Month: June 2009

எல்லோருக்குமான வாசனை


முன்கூட்டியே எடுத்த
தீர்மானங்களினூடான
உங்கள் பார்வைகள்
என்னைக்
காயப் படுத்துவதில்லை

எனக்கான உருவெளித்தோற்றம்
என் செயலகளிலிருந்தும்
நான் உதிர்த்த சொற்களிலிருந்தும்
உங்களால் கட்டமைக்கப்பட்டதல்ல
அது
பிறிதொன்றாகவே
இருக்கிறதெப்போதும்

நிஜமான என்னிலிருந்து
இல்லாத என்னைப் பிரித்தறிய
முயலும் உங்கள்
செயல்களின் மீதெனக்கேதும்
துவேஷமில்லை

என்றாலும்
மொட்டுக்கள்
மலர்கின்றன
எல்லோருக்குமான
வாசத்தைச்
சுமந்தபடி.

.

எல்லோருக்குமான வாசனை


முன்கூட்டியே எடுத்த
தீர்மானங்களினூடான
உங்கள் பார்வைகள்
என்னைக்
காயப் படுத்துவதில்லை

எனக்கான உருவெளித்தோற்றம்
என் செயலகளிலிருந்தும்
நான் உதிர்த்த சொற்களிலிருந்தும்
உங்களால் கட்டமைக்கப்பட்டதல்ல
அது
பிறிதொன்றாகவே
இருக்கிறதெப்போதும்

நிஜமான என்னிலிருந்து
இல்லாத என்னைப் பிரித்தறிய
முயலும் உங்கள்
செயல்களின் மீதெனக்கேதும்
துவேஷமில்லை

என்றாலும்
மொட்டுக்கள்
மலர்கின்றன
எல்லோருக்குமான
வாசத்தைச்
சுமந்தபடி.

.

ஃப்ளாஷ் பேக்


திரையரங்கை ஒட்டி இருக்கும் மண்டபத்தில்தான் சரவணன் தங்கை ரேவதிக்குத் திருமணம். முதல்நாளிரவே வரச் சொல்லி அன்புக் கட்டளை. சொன்னபடி ஆஜராகிவிட்டேன் குடும்பத்துடன். காரைப் பார்க்கிங் பண்ண இடம் கிடைக்கத்தான் தாமதமாகி விட்டது. அடுத்த வீதியில்தான் நிறுத்த முடிந்தது.

மண்டபத்தை கலை ரசனையுடன் அலங்கரித்திருந்தனர். முதல் நாள் இரவு வரவேற்பு என்பதால் மணவறை அலங்காரம் ஏதும் செய்யவில்லை. நள்ளிரவில் ஆரம்பித்து அதிகாலையில் முடிப்பார்கள். அதற்குத் தேவையான சம்பங்கி மற்றும் கலர் பூக்கள் அருகே மூட்டையில் தயாராக இருந்தது.

நடை பழகும் யுவதிகளும், அவர்களைப் பின் தொடரும் வாலிபர்களும், இன்று பார்க்கமுடியாமல் போன சீரியலில் என்ன ஆகியிருக்கும் என்று அலசும் மாமியார்களும் , அடுத்து என்ன புடவை வாங்கலாம், என்ன நகை வாங்கலாம் என திட்டம் போடும் நடுவயதுப் பெண்மணிகளும், தயாராக இருக்கும் மகளின் கல்யாணச் செல்வு குறித்த கவலை தோய்ந்த பெரிசுகளுமென மண்டபம் கலந்துகட்டி நிறைந்திருந்தது. இந்தக் கவலைகள் ஏதுமற்றுச் சுற்றித் திரிந்த குழந்தைகள் கூட்டம் ஒரு சோபை தந்திருந்தது.

”டாடி மம்மி வீட்டில் இல்லை” என்ற ரகசியத்தை இசைக்குழுவினர் சத்தமாக எல்லோருக்கும் சொல்லிக் கொண்டிருந்தனர். நாதஸ்வரமும், தவிலும் உறையிலிருந்து பிரிக்காமல் சுவரோரமாகத் தள்ளி வைக்கப் பட்டிருந்தது. வீடியோக்காரர்கள் பி சி ஸ்ரீராம் லெவலுக்கு சுட்டுக் கொண்டிருந்தார்கள். புகைப்படக் கலைஞரும் சளைத்தவர் இல்லை.

வாழ்த்துவோருக்கான வரிசை நீண்டதாக இருந்தது. எல்லோரும் மாப்பிள்ளை சைடு. ரேவதியின் அழகிலும் குணத்திலும் மயங்கி மணமகன் முறையாகப் பெண் கேட்டு நடக்கும் திருமணம். மணமகனும் ரேவதிக்கேற்ற அழகன். மணமகன் வீட்டினருக்கும் ரேவதியைப் பிடித்துப் போக எல்லாச் செலவும் தங்களுடையது எனச் சொல்லிவிட்டனர்.

ரவணனும் நானும் ஒன்றாக டிப்ளாமோ படித்தோம். பின் இருவரும் இரு வருடங்கள் மண்டபத்தின் பின்பக்கத் தெருவில் ஒரு அறையில் தங்கிச் சின்னச் சின்னக் கம்பெனிகளில் வேலை என்ற பெயரில் குப்பை கொட்டிக் கொண்டிருந்தோம். நல்ல வேலையில் செட்டிலாக இருவருக்குமே மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது; வேறு வேறு ஊர்களில்.

“இந்த மண்டபம் ஞாபகமிருக்காடா?” என்றான் சரவணன்.

“மறக்க முடியுமாடா?” என்றேன் பேச்சிலர் தின ஞாபகங்களுடன்.

” எந்தங்கச்சி கல்யாணம் இவ்வளவு பெரிய மண்டபத்துல நடக்கும்னு நான் நெனைச்சுக் கூடப் பார்க்கலடா?” என்றான் விழிகள் உதிர்த்த கண்ணீர் முத்துக்களுடன்.

சரவணனின் தோளைத் தட்டி அமைதிப் படுத்தினேன். அதற்குள் வேறு யாரோ, “மாப்ப்பிள்ளை பட்டுவேட்டி சட்டை எங்க வச்சிருக்கீங்க” என்று அவனைக் கூப்பிட என்னை விட்டுப் பிரிந்தான்.

ரவுப் பந்தி நடக்க ஆரம்பித்திருந்தது. டைனிங்க் ஹால் அமளிதுமளிப்பட்டது. இரண்டு மூன்று பேர் ஒரு இளைஞனைத் தாக்கிக் கொண்டிருந்தனர். விலக்கி விட்டு என்னவெனக் கேட்டதில், “ நானும் வந்ததிலிருந்து பாக்குறேன் சார். பேந்தப் பேந்த முழிக்கிறான். நான் கேட்டா மாப்பிள்ளை வீடுங்கிறான். அவர் கேட்டதுக்கு பொண்ணு வீடுங்குறான். சாப்பாட்டுக்குன்னே வந்திருக்கான் சார்”

“சரி சரி விடுங்க நான் விசாரிக்கிறேன்” என அவன் தோள் மீது கை போட்டு அவனை தனியே அழைத்து வந்தேன்.

“சார் சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு. மில்லுக்குப் போயிட்டிருந்தேன் இப்ப அதுக்கும் வழியில்ல. கட்டிட வேலைக்கும் போய்ப் பார்த்தேன். என்னால முடியல. இன்னைக்கு நைட் சாப்பிட்டா எப்படியும் ரெண்டுநாள் தாக்காட்டிடுவேன். ப்ளீஸ்”

அவனை அழைத்து வந்து தியேட்டருக்கு முன் இருக்கும் புரோட்டாக் கடையில் முட்டை புரோட்டாவும் குடல் குழம்பும் வாங்கித்தந்தேன். என் விசிட்டிங்க் கார்டைக் கொடுத்து “ நாளை மறுநாள் என்னை வந்து பார். ஏதாவது வேலை தருகிறேன்” என்றேன்.

“நன்றி சார். இதை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன் “ என்றான் கலங்கிய கண்களுடன்.

“சரி சரி. மறக்காம வா “ என்று அவனை அனுப்பிவிட்டு மண்டபத்துக்குள் நுழைந்தேன்.

வேகவேகமாக என்னை நோக்கி வந்த சரவணன், ”எங்கடா போன இவ்வளவு நேரம்? ஏதோ பிரச்சினைன்னு சொன்னாங்க, என்னடா?” என்றான்.

“ஞாபகமிருக்கான்னு கேட்டியே இங்க ஒருத்தன் பிளாஷ் பேக்க நடத்தியே காமிச்சுட்டுப் போயிட்டான்.”

“பாவம், நம்ம டெக்னிக் அவனுக்குத் தெரியலை அதான் மாட்டிக்கிட்டான்” என்றான் சரவணன் ஒரு பெரு மூச்சை வெளியேற்றியவாறே.

உரையாடல் – சமூக கலை இலக்கிய அமைப்புச் சிறுகதைப் போட்டிக்கு எனது படைப்பு.

.

ஃப்ளாஷ் பேக்


திரையரங்கை ஒட்டி இருக்கும் மண்டபத்தில்தான் சரவணன் தங்கை ரேவதிக்குத் திருமணம். முதல்நாளிரவே வரச் சொல்லி அன்புக் கட்டளை. சொன்னபடி ஆஜராகிவிட்டேன் குடும்பத்துடன். காரைப் பார்க்கிங் பண்ண இடம் கிடைக்கத்தான் தாமதமாகி விட்டது. அடுத்த வீதியில்தான் நிறுத்த முடிந்தது.

மண்டபத்தை கலை ரசனையுடன் அலங்கரித்திருந்தனர். முதல் நாள் இரவு வரவேற்பு என்பதால் மணவறை அலங்காரம் ஏதும் செய்யவில்லை. நள்ளிரவில் ஆரம்பித்து அதிகாலையில் முடிப்பார்கள். அதற்குத் தேவையான சம்பங்கி மற்றும் கலர் பூக்கள் அருகே மூட்டையில் தயாராக இருந்தது.

நடை பழகும் யுவதிகளும், அவர்களைப் பின் தொடரும் வாலிபர்களும், இன்று பார்க்கமுடியாமல் போன சீரியலில் என்ன ஆகியிருக்கும் என்று அலசும் மாமியார்களும் , அடுத்து என்ன புடவை வாங்கலாம், என்ன நகை வாங்கலாம் என திட்டம் போடும் நடுவயதுப் பெண்மணிகளும், தயாராக இருக்கும் மகளின் கல்யாணச் செல்வு குறித்த கவலை தோய்ந்த பெரிசுகளுமென மண்டபம் கலந்துகட்டி நிறைந்திருந்தது. இந்தக் கவலைகள் ஏதுமற்றுச் சுற்றித் திரிந்த குழந்தைகள் கூட்டம் ஒரு சோபை தந்திருந்தது.

”டாடி மம்மி வீட்டில் இல்லை” என்ற ரகசியத்தை இசைக்குழுவினர் சத்தமாக எல்லோருக்கும் சொல்லிக் கொண்டிருந்தனர். நாதஸ்வரமும், தவிலும் உறையிலிருந்து பிரிக்காமல் சுவரோரமாகத் தள்ளி வைக்கப் பட்டிருந்தது. வீடியோக்காரர்கள் பி சி ஸ்ரீராம் லெவலுக்கு சுட்டுக் கொண்டிருந்தார்கள். புகைப்படக் கலைஞரும் சளைத்தவர் இல்லை.

வாழ்த்துவோருக்கான வரிசை நீண்டதாக இருந்தது. எல்லோரும் மாப்பிள்ளை சைடு. ரேவதியின் அழகிலும் குணத்திலும் மயங்கி மணமகன் முறையாகப் பெண் கேட்டு நடக்கும் திருமணம். மணமகனும் ரேவதிக்கேற்ற அழகன். மணமகன் வீட்டினருக்கும் ரேவதியைப் பிடித்துப் போக எல்லாச் செலவும் தங்களுடையது எனச் சொல்லிவிட்டனர்.

ரவணனும் நானும் ஒன்றாக டிப்ளாமோ படித்தோம். பின் இருவரும் இரு வருடங்கள் மண்டபத்தின் பின்பக்கத் தெருவில் ஒரு அறையில் தங்கிச் சின்னச் சின்னக் கம்பெனிகளில் வேலை என்ற பெயரில் குப்பை கொட்டிக் கொண்டிருந்தோம். நல்ல வேலையில் செட்டிலாக இருவருக்குமே மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது; வேறு வேறு ஊர்களில்.

“இந்த மண்டபம் ஞாபகமிருக்காடா?” என்றான் சரவணன்.

“மறக்க முடியுமாடா?” என்றேன் பேச்சிலர் தின ஞாபகங்களுடன்.

” எந்தங்கச்சி கல்யாணம் இவ்வளவு பெரிய மண்டபத்துல நடக்கும்னு நான் நெனைச்சுக் கூடப் பார்க்கலடா?” என்றான் விழிகள் உதிர்த்த கண்ணீர் முத்துக்களுடன்.

சரவணனின் தோளைத் தட்டி அமைதிப் படுத்தினேன். அதற்குள் வேறு யாரோ, “மாப்ப்பிள்ளை பட்டுவேட்டி சட்டை எங்க வச்சிருக்கீங்க” என்று அவனைக் கூப்பிட என்னை விட்டுப் பிரிந்தான்.

ரவுப் பந்தி நடக்க ஆரம்பித்திருந்தது. டைனிங்க் ஹால் அமளிதுமளிப்பட்டது. இரண்டு மூன்று பேர் ஒரு இளைஞனைத் தாக்கிக் கொண்டிருந்தனர். விலக்கி விட்டு என்னவெனக் கேட்டதில், “ நானும் வந்ததிலிருந்து பாக்குறேன் சார். பேந்தப் பேந்த முழிக்கிறான். நான் கேட்டா மாப்பிள்ளை வீடுங்கிறான். அவர் கேட்டதுக்கு பொண்ணு வீடுங்குறான். சாப்பாட்டுக்குன்னே வந்திருக்கான் சார்”

“சரி சரி விடுங்க நான் விசாரிக்கிறேன்” என அவன் தோள் மீது கை போட்டு அவனை தனியே அழைத்து வந்தேன்.

“சார் சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு. மில்லுக்குப் போயிட்டிருந்தேன் இப்ப அதுக்கும் வழியில்ல. கட்டிட வேலைக்கும் போய்ப் பார்த்தேன். என்னால முடியல. இன்னைக்கு நைட் சாப்பிட்டா எப்படியும் ரெண்டுநாள் தாக்காட்டிடுவேன். ப்ளீஸ்”

அவனை அழைத்து வந்து தியேட்டருக்கு முன் இருக்கும் புரோட்டாக் கடையில் முட்டை புரோட்டாவும் குடல் குழம்பும் வாங்கித்தந்தேன். என் விசிட்டிங்க் கார்டைக் கொடுத்து “ நாளை மறுநாள் என்னை வந்து பார். ஏதாவது வேலை தருகிறேன்” என்றேன்.

“நன்றி சார். இதை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன் “ என்றான் கலங்கிய கண்களுடன்.

“சரி சரி. மறக்காம வா “ என்று அவனை அனுப்பிவிட்டு மண்டபத்துக்குள் நுழைந்தேன்.

வேகவேகமாக என்னை நோக்கி வந்த சரவணன், ”எங்கடா போன இவ்வளவு நேரம்? ஏதோ பிரச்சினைன்னு சொன்னாங்க, என்னடா?” என்றான்.

“ஞாபகமிருக்கான்னு கேட்டியே இங்க ஒருத்தன் பிளாஷ் பேக்க நடத்தியே காமிச்சுட்டுப் போயிட்டான்.”

“பாவம், நம்ம டெக்னிக் அவனுக்குத் தெரியலை அதான் மாட்டிக்கிட்டான்” என்றான் சரவணன் ஒரு பெரு மூச்சை வெளியேற்றியவாறே.

உரையாடல் – சமூக கலை இலக்கிய அமைப்புச் சிறுகதைப் போட்டிக்கு எனது படைப்பு.

.

பொதுவில் வை(த்)தல்

Blogging is a public activity with no right to anonymity

வலையில் எழுதுவது சுலபமாகவும், அதன் எதிர்வினைகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள வசதி இருப்பதாலும் மேலும் மேலும் புதியவர்கள் எழுத வருகிறார்கள். மகிழ்கிறேன். ஆயின் தமக்கான எல்லைகள் எது என்பதைக் கொஞ்சம் தெரிந்து தெளிதல் நலம் . பின்னூட்டம், ஹிட்ஸ், ஃபாலோயர்ஸ் போன்றவற்றை நோக்கமாக வைத்தெழுதாது நேர்மையாகத் தோன்றுவதை எழுதுவது உத்தமம்.

இங்கிலாந்து காவலர் ஒருவர் பிளாக் பற்றிக் கேள்விப்பட்டு, கவரப்பட்டு தனெக்கென ஒரு வலைப்பூ தொடங்கி, அதில் தனது பணிக்காலத்தில் சந்தித்த சவாலான குற்றங்களையும், அதை அவர் துப்பறிந்த விதத்தையும் எழுதுகிறார். அதிகாரிகள் அவ்வாறு அரசாங்க ரகசியங்களை வெளியிடக்கூடாதென்பதால் தனதடையாளத்தை மறைத்து புனைபெயரொன்றில் எழுதுகிறார்.

ஒவ்வொரு குற்ற நடவடிக்கையிலும் அரசியல்வாதிகள் தலையீடு, மஃபியாக்கள் தலையீடு போன்றவற்றை எவ்வித ஒளிவு மறைவேதுமின்றி எழுதுகிறார். மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகுகிறது. யாரவர் என எல்லோருமாவலுடன் தேடத்தலைபடுகின்றனர்.

இவரைக் கண்டறிய முயலும் டைம்ஸ் பத்திரிக்கை நிருபர், முதலில் அவரது பதிவு ஒன்றிற்குப் பின்னூட்டம் இடுகிறார். தானும் ஒரு வலைப்பதிவரென அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார். அவரை ஆகா ஓகோவெனப் புகழ்கிறார். பிறிதொரு நாளில் வலைப்பதிவர்கள் சந்திப்பெனச் கூறி இடமொன்றைக் குறித்து வரச் சொல்லி, அவரை அடையாளம் காட்டுகிறார் உலகிற்கு.

நைட் ஜேக் என்ற பெயரில் வலைத்தளம் வைத்திருந்த
ரிச்சர்ட் ஹார்டன் – லங்காஷையர் காவலர்.

பொதுவாக வலையில் எழுதுவது தனிமனித சுதந்திரம் அதை நீதிமன்றம் தடை செய்ய முடியாதென்று அவரது வக்கீல் வாதாட, நீதிபதி சொன்ன தீர்ப்பு, “ வலையில் எழுதுவது தனிப்பட்ட செயல் அல்ல. அது ஒரு பொதுச் செயல். எனவே எழுதப்பட்டதற்கு எழுதியவர்தான் பொறுப்பேற்கவேண்டும்.”

எழுதியவன் இறந்துவிட்டான் இனிப் பேசுவது எழுத்துத்தான் என்று பி ந வாதிகள ஜல்லியடிப்பதை வலைக்குச் சொல்ல முடியாது. எழுதப்பட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் எழுதியவரே பொறுப்பாளர். எனவே எழுதுமுன் யோசியுங்கள். எழுதி்யபின் வருத்தப் படுவதைக் காட்டிலும் அது சுலபமல்லவா? உங்களது அலைவரிசையில் உள்ளவர்களுக்கு பதிவை மின்ஞ்சல் செய்து கருத்து கேட்டபின், தேவையான திருத்தங்களைச் செய்து பதிவிடல் சாலச்சிறந்தது. குறிப்பாக அரசாங்க வேலையில் இருப்பவர்கள் அதிக விழிப்புடன் இருத்தல் ஆகச் சிறந்தது.

நீங்கள் எழுதியதற்கு ஒருவர் எதிர்ப் பதிவு எழுதி பின் ”அவனைத் தூக்கச் சொல் நான் தூக்குகிறேன்” என்பது போன்ற வீர வசனங்களும் அறைக்கூவல்களும் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கா. மாறாக உங்களை வீழ்த்திவிடக்கூடும்.

அதுதான் பிரச்சினைக்குரிய பதிவையே நீக்கி விட்டோமே என நீங்கள் நிம்மதியாக இருக்கவும் வழியில்லை. உங்களுக்கே தெரியாமல் உங்களை ரீடரில் வாசிப்போர் அனேகம் பேர். அவர்களதை அதை நீக்கும்வரை இருக்கக்கூடும்; ஒரு மெளனசாட்சியாக அவர்களது கணினியில்.

பொதுவில் ஒன்றை வைக்குமுன் மனதிலிதை வைப்பது நலம்.

Courtesy : news.bbc.co.uk
.

பி.கு : வைதல் – திட்டுதல்.

.

பொதுவில் வை(த்)தல்

Blogging is a public activity with no right to anonymity

வலையில் எழுதுவது சுலபமாகவும், அதன் எதிர்வினைகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள வசதி இருப்பதாலும் மேலும் மேலும் புதியவர்கள் எழுத வருகிறார்கள். மகிழ்கிறேன். ஆயின் தமக்கான எல்லைகள் எது என்பதைக் கொஞ்சம் தெரிந்து தெளிதல் நலம் . பின்னூட்டம், ஹிட்ஸ், ஃபாலோயர்ஸ் போன்றவற்றை நோக்கமாக வைத்தெழுதாது நேர்மையாகத் தோன்றுவதை எழுதுவது உத்தமம்.

இங்கிலாந்து காவலர் ஒருவர் பிளாக் பற்றிக் கேள்விப்பட்டு, கவரப்பட்டு தனெக்கென ஒரு வலைப்பூ தொடங்கி, அதில் தனது பணிக்காலத்தில் சந்தித்த சவாலான குற்றங்களையும், அதை அவர் துப்பறிந்த விதத்தையும் எழுதுகிறார். அதிகாரிகள் அவ்வாறு அரசாங்க ரகசியங்களை வெளியிடக்கூடாதென்பதால் தனதடையாளத்தை மறைத்து புனைபெயரொன்றில் எழுதுகிறார்.

ஒவ்வொரு குற்ற நடவடிக்கையிலும் அரசியல்வாதிகள் தலையீடு, மஃபியாக்கள் தலையீடு போன்றவற்றை எவ்வித ஒளிவு மறைவேதுமின்றி எழுதுகிறார். மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகுகிறது. யாரவர் என எல்லோருமாவலுடன் தேடத்தலைபடுகின்றனர்.

இவரைக் கண்டறிய முயலும் டைம்ஸ் பத்திரிக்கை நிருபர், முதலில் அவரது பதிவு ஒன்றிற்குப் பின்னூட்டம் இடுகிறார். தானும் ஒரு வலைப்பதிவரென அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார். அவரை ஆகா ஓகோவெனப் புகழ்கிறார். பிறிதொரு நாளில் வலைப்பதிவர்கள் சந்திப்பெனச் கூறி இடமொன்றைக் குறித்து வரச் சொல்லி, அவரை அடையாளம் காட்டுகிறார் உலகிற்கு.

நைட் ஜேக் என்ற பெயரில் வலைத்தளம் வைத்திருந்த
ரிச்சர்ட் ஹார்டன் – லங்காஷையர் காவலர்.

பொதுவாக வலையில் எழுதுவது தனிமனித சுதந்திரம் அதை நீதிமன்றம் தடை செய்ய முடியாதென்று அவரது வக்கீல் வாதாட, நீதிபதி சொன்ன தீர்ப்பு, “ வலையில் எழுதுவது தனிப்பட்ட செயல் அல்ல. அது ஒரு பொதுச் செயல். எனவே எழுதப்பட்டதற்கு எழுதியவர்தான் பொறுப்பேற்கவேண்டும்.”

எழுதியவன் இறந்துவிட்டான் இனிப் பேசுவது எழுத்துத்தான் என்று பி ந வாதிகள ஜல்லியடிப்பதை வலைக்குச் சொல்ல முடியாது. எழுதப்பட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் எழுதியவரே பொறுப்பாளர். எனவே எழுதுமுன் யோசியுங்கள். எழுதி்யபின் வருத்தப் படுவதைக் காட்டிலும் அது சுலபமல்லவா? உங்களது அலைவரிசையில் உள்ளவர்களுக்கு பதிவை மின்ஞ்சல் செய்து கருத்து கேட்டபின், தேவையான திருத்தங்களைச் செய்து பதிவிடல் சாலச்சிறந்தது. குறிப்பாக அரசாங்க வேலையில் இருப்பவர்கள் அதிக விழிப்புடன் இருத்தல் ஆகச் சிறந்தது.

நீங்கள் எழுதியதற்கு ஒருவர் எதிர்ப் பதிவு எழுதி பின் ”அவனைத் தூக்கச் சொல் நான் தூக்குகிறேன்” என்பது போன்ற வீர வசனங்களும் அறைக்கூவல்களும் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கா. மாறாக உங்களை வீழ்த்திவிடக்கூடும்.

அதுதான் பிரச்சினைக்குரிய பதிவையே நீக்கி விட்டோமே என நீங்கள் நிம்மதியாக இருக்கவும் வழியில்லை. உங்களுக்கே தெரியாமல் உங்களை ரீடரில் வாசிப்போர் அனேகம் பேர். அவர்களதை அதை நீக்கும்வரை இருக்கக்கூடும்; ஒரு மெளனசாட்சியாக அவர்களது கணினியில்.

பொதுவில் ஒன்றை வைக்குமுன் மனதிலிதை வைப்பது நலம்.

Courtesy : news.bbc.co.uk
.

பி.கு : வைதல் – திட்டுதல்.

.

பேசாத பேச்செல்ல்லாம்….

நெடுநாட்களாகப் பிரிந்திருந்த
நண்பனைச் சத்திந்த
பொழுதொன்றில்…

கலைந்து செல்லும்
மழை மேகங்களையும்
சுழன்றடிக்கும் காற்றையும்
பூத்தூறல் மழையையும்
ரசித்தவாறே உரையாடினோம்

பங்குச்சந்தை, பணவீக்கம்
பெட்ரோல் விலை
மாருதி ரிட்ஸ்
பொருளாதாரத் தேக்கம்
பொறியியல் அட்மிசன்
மெட்ரோ ரயில்
விமானக் கட்டண ஏற்றம்
என எல்லாம்

நானாகக்
கேட்கவில்லையென்றாலும்
அவனாவது
சொல்லிச் சென்ன்றிருக்கலாம்

எனது
முன்னாள் காதலி
அவனது
இன்னாள் மனைவி்
பற்றி
ஒற்றை வார்த்தையேனும்.

.

பேசாத பேச்செல்ல்லாம்….

நெடுநாட்களாகப் பிரிந்திருந்த
நண்பனைச் சத்திந்த
பொழுதொன்றில்…

கலைந்து செல்லும்
மழை மேகங்களையும்
சுழன்றடிக்கும் காற்றையும்
பூத்தூறல் மழையையும்
ரசித்தவாறே உரையாடினோம்

பங்குச்சந்தை, பணவீக்கம்
பெட்ரோல் விலை
மாருதி ரிட்ஸ்
பொருளாதாரத் தேக்கம்
பொறியியல் அட்மிசன்
மெட்ரோ ரயில்
விமானக் கட்டண ஏற்றம்
என எல்லாம்

நானாகக்
கேட்கவில்லையென்றாலும்
அவனாவது
சொல்லிச் சென்ன்றிருக்கலாம்

எனது
முன்னாள் காதலி
அவனது
இன்னாள் மனைவி்
பற்றி
ஒற்றை வார்த்தையேனும்.

.