மொக்கை

குள்ளதாராவக் கண்டுபிடிங்க


பதிவர்களே நீங்க உலகத்தில பல மூலையில இருந்தும் என் பதிவப் படிக்கிறீங்க. நான் தேடுற ஒரு பொண்னு(அடக் கல்யாணம் பண்ண இல்லீங்க. அந்த வயசத் தாண்டி 20 வருசம் ஆச்சுங்க. ஆனா இது நான் கல்யாணம் பண்ணியிருக்க வேண்டிய பொண்ணுதாங்க) உங்க பக்கத்து வீட்டிலோ, மாடி வீட்டிலோ, கீழ் ஃப்ளோரிலோ, உங்கள் அலுவலகக்திலோ, உங்கள் பகுதியிலோ ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் அவளைச் சந்திக்ககூடும்ங்க.

அப்படிப் பார்த்தீங்கன்னா கீழே இருக்க லெட்டர ஒரு காப்பி எடுத்து அவகிட்டக் கொடுங்க, ப்ளீஸ். எதுக்குன்னா கேக்குறீங்க? அத லெட்டர்ல எழுதியிருக்கேன் படிச்சுக்குங்க. என்னது? அடுத்தவங்க லெட்டர எப்படிப் படிக்கிறதா?

ஹலோ நான் சொல்லலைன்னாலும் நீங்க படிச்சுட்டுத்தான் கொடுப்பீங்கன்னு எனக்குத் தெரியும்.

அவளோட உண்மையான பேரு ராதா. குள்ளமா இருக்கதால செல்லப் பேரு ”குள்ள தாரா”. மூன்று முகம்னு ரஜனிகாந்த் படம் ஒன்னு பாத்திருப்பீங்க அதுல ராஜலஷ்மினு ஒரு நடிகை வருவாங்க பாருங்க அவள மாதிரி இருப்பா.

அன்புள்ள குள்ள தாரா,

உனக்கு இன்னமும் இந்தப் பேருதானா இல்லை உன் வீட்டுக்காரர் வேற செல்லப் பேரு வச்சிட்டாரா?

எப்படி இருக்க?. நான் நல்லா இருக்கேன்னுதான் சொல்லனும். என்ன உன்னைக் கல்யாணம் பண்ணியிருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருப்பேன். நீ எப்படி இருக்கேன்னு ஒரு தகவலும் தெரியல.

நேத்துத்தான் பிரிஞ்ச மாதிரி இருக்கு, அதுக்குள்ள 23 வருஷம் ஓடிப் போயிருச்சு. நீ கடைசியாப் பார்த்த பார்வை, சொன்ன வார்த்தைகள் பிரியும்போது அணிந்திருந்த டிரஸ் எல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கு. உனக்கும் அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

முதல் ரெண்டு வருஷத்துக்கப்புறமா உன்னோட தொடர்பு சுத்தமா அற்றுப் போயிருச்சு. நீ திருச்சிக்குப் போயிட்டேன்னு கிரிஜா சொன்னா, ஆனா அதுக்கப்புறம் கிரிஜாவத் தொடர்பு கொள்ள முடியாம அவளும் அமெரிக்கா போய்ட்டா. சரி எங்க இருந்தாலும் நீ நல்லா இருப்பன்னு தெரியும். நல்லா இருக்கியா?

‘அலை பாயுதே கண்ணா’ இன்னும் பாடுறியா இல்ல குடும்பம் நடத்துற ஆயாசத்துல எல்லாத்தையும் ஏறக்கட்டியாச்சா? சரி உங்குழந்தைக்குச் சொல்லிக் கொடுத்திருப்பே. ஒரு மகன்னு தெரியும். கிரிஜா சொன்னா. அவ்வளவுதானா மகள்தான் வேணும்னு சொல்லுவியே?

ஆனா நீ ஆசைப்பட்ட மாதிரியே எனக்கு ரெண்டு பொண்ணுங்க. பெரியவ காலேஜ் போறா சின்னவ 8 ஆவது. ஓரளவுக்கு செட்டிலாயிட்டேன்னுதான் சொல்லனும். சரி இவ்வளவு நாள் கழிச்சு இப்ப ஏனிந்த லெட்டர்னு கேகுறியா. இல்ல என் மகளுக்கும் 18 வயசாச்சு. உன் மகனுக்கு 21 இருக்கனும். அவஙக் ரெண்டு பேரும் பழகிட்டு நாளைக்கு நம்ம ரெண்டுபேருக்கும் அது ஒரு எம்பரேசிங்க இருக்கக்கூடாது பாரு அதுக்காகத்தான். இப்பத்தான் படிக்கிறது ஒரு இடம் வேலை பாக்குறது ஒரு இடம்னு எல்லாம் வாய்க்குதே. அதையும் தாண்டி நெட்ல சேட் பண்ணுறாங்க. ஆர்குட்ல, பேஸ்புக்குல பழகுறாங்க.

என் மகள்கிட்டச் சொல்லியிருக்கேன். ”யாரை வேணும்னாலும் காதலி, ஆனா அவங்க அம்மா பேரு ராதான்னா கொஞ்சம் உஷாரா இரு”ன்னு. நம்ம விஷயம் எல்லாம் அவளுக்குத் தெரியும்.

நீ எப்படி?

இப்படிக்கு உன் முன்னள் காதலனும், உன் சம்பந்தி ஆகிவிட வாய்ப்புள்ள ஆனால் அதைத் தவிர்க்க விழையும், ஒரு பெண்ணின் தகப்பனும் ஆன, ஜாரா என்ற ராஜா.

டிஸ்கி : இத மனசில வச்சிட்டு யாருகிட்டயாவது பேசி அடிவாங்கினீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்ல இப்பவே சொல்லீட்டேன்.

டிஸ்கி 1: இது உங்க சொந்தக் கதையான்னு கேக்குறவங்க லேபிளைப் பாருங்க.

டிஸ்கி 2 : சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே. ஏதும் ஒப்புமை இருப்பின் அது தற்செயலே.

.

குள்ளதாராவக் கண்டுபிடிங்க


பதிவர்களே நீங்க உலகத்தில பல மூலையில இருந்தும் என் பதிவப் படிக்கிறீங்க. நான் தேடுற ஒரு பொண்னு(அடக் கல்யாணம் பண்ண இல்லீங்க. அந்த வயசத் தாண்டி 20 வருசம் ஆச்சுங்க. ஆனா இது நான் கல்யாணம் பண்ணியிருக்க வேண்டிய பொண்ணுதாங்க) உங்க பக்கத்து வீட்டிலோ, மாடி வீட்டிலோ, கீழ் ஃப்ளோரிலோ, உங்கள் அலுவலகக்திலோ, உங்கள் பகுதியிலோ ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் அவளைச் சந்திக்ககூடும்ங்க.

அப்படிப் பார்த்தீங்கன்னா கீழே இருக்க லெட்டர ஒரு காப்பி எடுத்து அவகிட்டக் கொடுங்க, ப்ளீஸ். எதுக்குன்னா கேக்குறீங்க? அத லெட்டர்ல எழுதியிருக்கேன் படிச்சுக்குங்க. என்னது? அடுத்தவங்க லெட்டர எப்படிப் படிக்கிறதா?

ஹலோ நான் சொல்லலைன்னாலும் நீங்க படிச்சுட்டுத்தான் கொடுப்பீங்கன்னு எனக்குத் தெரியும்.

அவளோட உண்மையான பேரு ராதா. குள்ளமா இருக்கதால செல்லப் பேரு ”குள்ள தாரா”. மூன்று முகம்னு ரஜனிகாந்த் படம் ஒன்னு பாத்திருப்பீங்க அதுல ராஜலஷ்மினு ஒரு நடிகை வருவாங்க பாருங்க அவள மாதிரி இருப்பா.

அன்புள்ள குள்ள தாரா,

உனக்கு இன்னமும் இந்தப் பேருதானா இல்லை உன் வீட்டுக்காரர் வேற செல்லப் பேரு வச்சிட்டாரா?

எப்படி இருக்க?. நான் நல்லா இருக்கேன்னுதான் சொல்லனும். என்ன உன்னைக் கல்யாணம் பண்ணியிருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருப்பேன். நீ எப்படி இருக்கேன்னு ஒரு தகவலும் தெரியல.

நேத்துத்தான் பிரிஞ்ச மாதிரி இருக்கு, அதுக்குள்ள 23 வருஷம் ஓடிப் போயிருச்சு. நீ கடைசியாப் பார்த்த பார்வை, சொன்ன வார்த்தைகள் பிரியும்போது அணிந்திருந்த டிரஸ் எல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கு. உனக்கும் அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

முதல் ரெண்டு வருஷத்துக்கப்புறமா உன்னோட தொடர்பு சுத்தமா அற்றுப் போயிருச்சு. நீ திருச்சிக்குப் போயிட்டேன்னு கிரிஜா சொன்னா, ஆனா அதுக்கப்புறம் கிரிஜாவத் தொடர்பு கொள்ள முடியாம அவளும் அமெரிக்கா போய்ட்டா. சரி எங்க இருந்தாலும் நீ நல்லா இருப்பன்னு தெரியும். நல்லா இருக்கியா?

‘அலை பாயுதே கண்ணா’ இன்னும் பாடுறியா இல்ல குடும்பம் நடத்துற ஆயாசத்துல எல்லாத்தையும் ஏறக்கட்டியாச்சா? சரி உங்குழந்தைக்குச் சொல்லிக் கொடுத்திருப்பே. ஒரு மகன்னு தெரியும். கிரிஜா சொன்னா. அவ்வளவுதானா மகள்தான் வேணும்னு சொல்லுவியே?

ஆனா நீ ஆசைப்பட்ட மாதிரியே எனக்கு ரெண்டு பொண்ணுங்க. பெரியவ காலேஜ் போறா சின்னவ 8 ஆவது. ஓரளவுக்கு செட்டிலாயிட்டேன்னுதான் சொல்லனும். சரி இவ்வளவு நாள் கழிச்சு இப்ப ஏனிந்த லெட்டர்னு கேகுறியா. இல்ல என் மகளுக்கும் 18 வயசாச்சு. உன் மகனுக்கு 21 இருக்கனும். அவஙக் ரெண்டு பேரும் பழகிட்டு நாளைக்கு நம்ம ரெண்டுபேருக்கும் அது ஒரு எம்பரேசிங்க இருக்கக்கூடாது பாரு அதுக்காகத்தான். இப்பத்தான் படிக்கிறது ஒரு இடம் வேலை பாக்குறது ஒரு இடம்னு எல்லாம் வாய்க்குதே. அதையும் தாண்டி நெட்ல சேட் பண்ணுறாங்க. ஆர்குட்ல, பேஸ்புக்குல பழகுறாங்க.

என் மகள்கிட்டச் சொல்லியிருக்கேன். ”யாரை வேணும்னாலும் காதலி, ஆனா அவங்க அம்மா பேரு ராதான்னா கொஞ்சம் உஷாரா இரு”ன்னு. நம்ம விஷயம் எல்லாம் அவளுக்குத் தெரியும்.

நீ எப்படி?

இப்படிக்கு உன் முன்னள் காதலனும், உன் சம்பந்தி ஆகிவிட வாய்ப்புள்ள ஆனால் அதைத் தவிர்க்க விழையும், ஒரு பெண்ணின் தகப்பனும் ஆன, ஜாரா என்ற ராஜா.

டிஸ்கி : இத மனசில வச்சிட்டு யாருகிட்டயாவது பேசி அடிவாங்கினீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்ல இப்பவே சொல்லீட்டேன்.

டிஸ்கி 1: இது உங்க சொந்தக் கதையான்னு கேக்குறவங்க லேபிளைப் பாருங்க.

டிஸ்கி 2 : சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே. ஏதும் ஒப்புமை இருப்பின் அது தற்செயலே.

.

தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு திறந்த மடல்

அன்புள்ள தமிழ்மண நிர்வாகிகளுக்கு,

வலையுலகில் தற்போதைய நிலவரம் உங்களுக்குத் தெரியுமா?

கொஞ்ச காலம் தசாவதாரம், குசேலன் என்று சூடான பதிவுகளாக வந்து கொண்டிருந்தது. ஆனால் தற்பொழுது இவர் அவருக்கு எழுதிய பகிரங்கக் கடிதம் தான் வலையுலகின் லேட்டஸ்ட்.

அடிக்கடி நேருக்கு நேர் அல்லது தொலைபேசியில் அல்லது சாட்டில் பேசிக்கொள்ளுபவர்களே இந்த வேலையைச் செய்வதுதான் உச்சகட்டக் கொடுமை.

இன்னும் கீழ்க்கண்ட கடிதங்கள் வருமுன் இதற்கு ஒரு தடா போட வேண்டியது உங்கள் தலையாயக் கடமை.

தங்கமணிக்கு ரங்கமணி
வைரமுத்துவுக்குக் கலைஞர்.
ஓட்டுனருக்கு நடத்துனர் .
கம்பெளண்டருக்கு டாக்டர்.
உதவி ஆசிரியருக்குத் தலைமை ஆசிரியர்.
வாகன ஓட்டுனருக்கு உரிமையாளர்
மாணவருக்கு ஆசிரியர்.
சர்வருக்கு சரக்கு மாஸ்டர்.
சித்தாளுக்குக் கொத்தனார்.
சால்னா விறபவருக்கு சரக்கு விறபவர்.
பின்னுட்டமிடுபவருக்கு பதிவர்
குடியிருப்பவருக்கு வீட்டு உரிமையாளர்

ஆகவே தமிழ்மண நிர்வாகிகளே, இந்தப் போக்கைத் தடை செய்யுங்கள். அல்லது குறந்தபட்சம், தமிழ்மண முகப்பில் ஒரு பகுதியை இதற்கென்று ஒதுக்குங்கள். பதிவுகளை வகைப் படு்த்துவதில் திறந்த மடல் என்ற வகையையும் உருவாக்குங்கள். அந்தப் பகுதிக்கே நாங்கள் போகமால் தப்பிக்க இது உதவும். தயவு செய்து சூடனா இடுகையில் இந்தப் பதிவுகள் வராமல் பார்த்துக் கொள்வது தமிழ் பதிவுலகத்திற்கு நீங்கள் செய்யும் சிறந்த சேவையாகப் போற்றப் படும்.

இப்படிக்கு,

11-08-08 மாலை வரை நன்றாக இருந்தவன்.

குறிப்பு : விக்னேஸ்வரன் என்ற பதிவ்ரின் பின்னுட்டங்களத் திரட்ட வேண்டாம்.
அவரிடம் இந்தவகைப் பதிவுகளுக்கான நிரந்தர பின்னுட்ட டெம்ப்லேட்டுகள் அதிகமுள்ளன. அவைகளைக் கொண்டு சரமாரியாக எல்லோருக்கும் பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்மணத்திலிருந்தே அவரைத் தூக்குவது நல்லது.

குறிப்பு 2 : இவவகைப் பதிவுகளிட்டவர்களை குறித்துவைத்துக் கொண்டு எதிர்காலத்தில் அவர்களை நட்சத்திரப் பதிவர்களாக ஆக்காமல் எங்களக் காக்க வேண்டுகிறோம்.

டிஸ்கி : லதானந்த், பரிசல், வால்பையன், நந்து f/o நிலா, ஜெகதீசன், நமக்கல் சிபி, தமிழ்ப் பிரியன் முதலானவர்களை எந்த விதத்திலும் இந்தப் பதிவு நேரடியாகவோ மறைமுகவாகவோ குறிக்கவில்லை.

டிஸ்கி 2: கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டுப் புகைப் படங்களையும் வண்ணங்களையும் தவிர்த்திருக்கிறேன்

வெங்கய்யா வுட்ட ஏப்பம்

இதெல்லாம் என்ன?

அவள் வாடை
வெங்கய்யா வுட்ட ஏப்பம்
கொடுமைடா ஆசை
தவளை ஆடை
ராவா பொண்கால்
கார் அப்போ ஓண்டி

விடை கீழே.

அவல் வடை
வெங்காய ஊத்தாப்பம்
கோதுமை தோசை
தவலை அடை
ரவா பொங்கல்
கார பூந்தி

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மெனுவை, வெளிநட்டுக் காரர் படித்தால் இப்படித்தான் இருக்கும். (நன்றி : புதிய பார்வை)

டிஸ்கி : இது ஒரு சோதனைப் பதிவு. போடச்சொன்னது இராம். நீங்க அவரத்தான் திட்டனும். அவர்தான் என் பிளாக்கச் சரி பண்ணுனார்.

வெங்கய்யா வுட்ட ஏப்பம்

இதெல்லாம் என்ன?

அவள் வாடை
வெங்கய்யா வுட்ட ஏப்பம்
கொடுமைடா ஆசை
தவளை ஆடை
ராவா பொண்கால்
கார் அப்போ ஓண்டி

விடை கீழே.

அவல் வடை
வெங்காய ஊத்தாப்பம்
கோதுமை தோசை
தவலை அடை
ரவா பொங்கல்
கார பூந்தி

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மெனுவை, வெளிநட்டுக் காரர் படித்தால் இப்படித்தான் இருக்கும். (நன்றி : புதிய பார்வை)

டிஸ்கி : இது ஒரு சோதனைப் பதிவு. போடச்சொன்னது இராம். நீங்க அவரத்தான் திட்டனும். அவர்தான் என் பிளாக்கச் சரி பண்ணுனார்.

வெங்கய்யா வுட்ட ஏப்பம்

இதெல்லாம் என்ன?

அவள் வாடை
வெங்கய்யா வுட்ட ஏப்பம்
கொடுமைடா ஆசை
தவளை ஆடை
ராவா பொண்கால்
கார் அப்போ ஓண்டி

விடை கீழே.

அவல் வடை
வெங்காய ஊத்தாப்பம்
கோதுமை தோசை
தவலை அடை
ரவா பொங்கல்
கார பூந்தி

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மெனுவை, வெளிநட்டுக் காரர் படித்தால் இப்படித்தான் இருக்கும். (நன்றி : புதிய பார்வை)

பத்த வைச்சுட்டியே பரட்ட (அல்லது) ஊக்கமுள்ளோருக்கு பரம திருப்தி


பரிசல் தொடங்கி வச்ச இந்தத் தொடர் கோவி மூலமா எனக்கு வந்திருக்கு. இருவருக்கும் நன்றி.

பரிசல் புகைபடத்தப் பத்தி எழுதிக் கலக்கிட்டார். லக்கியும் கோவியும் முதல் காதல்னு பிரிச்சு மேஞ்சுட்டாங்க. நாம எழுத என்ன இருக்குன்னு யோசிச்சப்ப ஏன் நம்ம முதல் முதலா புகை பிடிச்ச வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த( அடக்கி வாசி) சம்பவத்த எழுதக்கூடாதுன்னு தோனுச்சு.

அப்ப எனக்கு 12 வயசு இருக்கும், 7 வது வகுப்பு. V K மில்ஸ் குவார்டர்ஸ்ல குடியிருந்தோம்.

நானு, இளங்கோ, ராஜ சேகர், ஜெயபால், பொன்னுச்சாமி எல்லாம் ஒரு செட்டு. சனி ஞாயிறு விடுமுறையில அடிக்கிற கொட்டம் தாங்க முடியாது. நைட் ஷிப்ட் பாத்தவங்களோட பகல் தூக்கத்தக் கெடுக்காம இருக்க, வீட்ட விட்டு எங்களத் துரத்துரதுல பெரியவங்க குறியா இருப்பாங்க.

குவார்ட்டர்ஸ் கம்பி வேலியத் தாண்டிப் போனா விவசாய நிலம். அதில் நிறையக் கிணறுகள் இருக்கும். சிலதில் தான் குளிக்க முடியும். பாறைக்கிணறு அவற்றுள் ஒன்று. வீட்டிலிருந்து சற்று தள்ளியிருந்தாலும், நீச்சல் தெரி்யாதவர்கள் நின்று குளிக்கவும் வசதியாக இருக்கும்.

ஒரு சனிக்கிழமை எங்க செட்டுப் பசங்க எல்லாம் குளிக்கப் போறதுன்னு முடிவாச்சு. அதில இளங்கோ கொஞ்சம் விவ(கா)ரமான பையன். அவங்க அப்பா (போலிஸ் ராமசாமி) குடிக்கும் கத்திரி சிகரெட் (scissors) இரண்டை எப்படியோ எடுத்து வந்துவிட்டன்; கூடவே தீப்பெட்டியும்.

கம்பிவேலி தாண்டி வயக்காடு வழியாகச் செல்ல வேண்டும். ஒரு வரப்பு சற்று உயரமாக இருக்கும். அதன் மறைவில் அமர்ந்து பற்ற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். காற்று, அனுபவமின்மை, முதல் முறை பதட்டம், யாரும் பார்த்துருவாங்களோன்ற பயம் எல்லாம் சேர்ந்து ஒரே தடுமாற்றம்.

ஆறேழு குச்சிகளுக்குப் பிறகு, இரு முறை கை சுட்டுக் கொண்டு, ஒருத்தன் முடியை லேசாத் தீய வச்சு, ஒரு வழியாப் பற்ற வைத்து இழுத்தால் ஒரே காட்டம். ஏன்னா, பில்டர் இல்லாத சிகரெட்தான் அப்போ வரும்

கடைசியாக் குடிச்ச(?) ஜெயபாலன், “இந்தக் கருமத்த எப்படிடா உங்க அப்பா குடிக்கிறாரு?” ன்னு கேட்டுக் கடுப்பாகி தூக்கி வீசீட்டான்.

வாங்கடா போலாம்னு கிணத்துக்கு நடையக் கட்டுனோம்.

கிணத்துல ஒரே அலப்பர, டைவ் அடிக்கிறது, பேக் டைவ் அடிக்கிறது, குட்டிக் கரணம் அடிக்கிறதுன்னு. பம்புசெட்டு ரூம் மேல இருந்து டைவ் அடிக்கலாம்னு மேல ஏறிப் பாத்தா, நாங்க உக்காந்து சிகரெட் குடிச்சதுக்குப் பக்கத்துல ஒரு வைக்கோல் போர் கபகபன்னு எரிஞ்சிட்ருக்கு. பகீர்னுச்சு.

அப்ப வந்த ஒருத்தரக் கேட்டோம், “என்னங்க அங்க தீ எரியுது?”

”எவன் வச்சதுன்னு தெரியல, செட்டியாரு கைல சிக்கினா இன்னக்கிச் சட்னிதான்” னாரு.

சத்தம் போடாம 5 பேரும் அக்ரஹாரத்துக்கு நடந்து, அங்கிருந்து பஸ் ஏறி வீட்டுக்குப் போனோம்.

அப்புறம் டிப்ளமோ முடிச்சுட்டு பனாமா சிகரெட் கம்பெனியிலயே சுப்பர்வைசர் வேலை பாத்தது தனிக் கதை.

டிஸ்கி 1 : மெஸேஜ் இல்லன்னு யாரும் சொல்லப்படாது. வேணும்னா ”அடிக்காம விட்ட பாம்பும் அணைக்காம விட்ட சிகரெட்டும் டேஞ்ஜர்” -னு வச்சுக்குங்க.

டிஸ்கி 2 : படத்துல இருக்க வாசகம் தெரிஞ்சுக்க ஆசைன்னா படத்து மேல ‘கிலி’க்குங்க.

டிஸ்கி 3 : ஊக்கமுள்ளோருக்குப் பரம திருப்தி – சிசர்ஸ் சிகரெட் விளம்பரம் (For men of action, satisfaction – SCISSORS). சுப்பிரமணியபுரம் படத்துலகூட இந்த விளம்பரம் வந்துச்சு.

மேலும் தொடர டெல்லியிலிருந்து முத்துலெட்சுமி-கயல்விழி அவர்களை வேண்டுகிறேன்.

பத்த வைச்சுட்டியே பரட்ட (அல்லது) ஊக்கமுள்ளோருக்கு பரம திருப்தி


பரிசல் தொடங்கி வச்ச இந்தத் தொடர் கோவி மூலமா எனக்கு வந்திருக்கு. இருவருக்கும் நன்றி.

பரிசல் புகைபடத்தப் பத்தி எழுதிக் கலக்கிட்டார். லக்கியும் கோவியும் முதல் காதல்னு பிரிச்சு மேஞ்சுட்டாங்க. நாம எழுத என்ன இருக்குன்னு யோசிச்சப்ப ஏன் நம்ம முதல் முதலா புகை பிடிச்ச வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த( அடக்கி வாசி) சம்பவத்த எழுதக்கூடாதுன்னு தோனுச்சு.

அப்ப எனக்கு 12 வயசு இருக்கும், 7 வது வகுப்பு. V K மில்ஸ் குவார்டர்ஸ்ல குடியிருந்தோம்.

நானு, இளங்கோ, ராஜ சேகர், ஜெயபால், பொன்னுச்சாமி எல்லாம் ஒரு செட்டு. சனி ஞாயிறு விடுமுறையில அடிக்கிற கொட்டம் தாங்க முடியாது. நைட் ஷிப்ட் பாத்தவங்களோட பகல் தூக்கத்தக் கெடுக்காம இருக்க, வீட்ட விட்டு எங்களத் துரத்துரதுல பெரியவங்க குறியா இருப்பாங்க.

குவார்ட்டர்ஸ் கம்பி வேலியத் தாண்டிப் போனா விவசாய நிலம். அதில் நிறையக் கிணறுகள் இருக்கும். சிலதில் தான் குளிக்க முடியும். பாறைக்கிணறு அவற்றுள் ஒன்று. வீட்டிலிருந்து சற்று தள்ளியிருந்தாலும், நீச்சல் தெரி்யாதவர்கள் நின்று குளிக்கவும் வசதியாக இருக்கும்.

ஒரு சனிக்கிழமை எங்க செட்டுப் பசங்க எல்லாம் குளிக்கப் போறதுன்னு முடிவாச்சு. அதில இளங்கோ கொஞ்சம் விவ(கா)ரமான பையன். அவங்க அப்பா (போலிஸ் ராமசாமி) குடிக்கும் கத்திரி சிகரெட் (scissors) இரண்டை எப்படியோ எடுத்து வந்துவிட்டன்; கூடவே தீப்பெட்டியும்.

கம்பிவேலி தாண்டி வயக்காடு வழியாகச் செல்ல வேண்டும். ஒரு வரப்பு சற்று உயரமாக இருக்கும். அதன் மறைவில் அமர்ந்து பற்ற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். காற்று, அனுபவமின்மை, முதல் முறை பதட்டம், யாரும் பார்த்துருவாங்களோன்ற பயம் எல்லாம் சேர்ந்து ஒரே தடுமாற்றம்.

ஆறேழு குச்சிகளுக்குப் பிறகு, இரு முறை கை சுட்டுக் கொண்டு, ஒருத்தன் முடியை லேசாத் தீய வச்சு, ஒரு வழியாப் பற்ற வைத்து இழுத்தால் ஒரே காட்டம். ஏன்னா, பில்டர் இல்லாத சிகரெட்தான் அப்போ வரும்

கடைசியாக் குடிச்ச(?) ஜெயபாலன், “இந்தக் கருமத்த எப்படிடா உங்க அப்பா குடிக்கிறாரு?” ன்னு கேட்டுக் கடுப்பாகி தூக்கி வீசீட்டான்.

வாங்கடா போலாம்னு கிணத்துக்கு நடையக் கட்டுனோம்.

கிணத்துல ஒரே அலப்பர, டைவ் அடிக்கிறது, பேக் டைவ் அடிக்கிறது, குட்டிக் கரணம் அடிக்கிறதுன்னு. பம்புசெட்டு ரூம் மேல இருந்து டைவ் அடிக்கலாம்னு மேல ஏறிப் பாத்தா, நாங்க உக்காந்து சிகரெட் குடிச்சதுக்குப் பக்கத்துல ஒரு வைக்கோல் போர் கபகபன்னு எரிஞ்சிட்ருக்கு. பகீர்னுச்சு.

அப்ப வந்த ஒருத்தரக் கேட்டோம், “என்னங்க அங்க தீ எரியுது?”

”எவன் வச்சதுன்னு தெரியல, செட்டியாரு கைல சிக்கினா இன்னக்கிச் சட்னிதான்” னாரு.

சத்தம் போடாம 5 பேரும் அக்ரஹாரத்துக்கு நடந்து, அங்கிருந்து பஸ் ஏறி வீட்டுக்குப் போனோம்.

அப்புறம் டிப்ளமோ முடிச்சுட்டு பனாமா சிகரெட் கம்பெனியிலயே சுப்பர்வைசர் வேலை பாத்தது தனிக் கதை.

டிஸ்கி 1 : மெஸேஜ் இல்லன்னு யாரும் சொல்லப்படாது. வேணும்னா ”அடிக்காம விட்ட பாம்பும் அணைக்காம விட்ட சிகரெட்டும் டேஞ்ஜர்” -னு வச்சுக்குங்க.

டிஸ்கி 2 : படத்துல இருக்க வாசகம் தெரிஞ்சுக்க ஆசைன்னா படத்து மேல ‘கிலி’க்குங்க.

டிஸ்கி 3 : ஊக்கமுள்ளோருக்குப் பரம திருப்தி – சிசர்ஸ் சிகரெட் விளம்பரம் (For men of action, satisfaction – SCISSORS). சுப்பிரமணியபுரம் படத்துலகூட இந்த விளம்பரம் வந்துச்சு.

மேலும் தொடர டெல்லியிலிருந்து முத்துலெட்சுமி-கயல்விழி அவர்களை வேண்டுகிறேன்.

பத்த வைச்சுட்டியே பரட்ட (அல்லது) ஊக்கமுள்ளோருக்கு பரம திருப்தி


பரிசல் தொடங்கி வச்ச இந்தத் தொடர் கோவி மூலமா எனக்கு வந்திருக்கு. இருவருக்கும் நன்றி.

பரிசல் புகைபடத்தப் பத்தி எழுதிக் கலக்கிட்டார். லக்கியும் கோவியும் முதல் காதல்னு பிரிச்சு மேஞ்சுட்டாங்க. நாம எழுத என்ன இருக்குன்னு யோசிச்சப்ப ஏன் நம்ம முதல் முதலா புகை பிடிச்ச வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த( அடக்கி வாசி) சம்பவத்த எழுதக்கூடாதுன்னு தோனுச்சு.

அப்ப எனக்கு 12 வயசு இருக்கும், 7 வது வகுப்பு. V K மில்ஸ் குவார்டர்ஸ்ல குடியிருந்தோம்.

நானு, இளங்கோ, ராஜ சேகர், ஜெயபால், பொன்னுச்சாமி எல்லாம் ஒரு செட்டு. சனி ஞாயிறு விடுமுறையில அடிக்கிற கொட்டம் தாங்க முடியாது. நைட் ஷிப்ட் பாத்தவங்களோட பகல் தூக்கத்தக் கெடுக்காம இருக்க, வீட்ட விட்டு எங்களத் துரத்துரதுல பெரியவங்க குறியா இருப்பாங்க.

குவார்ட்டர்ஸ் கம்பி வேலியத் தாண்டிப் போனா விவசாய நிலம். அதில் நிறையக் கிணறுகள் இருக்கும். சிலதில் தான் குளிக்க முடியும். பாறைக்கிணறு அவற்றுள் ஒன்று. வீட்டிலிருந்து சற்று தள்ளியிருந்தாலும், நீச்சல் தெரி்யாதவர்கள் நின்று குளிக்கவும் வசதியாக இருக்கும்.

ஒரு சனிக்கிழமை எங்க செட்டுப் பசங்க எல்லாம் குளிக்கப் போறதுன்னு முடிவாச்சு. அதில இளங்கோ கொஞ்சம் விவ(கா)ரமான பையன். அவங்க அப்பா (போலிஸ் ராமசாமி) குடிக்கும் கத்திரி சிகரெட் (scissors) இரண்டை எப்படியோ எடுத்து வந்துவிட்டன்; கூடவே தீப்பெட்டியும்.

கம்பிவேலி தாண்டி வயக்காடு வழியாகச் செல்ல வேண்டும். ஒரு வரப்பு சற்று உயரமாக இருக்கும். அதன் மறைவில் அமர்ந்து பற்ற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். காற்று, அனுபவமின்மை, முதல் முறை பதட்டம், யாரும் பார்த்துருவாங்களோன்ற பயம் எல்லாம் சேர்ந்து ஒரே தடுமாற்றம்.

ஆறேழு குச்சிகளுக்குப் பிறகு, இரு முறை கை சுட்டுக் கொண்டு, ஒருத்தன் முடியை லேசாத் தீய வச்சு, ஒரு வழியாப் பற்ற வைத்து இழுத்தால் ஒரே காட்டம். ஏன்னா, பில்டர் இல்லாத சிகரெட்தான் அப்போ வரும்

கடைசியாக் குடிச்ச(?) ஜெயபாலன், “இந்தக் கருமத்த எப்படிடா உங்க அப்பா குடிக்கிறாரு?” ன்னு கேட்டுக் கடுப்பாகி தூக்கி வீசீட்டான்.

வாங்கடா போலாம்னு கிணத்துக்கு நடையக் கட்டுனோம்.

கிணத்துல ஒரே அலப்பர, டைவ் அடிக்கிறது, பேக் டைவ் அடிக்கிறது, குட்டிக் கரணம் அடிக்கிறதுன்னு. பம்புசெட்டு ரூம் மேல இருந்து டைவ் அடிக்கலாம்னு மேல ஏறிப் பாத்தா, நாங்க உக்காந்து சிகரெட் குடிச்சதுக்குப் பக்கத்துல ஒரு வைக்கோல் போர் கபகபன்னு எரிஞ்சிட்ருக்கு. பகீர்னுச்சு.

அப்ப வந்த ஒருத்தரக் கேட்டோம், “என்னங்க அங்க தீ எரியுது?”

”எவன் வச்சதுன்னு தெரியல, செட்டியாரு கைல சிக்கினா இன்னக்கிச் சட்னிதான்” னாரு.

சத்தம் போடாம 5 பேரும் அக்ரஹாரத்துக்கு நடந்து, அங்கிருந்து பஸ் ஏறி வீட்டுக்குப் போனோம்.

அப்புறம் டிப்ளமோ முடிச்சுட்டு பனாமா சிகரெட் கம்பெனியிலயே சுப்பர்வைசர் வேலை பாத்தது தனிக் கதை.

டிஸ்கி 1 : மெஸேஜ் இல்லன்னு யாரும் சொல்லப்படாது. வேணும்னா ”அடிக்காம விட்ட பாம்பும் அணைக்காம விட்ட சிகரெட்டும் டேஞ்ஜர்” -னு வச்சுக்குங்க.

டிஸ்கி 2 : படத்துல இருக்க வாசகம் தெரிஞ்சுக்க ஆசைன்னா படத்து மேல ‘கிலி’க்குங்க.

டிஸ்கி 3 : ஊக்கமுள்ளோருக்குப் பரம திருப்தி – சிசர்ஸ் சிகரெட் விளம்பரம் (For men of action, satisfaction – SCISSORS). சுப்பிரமணியபுரம் படத்துலகூட இந்த விளம்பரம் வந்துச்சு.

மேலும் தொடர டெல்லியிலிருந்து முத்துலெட்சுமி-கயல்விழி அவர்களை வேண்டுகிறேன்.

கோவை வலைப் பதிவர் மீட்டிங்


சந்திப்புன்னு போனா மீட்டிங் நடத்துதாவ. ஒருத்தரு பேசுதாரு எல்லாரும் கேக்காவ. அதத்தாம் பதிவுல பண்ணுதமே? பின்ன இதுக்கு இம்புட்டுக் கஷ்டப்படனுமா?

ஏதோ முகந்தெரியாம எழுதிக்கிட்டுருக்கமே நேர்லயும்தாங் கொஞ்சம் பாத்துப் பழகுவமேன்னு போனா செமினார் மாதிரி நடத்துதாக.

நான் போனப்ப நம்ம சுப்பையா சார்வாள் பேசிக்கிட்டுருந்தாவ. என்னப் பாத்ததும், யாருன்னு சொன்னதும், ”வாங்க உங்க பதிவெல்லாம் படிச்சிருக்கேன்னாக” நமக்கு எல்லா எடமும் குளுந்துட்டு.

அடுத்து ஒருத்தர் வந்தாரு. சார்வாள் அவரப் பாத்தும் அதயே சொன்னாக. சே மோசம்லா போய்ட்டமுன்னு ஆயிட்டுது.

நான்ஸ்டாப்பா சார்வாள் பேசுதத பாத்ததும் எனக்கு கொசுவத்தி சுத்தீருச்சு
“ அடுத்த பந்தை வாலாஜா முனையிலிருந்து அளவான, சீரான வேகமெடுத்து, வீசும் கை விக்கெட்டின் மேல் வர வீசினார். அளவு சற்றுக் குறைவாக ஆப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்த பந்து, முன் காலிலே சென்று அதை ஓங்கி அடித்தார், தடுப்பதற்கு யாருமில்லை. அது அவருக்கு நான்கு ரன்களைப் பெற்றுத்தருகிறது. இத்துடன் அவரது சொந்த எண்ணிக்கை 60 அணியின் மொத்த எண்ணிக்கை 320. அடுத்த பந்து….”

அடுத்து ஞானவெட்டியான்னு எங்க பெரியப்பா கணக்கா ஒருத்தரு பேசுனாரு.
அவுக வாத்தியாரு அவுகள வெட்டிப்பயல்னு கூப்பிட்டாக, மாபோசி அவுகள ஞானவெட்டியான்னு பட்டப்பேரு வச்சுக்கூப்பிட்டாகன்னாரு.

அவுக இப்பத்தாம் கோயாமுத்தூருக்கு வந்திருக்காக இன்னங் கொஞ்ச நாள்ல பதிவெல்லாம் போட ஆரம்பிச்சுடுவாக. ஆரம்பிச்சாகண்டா ஒரு நாளைக்குப் பத்திலருந்து பானைஞ்சு பதிவு போடுவம்னாக. சரிதாம் ஒன்னு போடங்கியல இங்க அவனவன் தண்ணி குடிக்காம்.

அடுத்ததா பால் ஜோசப் (ஜோசப் பால்ராஜ்-னு நல்லா கும்மியடிச்சு அவரக் குழப்பீட்டாக), சொன்னதுல ஒரு விசயம் முக்கியமானது, .tk-னு ஒரு செர்வர்ல ப்ரீயா இடம் கொடுக்காம்லா அது பித்தலாட்டம்னது. யாரும் உங்க பிளாக்க அவசரப்பட்டு மாத்த வேண்டாம்னாக.

அடுத்து நம்ம மீசைக்கார லதானந்த் அண்ணாச்சி பேசினாக. நா தமிழ சாக்கி போட்டுத் தூக்க வரல. ஏதோ எழுதுனா, நாலு பேரு சந்தோஷப்படுவாகன்னா மொக்க போடலாம் தப்பில்லன்னாக.

அடுத்து ஓசை செல்லா தமிழ்மணத்துல இப்பல்லாம் ஒரே மொக்கன்னாக. சரி அம்புட்டுத்தேங் கெளம்புவோம்னு கிளம்பீட்டன் (வீட்டுல உளுந்தம்பருப்புச் சாப்பாடும் கறிக் கொழம்பும் ரெடின்னு SMS வந்ததுதா உண்மையான காரனம்) .

மஞ்சூர் ராசா அவுகளுக்கும், அவுக வீட்லருக்க எல்லாத்துக்கும் ரெம்பப் பெரிய மனசு. ஒறமொறகள பார்த்த மாதிரி ஒரு கொற இல்லாமப் பாத்துக்கிட்டாக.

சூடா வடை கொடுத்தாக, குலோப் சாமூனு கொடுத்தாக, சாக்கிலேட்டுக் கொடுத்தாக, சர்பத்து கொடுத்தாக, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர்சாதமெல்லாம் கொடுத்தாக. சாப்பிட்ட எலய அவுக எடுத்தது மனச ரெம்பக் கஷ்டப்படுத்துச்சு.

சஞ்சய் தம்பீ சுத்தி சுத்தி வேல பாத்தாக. ரெம்பப் பாசத்தப் பொழிஞ்சாக.

ஆயிரம் இருந்தும் வசதிகளிருந்தும்னு நம்ம ஜிவாசி பாடுவகளே அது மாதிரி ஆயிட்டு.

ஐயா தொரமார்களே அடுத்தாப்ல பதிவர் சந்திப்பு ஏதும் நடத்துற மாதிரி இருந்தா நான் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்க.

1. 10.00 – 4.00 கொஞ்சமில்ல ரெம்பவே சாஸ்தி. ஒரு 3 மனி நேரம் போதும்.

2. ஒரு பொது எடத்துல வைக்கதுதா நல்லது. சிலாவத்தா பேசிப் பழக முடியும். இதென்னமோ ம.ராசா வீட்டு விசேசத்துக்கு போனாப்லதா இருக்கு.

3. மீட்டிங்கு மாதிரி இருக்குறத கண்டிப்பா தவிர்க்கனும். நாலு பேரும் கலந்துரையாடனும் ஒருத்தரு அத முறைப்படுத்தனும். பேசுற விசயத்தப் பொருத்து அது தானே அமையும்.

4. இடம் நேரம் இதெல்லாம் ஒரு வாரத்துக்கு முன்னக்கூட்டியாவது மத்தவங்களுக்கு சொல்லீரனும்.

5. சாப்பிடற ஐட்டமெல்லாம் முக்கியமில்ல. அதை பகிர்ந்து ஜாலியா பேசிச் சிரிக்கிறதுதான் முக்கியம்.

5. குறிப்பா ”இப்பல்லாம் தமிழ்மணத்துல ஒரே குப்ப சாரி மொக்க” ரக கமெண்டுகளத் தவிர்க்கனும்.

சிங்கப்பூர்லருந்து வந்தாகளே கிரி, அவுகதாம் பாவம். அங்கருந்து கோபிக்கு வந்தவுக நாலு சொந்தபந்தங்களப் பார்த்தமா, பாக்க வேண்டிய மக்க மனுசங்கள பாத்தமான்னு இல்லாம, பஸ் ஏறி கோயாமுத்தூரூ வந்தாக. சிங்கப்பூரூ பதிவர் சந்திப்பு மாரி இருக்குமுன்னு வந்தேம்னாக.

இது எப்பவும் உள்ளதுதான். எதிர்ப்பார்ப்பு அதிகமா இருக்குறப்ப ஏமாத்தமும் அதிகமா இருக்குமுல்லா?

மத்தியானம் என்ன பேசுனாகன்னு யாராவது பதிவு போடுவாகளா?