பதிவர்களே நீங்க உலகத்தில பல மூலையில இருந்தும் என் பதிவப் படிக்கிறீங்க. நான் தேடுற ஒரு பொண்னு(அடக் கல்யாணம் பண்ண இல்லீங்க. அந்த வயசத் தாண்டி 20 வருசம் ஆச்சுங்க. ஆனா இது நான் கல்யாணம் பண்ணியிருக்க வேண்டிய பொண்ணுதாங்க) உங்க பக்கத்து வீட்டிலோ, மாடி வீட்டிலோ, கீழ் ஃப்ளோரிலோ, உங்கள் அலுவலகக்திலோ, உங்கள் பகுதியிலோ ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் அவளைச் சந்திக்ககூடும்ங்க.
அப்படிப் பார்த்தீங்கன்னா கீழே இருக்க லெட்டர ஒரு காப்பி எடுத்து அவகிட்டக் கொடுங்க, ப்ளீஸ். எதுக்குன்னா கேக்குறீங்க? அத லெட்டர்ல எழுதியிருக்கேன் படிச்சுக்குங்க. என்னது? அடுத்தவங்க லெட்டர எப்படிப் படிக்கிறதா?
ஹலோ நான் சொல்லலைன்னாலும் நீங்க படிச்சுட்டுத்தான் கொடுப்பீங்கன்னு எனக்குத் தெரியும்.
அவளோட உண்மையான பேரு ராதா. குள்ளமா இருக்கதால செல்லப் பேரு ”குள்ள தாரா”. மூன்று முகம்னு ரஜனிகாந்த் படம் ஒன்னு பாத்திருப்பீங்க அதுல ராஜலஷ்மினு ஒரு நடிகை வருவாங்க பாருங்க அவள மாதிரி இருப்பா.
அன்புள்ள குள்ள தாரா,
உனக்கு இன்னமும் இந்தப் பேருதானா இல்லை உன் வீட்டுக்காரர் வேற செல்லப் பேரு வச்சிட்டாரா?
எப்படி இருக்க?. நான் நல்லா இருக்கேன்னுதான் சொல்லனும். என்ன உன்னைக் கல்யாணம் பண்ணியிருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருப்பேன். நீ எப்படி இருக்கேன்னு ஒரு தகவலும் தெரியல.
நேத்துத்தான் பிரிஞ்ச மாதிரி இருக்கு, அதுக்குள்ள 23 வருஷம் ஓடிப் போயிருச்சு. நீ கடைசியாப் பார்த்த பார்வை, சொன்ன வார்த்தைகள் பிரியும்போது அணிந்திருந்த டிரஸ் எல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கு. உனக்கும் அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.
முதல் ரெண்டு வருஷத்துக்கப்புறமா உன்னோட தொடர்பு சுத்தமா அற்றுப் போயிருச்சு. நீ திருச்சிக்குப் போயிட்டேன்னு கிரிஜா சொன்னா, ஆனா அதுக்கப்புறம் கிரிஜாவத் தொடர்பு கொள்ள முடியாம அவளும் அமெரிக்கா போய்ட்டா. சரி எங்க இருந்தாலும் நீ நல்லா இருப்பன்னு தெரியும். நல்லா இருக்கியா?
‘அலை பாயுதே கண்ணா’ இன்னும் பாடுறியா இல்ல குடும்பம் நடத்துற ஆயாசத்துல எல்லாத்தையும் ஏறக்கட்டியாச்சா? சரி உங்குழந்தைக்குச் சொல்லிக் கொடுத்திருப்பே. ஒரு மகன்னு தெரியும். கிரிஜா சொன்னா. அவ்வளவுதானா மகள்தான் வேணும்னு சொல்லுவியே?
ஆனா நீ ஆசைப்பட்ட மாதிரியே எனக்கு ரெண்டு பொண்ணுங்க. பெரியவ காலேஜ் போறா சின்னவ 8 ஆவது. ஓரளவுக்கு செட்டிலாயிட்டேன்னுதான் சொல்லனும். சரி இவ்வளவு நாள் கழிச்சு இப்ப ஏனிந்த லெட்டர்னு கேகுறியா. இல்ல என் மகளுக்கும் 18 வயசாச்சு. உன் மகனுக்கு 21 இருக்கனும். அவஙக் ரெண்டு பேரும் பழகிட்டு நாளைக்கு நம்ம ரெண்டுபேருக்கும் அது ஒரு எம்பரேசிங்க இருக்கக்கூடாது பாரு அதுக்காகத்தான். இப்பத்தான் படிக்கிறது ஒரு இடம் வேலை பாக்குறது ஒரு இடம்னு எல்லாம் வாய்க்குதே. அதையும் தாண்டி நெட்ல சேட் பண்ணுறாங்க. ஆர்குட்ல, பேஸ்புக்குல பழகுறாங்க.
என் மகள்கிட்டச் சொல்லியிருக்கேன். ”யாரை வேணும்னாலும் காதலி, ஆனா அவங்க அம்மா பேரு ராதான்னா கொஞ்சம் உஷாரா இரு”ன்னு. நம்ம விஷயம் எல்லாம் அவளுக்குத் தெரியும்.
நீ எப்படி?
இப்படிக்கு உன் முன்னள் காதலனும், உன் சம்பந்தி ஆகிவிட வாய்ப்புள்ள ஆனால் அதைத் தவிர்க்க விழையும், ஒரு பெண்ணின் தகப்பனும் ஆன, ஜாரா என்ற ராஜா.
டிஸ்கி : இத மனசில வச்சிட்டு யாருகிட்டயாவது பேசி அடிவாங்கினீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்ல இப்பவே சொல்லீட்டேன்.
டிஸ்கி 1: இது உங்க சொந்தக் கதையான்னு கேக்குறவங்க லேபிளைப் பாருங்க.
டிஸ்கி 2 : சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே. ஏதும் ஒப்புமை இருப்பின் அது தற்செயலே.
.
You must be logged in to post a comment.