வலையில் தற்பொழுது நடக்கும் பிரச்சினை ஒன்றின் என் தனிப்பட்ட கருத்து இது.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதனிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
பிரச்சினையோட மூலகாரணம் என்ன? என்ன செஞ்சாச் சரியாகும்னு கண்டுபிடிச்சு அதச் செய்யனுங்கிறதுதான் இந்தக் குறளோட கருத்து.
சிலர் பிறர் மாதிரி எழுத முயற்சி செய்வது தவறு. அதுக்குத்தான் அவரு இருக்காரே. நமக்குன்னு ஒரு தனித்தன்மை இருக்கு அத செம்மைப் படுததுவதுதான் சரி.
அவருக்கு அதிக ஹிட் வருது நமக்கு வரலையேங்குற ஏக்கமும் சிலருக்கு இருக்கு. இதுவும் தவறானதுதான். வலையில பதிவு எழுதறதே, நமக்குத் தோனுனத எழுத ஒரு வசதிங்குறதுனாலதான். அத எழுத மத்தவங்க மாதிரி பிரபலமா இருக்க அவசியமில்ல.
இவ்வளவு ஹிட் வாங்குன ஒரு ஆள நான் எப்படி கேள்வி கேட்டு மடக்குறேன் பாருன்னு ஒரு நோக்கத்தோட கேள்வி கேட்பதும் தவறு.
அதேபோல இன்னாரு இன்னாருக்கு ஜால்ரா, அல்லக்கை என்பதெல்லாம் வெட்டிப் பேச்சு. இருந்தா என்ன தப்பு?. அது உங்கள நேரடியாப் பாதிக்குதா? ஒருவருக்கு நண்பர்கள் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களில் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருப்பது இயல்புதானே.
நம்ம பின்னூட்டத்த அவரு வெளியிடல, பின்னூட்டத்துக்குப் பதிலே தரலன்னும் சொல்றது தப்பு. வலையில இருக்க சுதந்திரமே அதுதானே. பிடிச்சாப் போடு, இல்ல போய்கிட்டே இரு.
ஒரு பொது விவாதத்துக்கு நீங்க ஒரு கேள்வி வச்சு அதுக்குப் பதில் வரல்லன்ன அத ஒரு பதிவா உங்க வலையில போடலாம். இது அவர் சொன்ன கருத்து, இது நான் கேட்ட கேள்வி உங்க கருத்து என்னன்னு, அத மேலும் பொதுவாக வைக்கலாம்.
உணர்ச்சி வசப்பட்டு பின்னூட்டமிடுவது குறித்து அசிங்கமா பேசியிருக்கவும்கூடாது; இத ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு மனவருத்தப்படவும் அவசியமில்ல. இதுல ரெண்டு சைடுலயும் கொம்பு சீவ ஆள் இருப்பது கண்கூடு.
இரண்டு தரப்பிற்கும் நான் சொல்வது இதுதான். வெற்றிகளை உங்க தலைக்கும் தோல்விகளை உங்கள் இதயத்திற்கும் எடுத்துச் செல்லாதீர்கள்.
******************************************
புதுகை அப்துல்லாவப் பாராட்டி பரிசல் போட்ட பின்னூட்டத்துல சுட்டு(ம்) விரலால் தீராப் பசியடங்கியவன் கதை தெரியுமான்னு கேட்டிருந்தேன். அதச் சொல்லச் சொல்லி நேரிலும், செல்லிலும், மெயிலிலும் கோரிக்கை வைத்த உங்களுக்காக இதோ.
ஒரு ஊர்ல ஒரு பண்ணையார். மகாக் கஞ்சன். அதுகூடப் பரவாயில்லை, அவருக்கு ஒரு வினோதப் பழக்கம். அவரு சாப்பிடும்போது வேலையாட்கள் எல்லாம் சுத்தி நின்னு அத வேடிக்கை பாக்கனும்.
எல்லாரும் சாவதைப் போல அவரும் ஒரு நாள் இறந்துவிடுகிறார். நம்மாளுக்கு நரகம்தானே கிடைக்கும். கூடவே ஒரு வித்தியாசமான தண்டனை கிடச்சது. எண்ணைக் கொப்பரையில போட்டு எடுக்க இடத்துல வரிசையில காத்திருக்க வேண்டியதாப் போச்சு. இவர் முறை வர கொஞ்சம் தாமதமாகும்.
இவருக்குக் கிடைச்ச வித்தியாசமான தண்டனை தீராப் பசி எடுப்பதுதான். தவியாத் தவிச்சார். என்ன பண்ணன்னு தெரியல. அப்ப அந்தப் பக்கமா வந்த சித்திர குப்தன்கிட்ட கேக்குறார். எதையாவது பண்ணி இதக் கொஞ்ச நேரம் நிறுத்துங்க தாங்க முடியலன்னு. சி.கு உடனே அவன் ஏட்டப் புரட்டிப் பாத்துட்டு உன் சுட்டு விரல எடுத்து வாயில் வைன்னுட்டுப் போயிட்டாரு. இவர் வச்ச ஒடனே பசி அடங்கிருச்சு.
என்ன காரணம்னு தெரிஞ்சுக்க ஆர்வமாகி சி.கு கிட்ட கேட்டா, அவரு சொன்னாரு ஒரு தடவை அண்ணதானம் எங்க நடக்குதுன்னு கேட்ட ஒருவனுக்கு இதோ இந்தப் பக்கம்னு உன் சுட்டு விரலாலச் சுட்டிக் காட்டிச் சொன்னாய் அதனால அந்தச் சுட்டு விரலுக்கு புண்ணியம் இருக்கு.
ஒரு பக்கமாச் சுட்டுனதுக்கே அப்படி, நம்ம பரிசல் உலகம் பூரா சுட்டியிருக்காரு, அப்ப எவ்வளவு புண்ணியம் சேத்துருக்காரு பாருங்க.
******************************************************
வாலி புத்தகத்தைப் படிச்சு முடிச்சாச்சு. மனுசன் ரெம்ப ரோஷக்காரர்தான். அவரு சண்டை போடாத ஆளே இல்ல போல. இருக்கட்டும் கர்வப் படுபவன்தானே கலைஞன். வித்யா கர்வம் பெருமைதான். வெறும் கர்வம்தான் சிறுமை.
இன்னொரு சுவராசியமான சம்பவம் அந்தப் புத்தகத்திலிருந்து.
எம்ஜியார் உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுத்துக் கொண்டிருந்த நேரம்.
வாலி எம்ஜியார்கிட்ட கேட்டாரு ”பாட்டு ரெக்கர்டிங் எப்பண்ணே”
எம்ஜியார் பொய்க் கோபத்துடன், ”இந்தப் படத்துக்கு உங்க பாட்டு இல்ல, பட டைட்டில்ல உங்க பேரு வராது”
“எம்பேரு இல்லாம நீங்க படத்துக்கு டைட்டில் கார்டே போட முடியாதுண்ணே” அப்படின்னு வாலி சவால் விட்டாரு.
“ஏன்”
“எம்பேரு இல்லாமப் போட்டா ‘உலகம் சுற்றும் பன்’ அப்படீன்னுதான் போடனும்”
**************************************************
இவரு எழுதுன பல கவிதைகளை அந்தப் புத்தகத்தில் கொடுத்திருக்கார். எனக்குப் பிடிச்ச கவிதை.
மனிதர்களை எங்களால்
மந்திரிகளாக்க முடிகிறது
மந்திரிகளைத்தான் மீண்டும்
மனிதர்களாக்க முடியவில்லை.
******************************************
நமது வலை நண்பர் ராஜ நடராஜன் photocbe.com என்ற வலைச் சேவைத்தளத்தை தொடங்கியுள்ளார். நமது தயாரிப்புகளையும் சேவைகளயும் அதன் மூலம் விளம்பரப்படுத்தலாம். கட்டணம் இன்னும் தீர்மாணிக்க வில்லை. என் நிறுவனம் குறித்த தகவல்களை இணைப்பது குறித்து தேவையான விபரங்களைத் தருமாறு சொல்லியிருக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற உங்கள் வாழ்த்துக்களை rajanatcbe@gmail.com அனுப்புங்கள்.
***************************************************
இரண்டு நாட்கள் வெளியூர் செல்வதால் ஆசிப் அண்ணாச்சி, தமிழ்ப் பிரியன், புதுகை அப்துல்லா போன்றவர்களுக்கும் மற்ற வலை அன்பர்களுக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துக்கள்
You must be logged in to post a comment.