.
சட்டுன்னு பொய் சொல்லுறது நம்ம ஆளுகளுக்குக் கைவந்த(வாய் வந்த?) கலை.
இந்தக் கதை எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.
ஒரு டிராயிங்க் மாஸ்டர் மாடு புல்லு மேயுறதப் படமாப் போடச்சொன்னாரு. நம்ம குசும்பன மாதிரி ஒருத்தன் வெறும் வெள்ளைப் பேப்பரை வச்சிக்கிட்டு இருந்தான்.
மாஸ்டர், “என்னப்பா வரையலையா”ன்னு கேட்டத்துக்கு, “வரைஞ்சிட்டேன் சார்”ன்னான்.
“புல்லை எங்க?”
“மாடு மேஞ்சிருச்சு சார்”
“சரி, மாட்ட எங்க?”
”புல்லு இருக்க எடம் தேடிப் போயிருச்சு சார்”
இது மாதிரித்தான் அன்னைக்கு நம்ம எக்ஸிக்க்யூட்டிவ் 10.30 மனி அப்பாயிண்ட்மெண்ட்டுக்கு போக வேண்டியவரு 11.00 மணி வரை ஆபிஸ்லயே இருந்தாரு. “என்னப்ப்பா போகலயா?”ன்னா “போகனுங்க”ன்னாரு.
அதுக்குள்ள கஸ்டமரே கூப்பிட்டாரு லேண்ட் லைன்ல “இதோ வந்திட்டிருக்கேங்க அக்ரி காலேஜ் தாண்டியாச்சு”. அவரும் “சரி சரி”ன்னுட்டு வச்சுட்டாரு போனை.
கூப்பிட்டவருக்கும் அது லேண்ட்லைன்னு உரைக்கல. சொன்னவரும் அதப் பத்திக் கவலைப் படாம அடிச்சு விடுறாரு.
என் நண்பன் சரவணன் ஹோம் லோன் கலக்சன்ல இருக்கான். இது நடந்தப்ப அவன் மதுரை டிவிஷன்ல இருந்தான்.
சனி இரவு 7 மணிக்கு கோவையில என் பிரஸ்ல இருந்துட்டு அவனோட ஜூனியருக்குப் போன் பண்ணிப் பேசுறான்.
சரவணன் : “என்னப்பா ரிப்போர்டெல்லாம் ரெடியா?”
ஜூனியர் : ”ரெடியாகிட்டு இருக்குங்க. இன்னும் அரை மணி நேரத்துல ரெடியாகிரும்”
சரவணன் : “நான் தூத்துக்குடில இருந்து வர நேரமாகும்னு நினைக்காதே பக்கத்துல வந்துட்டேன் இன்னும் 20 நிமிஷத்துல வந்திருவேன்.”
ஜூனியர் : ”வாங்க சார். நான் வெயிட் பண்ணுறேன்”
அதுக்கப்புறம் போன ஆப் பண்ணீட்டு எங்கூட பாருக்கு வந்திட்டான். 9 மணிக்கு ”என்னடா நீ வருவேன்னு அவன் வெயிட் பண்ண மாட்டானா?”ன்னு கேட்டா, “நான் எப்படி டுமீல் விட்டனோ அதப்போலத்தான் அவனும். பேசும்போது அவன் பஸ்ஸுல போற சத்தம் கேக்குது. இன்னேரம் அவனும் ஏதாவது பார்ல செட்டில் ஆயிருப்பான். சனிக்கிழ்மை எவண்டா ரிப்போர்ட்டெல்லாம் பாக்குறது?”
சத்யம்ல சிவாஜி பாத்துட்டிருந்தப்ப என் பக்கத்து சீட்ல இருந்தவர் சொன்னது, “ சார் நான் கஸ்டமரப் பாத்துட்டேன். 5 மணிக்கு வரச்சொல்லியிருக்காரு. இப்பத்தான் சாப்பிடலாம்னு வீட்டுக்கு வந்தேன். ”
எதிர்முனை : “……..”
இவர் : அதுவா வீட்டுல சத்தமா டி வி ஓடுதுசார் குழந்தைங்க பாக்குறாங்க.
You must be logged in to post a comment.