கள்ளிச் செடின்னாலே நமக்கு அதிலிருக்கும் முள்ளுதான் ஞாபகம் வரும்.
ஆனா கள்ளிப் பழச்சுவை பழகினவங்களுக்கு அது தனி சுகம்.
முள்ளுப் படாம பழத்தை எடுக்கிற வித்தை கைகூடியவர்கள் வெகு சிலரே.
பழம் சாப்பிட்ட பின் வாயெல்லாம் லிப்ஸ்டிக் போட்டது போல் ஒரே சிவப்பாக இருக்கும், இளம் பெண்களின் உதடு போல்.
சமீபத்தில் படித்த நாவல் – கள்ளி. ஆசிரியர் – வா மு கோமு (கோமகன்). உயிர்மை வெளியீடு.
புத்தகத்தின் அட்டைக் குறிப்பு.
வா.மு.கோமுவின் எழுத்துக்கள் குதூகலமும் துணிச்சலும் கொண்ட மொழியால் வாழ்வை எதிர்கொள்பவை. அவரது முதல் நாவலான கள்ளியில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வும் மதீப்பீடுகளும் கனவுகளும் வெகு இயல்பாக தோற்றம் கொள்கின்றன.மத்தியதர கலாச்சார மதீப்பீடுகளையும் ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியினையும் கடந்து, வா.மு.கோமு தமிழ் வாழ்வின் அறியப்படாத யதார்த்தம் ஒன்றினை இந்நாவலில் சித்தரிக்கிறார்.இந்த யதார்த்தம் சிலநேரம் அதிர்ச்சி அளிப்பது.சில நேரம் நம் அந்தரங்க முகத்தை திறந்து காட்டுவது;
ஒருபோதும் நாசூக்குகளின் வழியே எதையும் மூடி மறைக்காதது.
முழுவதும் உண்மை.
படித்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் கருத்துக்களை.
You must be logged in to post a comment.