பார்த்துக் கொண்டிருப்பது அவரது கல்யாண சிடி-ங்க.

கதம்பம் – 18/10/08

ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றார் கி வா ஜ. நடு வழியில் ஏதோ கோளாறு காரணமாக கார் நின்று விட்டது. கி வா ஜ வை காரிலேயே அமரும்படிக் கூறி விட்டு மற்றவர்கள் இறங்கித்தள்ளி ஸ்டர்ட் செய்து அரங்கத்தை அடைந்தார்கள்.

நிகழ்ச்சி முடிந்ததும் மாலை, சால்வை, நினைவுப் பரிசு எல்லாவற்றையும் ஒரு அழகிய கைப்பையில் வைத்து அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்ட கி வா ஜ அவர்கள் சொன்னார்,” வரும் போது தள்ளாதவனாக வந்தேன். போகும்போது பையனாகச் செல்கிறேன்”.

***********************************************************

அடிக்கடி ரயில் பயனம் செய்வதில் ஒன்றைக் கவனித்தேன். நடுப் படுக்கையை (middle berth) தயார் செய்ய நினைப்பவர்கள் முதலில் படுக்கையை கையில் எடுத்து வைத்துக் கொண்டு அதன் பின் மேலிருக்கும் கொக்கியை விடுவிக்கிறார்கள். சில சமயம் கொக்கி சுலபமாக வருவதில்லை. கையிலிருக்கும் படுக்கையின் சுமை வேறு அதிக எரிச்சலைத் தூண்டுகிறது. அதற்குப் பதிலாக முதலில் மேலிருக்கும் கொக்கியை விடுவித்த பின் படுக்கையை எடுத்து மாட்டுவது சுலபமாக இருக்கும் அல்லவா?. முக்கியமாக உயரம் குறைவாக இருப்பவர்களாவது இதை கடை பிடிப்பார்களா?

வாழ்க்கையிலும் இதுபோலத்தான் எது முதலில் எது பிறகு என்று பகுத்தாயாமல் சிக்கல் உண்டாக்குகிறோம். சுலபமாக முடிவதைக் கூட தேவையில்லாத சுமைகளால் கடினமானதாக்கிக் கொள்கிறோம். சரிதானே?

*******************************************************************

இந்த முறை ரெஜொவாசன் கவிதைகள் கொஞ்சம்.

நட்பைப் பற்றிய இந்த நெடுங்கவிதையில் சில துண்டுகளைமட்டும் எடுத்து இங்கே தந்திருக்கிறேன். அருமையாக எழுதியிருக்கிறார். சிறப்பாக வருவார்.

உலகத்தின் நிழல் மறையும்
முற்றிலும் இருள் கவியும் பின்னிரவுகளில்
விண்மீன்களும் தூங்கச் சென்ற பின்னே
மெதுவாக விழித்துப் பார்க்கின்றன
நட்பின் நினைவுகளும்
அதன் அழகான கவிதைகளும் …

பறவை அறியாமல் உதிரும்
அதன் இறகு போல
நம்மை அறியாமல்
கனவிற்குள் உதிர்கின்றன
நட்பின் நினைவுகள் ..

வைத்த புள்ளியையே சுற்றி
கிறுக்கப் பட்டுக் கொண்டிருக்கும்
குழந்தையின் கோட்டோவியத்தைப் போல
நட்புக் காலத்தையே நீள் வட்டப் பாதையில்
சுற்றிக் கொண்டிருக்கும் மனமும் …

நம்மைச் சுற்றிலும்
ரகசியமாய் மௌனிக்கின்ற எல்லாமும்
உரக்கப் பேசித் திரியும்
நம் நட்புக்காலக் கதைகளை

இவருடைய சமீபத்திய ‘அனிச்சை‘ கவிதையை மிகவும் ரசித்தேன்.

இவரைப் பற்றி அதிகம் அறிய முடியவில்லை. ஆனால் இவரது சுய அறிமுகம் சுவராஸ்யமாக இருக்கிறது.


பயணங்களில் பாதைகளில் உதிர்ந்து கிடக்கும் பறவைகளின் சிறகுகளில் கொஞ்சம் பால்யமும் உறைந்து கிடக்கலாம் .வீதிகளெங்கும் இரண்டாம் சாமங்களின் கனவுகள் உயிர்பெற்று அலைந்து உலவலாம் . நீங்கள் சற்றும் எதிர்பாராத திருப்பங்களில் தேவதைகள் மோதிச் செல்லலாம் . தெருமுனை தேநீர்க் கடைகளில் கடவுளர்கள் கதைக்கக் கிடைக்கலாம் .காதலின் பெயர் சொல்லிச் சகலமும் தொழக் காணலாம்.


************************************************************************

கர்ணனுக்கு கிடைக்கும் புகழ் குறித்து அர்ஜுனனுக்கு எரிச்சல். அதை கண்ணனிடம் தெரியப் படுத்தினான். அவனைத் தெளிய வைக்க எண்ணிய கண்ணன், ஒரு நாள் ஒரு தங்க குன்று ஒன்றை உருவாக்கி, அர்ஜுனனை அழைத்து ஒரு மண் வெட்டி ஒன்றைக் கையில் கொடுத்து, “ இந்த குன்றை இன்று மாலைக்குள் காலி செய். யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் தானம் செய்து கொள்” என்றான்.

அர்ஜுனனும் காலையிலிருந்து போவோர் வருவோருக்கெல்லாம் வெட்டி வெட்டி கொடுத்துக் கொண்டே இருந்தான். தீருவதாகத் தெரியவில்லை. மாலையும் ஆகி விட்டது. இன்னும் அரைமணி நேரத்திற்குள் முடிவதாகவும் தெரியவில்லை. கண்ணனை அழைத்துச் சொன்னான் அர்ஜுனன்.

இதற்காகவே காத்திருந்த கண்ணன் கர்ணனை அழைத்து விபரம் சொன்னான். சரி என்று தலையாட்டிய கர்ணன் அவ்வழியே சென்ற இருவரை அழைத்து,” இதை பாதிப் பாதியாக்கி நீங்கள் இருவரும் வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினான். அப்பொழுத்தான் அர்ஜுனனுக்கு புரிந்தது அவனவன் தகுதிக்கான புகழ்தான் கிடைக்கும், அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப் படுவதில் அர்த்தமில்லையென்பது.

*************************************************************************

சீரியலைப் பார்த்து பெண்கள்தானே அழுவார்கள். அவர் ஏங்க அழுகிறார்?
அவர் பார்த்துக் கொண்டிருப்பது அவரது கல்யாண சிடி-ங்க.

அன்றும் இன்றும்

1989 அக்டோபர் மாதக்காலை 8:00 மணி.

(கொஞ்சல் பாவத்துடன் படிக்கவும்)

ஏங்க, எந்திரிங்க மணி எட்டு ஆச்சு. பல் விளக்கிட்டு வாங்க. ஹார்லிக்ஸ் கலந்து வச்சிருக்கேன்.

இந்தாங்க குடிங்க. சூடு அளவா இருக்கா? சக்கரை சரியா இருக்கா?

சுடுதண்ணி விளாவி வச்சிருக்கேன் குளிச்சிட்டு வாங்க. சோப்பு, துண்டு எல்லாம் எடுத்து வச்சிருக்கேன் வேற என்ன வேனும்னாலும் கூப்பிடுங்க.

இப்படியா ஈரத்தலையோட இருப்பீங்க. இருங்க பேன் போடுறேன்.

ஏங்க தலை காஞ்சுருச்சா? வாங்க இட்லி சூடா இருக்கு. உங்களுக்குப் பிடிச்ச
வேர்க்கடலை சட்னி இருக்கு, தக்களிச் சட்னி இருக்கு, பொடி இருக்கு.

இன்னும் ரெண்டு வச்சுக்குங்க. என்ன கம்மியா சாப்புடுறீங்க?

2008 அக்டோபர் மாதக் காலை 6:00 மணி.

(கட்டளை பாவத்துடன் படிக்கவும்)

ஏங்க, எந்திரிங்க. இன்னும் என்ன தூக்கம்.?

நேரங்காலத்துல பல்ல வெளக்கீட்டு வாங்க.

பால் சூடு பண்ணி வச்சிருக்கேன். வேனுங்கிற அளவு ஹார்லிக்ஸ் கலந்து குடிங்க.

சரி சரி சட்டு புட்டுன்னு குளிச்சுட்டுவாங்க. சோப்பு, துண்டு எல்லாம் ஞாபகமா எடுத்துட்டுப் போங்க. பாத்ரூமிலிருந்து நை நைன்னு கூப்டுட்டு இருக்காதீங்க.

தலைய ஒழுங்காத் துவட்டத் தெரியுதா? உங்களையெல்லாம் வச்சு எப்படித்தான் சமாளிக்கப் போறேனோ?

இட்லி ஹாட் பேக்ல இருக்கு. ஒரு சட்னிதான் அரைக்க முடிஞ்சுது. சாப்பிடுங்க.

பழச நினச்சா ஏக்கமா இருக்குங்க. ஹ்ம் அதெல்லா மீண்டும் வருமாங்க. ஏன் இந்த ஏக்கம்னு கேகுறீங்களா?

இப்படித்தானே ஒவ்வொரு கல்யாண நாளையும் (அக்-18) ஏக்கத்தோட நினக்க வேண்டியிருக்கு.

டிஸ்கி : ஹி ஹி சும்மா தமாசுக்குத்தான். என் தங்க மணி நல்லவங்கதான். முன்னாடி ரெம்ப நல்லவங்களா இருந்தாங்க அவ்வளவுதான்.

நாமொன்று நினைக்க…

ருர் வையாபுரிப் பிள்ளை முதல் வீதி வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த சங்கரிடம், ”என்னங்க, எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். மயிலாத்தாக்கா சொன்னாங்க. போய் பார்த்துட்டு வரலாமா?” கேட்டாள் மைதிலி.

“ஆமா உனக்கும் வேலையில்லை உங்க அம்மாவுக்கும் வேலையில்ல. வயசான காலத்துல இங்க நம்ம கூட வந்து இருக்கலாம். அட இல்லன்ன உங்க தாய்மாமன் இங்கதான இருக்காரு, அவரு கூடயாது வந்து இருக்கலாம். ஒத்தயில அங்க இருந்துக்கிட்டு எல்லோருக்கும் சிரமம்.” எரிச்சலுடன் சங்கர்.

”எங்க அம்மாவத் திட்டலையின்னா உஙகளுக்குச் சோறு இறங்காதே?”

“சரி சரி சாய்ங்காலம் ரெடியா இரு, SMBS பஸ்ல போய்ட்டு வந்தர்லாம்”

நாமக்கல் கரூர் ரோட்டில் ஊர்க் கடைசியில் இருந்து ஒதுக்குபுறம். வரிசையாக இருந்த 4 வீடுகளில் இரண்டாவது வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பத் தயாரான ரஷீத்திடம்,”நம்ம அப்துல்லாவுக்கு மட்டுமாவது இன்னைக்கு ட்ரெஸ் எடுத்துட்டு வாங்க” கேட்டள் சுபைதா.

“பார்க்கலாம் அட்வான்ஸ் பணம் கிடைச்சா நம்ம எல்லாருக்கும் எடுத்துட்டு வாரேன்”

”கெடைக்கலீன்னாலும், யார்கிட்டயாவது கைமாத்து வாங்கியாவது எடுத்துட்டு வாங்க. நாம முத நாள் எடுத்துக் கூட சமாளிச்சுகலாம். அவந்தான் ரெம்ப ஏங்குறாம். சொல்லிப் புரிய வைக்க முடியாத வயசு”

“சரி பாக்குறேன், சாப்பாடு எடுத்து வை, நேரமாச்சு”

நாமக்கல் சுந்தரமூர்த்தி வீதியில் இருக்கும் லாரி சர்வீஸ் அலுவலக மாடி, முதலாளி அறை. கையதுகட்டி, வாயது பொத்தி மெய்யது வளைந்துங்கிறாப்ல நின்னாரு ஜோசப் முதலாளி முன்னாடி.

“என்ன” ன்னு கேட்டா கிரீடம் இறங்கிடுமோ என்னவோ, புருவத்த மட்டும் உயர்த்தினாரு

“நம்ம 1030 தடுமாறுதுங்க”

“1030 தான் நான் முதல்ல வாங்கின வண்டி. அத வச்சுத்தான் இவ்வளவு வண்டியாக்கிருக்கேன். அதக் குத்தம் சொல்லாதே”

“இல்லைங்க கொஞ்சம் ஸ்பீடு போனாலே தடுமாறுது, பிரேக்கும் கண்ட்ரோல்ல இல்லை”

“இதுக்கு முன்னாடி ஓட்டுனவங்கல்லாம் இவ்வளவு கம்ப்ளைண்ட் சொன்னது இல்ல, நீதான் எப்பப் பாத்தாலும்”

“பிரேக் மட்டும் பாத்துத் தரச் சொல்லுங்க”

“இன்னைக்கு ஒரு நாள் ஒட்டு நாளைக்கு நிறுத்திச் சரி பண்ணலாம்”

நாமக்கல் கரூர் ரோட்டில் ஊர்க் கடைசியில் இருந்து ஒதுக்குபுறம். வரிசையாக இருந்த 4 வீடுகளில் முதல் வீட்டிலிருந்த சாந்தியம்மா,“வாங்க வாங்க” மகனையும் மருமகளையும் வரவேற்றார்.

“நங்க வாரது இருக்கட்டும், நீங்க எப்படி இருக்கீங்க?” பாசமாய்க் கேட்டாள் மகள்.

”நான் நல்லாத்தா இருக்கேன். லேசாக் காய்ச்சல் இப்பச் சரியாயிடுச்சு”

“இப்படி ஒத்தயில கிடந்து கஷ்டப்படுறது சரியா” உரிமையாய்க் கோபித்தான் சங்கர்.

“என்ன செய்யிறது அவரு கட்டுன வீடு, போற உசிரு இதுலதான் போகனும்னு நெனைக்கேன்”

எல்லோரும் பொதுவான விஷயங்களைப் பேசி இருந்துவிட்டுக் கிளம்பினார்கள். கிளம்பும் போது கரன்ட் கட்டானது.

“கரண்ட் இல்லாத நேரத்துல கிளம்ப வேண்டாம். இருந்துட்டு கரண்ட் வந்த்தும் போங்க”

ரிசையாக இருந்த 4 வீடுகளில் இரண்டாவது வீட்டில் அப்துல்லா, “இந்த ட்ரெஸ் எனக்குப் பிடிக்கலைம்மா.”

“இந்த ரம்ஜானுக்குப் போட்டுக்கலாம். அடுத்து உனக்க்குப் பிறந்த நாள் வருதுல்ல அப்ப உனக்குப் பிடிச்ச மாதிரி எடுத்துக்கலாம்.” சமாதானப் படுத்தினாள் சுபைதா.

“எனக்குப் பிடிக்கல”

“சரி சரி சத்தம் போடாத வாப்பா அடிப்பாக”

நாமக்கல் கரூர் ரோட்டில் ஊரைத்தாண்டியதும், லாரியை ஓட்டியவாறே ஸ்டீபன் கிளீனரிடம், “சடை வண்டிடா இது, இது ஓட்டுறதுக்குள்ள ஆத்தா கொடுத்த பாலெல்லாம் வெளீல வந்திரும் போல இருக்கு. சீக்கிரம் வேற இடம் பாக்க வேண்டியதுதான்”

“அண்ணே அட்வான்ஸ் நெறைய வாங்கியிருக்கேன்னு சொல்லுவீங்க, எப்படிண்ணே திருப்பிக் கொடுப்பீங்க?”

“ஆமடா அதுதான் பிரச்சினை. வேற வழியும் தெரியல. ஒரு சிகரெட் கொடுடா”

“இந்தாங்கண்ணே” கூடவே தீப்ப்ட்டியும் கொடுத்தான்.

சிகரெட்டை வாயில் வைத்து ஸ்டீரிங் வீலை கைமுட்டியில் பேலன்ஸ் செய்தவாறே குனிந்து பத்தவைத்தார்.

“அண்ணே” அலறின்னான் கிளீனர்.

எதிரே அசுரத்தனமாக வந்த லாரியை தவிர்க்க நினைத்து வேகமாகத் திருப்பி பிரேக்கை அழுத்தினார்.

செப்டம்பர் 14 தினமலர் நாளிதழில் செய்தி.

நாமக்கல் கரூர் ரோட்டில் நேற்று கட்டுப்பாடிழந்த லாரி சாலையோர வீடுகளில் மோதி விபத்துக்குள்ளானதில் சாந்தியம்மா(48), சங்கர்(27), மைதிலி(23), ரஷீட்(30). சுபைதா(25), அப்துல்லா(6) ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திலேயே பரிதாபம இறந்தனர். லாரி ஓட்டுனர் இறங்கித் தப்பி ஓடினார். போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள்.

கதம்பம் – 6-10-08

”அவன்தான் மனிதன்” திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் சிங்கப்பூர் மலர்க் கண்காட்சியில் படமாக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் கவியரசு கண்ணதாசன் அதற்கான பாடலை எழுத தாமதம் செய்து கொண்டிருந்தார். எம் எஸ் வி யும் அடிக்கடி கண்ணதாசனை போனில் அழைத்து, “அண்ணே மே மாதம் சூட்டிங் இன்னும் பாட்டு எழுதல” ன்னு சொல்லீட்டே இருந்திருக்காரு.

ஒரு முறை அவ்வாறு அழைக்கும் போது கண்ணதாசன், “என்ன விஸ்வநாதா மே மே ன்னு கத்துற, இந்தா பிடி ” ன்னு ஒரு பாட்டு சொன்னாரு.

அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே

அந்தப் பாட்டு முழுவதும் இப்படி மே – யில்தான் முடியும்.

நீங்களும் கேட்டுப் பாருங்க – இங்கே

*****************************************************************

இந்த முறை சென்னை சென்று, திட்டமிட்டபடி திரும்ப முடியாததால் பதிவு செய்திருந்த டிக்கட்டைக் கேன்சல் செய்துவிட்டு, அடுத்த நாள் ஓப்பன் டிக்கட்டில் திரும்ப வரும்படி ஆயிற்று.

இம்மதிரி சமயங்களில் ஓப்பன் டிக்கட் எடுத்து 3 a/c – ல் பர்த் வாங்கி வந்துவிடுவேன். இம்முறை கூட இருவர் வந்ததால் முடியவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தவாறே பிளாட்பார்மில் அமர்ந்திருந்தேன்.

வெஸ்ட் கோஸ்ட் வண்டியில் சார்ட் ஒட்டுபவர், இரண்டு பெட்டிகளில் கோச் எண் மட்டும் ஒட்டி விட்டு சார்ட் ஒட்டாமல் சென்றார். கேட்டதற்கு, “ இந்த ரெண்டு கோச்சும் ஈரோடு கோட்டா, அது வரைக்கும் காலியாகத்தான் போகும். நீங்க இதுல ஏறிக்குங்க TTE யிடம் சொல்லி பர்த் வாங்கிகுங்க” அப்படின்னார். அது போலவே வசதியாக 3 பேரும் வந்து சேர்ந்தோம்.

என் கேள்வி என்னனா; ஏன் ஈரோடு வரை அதைக் காலியா ஓட்டனும்? ஜெனெரல் கோச்சுல அவ்வளவு அடிதடி நடக்க இங்க கோச்சே காலியா வருவது சரியா? ரயில்வே நிர்வாகம் இந்தத் தகவலை பயனிகளுக்குச் சொல்லாமல் இருப்பது சரியா? இது போல் வசதி வேறு எந்த வண்டிகளில் எல்லாம் இருக்கு?

***************************************************************

டிப்ளொமோ படிக்கும் போது நண்பர்கள் மூலமாக எம் எஸ் உதயமூர்த்தி புத்தகங்கள் அறிமுகமானது. அவரின் சிந்தனை தொழில் செல்வம் புத்தகம் என்னை மிகவும் பாதித்த ஒன்று. அதன் தாக்கத்தில்தான் சொந்தத் தொழில் செய்வது என்று உறுதி பூண்டேன்.

வெவ்வேறு நிறுவனங்களில், பலதரப்பட்ட பதவிகளில் அனுபவங்களைச் சேகரித்துக் கொண்டு 2001ல் தொழில் தொடங்கினேன். ஆரம்ப சிரமங்களைக் கடந்து நல்ல விதமாக நடந்து வருகிறது.

காசு பணம் கொஞ்சமாகச் சேர்த்தாலும், பத்திருபது பேருக்கு வேலை தரமுடிகிற சந்தோஷம் இருக்கிறது.

இதெல்லாம் இரு மாதங்கள் முன்பு வரை. இப்பொழுது மின் தடை என்னைப் போன்ற முதல் தலைமுறை தொழில் தொடங்கியவர்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது. அதிலும் இன்றிலிருந்து தினம் 8 மணி நேர மின் தடை என்பது குரல்வளையை நெரிப்பது போல்தான்.

ஒரு வாரத்திற்கு 6 வேலை நாட்கள். 6×24 = 144 மணி நேரம்.

தினம் 8 மணி நேரம் மின்தடை. 5X8 = 40 மணி நேரம்

சனிக்கிழமை காலை 6 மணியிலிருந்து ஞாயிறு காலை 6 மணிவரை தொழிலகங்கள் வேலை செய்யக் கூடாது ( பவர் ஹாலிடே) = 24 மணி நேரம்

மொத்தம் = 40 + 24 = 64 மணி நேரம்

சத வீதத்தில் 64/144 = 44 %

ஆக வெறும் 56% சதவீதம் மின்சாரத்தைக் கொண்டு உற்பத்தி செய்ய வேண்டும்.

இதில் கொடுமையான விஷயம் என்னன்னா, மதியம் 12 மணியிலிருந்து 3 மணிவரை மிந்தடை என்று அறிவிக்கப் பட்டிருந்தாலும் அதற்கு முன்போ அல்லது பின்போ அறிவிக்கப்படாத மின் வெட்டு இருந்து கொண்டேதான் இருக்கிறது.

பகலில் ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை மின்சாரம் இல்லாததால் சம்பளத்துடன் ஓய்வும் அளித்து, அதே வேலையை இரவில் முடிக்க இரு மடங்கு சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கிறது. எப்படிச் சமாளிப்பது?

என் தொழிலுக்கு ஜெனெரேட்டர் உதவாது. அப்படியே உபயோகித்தாலும் 5.40 காசுக்குக் கிடைக்கும் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 11 முதல் 12 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இதை யாரிடம் சொல்லி முறையிடுவது. இதில் கொடுமை இந்த மாதம் அக்-2 காந்தி ஜெயந்தி, அக்-8,9 பூஜா விடுமுறை, அக் 25,26,27,28 வரை தீபாவளி விடுமுறை. 29 ஆம் தேதியும் பாதிபேர்தான் வேலைக்கு வருவார்கள்.

*********************************************************

ச.முத்துவேல் வலை முகவரி அனுப்பியிருந்தார் வெயிலான். நன்றாக எழுதும் இவருக்கு அதிகப் பின்னூட்டங்கள் இல்லை, எனினும் தொடர்ந்து எழுதுகிறார்.

அவரின் ஒரு கவிதையை இங்கே தருகிறேன் மீதியை அவர் வலைப்பூவில் படித்துப் பாருங்கள்.

தனியறையில்
பின்னிரவில்
பேய்க்கதைப் படித்துவிட்டு
எதற்கெடுத்தாலும்
மிரண்டுவிட்டுப் பின்
பகுத்தறிவோடு
சிரித்துக்கொள்கிறான்
‘நாளை படித்திருந்தால்
பேயும்
நாளை வந்திருக்குமோ!’

*************************************************************

டாக்டர் இந்த ஆபரேஷன் முடிஞ்சதுக்கு அப்புறம் பேஷண்ட் கிட்ட நாங்க பேசலாமா?

நீங்க தாராளமாப் பேசலாம்…!

பரிசல் போட்ட 50,000 – வாழ்த்து(ங்)கள்.

பதிவு எழுத வந்த குறுகிய காலத்திலேயே 50,000 ஹிட்டுக்களை கடந்த பரிசல்காரனுக்கு , வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்யுங்கள்.

டிஸ்கி : பதிவு எழுதி ஹிட்டுக்குக் காதிருக்கையில், ஹிட்டையே பதிவாகப் போடும் அளவுக்கு வளர்ந்த பரிசல் மேல் பொறாமையாக இருக்கிறது.