வாசிப்பு

வெளிவாங்கும் காலம்.

 

கொங்கு வட்டார வழக்கில் எழுதுவதில் பெருமாள் முருகன், மணல்வீடு ஹரிகிருஷ்ணன் வரிசையில் வைத்துப் பாராட்டத் தக்கவர் என்.ஸ்ரீராம்.

கொங்கு வட்டார வழக்கு என்றாலும் கோவைப் பகுதியில் பேசுவதும், ஈரோட்டுப் பக்கம் பேசுவதும் சற்று வித்தியாசமாக இருக்கும். இவர் தாராபுரத்துக்காரர் என்பதால், அந்தப் பகுதி கொங்கு வட்டார வழக்கு இவரது கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

14 கதைகள் கொண்ட இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் அனைத்தும் கணையாழி, தீராநதி, படித்துறை போன்ற சிற்றிழிதழ்களில் ஏற்கனவே வெளியானவை. அதில் சில பரிசு பெற்ற கதைகள்.

தலைப்புக் கதையான வெளிவாங்கும் கதை, தன் அப்பாவிற்கெதிராக மகன் எடுக்கவிழையும் ஆயுதம் பற்றியது. நம் எல்லோருக்குள்ளும் அத்தகைய வெறுப்பு அப்பா மீதிருந்ததும் பின்பு அது நீர்த்துப் போனதையும் வெளிக்காட்டும் கதை.

என்றாலும் எனக்குப் பிடித்த கதை நெட்டுக்கட்டு வீடுதான். வேலைக்காரர்களிடம் நாம் வரம்பற்று, நம்மை மீறிப் பேசிவிடுவதும் அதன் பின்விளைவும். செல்லியக் கவுண்டர்களையும், ராமையாக் கம்மாளனையும் நம் தினவாழ்வில் எதிர்கொள்கிறோம், வேறுவேறு விதங்களில்.

கோழி திருடுபவன் பற்றிய “ஆதாயவாதிகள்” சிறுகதை என் பால்யவயதில் நான் பார்த்துப் பிரமித்த பண்டாரப் பெரியப்பாவை ஞாபகமூட்டியது. தலையாரி வேலை பார்த்தவர். என்றாலும், கோழி திருடுவது அவரது பிறவிக் குணம். ஈரச்சாக்கைப் போட்டுத் தொழுவத்தில் இருக்கும் கோழியைச் சத்தமில்லாமல் லவட்டுவதில் சூரர்.

கவுண்டர்களுக்கும் தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கும் இடையே காலகாலமாக ஓடிக் கொண்டிருக்கும் பகை, சிறுகதைகளின் அடிநாதமாக வெளிப்படுகிறது. ”என்னைக்கும் எரும மேல ஏறினா சவாரி, எஜமாங்க மேல ஏறின ஒப்பாரி, இனிமேலவது புரிஞ்சு நடந்துங்கடா” என்ற வரிகளில் தெறிக்கும் வன்மமும் குரோதமும் விவரிக்க இயலாதது. உன்மையில், இந்த ஏற்றத் தாழ்வுகளில் இருந்து அவர்களை விடுவிக்காதவரை சமஉரிம, சமூகநீதி  என்பதெல்லாம் வெறுமனே பெயரளவில்தான்.

நகரவாழ்வின் தினசரி நெருக்கடிகளிலிருந்து, ஓய்வெட்டுத்து ஆசுவாசப்படுத்த சொந்த ஊருக்குப் போவது போன்ற அனுபவத்தைத் தருகிறது இக்கதைகள். அந்த மண்ணும் மக்களும் அச்சு அசலாய் நம் கண்முன்னே. தாமரை நாச்சி, சிவபாலக் கவுண்டர், தரகுக்காரன், முனி போன்றவர்களையும் தாராபுரம் மண்ணையும் தரிசித்து வரலாம்.

முகிலினி – பாய்ந்தோடும் கசப்பு

 

 

70களின் இறுதியில் தென்னக நூற்பாலைகள், போனஸ் கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. பழநியிலுள்ள விஜயகுமார் மில்ஸ் மட்டும் தொடர்ந்து இயங்கியது. “டேய், சைமால எவ்வளவு சதவீதம் முடிவாகுதோ அதைவிட 2% அதிகமா போனஸ் தர்றேண்டா, போய் வேலையைப் பாருங்க” என ஆலை முதலாளி உறுதியளித்ததால். சைமாவில் 35% என முடிவாகியதால்; 37% கொடுத்தார். தீபாவளிக்கு 25% என்றும் பொங்கலுக்கு 12% என்றும்.

வெகுநாட்களுக்கு இதைப் பெருமையாகக் கூறிக்கொண்டிருந்தேன், 83ல் டிப்ளமோ படிக்க, கோவை பிஎஸ்ஜிக்கு வரும் வரை. ஒருமுறை வகுப்புத் தோழன் அய்யாசாமி சொன்னான், “இதெல்லாம் என்ன போனசு, எங்க விஸ்கோஸ்ல குடுப்பாங்க 55% . ஒரு சூட்கேஸ்ல பணத்தை அடுக்கி சூட்கேசோட கொடுத்திருவாங்க”. வெகு ஆண்டுகளுக்கு அந்தப் பிரமிப்பு விலகாமல் இருந்தது. அதன் பிறகு விஸ்கோசில் நடந்ததெல்லாம் ஒரு துன்பவியல் சரிதம். இரா.முருகவேளின் “முகிலினி” நாவல் அதை விரிவாக அலசுகிறது.

நாவலின் மையச்சரடு பவாணி ஆறுதான். நதிக்கரையில் தோன்றிய விஸ்கோஸ் ஆலை நதியைச் சார்ந்தியங்கிய மக்கள், அவர்களின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித்தல், வாழ்வு முறை, உறவுகள் ஆகியவற்றில் ஏற்படுத்திய பாதிப்புகளை, மூன்று தலைமுறைக்காலம் நீண்டிருக்கும் நாவல் பேசுகிறது.

பாக்கிஸ்தான் பிரிவினையில் ஏற்பட்ட பெரும்சேதங்களில் வெளியே தெரியாத ஒன்று, இந்தியாவில் இருந்த நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சு விளைவிக்கும் நிலப்பகுதியில் பெரும்பான்மை பாக்கிஸ்தான் பக்கம் போய்விட்டதுதான். பஞ்சுத் தட்டுப்பாட்டைப் போக்க என்ன வழி என யோசிக்கும், கோவையின் மிகப் பெரிய நூற்பாலையின் முதலாளி கஸ்தூரிசாமியும் அவரது மனைவி சௌதாமினியும் எடுக்கும் முடிவுதான் செயற்கை நூலிழையை உற்பத்தி செய்வது.

செயற்கை நுலிழையை பெட்ரோலியப் பொருட்கள் மூலமாகவோ அல்லது மரக்கூழ் மூலமாகவோ தயாரிக்கலாம். இவர்கள் இரண்டாம் முறையைத் தேர்வு செய்கிறார்கள். இத்தாலியிலுள்ள விஸ்கோஸா ஆலையுடன் பங்கு ஒப்பந்தம் செய்துகொண்டு, தேவையான எந்திரங்களையும், மூலப்பொருட்களையும் அவரகளிடமிருந்தே பெற்று, உற்பத்தியை ஆரம்பிக்கிறார்கள்.

ஆலை, சார்ந்தோர் வாழ்வில் ஏற்படுத்தும் நேரிடையான மற்றும் மறைமுகமான ஏற்றம் அலசப்படுகிறது; ஊழியர் ராஜு மூலம். அடிப்படையில் தமிழார்வமும் திராவிடக் கட்சியின் மீது அபிமனமும் கொண்ட அவர் பின்னாட்களில் அரசியல் செயல்பாடுகள் குறித்து விரக்தியுறுவது, நிதர்சனமாக் வெளியாகிறது. அதே நேரம் கோவையிலிருக்கும் மற்ற மில்கள் செயலிழந்து மூடப்படுவதும், பெரிய ஆலைகள் நிரந்தர ஊழியர்களை வீட்டுக்கனுப்பி ஒப்பந்த அடிப்படையில் பெண்பிள்ளைகளைக் கொண்டு இயங்குவதும், அதன் மூலம் வீழ்ச்சியுறும் வாழ்வை ஆரான் மூலமும் சொல்லியிருக்கிறார். கோவை நுற்பாலைகளில் “சுமங்கலி திட்டம்” என்றால் என்ன என்று விசாரித்தறியுங்கள் நாம் உடை அணியும் ஒவ்வொரு முறையும் கூசிப்போய்விடுவோம்.

இயற்கை விவசாயத்தின் மீது காதல் கொண்டிருக்கும் திருநாவுக்கரசின் செயல்பாடுகள் மூலமாக, ஆர்கானிக் பொருட்கள் என்ற பெயரில் நடக்கும் வியாபாரச் சீரழிவுகளையும், அது மக்கள் மனதில் ஏற்படுத்தி இருக்கும் மாயையும் தெளிவாக்குகிறார்.

இந்த நாவலை பல நாவல்களாக பி(வி)ரித்தெழுதியிருக்கலாம் முருகவேள், அத்தனை அடர்த்தி. உண்மையான மனிதர்கள் வேறு பெயர்களில் உலவுவதும், சற்றே முலாம் பூசிய உன்மைச் சம்பவங்களும், குறைந்த சதவீதம் புனைவு கலந்ததுமான நல்லதொரு நாவல்.

காங்கிரஸ், ஜனதா, கம்யூனிச, திராவிட அரசியலை விவரிக்க முருகவேள் எடுத்திருக்கும் முயற்சியும், அதன் பின்னுள்ள உழைப்பும் அபாரம். நாவலில் இழையோடும் கருப்பையும் அதனால் வந்த கசப்பையும் குறிக்கும் விதமாக, நாவலின் அட்டைப்படம் கருப்பு வண்ணத்தில் அமைந்திருப்பது சிறப்பு.

கதம்பம் – 30/12/08

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு புத்தாண்டும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளையும், சவால்களையும்அதை சாதிக்க புது உத்வேகத்தையும் அளிப்பதாகத்தான் இருக்கிறது.

******************************************************************

காந்தியடிகளால் இந்தியாவின் சொத்து என்று புகழப்பட்ட ஜீவா, வீதியில் கையில் ஒரு துணிப்பையுடன் வேகவேகமாய் நடந்து செல்கிறார். எதிரே வரும் அவரது நண்பர் ஜீவாவைப் பார்த்து , “ தோழர் ஜீவா, ஏன் நடந்து செல்கிறீர்கள்?

அதற்கு ஜீவா, “ பஸ்ஸில் செல்வதற்கு காசில்லை. அதான் நடந்து செல்கிறேன் என்றார்.

அது சரி கையிலே என்ன வச்சிருக்கீங்க?”

தோழர்கள் கொடுத்த கட்சி நிதிஎன்றார் ஜீவா.

பஸ்ஸிற்குத் தேவையான காசை அதிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது தானே?” என்றார் நண்பர்.

கட்சி நிதின்னு தோழர்கள் தந்த பணத்திலிருந்து ஒரு சல்லிக்காசு எடுத்தால் கூட அது பெரிய குற்றம். அந்தக் கணக்கை அப்படியே கட்சி அலுவலகத்தில் ஒப்படைப்பது தான் அவர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றும் செயலாக இருக்கும்என்றபடியே நடையைக் கட்டினார் ஜீவா.

பெருமூச்சு விடுவதைத் தவிர நம்மால் ஒன்றும் செய்ய இயலாது இப்பொழுது.

*********************************************************************

தமிழுக்கு சாகித்ய அகாடமி வழங்கும் விருது ெரும்பாலும் விமர்சனங்களுட்பட்டே இருந்திருக்கிறது. ஒரு விதி விலக்காக இந்த வருடம் யாரும் விரல் நீட்டிக் குறைபட முடியாத, முழுவதும் தகுதி உள்ள ஒருவருக்குக் கிடைத்திருக்கிறது.

பிரபல மிழ் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்குமின்சாரப்பூஎன்ற அவரது சிறுகதை தொகுப்பிற்காக அரசின் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மேலாண்மறைநாட்டை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (59). ஊர் பெயரையும் சேர்த்து மேலாண்மை பொன்னுச்சாமி என அழைக்கப்படுகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் துணைச் செயலாளரான இவர், 5ஆ‌ம் வகுப்புவரை படித்துள்ளார், பலசரக்கு கடை வைத்துள்ளார்.

இவரது சிபிகள் என்ற சிறுகதைத் தொகுப்பை வாசித்துள்ளேன். ஒரு கிராமத்திலிருந்து டவுனுக்குக் கிளம்பும் டவுன் பஸ்ஸில் ஏறும் பயணிகளின் மன நிலையை பதிந்திருப்பார். யாரும் யாருக்கும் எதையும் விட்டுத்தரத் தயாராக இல்லாத உறுதியுடன் இருப்பர். ஆனால் சக பயணியான நிறைமாதக் கர்ப்பிணிக்கு பிரசவ வலி எடுத்ததும் எல்லோரும் அவரவர் வழியில் உதவுவதுடன், ஒத்துழைப்பும் நல்குவர்.

இந்த வித்தியாச மன நிலையை மிக அழகாகப் படம் பிடித்திருப்பார். அவரது கதை மாந்தர்கள், இத்தரத்தினரே.

விருது பற்றிய மாதவராஜின் பதிவு .

***************************************************************

எது கவிதை என்பதில் அவரவருக்கான அபிப்ராயம் அவரவருக்கு, எனினும்பொதுவான கருத்து அது எழுதியவர் உணர்ந்ததை படிப்பவருக்குக் கடத்தவேண்டும் என்பதே.

கவிதை என்பதற்கான இலக்கணம் வெவேறெனினும், மேற்ச்சொன்ன இலக்குஎட்டப்படுமாயின், அது எவ்வாறாக இருப்பினும் கவிதைதான்.

விகடனில் வெளியானஇந்த முத்திரைக் கவிதைகள் அவ்வகை.

மனசு

சோகக் கலவை
பூசிய முகங்கள்
எறும்புத் தொடர்தலாய்
துக்க விசாரிப்புகள்
இறுதிச் சடங்குகளில்
இனிய நண்பன்
கவலைக்குள் முங்கி
தேகம் நனைக்கையில்
ஆசையில் நினைத்தது
நேற்றிரவு நான் வாங்கிய
பத்தாயிரக் கடனை
பத்தினியிடம்
சொல்லியிருப்பானா..?

பா.கீதா வெங்கட்

உயிரின் ஒலி

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை

மகுடேசுவரன்

செவலையெனும் சித்தப்பு

அப்பா போனதுக்கப்புறம்
செவலைதான்
எங்களுக்கு சோறுபோட்டுச்சு.

மூட்டை ஏத்தி வந்தப்ப
கால்முறிஞ்ச செவலையை
அடிமாடாய் ஏற்றிப்போனான் யாவாரி.

எங்களை விட்டுப் பிரிந்த
செவலை இறந்துபோனாலும்
எந்தத் தப்பிலாவதும்
தவுலிலாவதும்
அழுதுகொண்டுதானிருக்கும்
எங்களைப்போல.

சிவராஜ்

***************************************************

ரயிலில் இரு பெண்மணிகள், சுமார் 35 வயதிருக்கும், தங்களுக்குள் யார் வயதுகுறைவு என்பது குறித்து வாக்குவாத்தில் ஈடுபட்டனர், பிரண்ட்லியாகத்தான். இருவரும் தங்கள் வயது 25 லிருந்து ஒன்றோ இரண்டோதான் அதிகம் என்பதைநிறுவ மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்.

பொறுக்க முடியாமல் அருகில் அமர்ந்திருந்த 50 வயசுக்காரர் எழுந்து சொன்னார்,

என்னக் கொஞ்சம் அப்பர் பெர்த்துக்கு ஏத்தி விடுறீங்களா?”

ஏங்க

இல்ல எனக்கு வயசு 12 தான் ஆச்சு , மேல ஏற முடியாது, அதுதான்


கதம்பம் – 30/12/08

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு புத்தாண்டும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளையும், சவால்களையும்அதை சாதிக்க புது உத்வேகத்தையும் அளிப்பதாகத்தான் இருக்கிறது.

******************************************************************

காந்தியடிகளால் இந்தியாவின் சொத்து என்று புகழப்பட்ட ஜீவா, வீதியில் கையில் ஒரு துணிப்பையுடன் வேகவேகமாய் நடந்து செல்கிறார். எதிரே வரும் அவரது நண்பர் ஜீவாவைப் பார்த்து , “ தோழர் ஜீவா, ஏன் நடந்து செல்கிறீர்கள்?

அதற்கு ஜீவா, “ பஸ்ஸில் செல்வதற்கு காசில்லை. அதான் நடந்து செல்கிறேன் என்றார்.

அது சரி கையிலே என்ன வச்சிருக்கீங்க?”

தோழர்கள் கொடுத்த கட்சி நிதிஎன்றார் ஜீவா.

பஸ்ஸிற்குத் தேவையான காசை அதிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது தானே?” என்றார் நண்பர்.

கட்சி நிதின்னு தோழர்கள் தந்த பணத்திலிருந்து ஒரு சல்லிக்காசு எடுத்தால் கூட அது பெரிய குற்றம். அந்தக் கணக்கை அப்படியே கட்சி அலுவலகத்தில் ஒப்படைப்பது தான் அவர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றும் செயலாக இருக்கும்என்றபடியே நடையைக் கட்டினார் ஜீவா.

பெருமூச்சு விடுவதைத் தவிர நம்மால் ஒன்றும் செய்ய இயலாது இப்பொழுது.

*********************************************************************

தமிழுக்கு சாகித்ய அகாடமி வழங்கும் விருது ெரும்பாலும் விமர்சனங்களுட்பட்டே இருந்திருக்கிறது. ஒரு விதி விலக்காக இந்த வருடம் யாரும் விரல் நீட்டிக் குறைபட முடியாத, முழுவதும் தகுதி உள்ள ஒருவருக்குக் கிடைத்திருக்கிறது.

பிரபல மிழ் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்குமின்சாரப்பூஎன்ற அவரது சிறுகதை தொகுப்பிற்காக அரசின் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மேலாண்மறைநாட்டை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (59). ஊர் பெயரையும் சேர்த்து மேலாண்மை பொன்னுச்சாமி என அழைக்கப்படுகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் துணைச் செயலாளரான இவர், 5ஆ‌ம் வகுப்புவரை படித்துள்ளார், பலசரக்கு கடை வைத்துள்ளார்.

இவரது சிபிகள் என்ற சிறுகதைத் தொகுப்பை வாசித்துள்ளேன். ஒரு கிராமத்திலிருந்து டவுனுக்குக் கிளம்பும் டவுன் பஸ்ஸில் ஏறும் பயணிகளின் மன நிலையை பதிந்திருப்பார். யாரும் யாருக்கும் எதையும் விட்டுத்தரத் தயாராக இல்லாத உறுதியுடன் இருப்பர். ஆனால் சக பயணியான நிறைமாதக் கர்ப்பிணிக்கு பிரசவ வலி எடுத்ததும் எல்லோரும் அவரவர் வழியில் உதவுவதுடன், ஒத்துழைப்பும் நல்குவர்.

இந்த வித்தியாச மன நிலையை மிக அழகாகப் படம் பிடித்திருப்பார். அவரது கதை மாந்தர்கள், இத்தரத்தினரே.

விருது பற்றிய மாதவராஜின் பதிவு .

***************************************************************

எது கவிதை என்பதில் அவரவருக்கான அபிப்ராயம் அவரவருக்கு, எனினும்பொதுவான கருத்து அது எழுதியவர் உணர்ந்ததை படிப்பவருக்குக் கடத்தவேண்டும் என்பதே.

கவிதை என்பதற்கான இலக்கணம் வெவேறெனினும், மேற்ச்சொன்ன இலக்குஎட்டப்படுமாயின், அது எவ்வாறாக இருப்பினும் கவிதைதான்.

விகடனில் வெளியானஇந்த முத்திரைக் கவிதைகள் அவ்வகை.

மனசு

சோகக் கலவை
பூசிய முகங்கள்
எறும்புத் தொடர்தலாய்
துக்க விசாரிப்புகள்
இறுதிச் சடங்குகளில்
இனிய நண்பன்
கவலைக்குள் முங்கி
தேகம் நனைக்கையில்
ஆசையில் நினைத்தது
நேற்றிரவு நான் வாங்கிய
பத்தாயிரக் கடனை
பத்தினியிடம்
சொல்லியிருப்பானா..?

பா.கீதா வெங்கட்

உயிரின் ஒலி

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை

மகுடேசுவரன்

செவலையெனும் சித்தப்பு

அப்பா போனதுக்கப்புறம்
செவலைதான்
எங்களுக்கு சோறுபோட்டுச்சு.

மூட்டை ஏத்தி வந்தப்ப
கால்முறிஞ்ச செவலையை
அடிமாடாய் ஏற்றிப்போனான் யாவாரி.

எங்களை விட்டுப் பிரிந்த
செவலை இறந்துபோனாலும்
எந்தத் தப்பிலாவதும்
தவுலிலாவதும்
அழுதுகொண்டுதானிருக்கும்
எங்களைப்போல.

சிவராஜ்

***************************************************

ரயிலில் இரு பெண்மணிகள், சுமார் 35 வயதிருக்கும், தங்களுக்குள் யார் வயதுகுறைவு என்பது குறித்து வாக்குவாத்தில் ஈடுபட்டனர், பிரண்ட்லியாகத்தான். இருவரும் தங்கள் வயது 25 லிருந்து ஒன்றோ இரண்டோதான் அதிகம் என்பதைநிறுவ மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்.

பொறுக்க முடியாமல் அருகில் அமர்ந்திருந்த 50 வயசுக்காரர் எழுந்து சொன்னார்,

என்னக் கொஞ்சம் அப்பர் பெர்த்துக்கு ஏத்தி விடுறீங்களா?”

ஏங்க

இல்ல எனக்கு வயசு 12 தான் ஆச்சு , மேல ஏற முடியாது, அதுதான்


பாலபாரதியின் புத்தகம் – விமர்சனங்கள்


தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருப்பீர்களா? ‘ஆமாம், ஒரே ஒரு முறை நினைத்திருக்கிறேன்’ என்று சொல்பவர்கள் நம்மில் அனேகர் உண்டு.

உடலளவில் ஆணாகவும், மனத்தளவில் பெண்ணாகவும் இருக்கும் சிலருக்கு வாழ்க்கை எப்படியிருக்கும்? தினம் தினம் செத்துப் போகலாம் என்று நினைத்துக் கொண்டே வாழ்க்கையை எப்படியாவது முழுமையாக வாழ்ந்து தீர்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படுபவர்களே இவர்கள்.

தங்கள் வாழ்க்கையின் அவலத்தைப் பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு திருநங்கை – வாழ முடியவில்லையே என்ற ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டாள். அடுத்த நாள் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வருகிறது.

எனது தந்தையின் மரணமும், தங்கையின் மரணமும் என்னை உலுக்கியதைவிட அந்தத் திரு நங்கையின் தற்கொலை என்னை அதிகம் நிலைகுலைய வைத்தது. இதைவிட சோகம் அந்தத் தற்கொலைச் சம்பவம், காவல்துறைப் பதிவுகளில் விபத்து என்றே பதிவு செய்யப் பட்டது.

பெண்களாகவும் இல்லாமல், ஆண்களாகவும் இல்லமல் திருநங்கைகளாக மாறியவர்களுக்கு வாழக்கையின் மீது இருக்கும் தீராக் காதலே இந்தப் புனைவு. – பின் அட்டை.

(‘அவன் – அது = அவள்’, எழுதியவர், யெஸ். பாலபாரதி, பக்கம், 184, விலை: ரூ. 120/-, தோழமை வெளியீடு, 5ஈ, பொன்னம்பலம் சாலை, கே.கே. நகர், சென்னை)

பைத்தியக்காரனின் விமர்சனம்இங்கே
சேவியரின் விமர்சனம்இங்கே
லக்ஷ்மியின் விமர்சனம்இங்கே

பாலபாரதியின் புத்தகம் – விமர்சனங்கள்


தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருப்பீர்களா? ‘ஆமாம், ஒரே ஒரு முறை நினைத்திருக்கிறேன்’ என்று சொல்பவர்கள் நம்மில் அனேகர் உண்டு.

உடலளவில் ஆணாகவும், மனத்தளவில் பெண்ணாகவும் இருக்கும் சிலருக்கு வாழ்க்கை எப்படியிருக்கும்? தினம் தினம் செத்துப் போகலாம் என்று நினைத்துக் கொண்டே வாழ்க்கையை எப்படியாவது முழுமையாக வாழ்ந்து தீர்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படுபவர்களே இவர்கள்.

தங்கள் வாழ்க்கையின் அவலத்தைப் பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு திருநங்கை – வாழ முடியவில்லையே என்ற ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டாள். அடுத்த நாள் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வருகிறது.

எனது தந்தையின் மரணமும், தங்கையின் மரணமும் என்னை உலுக்கியதைவிட அந்தத் திரு நங்கையின் தற்கொலை என்னை அதிகம் நிலைகுலைய வைத்தது. இதைவிட சோகம் அந்தத் தற்கொலைச் சம்பவம், காவல்துறைப் பதிவுகளில் விபத்து என்றே பதிவு செய்யப் பட்டது.

பெண்களாகவும் இல்லாமல், ஆண்களாகவும் இல்லமல் திருநங்கைகளாக மாறியவர்களுக்கு வாழக்கையின் மீது இருக்கும் தீராக் காதலே இந்தப் புனைவு. – பின் அட்டை.

(‘அவன் – அது = அவள்’, எழுதியவர், யெஸ். பாலபாரதி, பக்கம், 184, விலை: ரூ. 120/-, தோழமை வெளியீடு, 5ஈ, பொன்னம்பலம் சாலை, கே.கே. நகர், சென்னை)

பைத்தியக்காரனின் விமர்சனம்இங்கே
சேவியரின் விமர்சனம்இங்கே
லக்ஷ்மியின் விமர்சனம்இங்கே

கதைகளினூடாடும் வாழ்க்கை

எனக்கு கதைகள் எப்பொழுதும் போதையூட்டுவன.

சிறு வயதில் கேட்ட பாட்டி சொன்ன கதைகளாகட்டும், வளர்ந்து பின் மேனேஜ்மெண்ட் பயிற்சியில் புகட்டபட்ட கதைகளாகட்டும், தன்னளவில் வசீகரமானவை.

அம்புலிமாமா, முல்லை தங்கராசன் கதைகள், இரும்புக்கை மாயவி, விக்கிரமாதித்தன் சொல்லிக்கொண்டே போகலாம். அதிலும் இரும்புக்கை மாயவி ஒரு புதிய உலகை விரித்தது. கரண்ட்டில் கை வைத்து தன்னை மறைத்துக் கொண்டு வெறும் இரும்புக்கை செய்யும் சாகசங்கள் நம்பமுடியாதவையகவும், விரும்பதக்கதாகவும் இருந்தது.

கிராமத்திலிருந்து பழனிக்குச் செல்பவரிடம் பனம் தந்து புத்தகம் வாங்கி வரச் சொல்லி படிப்போம். சில நேரததில் நானே சென்று வாங்கியதும் உண்டு, வாங்கியவுடன் முதலில் படிக்க கிடைப்பது கூடுதல் சலுகை. பஸ் நிலைய புத்தகக் கடைக்குத்தான் மதுரையிலிருந்து பார்சல் வரும். வாங்கியவுடன் அங்கேயே அமர்ந்து படித்து விட்டுத்தான் பஸ் ஏறுவேன்.

9ஆம் வகுப்பு படிக்கும் போது பழனிக்கே குடி பெயர்ந்தோம். தேரடி வீதியிலுள்ள நூலகத்திற்கு என்னை அழைத்துச் சென்று நூலகரிடம் அறிமுகப்படுத்தினார் என் தந்தை. “எதை வேண்டுமானாலும் படிக்கக் கொடுங்கள். அவனாகப் படித்துத் தெளியட்டும்” என்று நூலகரிடம் சொல்லியபடியால், அவரும் தடை செய்யவில்லை. எத்தனை பேருக்கு இந்த மாதிரி அப்பா கிடைப்பாரிகள்? உண்மையிலேயே நான் அதிர்க்ஷ்டக்காரன்தான்.

ஓரு மாதம் போல இருக்கும். நூலகர் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார். “தம்பி சாண்டில்யன் நன்றாக இருக்கிறதா?” “இண்ட்ரஸ்டிங்காக இருக்கிறது சார்” “பரவாயில்லை எதற்கும் இந்தப் பத்தகத்தையும் முயற்சி பன்னு” என்று சொல்லி மாலன் எழுதிய கல்லிற்கு கீழும் பூக்கள் குடுத்தார்.

அரை மனதுடன்தான் படிக்க ஆரம்பித்தேன். அதில் ஒரு ஊணமுற்ற சிறுவன் ரயில் நிலயத்தில் வசிப்பவன். வாழ்க்கையை நேர்மறையாக் எதிர்கொள்வதை மிக யதார்த்தமாக எழுதியிருப்பார். ரயில் தண்டவாளத்தில் பரப்பப்பட்ட ஜல்லியில் முளைத்த ஒரு செடியிலிருந்து பூத்திருக்கும் ஒரு பூவுடன் சிருவனை ஒப்பிட்டு முடித்திருப்பர்.

அடுத்த நாள் நூலகரிடம் நண்றி கூறி அது போல வேறு புத்தகங்கள் தறுமாறு வேண்டினேன். ஓரு புது உலகம் விரிந்தது. நூலகரின் உதவியால் சுஜாதா, பாலகுமாரன், சுப்ரமனண்ய ராஜு, ராஜம் கிருக்ஷ்ணண், நீல பத்மனாபன், கு அழகிரி, கி.ராஜ நாராயனன் போன்றோர் எழுத்துக்கள் வாசிக்கக் கிடைத்தது.

சுஜாதாவின் கம்ப்யூட்டரை கற்றுக் கொள்வோம் மற்றும் சிலிக்கன் சில்லுப் புரட்சி இரண்டும் என் வாழ்வை மாற்றியமைத்த புத்தகங்கள். +2 வில் மோட்டார் ரிவைண்டிங் எடுத்து படித்தவனுக்கு கம்ப்யூட்டரை எளிதாகப் புரிய வைத்து அந்த துறையில் ஆர்வமூட்டியவர். என்னைப் போல் எவ்வளவு பேர் வாழ்க்கையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தூண்டுகோலாக இருந்திருகிறார் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

கோவையில் படிக்கும் பொழுது வெங்கடேஸ், முருகேசன் ஆகியோருடனான விவாதங்கள் புத்தகத்தை எப்படி படிக்க வேண்டும் என்பதைப் புரிய வைத்தது. வெங்கடேஸ் கி ரா வின் தம்பி பையன். எனவே மேலும் சிலரது எழுத்துக்கள் பரிச்சயமானது. முக்கியமாகக் கரிசல் எழுத்தாளர்கள்.

கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள தியாகு புக் செண்டர் மூலம் ஜெய மோஹன், நாஞ்சில் நாடன், எஸ் ராமகிருஸ்ணன், பெருமாள் முருகன், கோபால கிருஸ்ணன், கண்மணி குனசேகரன், ராஜ் கெளதமன் போன்ற பலரது எழுத்துக்களும் அறிமுகமானது.

தியாகு புக் செண்டர் மூலம் படித்தவற்றை விவாதிக்கவும், புதிதாகப் படிக்கப் பரிந்துரைக்கவும் நல்ல நண்பர்கள் குழு அமைந்ததும் நான் பெற்ற பாக்கியம்.

கதைகளினூடாடும் வாழ்க்கை

எனக்கு கதைகள் எப்பொழுதும் போதையூட்டுவன.

சிறு வயதில் கேட்ட பாட்டி சொன்ன கதைகளாகட்டும், வளர்ந்து பின் மேனேஜ்மெண்ட் பயிற்சியில் புகட்டபட்ட கதைகளாகட்டும், தன்னளவில் வசீகரமானவை.

அம்புலிமாமா, முல்லை தங்கராசன் கதைகள், இரும்புக்கை மாயவி, விக்கிரமாதித்தன் சொல்லிக்கொண்டே போகலாம். அதிலும் இரும்புக்கை மாயவி ஒரு புதிய உலகை விரித்தது. கரண்ட்டில் கை வைத்து தன்னை மறைத்துக் கொண்டு வெறும் இரும்புக்கை செய்யும் சாகசங்கள் நம்பமுடியாதவையகவும், விரும்பதக்கதாகவும் இருந்தது.

கிராமத்திலிருந்து பழனிக்குச் செல்பவரிடம் பனம் தந்து புத்தகம் வாங்கி வரச் சொல்லி படிப்போம். சில நேரததில் நானே சென்று வாங்கியதும் உண்டு, வாங்கியவுடன் முதலில் படிக்க கிடைப்பது கூடுதல் சலுகை. பஸ் நிலைய புத்தகக் கடைக்குத்தான் மதுரையிலிருந்து பார்சல் வரும். வாங்கியவுடன் அங்கேயே அமர்ந்து படித்து விட்டுத்தான் பஸ் ஏறுவேன்.

9ஆம் வகுப்பு படிக்கும் போது பழனிக்கே குடி பெயர்ந்தோம். தேரடி வீதியிலுள்ள நூலகத்திற்கு என்னை அழைத்துச் சென்று நூலகரிடம் அறிமுகப்படுத்தினார் என் தந்தை. “எதை வேண்டுமானாலும் படிக்கக் கொடுங்கள். அவனாகப் படித்துத் தெளியட்டும்” என்று நூலகரிடம் சொல்லியபடியால், அவரும் தடை செய்யவில்லை. எத்தனை பேருக்கு இந்த மாதிரி அப்பா கிடைப்பாரிகள்? உண்மையிலேயே நான் அதிர்க்ஷ்டக்காரன்தான்.

ஓரு மாதம் போல இருக்கும். நூலகர் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார். “தம்பி சாண்டில்யன் நன்றாக இருக்கிறதா?” “இண்ட்ரஸ்டிங்காக இருக்கிறது சார்” “பரவாயில்லை எதற்கும் இந்தப் பத்தகத்தையும் முயற்சி பன்னு” என்று சொல்லி மாலன் எழுதிய கல்லிற்கு கீழும் பூக்கள் குடுத்தார்.

அரை மனதுடன்தான் படிக்க ஆரம்பித்தேன். அதில் ஒரு ஊணமுற்ற சிறுவன் ரயில் நிலயத்தில் வசிப்பவன். வாழ்க்கையை நேர்மறையாக் எதிர்கொள்வதை மிக யதார்த்தமாக எழுதியிருப்பார். ரயில் தண்டவாளத்தில் பரப்பப்பட்ட ஜல்லியில் முளைத்த ஒரு செடியிலிருந்து பூத்திருக்கும் ஒரு பூவுடன் சிருவனை ஒப்பிட்டு முடித்திருப்பர்.

அடுத்த நாள் நூலகரிடம் நண்றி கூறி அது போல வேறு புத்தகங்கள் தறுமாறு வேண்டினேன். ஓரு புது உலகம் விரிந்தது. நூலகரின் உதவியால் சுஜாதா, பாலகுமாரன், சுப்ரமனண்ய ராஜு, ராஜம் கிருக்ஷ்ணண், நீல பத்மனாபன், கு அழகிரி, கி.ராஜ நாராயனன் போன்றோர் எழுத்துக்கள் வாசிக்கக் கிடைத்தது.

சுஜாதாவின் கம்ப்யூட்டரை கற்றுக் கொள்வோம் மற்றும் சிலிக்கன் சில்லுப் புரட்சி இரண்டும் என் வாழ்வை மாற்றியமைத்த புத்தகங்கள். +2 வில் மோட்டார் ரிவைண்டிங் எடுத்து படித்தவனுக்கு கம்ப்யூட்டரை எளிதாகப் புரிய வைத்து அந்த துறையில் ஆர்வமூட்டியவர். என்னைப் போல் எவ்வளவு பேர் வாழ்க்கையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தூண்டுகோலாக இருந்திருகிறார் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

கோவையில் படிக்கும் பொழுது வெங்கடேஸ், முருகேசன் ஆகியோருடனான விவாதங்கள் புத்தகத்தை எப்படி படிக்க வேண்டும் என்பதைப் புரிய வைத்தது. வெங்கடேஸ் கி ரா வின் தம்பி பையன். எனவே மேலும் சிலரது எழுத்துக்கள் பரிச்சயமானது. முக்கியமாகக் கரிசல் எழுத்தாளர்கள்.

கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள தியாகு புக் செண்டர் மூலம் ஜெய மோஹன், நாஞ்சில் நாடன், எஸ் ராமகிருஸ்ணன், பெருமாள் முருகன், கோபால கிருஸ்ணன், கண்மணி குனசேகரன், ராஜ் கெளதமன் போன்ற பலரது எழுத்துக்களும் அறிமுகமானது.

தியாகு புக் செண்டர் மூலம் படித்தவற்றை விவாதிக்கவும், புதிதாகப் படிக்கப் பரிந்துரைக்கவும் நல்ல நண்பர்கள் குழு அமைந்ததும் நான் பெற்ற பாக்கியம்.