சென்ற வாரம் தலைச்சேரி வரைப் பயணம். மதியம் இரண்டு மணிக்குக் கிளம்பும் கண்ணனூர் பாஸஞ்சரில் சென்றேன். மதியம் இரண்டு மணிக்குக் கிளம்பிய வண்டி ஒரு கி மீ க்கு ஒரு முறை நின்று இரவு 9.30க்குத் தலைச்சேரி சென்று சேர்ந்தது.
ஜன்னோலர இருக்கையும் படிக்கச் சில புத்தகங்களும் இருந்ததால் பயணம் சுவராசியமாகவே இருந்தது. பயணத்தை மேலும் சந்தோஷமாக்கிய நிகழ்வொன்று.
மேலிருக்கைக்குச் செல்லும் பயணி தன் காலணியையும் உடன் எடுத்தார். என்னருகே அமர்ந்திருந்தவர் (வட நாட்டவர், நல்ல தமிழ் பேசினார்) “ வேண்டாங்க செருப்பக் கீழ போடுங்க. மேல கொண்டு போனா அதிலிருந்து மண்ணா உதிரும் எங்க தலை மேல” என்றார்.
பயணி அசரவில்லை, “ நான் அப்படித்தான் கொண்டு போவேன்” என்றார்.
வ.நாட்டவர், “சரி. கீழே விழுந்தால் நான் ஜன்னல் வழியே வெளியே எறிந்து விடுவேன்” என்று எச்சரித்தார்.
”மர்பி”யின் விதிப்படியே அந்தச் செருப்பும் மேலிருந்து கீழே விழுந்தது அதுவும் வடநாட்டவர் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் மீதே.
சொன்னபடியே சடாரெனெ கண் இமைக்கும் நேரத்தில் வெளியே எறிந்துவிட்டார் செருப்பை.
மேலிருந்து கீழே இறங்கியவர், “யார்ரா நீ உன் பேரென்ன பேரென்ன சொல்லு, சொல்லு” எனச் சலமபினார்.
வ. நா ஆசாமி, ”பேரு எதுக்கு?” என வினவினார்
செ.ஆசாமி,”அடுத்த ஸ்டேசன்ல ரயில்வே போலீசிடம் புகார் கொடுக்க” என்றார்.
வ்.நா ஆசாமி , “ பேர் மட்டும் போதுமா அட்ரஸும் வேணுமா? ” என மேலும் கீழும் அவரைப் பார்த்தார்.
“அட்ரசும் கொடு” என்றார் செ.ஆசாமி தெனாவெட்டாக.
ஒரு பேப்பரை எடுத்து சரசரவென எழுதினார் வ.நா. ஆசாமி.
Soni A Gandhi,
10 Jan Path House
Parliament House Road,
Naya Delhi – 100001
Mobile : 95949 39291
செ ஆசாமியும், “உனக்கு இருக்குடி அடுத்த ஸ்டேசனில் “ என்றவாரே அட்ரசை வாங்கிப் பையில் வைத்துக் கொண்டே மேலே போனார்; ஆனால் ஒன்றும் செய்யவில்லை. ஒரு வேளை வக்கீல் நோட்டீஸ் அனுப்புவாராக இருக்கும்.
முகவரி டுபாக்கூர் என்றாலும் இந்த மனிதர் ஏன் மொபைல் எண்ணைக் கொடுத்தார் என யோசித்தவாறே இருந்தேன்.
த்லைச்சேரியில் இறங்கி விடுதி அறையில் இருந்த டி வியை ஆன் செய்தேன் ஐ பி எல் பார்க்கலாம் என.
அபிசேக் ப்ச்சன் ஐடியா விளம்பரத்தில் தோன்றிச் சொன்னார், “ மேலதிக்கத் தகவலுக்கு அழையுங்கள் 95 94 93 92 91”