ஒரு தபா, ராம கிருஷ்ணரான்ட அஞசலயும் அவ பையனும் போனாங்க.
அஞ்சல சொல்லிச்சி, “சாமீ எம்புள்ள அஸ்கா தின்னுக்கினேக்கீரான். எம்மாஞ் சொல்லியிம் தின்னுக்கினேக்கீரான். கொடலு வெந்துபூடுமாமே அல்லாரும் சொல்லிக்கினாங்க. கரீக்ட் பண்ணு சாமி” ச்சு
ராமகிருஷ்ணர், அந்தப் பையன ஒரு லுக் விட்டுக்கினாரு. இன்னாவோ ரோசிச்சாரு. அப்பாலிக்கா, “ வெள்ளிக்கிழமையா உம்புள்ளய இட்டா” னாரு.
வெள்ளிகிழமை போச்சொல்ல, “ அஸ்கா தின்னுகினீன்னா கொடலு வெந்துபூடும், கைகால் வெளங்காதுபூடும், வயசாச்சொல்ல பேஜாராப்பூடும்” னாரு.
அஞ்சல கேட்டுச்சி, “ஏஞ்சாமீ, இத்த அன்னிக்கெ சொல்லீருக்லாம்ல, இன்னாத்துக்கு இன்னொரு தபா வரச்சொல்லி எங்கள வீனா அலய வுட்டே?”
அதுக்கு ராமகிருஷ்ணரு, “அஞ்சலை எனிக்கே அஸ்கா திங்கிற பயக்கம் கீரப்ப, நா இன்னான்னு உம்புள்ளையாண்ட சொல்லுவேன். நான் மொதோ ஸ்டாப் பண்ணிக்கினு அப்பால அவனுக்கு அட்வைஸ் வுட்டுகினே” னாரு
டிஸ்கி : இந்தக் கதையச் சொல்ல இப்ப இன்னா அவசரம்?