Month: March 2009

சட்டெனச் சொல்லிய பொய்கள்

.

சட்டுன்னு பொய் சொல்லுறது நம்ம ஆளுகளுக்குக் கைவந்த(வாய் வந்த?) கலை.

ந்தக் கதை எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.

ஒரு டிராயிங்க் மாஸ்டர் மாடு புல்லு மேயுறதப் படமாப் போடச்சொன்னாரு. நம்ம குசும்பன மாதிரி ஒருத்தன் வெறும் வெள்ளைப் பேப்பரை வச்சிக்கிட்டு இருந்தான்.

மாஸ்டர், “என்னப்பா வரையலையா”ன்னு கேட்டத்துக்கு, “வரைஞ்சிட்டேன் சார்”ன்னான்.

“புல்லை எங்க?”
“மாடு மேஞ்சிருச்சு சார்”
“சரி, மாட்ட எங்க?”
”புல்லு இருக்க எடம் தேடிப் போயிருச்சு சார்”

து மாதிரித்தான் அன்னைக்கு நம்ம எக்ஸிக்க்யூட்டிவ் 10.30 மனி அப்பாயிண்ட்மெண்ட்டுக்கு போக வேண்டியவரு 11.00 மணி வரை ஆபிஸ்லயே இருந்தாரு. “என்னப்ப்பா போகலயா?”ன்னா “போகனுங்க”ன்னாரு.

அதுக்குள்ள கஸ்டமரே கூப்பிட்டாரு லேண்ட் லைன்ல “இதோ வந்திட்டிருக்கேங்க அக்ரி காலேஜ் தாண்டியாச்சு”. அவரும் “சரி சரி”ன்னுட்டு வச்சுட்டாரு போனை.

கூப்பிட்டவருக்கும் அது லேண்ட்லைன்னு உரைக்கல. சொன்னவரும் அதப் பத்திக் கவலைப் படாம அடிச்சு விடுறாரு.

ன் நண்பன் சரவணன் ஹோம் லோன் கலக்சன்ல இருக்கான். இது நடந்தப்ப அவன் மதுரை டிவிஷன்ல இருந்தான்.

சனி இரவு 7 மணிக்கு கோவையில என் பிரஸ்ல இருந்துட்டு அவனோட ஜூனியருக்குப் போன் பண்ணிப் பேசுறான்.

சரவணன் : “என்னப்பா ரிப்போர்டெல்லாம் ரெடியா?”

ஜூனியர் : ”ரெடியாகிட்டு இருக்குங்க. இன்னும் அரை மணி நேரத்துல ரெடியாகிரும்”

சரவணன் : “நான் தூத்துக்குடில இருந்து வர நேரமாகும்னு நினைக்காதே பக்கத்துல வந்துட்டேன் இன்னும் 20 நிமிஷத்துல வந்திருவேன்.”

ஜூனியர் : ”வாங்க சார். நான் வெயிட் பண்ணுறேன்”

அதுக்கப்புறம் போன ஆப் பண்ணீட்டு எங்கூட பாருக்கு வந்திட்டான். 9 மணிக்கு ”என்னடா நீ வருவேன்னு அவன் வெயிட் பண்ண மாட்டானா?”ன்னு கேட்டா, “நான் எப்படி டுமீல் விட்டனோ அதப்போலத்தான் அவனும். பேசும்போது அவன் பஸ்ஸுல போற சத்தம் கேக்குது. இன்னேரம் அவனும் ஏதாவது பார்ல செட்டில் ஆயிருப்பான். சனிக்கிழ்மை எவண்டா ரிப்போர்ட்டெல்லாம் பாக்குறது?”


த்யம்ல சிவாஜி பாத்துட்டிருந்தப்ப என் பக்கத்து சீட்ல இருந்தவர் சொன்னது, “ சார் நான் கஸ்டமரப் பாத்துட்டேன். 5 மணிக்கு வரச்சொல்லியிருக்காரு. இப்பத்தான் சாப்பிடலாம்னு வீட்டுக்கு வந்தேன். ”

எதிர்முனை : “……..”

இவர் : அதுவா வீட்டுல சத்தமா டி வி ஓடுதுசார் குழந்தைங்க பாக்குறாங்க.

குள்ளதாராவக் கண்டுபிடிங்க


பதிவர்களே நீங்க உலகத்தில பல மூலையில இருந்தும் என் பதிவப் படிக்கிறீங்க. நான் தேடுற ஒரு பொண்னு(அடக் கல்யாணம் பண்ண இல்லீங்க. அந்த வயசத் தாண்டி 20 வருசம் ஆச்சுங்க. ஆனா இது நான் கல்யாணம் பண்ணியிருக்க வேண்டிய பொண்ணுதாங்க) உங்க பக்கத்து வீட்டிலோ, மாடி வீட்டிலோ, கீழ் ஃப்ளோரிலோ, உங்கள் அலுவலகக்திலோ, உங்கள் பகுதியிலோ ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் அவளைச் சந்திக்ககூடும்ங்க.

அப்படிப் பார்த்தீங்கன்னா கீழே இருக்க லெட்டர ஒரு காப்பி எடுத்து அவகிட்டக் கொடுங்க, ப்ளீஸ். எதுக்குன்னா கேக்குறீங்க? அத லெட்டர்ல எழுதியிருக்கேன் படிச்சுக்குங்க. என்னது? அடுத்தவங்க லெட்டர எப்படிப் படிக்கிறதா?

ஹலோ நான் சொல்லலைன்னாலும் நீங்க படிச்சுட்டுத்தான் கொடுப்பீங்கன்னு எனக்குத் தெரியும்.

அவளோட உண்மையான பேரு ராதா. குள்ளமா இருக்கதால செல்லப் பேரு ”குள்ள தாரா”. மூன்று முகம்னு ரஜனிகாந்த் படம் ஒன்னு பாத்திருப்பீங்க அதுல ராஜலஷ்மினு ஒரு நடிகை வருவாங்க பாருங்க அவள மாதிரி இருப்பா.

அன்புள்ள குள்ள தாரா,

உனக்கு இன்னமும் இந்தப் பேருதானா இல்லை உன் வீட்டுக்காரர் வேற செல்லப் பேரு வச்சிட்டாரா?

எப்படி இருக்க?. நான் நல்லா இருக்கேன்னுதான் சொல்லனும். என்ன உன்னைக் கல்யாணம் பண்ணியிருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருப்பேன். நீ எப்படி இருக்கேன்னு ஒரு தகவலும் தெரியல.

நேத்துத்தான் பிரிஞ்ச மாதிரி இருக்கு, அதுக்குள்ள 23 வருஷம் ஓடிப் போயிருச்சு. நீ கடைசியாப் பார்த்த பார்வை, சொன்ன வார்த்தைகள் பிரியும்போது அணிந்திருந்த டிரஸ் எல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கு. உனக்கும் அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

முதல் ரெண்டு வருஷத்துக்கப்புறமா உன்னோட தொடர்பு சுத்தமா அற்றுப் போயிருச்சு. நீ திருச்சிக்குப் போயிட்டேன்னு கிரிஜா சொன்னா, ஆனா அதுக்கப்புறம் கிரிஜாவத் தொடர்பு கொள்ள முடியாம அவளும் அமெரிக்கா போய்ட்டா. சரி எங்க இருந்தாலும் நீ நல்லா இருப்பன்னு தெரியும். நல்லா இருக்கியா?

‘அலை பாயுதே கண்ணா’ இன்னும் பாடுறியா இல்ல குடும்பம் நடத்துற ஆயாசத்துல எல்லாத்தையும் ஏறக்கட்டியாச்சா? சரி உங்குழந்தைக்குச் சொல்லிக் கொடுத்திருப்பே. ஒரு மகன்னு தெரியும். கிரிஜா சொன்னா. அவ்வளவுதானா மகள்தான் வேணும்னு சொல்லுவியே?

ஆனா நீ ஆசைப்பட்ட மாதிரியே எனக்கு ரெண்டு பொண்ணுங்க. பெரியவ காலேஜ் போறா சின்னவ 8 ஆவது. ஓரளவுக்கு செட்டிலாயிட்டேன்னுதான் சொல்லனும். சரி இவ்வளவு நாள் கழிச்சு இப்ப ஏனிந்த லெட்டர்னு கேகுறியா. இல்ல என் மகளுக்கும் 18 வயசாச்சு. உன் மகனுக்கு 21 இருக்கனும். அவஙக் ரெண்டு பேரும் பழகிட்டு நாளைக்கு நம்ம ரெண்டுபேருக்கும் அது ஒரு எம்பரேசிங்க இருக்கக்கூடாது பாரு அதுக்காகத்தான். இப்பத்தான் படிக்கிறது ஒரு இடம் வேலை பாக்குறது ஒரு இடம்னு எல்லாம் வாய்க்குதே. அதையும் தாண்டி நெட்ல சேட் பண்ணுறாங்க. ஆர்குட்ல, பேஸ்புக்குல பழகுறாங்க.

என் மகள்கிட்டச் சொல்லியிருக்கேன். ”யாரை வேணும்னாலும் காதலி, ஆனா அவங்க அம்மா பேரு ராதான்னா கொஞ்சம் உஷாரா இரு”ன்னு. நம்ம விஷயம் எல்லாம் அவளுக்குத் தெரியும்.

நீ எப்படி?

இப்படிக்கு உன் முன்னள் காதலனும், உன் சம்பந்தி ஆகிவிட வாய்ப்புள்ள ஆனால் அதைத் தவிர்க்க விழையும், ஒரு பெண்ணின் தகப்பனும் ஆன, ஜாரா என்ற ராஜா.

டிஸ்கி : இத மனசில வச்சிட்டு யாருகிட்டயாவது பேசி அடிவாங்கினீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்ல இப்பவே சொல்லீட்டேன்.

டிஸ்கி 1: இது உங்க சொந்தக் கதையான்னு கேக்குறவங்க லேபிளைப் பாருங்க.

டிஸ்கி 2 : சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே. ஏதும் ஒப்புமை இருப்பின் அது தற்செயலே.

.

குள்ளதாராவக் கண்டுபிடிங்க


பதிவர்களே நீங்க உலகத்தில பல மூலையில இருந்தும் என் பதிவப் படிக்கிறீங்க. நான் தேடுற ஒரு பொண்னு(அடக் கல்யாணம் பண்ண இல்லீங்க. அந்த வயசத் தாண்டி 20 வருசம் ஆச்சுங்க. ஆனா இது நான் கல்யாணம் பண்ணியிருக்க வேண்டிய பொண்ணுதாங்க) உங்க பக்கத்து வீட்டிலோ, மாடி வீட்டிலோ, கீழ் ஃப்ளோரிலோ, உங்கள் அலுவலகக்திலோ, உங்கள் பகுதியிலோ ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் அவளைச் சந்திக்ககூடும்ங்க.

அப்படிப் பார்த்தீங்கன்னா கீழே இருக்க லெட்டர ஒரு காப்பி எடுத்து அவகிட்டக் கொடுங்க, ப்ளீஸ். எதுக்குன்னா கேக்குறீங்க? அத லெட்டர்ல எழுதியிருக்கேன் படிச்சுக்குங்க. என்னது? அடுத்தவங்க லெட்டர எப்படிப் படிக்கிறதா?

ஹலோ நான் சொல்லலைன்னாலும் நீங்க படிச்சுட்டுத்தான் கொடுப்பீங்கன்னு எனக்குத் தெரியும்.

அவளோட உண்மையான பேரு ராதா. குள்ளமா இருக்கதால செல்லப் பேரு ”குள்ள தாரா”. மூன்று முகம்னு ரஜனிகாந்த் படம் ஒன்னு பாத்திருப்பீங்க அதுல ராஜலஷ்மினு ஒரு நடிகை வருவாங்க பாருங்க அவள மாதிரி இருப்பா.

அன்புள்ள குள்ள தாரா,

உனக்கு இன்னமும் இந்தப் பேருதானா இல்லை உன் வீட்டுக்காரர் வேற செல்லப் பேரு வச்சிட்டாரா?

எப்படி இருக்க?. நான் நல்லா இருக்கேன்னுதான் சொல்லனும். என்ன உன்னைக் கல்யாணம் பண்ணியிருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருப்பேன். நீ எப்படி இருக்கேன்னு ஒரு தகவலும் தெரியல.

நேத்துத்தான் பிரிஞ்ச மாதிரி இருக்கு, அதுக்குள்ள 23 வருஷம் ஓடிப் போயிருச்சு. நீ கடைசியாப் பார்த்த பார்வை, சொன்ன வார்த்தைகள் பிரியும்போது அணிந்திருந்த டிரஸ் எல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கு. உனக்கும் அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

முதல் ரெண்டு வருஷத்துக்கப்புறமா உன்னோட தொடர்பு சுத்தமா அற்றுப் போயிருச்சு. நீ திருச்சிக்குப் போயிட்டேன்னு கிரிஜா சொன்னா, ஆனா அதுக்கப்புறம் கிரிஜாவத் தொடர்பு கொள்ள முடியாம அவளும் அமெரிக்கா போய்ட்டா. சரி எங்க இருந்தாலும் நீ நல்லா இருப்பன்னு தெரியும். நல்லா இருக்கியா?

‘அலை பாயுதே கண்ணா’ இன்னும் பாடுறியா இல்ல குடும்பம் நடத்துற ஆயாசத்துல எல்லாத்தையும் ஏறக்கட்டியாச்சா? சரி உங்குழந்தைக்குச் சொல்லிக் கொடுத்திருப்பே. ஒரு மகன்னு தெரியும். கிரிஜா சொன்னா. அவ்வளவுதானா மகள்தான் வேணும்னு சொல்லுவியே?

ஆனா நீ ஆசைப்பட்ட மாதிரியே எனக்கு ரெண்டு பொண்ணுங்க. பெரியவ காலேஜ் போறா சின்னவ 8 ஆவது. ஓரளவுக்கு செட்டிலாயிட்டேன்னுதான் சொல்லனும். சரி இவ்வளவு நாள் கழிச்சு இப்ப ஏனிந்த லெட்டர்னு கேகுறியா. இல்ல என் மகளுக்கும் 18 வயசாச்சு. உன் மகனுக்கு 21 இருக்கனும். அவஙக் ரெண்டு பேரும் பழகிட்டு நாளைக்கு நம்ம ரெண்டுபேருக்கும் அது ஒரு எம்பரேசிங்க இருக்கக்கூடாது பாரு அதுக்காகத்தான். இப்பத்தான் படிக்கிறது ஒரு இடம் வேலை பாக்குறது ஒரு இடம்னு எல்லாம் வாய்க்குதே. அதையும் தாண்டி நெட்ல சேட் பண்ணுறாங்க. ஆர்குட்ல, பேஸ்புக்குல பழகுறாங்க.

என் மகள்கிட்டச் சொல்லியிருக்கேன். ”யாரை வேணும்னாலும் காதலி, ஆனா அவங்க அம்மா பேரு ராதான்னா கொஞ்சம் உஷாரா இரு”ன்னு. நம்ம விஷயம் எல்லாம் அவளுக்குத் தெரியும்.

நீ எப்படி?

இப்படிக்கு உன் முன்னள் காதலனும், உன் சம்பந்தி ஆகிவிட வாய்ப்புள்ள ஆனால் அதைத் தவிர்க்க விழையும், ஒரு பெண்ணின் தகப்பனும் ஆன, ஜாரா என்ற ராஜா.

டிஸ்கி : இத மனசில வச்சிட்டு யாருகிட்டயாவது பேசி அடிவாங்கினீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்ல இப்பவே சொல்லீட்டேன்.

டிஸ்கி 1: இது உங்க சொந்தக் கதையான்னு கேக்குறவங்க லேபிளைப் பாருங்க.

டிஸ்கி 2 : சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே. ஏதும் ஒப்புமை இருப்பின் அது தற்செயலே.

.

விட்டுக் கொடுத்தலும் கேட்டுப் பெறுதலும்


எல் கே ஜி படிக்கும் குழந்தைகளைக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது பெண் குழந்தையாக இருந்தால் தன்னை ஒரு டீச்சராகக் கருதிக் கொண்டு டீச்சரைப் போலவே நடை உடை பாவனைகளை அமைத்துக் கொள்ளும். ஆண் குழந்தையாக இருந்தால் அவனது ஹீரோ வேன் டிரைவராகவோ அல்லது கார்ட்டூன் கேரக்டராகவோ அல்லது தல, தளபதி போன்றவர்களாகவோ இருப்பர்,

இது முதன்முதலில் குழந்தையின் மனதில் ஏற்படும் ஆதர்ச பிம்பம். நம்மால் முடியாததை சாதிப்பதின் மீது கட்டமைக்கப்படுவது.நாளாக நாளாக வேறு வேறு ஆட்கள் வயதைப் பொறுத்து அந்த இடத்தைப் பிடிக்கிறார்கள்.

ஆனால் எப்போதும் அப்பாவோ அல்லது அம்மாவோ அவர்களுடைய பங்களிப்பைப் பொறுத்து நமது வாழ்நாள் ஹீரோ ஆகிவிடுகிறார்கள். இதில்தான் பிரச்சினைகள் தோன்றுகிறது இப்போது.

எனக்குத் தெரிந்த தம்பதியர். அவனது அப்பாவின் பிம்பமாக குடும்பம் நடத்த முயலுகிறான். அப்பாவின் நடவடிக்கையைப் போலவே அனைத்தயும் அமைத்துக் கொள்கிறான். அவனது அம்மா கிராமத்து ஆள் என்பதால் வீட்டில் அப்பா சொல்வதை அம்மா கேட்பதுதான் வழக்கம்.

மனைவி கதை நேர்மாறு. அவளது அப்பா குடும்பப் பொறுப்பற்றவர். தனது சம்பளத்தை மாதாமாதாம் வீட்டிற்குக் கொடுத்தால் போதும் என்பது அவரது எண்ணம். அவளது அம்மா உத்தியோகத்திற்கும் சென்று வந்து வீட்டு நிர்வாகம் அனைத்தையும் திறம்படச் செய்கிறார். இரண்டு குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைத்து இப்பொழு கடைக் குழந்தையை நல்ல முறையில் படிக்க வைக்கிறார்.

எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது எங்கு பிரச்சினை?

தம்பதியர் இருவரும் அவரவர் குடும்பம் போலவே தங்கள் குடும்பத்தையும் நடத்த முயலுகின்றனர். ”எங்க வீட்டுல் எல்லாம் இப்படி இல்லை. நாங்க எல்லாம் அப்படிச் செய்ய மாட்டோம்.” எது ஒன்று நடந்தாலும் அவனது அப்பாவிடம் சொல்லி விடுகிறான் அவர் நல்லது செய்கிறேன் என மேலும் விரிசலை உண்டாக்குகிறார். அவளும் அம்மாவிடம் சொல்லுகிறாள், அம்மாவும் அப்படியே. இருவர் சொல்லுவதும் ஒன்றே, “ஆரம்பத்துலேயே பிடிய விட்டுக் குடுத்துடாத, பின்னால சிரமம்.”

இல்லறம் என்பது எத்தனை காரணிகளை உள்ளடக்கியது? வாழிடம், செய்யும் வேலை, மன நிலை, உடல் நிலை, பொருளாதாரம், நண்பர் வட்டம், படிப்பு, வேறு ஆர்வங்கள் என எண்ணிலடங்கா. உங்களுக்குச் சரியாக வந்த ஒன்று எல்லோருக்கும் அவ்வாறே என நினைப்பது சரியல்ல.

மேலும் தம்பதியர் இருவரும் கூடிப் பேசி மனம் விட்டு சிலதை முடிவு செய்து அதன்படிதான் நடக்க வேண்டும். இப்படித்தான் இருப்பேன் என ஆரம்பத்திலியே செய்யும் பிடிவாதமான முடிவுகள் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும்.

சில வருடங்கள் கழித்து நினைத்துப் பார்த்தால் இந்தச் சில்லறை விஷயத்திற்கா அன்று பிரிந்து போகும் அளவுக்குச் சண்டை போட்டோம் என வெட்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுதான் இல்லறத்தின் அடிநாதம்.

.

விட்டுக் கொடுத்தலும் கேட்டுப் பெறுதலும்


எல் கே ஜி படிக்கும் குழந்தைகளைக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது பெண் குழந்தையாக இருந்தால் தன்னை ஒரு டீச்சராகக் கருதிக் கொண்டு டீச்சரைப் போலவே நடை உடை பாவனைகளை அமைத்துக் கொள்ளும். ஆண் குழந்தையாக இருந்தால் அவனது ஹீரோ வேன் டிரைவராகவோ அல்லது கார்ட்டூன் கேரக்டராகவோ அல்லது தல, தளபதி போன்றவர்களாகவோ இருப்பர்,

இது முதன்முதலில் குழந்தையின் மனதில் ஏற்படும் ஆதர்ச பிம்பம். நம்மால் முடியாததை சாதிப்பதின் மீது கட்டமைக்கப்படுவது.நாளாக நாளாக வேறு வேறு ஆட்கள் வயதைப் பொறுத்து அந்த இடத்தைப் பிடிக்கிறார்கள்.

ஆனால் எப்போதும் அப்பாவோ அல்லது அம்மாவோ அவர்களுடைய பங்களிப்பைப் பொறுத்து நமது வாழ்நாள் ஹீரோ ஆகிவிடுகிறார்கள். இதில்தான் பிரச்சினைகள் தோன்றுகிறது இப்போது.

எனக்குத் தெரிந்த தம்பதியர். அவனது அப்பாவின் பிம்பமாக குடும்பம் நடத்த முயலுகிறான். அப்பாவின் நடவடிக்கையைப் போலவே அனைத்தயும் அமைத்துக் கொள்கிறான். அவனது அம்மா கிராமத்து ஆள் என்பதால் வீட்டில் அப்பா சொல்வதை அம்மா கேட்பதுதான் வழக்கம்.

மனைவி கதை நேர்மாறு. அவளது அப்பா குடும்பப் பொறுப்பற்றவர். தனது சம்பளத்தை மாதாமாதாம் வீட்டிற்குக் கொடுத்தால் போதும் என்பது அவரது எண்ணம். அவளது அம்மா உத்தியோகத்திற்கும் சென்று வந்து வீட்டு நிர்வாகம் அனைத்தையும் திறம்படச் செய்கிறார். இரண்டு குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைத்து இப்பொழு கடைக் குழந்தையை நல்ல முறையில் படிக்க வைக்கிறார்.

எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது எங்கு பிரச்சினை?

தம்பதியர் இருவரும் அவரவர் குடும்பம் போலவே தங்கள் குடும்பத்தையும் நடத்த முயலுகின்றனர். ”எங்க வீட்டுல் எல்லாம் இப்படி இல்லை. நாங்க எல்லாம் அப்படிச் செய்ய மாட்டோம்.” எது ஒன்று நடந்தாலும் அவனது அப்பாவிடம் சொல்லி விடுகிறான் அவர் நல்லது செய்கிறேன் என மேலும் விரிசலை உண்டாக்குகிறார். அவளும் அம்மாவிடம் சொல்லுகிறாள், அம்மாவும் அப்படியே. இருவர் சொல்லுவதும் ஒன்றே, “ஆரம்பத்துலேயே பிடிய விட்டுக் குடுத்துடாத, பின்னால சிரமம்.”

இல்லறம் என்பது எத்தனை காரணிகளை உள்ளடக்கியது? வாழிடம், செய்யும் வேலை, மன நிலை, உடல் நிலை, பொருளாதாரம், நண்பர் வட்டம், படிப்பு, வேறு ஆர்வங்கள் என எண்ணிலடங்கா. உங்களுக்குச் சரியாக வந்த ஒன்று எல்லோருக்கும் அவ்வாறே என நினைப்பது சரியல்ல.

மேலும் தம்பதியர் இருவரும் கூடிப் பேசி மனம் விட்டு சிலதை முடிவு செய்து அதன்படிதான் நடக்க வேண்டும். இப்படித்தான் இருப்பேன் என ஆரம்பத்திலியே செய்யும் பிடிவாதமான முடிவுகள் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும்.

சில வருடங்கள் கழித்து நினைத்துப் பார்த்தால் இந்தச் சில்லறை விஷயத்திற்கா அன்று பிரிந்து போகும் அளவுக்குச் சண்டை போட்டோம் என வெட்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுதான் இல்லறத்தின் அடிநாதம்.

.

விடையற்ற வினாக்கள்

என்ன பதில் வேண்டும்
என்னிடமிருந்து
என முன் கூட்டியே
முடிவு செய்து
தேர்ந்தெடுத்த கேள்விகளை
வீசுகிறீர்கள் எனை நோக்கி

உங்கள் உள் நோக்கம்
வேறொன்றாக
இருக்கக்கூடுமென
என் பதிலகளை
மாற்றி அமைக்கிறேன்

உங்களுக்குக் கிடைத்ததும்
நீங்கள் விரும்பியதும் வேறு வேறு
நான் சொல்ல நினைத்ததும்
சொன்னதும் வேறு வேறானதைப் போல

எனக்கான கேள்விகளை
அடுக்கி வைத்துக்
காத்திருக்கிறீர்கள்.
எல்லாவற்றிற்கும்
பதிலுண்டு என்னிடம்.

இருந்தபோதிலும்
அவைகளுள் ஒன்றை
உங்கள் மீது வீசினால்
உங்கள் பதில்
“தெரியாது”

கேட்கும் உயரத்தில் நீங்களும்
சொல்லும் நிலையில் நானும்

என்றாலும்,
கரைகளால்
அறியமுடியாதது
கடல்

.

விடையற்ற வினாக்கள்

என்ன பதில் வேண்டும்
என்னிடமிருந்து
என முன் கூட்டியே
முடிவு செய்து
தேர்ந்தெடுத்த கேள்விகளை
வீசுகிறீர்கள் எனை நோக்கி

உங்கள் உள் நோக்கம்
வேறொன்றாக
இருக்கக்கூடுமென
என் பதிலகளை
மாற்றி அமைக்கிறேன்

உங்களுக்குக் கிடைத்ததும்
நீங்கள் விரும்பியதும் வேறு வேறு
நான் சொல்ல நினைத்ததும்
சொன்னதும் வேறு வேறானதைப் போல

எனக்கான கேள்விகளை
அடுக்கி வைத்துக்
காத்திருக்கிறீர்கள்.
எல்லாவற்றிற்கும்
பதிலுண்டு என்னிடம்.

இருந்தபோதிலும்
அவைகளுள் ஒன்றை
உங்கள் மீது வீசினால்
உங்கள் பதில்
“தெரியாது”

கேட்கும் உயரத்தில் நீங்களும்
சொல்லும் நிலையில் நானும்

என்றாலும்,
கரைகளால்
அறியமுடியாதது
கடல்

.

சில விபத்துக்களும் எதிர்பாராத விளைவுகளும்

.

நல்லா நின்னு பேசிட்டிருந்தவர், திடீர்னு தலை சுத்திக் கீழே விழுகிறார். மருத்துவமணையில் லோ பிரஷர் எனக் கண்டுபிடித்து, தேவையான முதலுதவிகளைச் செய்து, காரமடையில ட்ரீட் பண்ண வசதியில்லன்னு சொல்லி கோயமுத்தூருக்கு அனுப்புறாங்க. ஆம்புலன்ஸாகச் செயல்படும் ஆம்னி வேனை டிரைவர் ஓட்டிச் செல்ல பின்பக்கம் பேஷண்ட் படுத்தவாறும் மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் அமர்ந்தவாறும் கோவை நோக்கிப் பயணம்.

வழியிலுள்ள பாலம் மீது ஆம்புலன்ஸைச் செலுத்துவதற்குப் பதிலாக சைடில் செலுத்திவிட்டார் டிரைவர். பள்ளத்தில் கவிழ்ந்து விடுகிறது.

பலன்?

டிரைவர் ஸ்தல மரணம். பேஷண்ட் உயிர் பிழைத்தார். பேஷண்டும், குடும்பத்தினரும் வேறு வேன் ஏற்பாடு செய்து டிரைவர் உடலை வீடு கொண்டுவந்து சேர்த்தனர்.

**************************************************************************

தாராபுரம் ஊருக்கு வெளியே இருக்கும் அமராவதிப் பாலத்தின் மீது ஓடிய லாரி தறிகெட்டு பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு முன் பாதி பாலத்துக்கு வெளியேயும் பின் பாதி ரோட்டிலுமாக ஊஞ்சலாடுகிறது.

டிரைவர் தப்பிக்கும் முன் கிளீனரைப் பார்த்து, ”குதிச்சிர்ரா, தப்பிக்க முடியாது, சீக்கிரம்” எனச் சொல்லிவிட்டு் ஆற்றினுள் குதித்து விடுகிறார். அந்த ஆற்றில் ஒரு விசேசம் என்னன்னா தலை கீழ நின்னா கழுத்தளவு தண்ணீர் ஓடும்.

டிரைவர் குதித்த அதிர்ச்சியில், ஊஞ்சலாடிய லாரி, ஆற்றினுள் விழுந்து விடுகிறது. கை எலும்பு முறிவுடன் கிளீனர் தப்பி விடுகிறார்.

டிரைவர்? ஸ்தல மரணம்.

**************************************************************************

டெக்ஸ்டைல் மில்ல் முதலாளி ஒருவர் என் நண்பர். திருமணமாகி ஆறு வருடமாகியும் குழந்தை இல்லை. கவுண்ட் குறைவுதான் காரணம். விளையாட்டாகச் சொல்லுவார், ”நமக்கு மில்லிலும் கவுண்ட் பிரச்சினை, வீட்டிலும் கவுண்ட் பிரச்சினை”.

ஒரு முறை ஈரோடு கலக்சன் முடித்துவிட்டு காரில் வேகமாக வந்திருக்கிறார். முன் சென்ற லாரி திடீரென்று பிரேக் போட கண்ட்ரோல் இல்லாமல் லாரியின் பின்புறம் மோதி விட்டார். இறங்கிப் பார்த்த டிரைவரும் கிளீனரும் எஸ்கேப்பாகிவிட, இரவானதால் முதலுதவி கிடைக்கத் தாமதமாகி அன்கான்சியஸ் ஆகிவிட்டார்.

ஒரு வழியாக அவரை மீட்டு கோவையிலுள்ள மருத்துவமணையில் சேர்த்தனர். வலது முழங்காலுக்குக் கீழே கூழாகிவிட்ட எலும்புகளைச் சேர்த்து பிளேட்டுகள் வைத்து சரி செய்து அவர் நடக்கவே 9 மாதமாகி விட்டது.

நல்ல ஓய்வில் இருந்ததால் அவரது கவுண்ட் பிரச்சினை சரியாகி, அந்த விபத்திற்குப் பிறகு அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது.

மில்லில் கவுண்ட் பிரச்சினை சரியானதா எனத் தெரியவில்லை.

**************************************************************************

”யோவ் நீ பதிவு எழுத வந்ததே விபத்துதானே?” கேட்டது என்னோட தங்கமணி.

”அப்படின்னா எதிர்பாராத விளைவு?”

”உன்னையும் மதிச்சு 4 பேரு பின்ன்னூட்டம் போடுறாங்களே அதுதான்”

அவ்வ்வ்வ்வ்

**************************************************************************

ஒலக அதிசயம்


ஒலக அதியசயமாம்ல
ஊருக்குள்ள பேசுதாவ

அன்னாடம் கஞ்சி காய்ச்சி
அரை வயிறு குடிச்சாலே
அதியசம் எங்களுக்கு

மொளைக்கப் போட்டா
மழை இல்ல
மொளச்சு வந்தா
களை தொல்லை
அதுக்கு மேல
பூச்சி மருந்து
எல்லாம் முடிஞ்சா
ஆளில்லை அறுக்க
அறுத்து வந்தா
விலை இல்லை
கணக்குப் பார்த்தா
கை நஷ்டம்

இதுல
மும்தாசக் கண்டமா?
சாசகானக் கண்டமா?

பசிக்குது சாமி
கொஞ்சம் தண்ணியாச்சும்
குடிக்க விடுங்க

.

ஒலக அதிசயம்


ஒலக அதியசயமாம்ல
ஊருக்குள்ள பேசுதாவ

அன்னாடம் கஞ்சி காய்ச்சி
அரை வயிறு குடிச்சாலே
அதியசம் எங்களுக்கு

மொளைக்கப் போட்டா
மழை இல்ல
மொளச்சு வந்தா
களை தொல்லை
அதுக்கு மேல
பூச்சி மருந்து
எல்லாம் முடிஞ்சா
ஆளில்லை அறுக்க
அறுத்து வந்தா
விலை இல்லை
கணக்குப் பார்த்தா
கை நஷ்டம்

இதுல
மும்தாசக் கண்டமா?
சாசகானக் கண்டமா?

பசிக்குது சாமி
கொஞ்சம் தண்ணியாச்சும்
குடிக்க விடுங்க

.